இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 3, 2007

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்

உ.பி.யில் ஒரு குஜராத்
துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்

Web Counter Code