
இப்போது வீசுடா குண்டை! வீரச்சாவுக்குத் துணிந்த மாவீரர்கள்அபூசாலிஹ்
ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்காத சமூகம், உயிரே போனாலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆர்த்தெழுந்த வீரமிக்க நிகழ்வு நவம்பர் 18 அன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 18 அன்று பாலஸ்தீன மக்கள் காட்டிய நெஞ்சுரம் யூதப் படைகளை திணறடித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போராளிகளின் பூமி. அதேநேரம் இஸ்ரேல் தனது மேய்ச் சல் நிலமாகக் கருதி வேட்டைக் காடாக மாற்றியது. திடீர் திடீரென வான் தாக்குதல் நடத்தி படுகொலைகளைத் தொடர்ந்து நடத் திவந்தது.
சமீபத்தில் யூத இனவெறி அரசு நிகழ்த்திய படுகொலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ என்ற மறுப்பாணையைக் கொண்டு செயலற்ற தாக்கியது. இரக்கமே இல்லாத யூத சக்திகளின் பாதுகாவலனான அமெரிக் காவைப் பழிக்காத நெஞ்சமே உலகில் இல்லை என்றானது.
சரி, நவம்பர் 18ல் என்னதான் நிகழ்ந்தது?
இரவானால் பாலஸ்தீன மக்கள் வெண்ணிலவையோ வெள்ளி நட்சத்திரங் களையோ பார்த்திருக்க மாட்டார்கள். பறந்துவரும் இஸ்ரேலியப் போர் விமானங்களையும், அதிலிருந்து சீறிவிழும் ஏவுகணைகளையும், எகிறி விழும் குண்டுகளையும் மட்டுமே பார்த்து வருகிறார்கள். அத்தகைய அச்சமுறு சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்து சூழ்ந்தது.
தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி அப்பாவிகளைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய இனவெறிப் படை, பாலஸ்தீனத்தின வடக்கு நகரமான பைத் லஹியாவில் வெய்ல் பரோத் என்ற போராளித் தளபதியின் வீட்டை விமானம் மூலம் குண்டுவீசி தகர்க்கப் போவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் அதுவும் அரை மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்தது.
மக்கள் வெளியேறி விடுவார்கள். அஞ்சி நடுங்கி அவர்கள் ஓடிவிடுவார் கள். அவர்கள் உயிர் அவர்களுக்குப் பெரிதுதானே? அந்தப் பகுதியே காலியாகப் போ கிறது. அதன்பின்னர் நாம் போராளி வெல் பரோத்தின் வீட்டை குண்டு வீசி தரைமட்டமாக்குவோம். அதற்கிடையில் உயிருக்குப் பயந்து வெய்ல் பரோத் சரணடைந்தால் கைது செய்து இழுத்துச் செல்வோம். இல்லையென்றால் குண்டுவீசி வீட்டோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் வெறியோடு காத்திருந்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
வெய்ல் பரோத் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு மாறாக அந்த அபாயப் பகுதியை நோக்கி மொய்க்கத் தொடங்கினர். 10 இருபதானது. 20 ஐம்பதானது. ஐம்பது பல நூறுகளானது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொது மக்கள் யூத ராணுவம் குறிவைத்த பகுதியை நோக்கி குழுமத் தொடங்கினர். இது ஜனநாயக நாட்டில் நடக்கும் அறப்போராட் டம் அல்ல. அப்பாவி மக்களின் குருதி குடிக்கக் காத்திருக்கும் கொலைகார ராணுவத்தின் முன் உயிர் பயம் இன்றி கூடிய மாவீரர் கூட்டம்.
நிஸார் ரையான் என்ற ஹமாஸ் போராளியும் அந்த தீரர்களின் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.
யூத எதிர்ப்பு கோஷங்கள் வான மண்டலத்தை முட்டின. நாங்கள் வீரச்சாவுக்குத் தயார், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கினர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் நூல் ஒத்ஹு சம்பவ இடத்திற்கு வந்து இந்த வீர நிகழ்வுகளை உடனுக்குடன் பரப்பத் தொடங்கினார். சாவுக்கு அஞ்சாத கூட்டம் மேலும் மேலும் திரளத் தொடங்கவே, வெறுத்துப் போன யூத ராணுவம் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத நிகழ்வு இது என அல்ஜஸீரா செய்தி யாளர் புகழ்ந்துரைத்தார்.
எதற்கும் அஞ்சாது துணிந்துவிட்ட மக்களின் முன் போர் விமானங்களும், கவச வாகனங்களும் ஏவுகணைகளும் உலக சரித்திரத்தில் முதன்முறையாக புறமுது கிட்டு ஓடின.
ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்காத சமூகம், உயிரே போனாலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆர்த்தெழுந்த வீரமிக்க நிகழ்வு நவம்பர் 18 அன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 18 அன்று பாலஸ்தீன மக்கள் காட்டிய நெஞ்சுரம் யூதப் படைகளை திணறடித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போராளிகளின் பூமி. அதேநேரம் இஸ்ரேல் தனது மேய்ச் சல் நிலமாகக் கருதி வேட்டைக் காடாக மாற்றியது. திடீர் திடீரென வான் தாக்குதல் நடத்தி படுகொலைகளைத் தொடர்ந்து நடத் திவந்தது.
சமீபத்தில் யூத இனவெறி அரசு நிகழ்த்திய படுகொலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ என்ற மறுப்பாணையைக் கொண்டு செயலற்ற தாக்கியது. இரக்கமே இல்லாத யூத சக்திகளின் பாதுகாவலனான அமெரிக் காவைப் பழிக்காத நெஞ்சமே உலகில் இல்லை என்றானது.
சரி, நவம்பர் 18ல் என்னதான் நிகழ்ந்தது?
இரவானால் பாலஸ்தீன மக்கள் வெண்ணிலவையோ வெள்ளி நட்சத்திரங் களையோ பார்த்திருக்க மாட்டார்கள். பறந்துவரும் இஸ்ரேலியப் போர் விமானங்களையும், அதிலிருந்து சீறிவிழும் ஏவுகணைகளையும், எகிறி விழும் குண்டுகளையும் மட்டுமே பார்த்து வருகிறார்கள். அத்தகைய அச்சமுறு சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்து சூழ்ந்தது.
தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி அப்பாவிகளைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய இனவெறிப் படை, பாலஸ்தீனத்தின வடக்கு நகரமான பைத் லஹியாவில் வெய்ல் பரோத் என்ற போராளித் தளபதியின் வீட்டை விமானம் மூலம் குண்டுவீசி தகர்க்கப் போவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் அதுவும் அரை மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்தது.
மக்கள் வெளியேறி விடுவார்கள். அஞ்சி நடுங்கி அவர்கள் ஓடிவிடுவார் கள். அவர்கள் உயிர் அவர்களுக்குப் பெரிதுதானே? அந்தப் பகுதியே காலியாகப் போ கிறது. அதன்பின்னர் நாம் போராளி வெல் பரோத்தின் வீட்டை குண்டு வீசி தரைமட்டமாக்குவோம். அதற்கிடையில் உயிருக்குப் பயந்து வெய்ல் பரோத் சரணடைந்தால் கைது செய்து இழுத்துச் செல்வோம். இல்லையென்றால் குண்டுவீசி வீட்டோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் வெறியோடு காத்திருந்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
வெய்ல் பரோத் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு மாறாக அந்த அபாயப் பகுதியை நோக்கி மொய்க்கத் தொடங்கினர். 10 இருபதானது. 20 ஐம்பதானது. ஐம்பது பல நூறுகளானது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொது மக்கள் யூத ராணுவம் குறிவைத்த பகுதியை நோக்கி குழுமத் தொடங்கினர். இது ஜனநாயக நாட்டில் நடக்கும் அறப்போராட் டம் அல்ல. அப்பாவி மக்களின் குருதி குடிக்கக் காத்திருக்கும் கொலைகார ராணுவத்தின் முன் உயிர் பயம் இன்றி கூடிய மாவீரர் கூட்டம்.
நிஸார் ரையான் என்ற ஹமாஸ் போராளியும் அந்த தீரர்களின் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.
யூத எதிர்ப்பு கோஷங்கள் வான மண்டலத்தை முட்டின. நாங்கள் வீரச்சாவுக்குத் தயார், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கினர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் நூல் ஒத்ஹு சம்பவ இடத்திற்கு வந்து இந்த வீர நிகழ்வுகளை உடனுக்குடன் பரப்பத் தொடங்கினார். சாவுக்கு அஞ்சாத கூட்டம் மேலும் மேலும் திரளத் தொடங்கவே, வெறுத்துப் போன யூத ராணுவம் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத நிகழ்வு இது என அல்ஜஸீரா செய்தி யாளர் புகழ்ந்துரைத்தார்.
எதற்கும் அஞ்சாது துணிந்துவிட்ட மக்களின் முன் போர் விமானங்களும், கவச வாகனங்களும் ஏவுகணைகளும் உலக சரித்திரத்தில் முதன்முறையாக புறமுது கிட்டு ஓடின.
No comments:
Post a Comment