இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, May 19, 2007

மாயாவதியை முதல்வராக்கிய முஸ்லிம்கள்
உ.பி. தேர்தலில் பரபரப்பு திருப்பம்
விரிவான தகவல்கள்
அபூசாலிஹ்
விளிம்பு நிலை மக்களின் சமூகத்தில் பிறந்த செல்வி. மாயாவதி உ.பி.யின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுள்ளார். 1991க்கு பிறகு தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது முக்கியத்துவத்துவம் மிகுந்ததாக கருதப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 403 சட்டமன்றத் தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் 206 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதுவரை ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள் ளது. முலாயம்சிங் யாதவ் ஆட்சியில் இருந்த பல மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 143 இடங்களைக் கைப்பற்றியிருந்த அந்தக் கட்சி தற்போது வெறும் 97 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. முஸ்லிம்களின் நேசக் கட்சியாக தங்களைத் தாங் களே வர்ணித்துக் கொண்ட இந்தக் கட்சி, முஸ்லிம் களின் முழுமையான வாக்கு களைப் பெற முடியாமல் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று. முஸ்லிம் விவகாரங்களில் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதும் தேனொழுகப் பேசி ஏமாற்றுவதும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களைப் படுகொலை செய்வதும் போன்ற செயல்களால் முஸ்லிம் சமுதாயத்தை விட்டுத் தள்ளிநிற்க வேண்டிய பரிதாப நிலை சமாஜ்வாடி கட்சிக்கு ஏற்பட்டது.
பாஜக நீங்கலாக பிரதான கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து களமிறங்கின. பிரிந்து கிடக்கும் சமூகச் சூழலில் (அரசு புள்ளி விவரப் படி) 18 சதவீதமாக செறிந்து வாழும் முஸ்லிம்களை அனைத்து கட்சிகளும் ஒரு மிரட்டும் அம்சமாகவே பார்த்து வந்தன.
முலாயமின் சமாஜ்வாடிக் கட்சி முஸ்லிம்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் வாக்குகளை அள்ளி வீசியது. காங்கிரஸின் சார்பாக வாக்குகளை அள்ளிவீச 'புதிய இளவரசர்' (ராகுல்காந்தி) களமிறக்கப்பட்டார். அவர் தனது குடும்பம் ஆட்சியில் இல்லாததால்தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற படுவிவர மான(?) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி.பி.சிங்கின் ஜனமோர்ச்சா கட்சியும் முஸ்லிம் களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு அரசியலில் இறங்கியது.
பல்வேறுபட்ட முஸ்லிம் இயக்கங் களை ஒன்றிணைத்து ம.உ.எ. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற முஸ்லிம் இயக்கமும் தேர்தலில் இறங்கியது. ஷியா மார்க்க அறிஞர் கல்பிஜவாத் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக விளங்கினார். முஸ்லிம் வாக்குகளை பிரதானப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தேர்தலில் குதிக்கும் செய்திகளை அறிந்தவுடன் பாஜக வட்டாரம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் கன்னாபின்னாவென பிரியும்; முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதால் மதச்சார்பற்ற சக்திகள் தோல்வியை சந்திக்கும்; சந்தடி சாக்கில் நாம் எளிதாகத் தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற்று விடலாம் என உறுதியாக நம்பியது. முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக குறுந்தகடு பிரச்சார சி.டி.க்களைப் பரப்பி சமூக பதட்டத்தை ஏற்படுத்தியது பாஜக.
அதனால் தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கும் இலக்காயினர். இருப்பினும் தேர்தல் களத்தில் வெற்றி நமக்கே என உறுதியாக நம்பினர். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இனி நேரடியாக டெல்லி செங்கோட்டை தான் என்றும் பகல் கனவு கண்டிருந்தனர்.
ஆனால், முஸ்லிம்கள் எத்தகைய மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகாமல் மதவாத சக்திகளை தோற்கடிக்கும் வலுவுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வழங்கியுள்ளனர். முஸ்லிம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவை தோற்கடிக்க உதவியது. இதன்மூலம் உத்தரப் பிரதேச அரசியல் அரங்கில் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 88 இடங்களைப் பெற்றிருந்த பாஜக, வெறும் 50 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக உறுப்பினர்கள் டெபாஸிட் இழந்தனர். ஒரு இடம் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு கிடைத்தது. பாஜகவின் மாநிலத் தலைவர் கேசவநாத் திரிபாதி போன்ற முக்கியத் தலைகள் கூட மண்ணைக் கவ்வினர்.
புதுடெல்லிக்கு அருகிலிருக்கும் நொய்டாவிலும் நேபாளத்தின் எல்லைப்புறத்தில் இருக்கும் பல்லியா தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சியின் பரவலான செல்வாக்குக்கு சான்றாக விளங்குகிறது. இந்த வெற்றியை பெரியார், அம்பேத்கார், சாகுஜி மகராஜ், ஜோதிபா பூலே மற்றும் நாராயணன் குரு போன்ற தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு அர்ப்பணிப்ப தாகக் குறிப்பிட்டார்.
இதில் உயர்ஜாதி என்று குறிப்பிடப் படும் மக்களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு வியூகங்களை மாயாவதி வகுத்தார். (ஏன் அவர்கள்தான் வாக்குறுதி களை அள்ளிவீசி ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? எம் தலித் சகோதரியால் முடியாதா?) ராஜபுத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொகுதிகளை அள்ளி வழங்கினார்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 86 தொகுதிகளை மாயாவதி ஒதுக்கினார். சட்டமன்றத் தேர்தலில் வெறும் 24 பிராமண வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 61 முஸ்லிம்களை மட்டுமே மாயாவதி தனது கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தினார். இதில் 30 முஸ்லிம்கள் வெற்றி பெற்று மதவாதத்திற்கு எதிரான போரில் முன்னிலை வகித்தனர். நாங்கள் பிராமண வேட்பாளர்களை நிறுத்திய தொகுதிகளில் பிராமணர்களை விட அதிக அளவு முஸ்லிம்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன. (உதாரணம் சிபிராமு தொகுதி)
பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் பிராமணர்கள் 34 சதவீதத்தினரும், முஸ்லிம்கள் 49 சதவீத்தினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண வேட்பாளர்கள் மெஹ்ரோனி, ஹத்ராஸ், ஆக்ரா மேற்கு, திபய், பா, மதோகர், மச்சிலிஸ்கர், பர்சாத்தி, அவுரை, சவ்பேபுர், ஸைத்புர், ஜஹனாபாத், அவ்ரையா, ஹன்டியா, அத்தவ்லியா, பிங்கா, நாத்பூர், ருத்ராபூர், கர்வாரா, பிரதாப்கர், பில்கிராம், மஹோனா, கர்சனா மற்றும் சில்லுபர் போன்றவை வெற்றி பெற்ற தொகுதிகளாகும். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பிராமண வேட்பாளர்கள் வெற்றி பெற்றதில் பெரும்பாலோர் முஸ்லிம் கள் உள்ளிட்ட பிற சமூக ஓட்டுக்களை பெற்றே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வியப்பூட்டும் செய்தியுமாகும்.
சமாஜ்வாடி கட்சியை எதிர்கொள்ளும் விஷயத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் பங்கு மிகமுக்கிய இடத்தை வகித்ததாகவும், சமாஜ் வாடி கட்சிக்கு மாற்றாக முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியை தெரிவு செய்து விட்டதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆக்ரா கான்த், ஆக்ரா மேற்கு, திபய், நான்பரா, பஹோஜி, பிலாஸ்பூர், சந்த்பூர், பிஜ்னர், அப்ஸல்கர், மற்றும் போஜ்புரா வெற்றியின் முகட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது.
முஸ்லிம்களுக்கு கெடுதலை மட்டுமே புரிந்துவரும் பாஜக தோற்றுவிட்டது தேசிய அரசியலின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் 50 மட்டுமே.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி யும் போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009ன் முக்கிய பிரதமர் வேட்பாளர் மாயாவதி என இப் போது ஊடகங்களில் சில அந்த இரும்புப் பெண்மணியை இப்போது உசுப்பிவிட துவங்கியுள்ளன.
பிராமணர்களில் ஏழு பேருக்கு அமைச்சர் பதவியும், முஸ்லிம்களில் ஐந்து பேருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார் மாயாவதி.
உத்தரப்பிரதேச முஸ்லிம் அறிவுஜீவிகளின் மனங்களில் பெரும் சிந்தனை யோட்டம் அலையடிக்கத் தொடங்கி விட்டது.
பல்வேறு பிரிவாக முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடும் என்று நினைத்தவர்களின் எண்ணங்களை முஸ்லிம்களின் பெரும்பிரிவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கும் அடுத்து சமாஜ்வாடிக்கும் காங்கிரசுக்கும் சென்றன. இதன்மூலம் உ.பி. முஸ்லிம்கள் அழுத்த மான செய்தியை வழங்கியுள்ளார்கள்.
படுதோல்வியை சந்தித்த பாஜக முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்தி, அவர்களைக் கொச்சைப்படுத்திய அவதூறு குறுந்தகட்டை மாநில பாஜக வெளியிட்டதுதான் தங்கள் அணியின் படுதோல்விக்குக் காரணம் என பாஜகவின் தேசியத் தலைமை இப்போது ஒப்பாரி வைக்கிறது.
மாயாவதி தவறே செய்யாதவர் அல்ல. அவ்வாறே முலாயம் தவறுகள் மட்டுமே செய்தவரும் அல்ல. அதிக சதவீதம் உள்ள முஸ்லிம்கள் எப்போதும் தங்களுக்கு இழைக்கப்படும் தவறுகளை சகித்துக் கொண்டு ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல.
தலித் சகோதரி மாயாவதியின் வெற்றிக்காக அவரை வரவேற்கிறோம். அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம். இதில் முஸ்லிம் அரசியல் சிந்தனையாளர் களுக்கு கற்றுக் கொள்ள பாடங்கள் ஏராளம் உண்டு.
மாயா ஜாலம்!
முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதிகளில் பரவலாக வாக்குகள் பதிவாயின. இதில் 60 சதவீத வாக்குகள் மாயாவதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருந்த முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு முலாயமின் பக்கம் சாய்ந்தனர். இப்போது அவர்கள் மாயாவதியை ஆதரித்தது ஆச்சரியமாக இருக்கிறது.
முலாயம்சிங் கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் முஸ்லிம்களை கோபம் கொள்ள வைத்தது. பாஜகவுடன் முலாயம்சிங் யாதவ் 'ரகசிய உறவு' வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முலாயம் பதிலளிக்கவில்லை. அவரது ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த கேசரிநாத் திரிபாதி சபாநாயகராக பணியாற்றியது இந்த ரகசிய உறவு அம்பலப்படுத்தியது. வேலையற்ற இளைஞர்களும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டபோது அதிகமான வேலையற்ற சமூகமாக கருதப்படும் முஸ்லிம் களுக்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தவறினார். உருது பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவித்திருந்த முலாயம், அதை கடைசி வரை நிறைவேற்றவில்லை.
இதுபோன்ற ஏராளமான காரணங்களால் வெறுத்துப் போன முஸ்லிம்கள், மாயாவதியின் பக்கம் சாய்ந்தனர். வேறு எந்தக் கட்சியும் கொடுக்காத அளவுக்கு முஸ்லிம்களுக்கு அவர் தொகுதிகளை வாரி வழங்கியதும் முஸ்லிம்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டியது.
ராகுல் அலை? காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட ராகுல் காந்தி உ.பி. தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்தார். 106 இடங்களில் சாலையோர ஊர்வலங்களை நடத்தினார். முலாயமை கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் இதை ரசித்தாலும் வாக்குகளை அளிக்கவில்லை. ஏற்கனவே இருந்த 26 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் மூன்று இடங்களை இழந்து 22 இடங்களைப் பெற்றிருக்கிறது. வாக்கு வங்கியும் உயரவில்லை. மொத்தத்தில் ராகுலின் அரசியல் வாழ்க்கையில் ஒரு படிப்பினை என்றால் மிகையல்ல

சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்


சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்
துரோகிகள் சூழ்ந்து நிற்க, அந்த ஒற்றை மனிதன் கம்பீரமாக நடந்து சென்று மரணத்தை எதிர்கொண்ட காட்சி உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டு மின்றி, அதற்குக் காரணமான காட்டுமிராண்டிகளின் மீதான ஆத்திரமும் காட்டுத் தீயாக உருவெடுத்தது.
தியாகத் திருநாளன்று அந்த வீரபூமியின் மகிழ்ச்சிக்கு தீ வைத்த தீயவர்களின் செயல் கண்டு உலகம், குமுறும் எரிமலையாய் மாறியது. கண்டன ஆர்ப்பாட்டங் களும், கண்டனக் கருத்தரங்குகளும், ஆர்ப்பரிப்பு பேரணியும் போர்ப்பரணி பாடின.
இவை மட்டுமே மாவீரன் சதாம் படுகொலையின் முதல் எதிர்வினைகள் என நாம் எண்ணியிருந்தோம். ஆனால் சதாம் படுகொலை பிஞ்சு உள்ளங்களில் விபரீத எண்ணங்களை விதைத்து சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதயத்தை நொறுக்கச் செய்யும் அந்த விபரீத நிகழ்வு செய்திகள் செவியுறு வோரை வேதனையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சதாம் தூக்குக் கயிறை மாட்டும் முன்பு, வீர உரை நிகழ்த்தி, கம்பீரமாக மரணத்தை எதிர்கொண்ட அந்தக் காட்சிகள் உலகம் முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டன. அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்கள், சிறுமிகள் லி அதைப் போலவே தாங்களும் தூக்குக் கயிற்றினைக் கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் சவூதி அரேபியா விலிருந்து வெளிவரும் முன்னணி செய்தி ஏடான 'அல் ஹயாத்' வெயிட்டிருக் கிறது.
இதுவரை உலகம் முழுவதும் எட்டு பிஞ்சுகள் இந்த விபரீத முடிவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதி கிராமமான சட் லூயிஸைச் சேர்ந்த இஸத் அக்தியின் 12 வயது மகன் அலிஷாத் அக்தி சதாம் ஹுஸைன் உயிர் துறக்கும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு கண்ணீருடன் தொடர்ந்து கேள்வி களால் துளைத் திருக்கிறான். எப்படி சதாமை தூக்கிலிட்டார்கள்? சதாமுக்கு வலித்திருக்கும் இல்லையா வாப்பா? லி எனக் கண்ணீருடன் அலிஷான் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். அலிஷானின் பெற்றோர் வீட்டின் மற்றொரு பகுதி யில் இருக்க, வீட்டின் தட்டுமுடடு சாமான்கள் வைத்திருக்கும் அறையில் சதாம் ஹுஸைனைப் போல் தூக்கு கயிற்றை மாட்ட முயற்சித்து உயிரை விட்டிருக் கிறான். இத்தகவலை பொங்கும் கண்ணீ ருடன் அலிஷான் அக்தியின் இறுதி ஊர்வலத்தில் அவரின் தந்தை இஸத் அக்தி ஆஎட செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.
இவ்வாறே, ஏமன் நாட்டில் 13 வயது ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன், சதாம் ஹுஸைனைப் போல் கயிற்றை மாட்டி உயிரை மாய்த்துக் கொண்டான். இந்தச் சிறுவனும் சதாமின் தூக்கு மேடைக் காட்சியைக் கண்டு கதறிய நிலையிலேயே இருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் தலைநகர் சானாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அந்தக் கொடூரக் காட்சியைக் கண்டனர். வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தங்கள் செல்வ மகன் பாரம்பரிய அரபு உடை யணிந்து தூக்கில் தொங்குவதைக் கண்டதாக அந்தச் சிறுவனின் ஒன்றுவிட்ட சகோதரன் யஹ்யா அல் ஹம்மாதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காவல்துறையினர் இதுகுறித்த உண்மைத் தகவல்கள் வெளிவர விடாமல் கட்டுப்பாடு விதித்ததாக தகவல்கள் வெளியாயின.
சவூதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதி நகரில் 12 வயது சிறுவன் ஒருவன் இதேபோன்ற முடிவினை எடுத்ததாக அல் ஹயாத் தெரிவிக்கிறது. நியூயார்க்கில் தனது போர்வையில் உள்ள நாடாவை கழுத்தில் சுருக்கிட்டு படுக்கையிலேயே ஒரு பாலகன் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் முபஸர் அலி என்ற 9 வயது சிறுவன், சதாம் கொலைக் காட்சி யைத் தொலைக்காட்சியில் கண்டு, அதைப் போல் செய்து, உயிரை இழந்துள்ளான். இந்த சிறுவனுக்கு கச்சிதமாக சுருக்கு மாட்ட இவனது 10 வயது அக்கா உதவி இருக்கிறாள்.
அல்ஜீரியாவில் பள்ளிக்கூட சிறுவர்கள் சேர்ந்து நிற்க 12 வயது சிறுவன் சதாம் படுகொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விபரீத முயற்சியில் இறங்கி உயிரைப் பறிகொடுத்துள்ளான்.
ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 15 வயது மாணவி மின் விசிறியில் தூக்கிலிட்டு மாண்டு போனாள். சதாம் மறைந்த 30ஆம் தேதி சனிக்கிழமை முதல் சாப்பிடாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மட்டுமே பார்த்த அந்த அப்பாவிச் சிறு பெண் இந்த விபரீத முடிவுக்கு வந்ததாக அவரது தந்தை தாளாத துயரத்துடன் தெரிவித் துள்ளார்.
அமெரிக்க அழிவுநடவடிக்கைகளின் விளைவுகள் சர்வதேச சமூகத்தை இந்த அளவுக்கு பாதித்திருப்பதாகவும், இது மிகவும் கவலைக்குரிய செயல் என்றும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிஞ்சுகளின் நெஞ்சுகளில் கூட விரக்தியையும் விபரீதத்தையும் விதைத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் கொடுஞ்செயலுக்கு உலகம் தனது தண்டனையை விரைவில் வழங்கியே தீரும் என்பதில் ஐயமில்லை. நடேன்கேஸ்லவ் என்ற அட்லாண்டா எமோரி பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் கூறியதைப் போல் அமெரிக்கா தனது வக்கிரத்தையும் வன்மத்தையும் ஏற்றுமதி செய்து வருகிறதா? தனது அழிவுச் செயலுக்கு இழி தண்டனையை அமெரிக்கா பெறுவது எப்போது?
குண்டுவீச்சில் அப்பாவி மழலைகளை சாகடித்த ஏகாதிபத்திய பயங்கரவாதிகள் மண்ணுரிமை வீரர்களைப் படுகொலை புரிந்து அந்நாட்டின் மழலைகளையும் மனோதத்துவ ரீதியாகப் பழிவாங்கத் துடிக்கின்றனர்.
இந்நேரத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் சற்றே புன்முறுவலை வரவழைக்கிறது.
போர்த் தளபதிகளின் உடையுடன் 42 சிறுவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஜோத்பூர் நகர் முழுவதும் வந்து சதாம் ஹுஸைனைப் புகழ்ந்தும், அமெரிக்க ஏகாதிபத்திய திமிரை வீழ்த்துவோம் என்ற வீர முழக்கமிட்டும் சென்றுள்ளனர். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இனி வருவது தான் ஆச்சரியம். போர்ப்படைத் தளபதிகள் போல் உடையணிந்து ஊர்வலம் வந்தவர்கள் அனைவரும் சதாம் ஹுஸைன்கள்தான். ஆம் அவர்கள் அனைவரின் பெயரும் சதாம்தான். முதல் வளைகுடா போர்க் காலத்திலிருந்து அந்த ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு சதாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சதாம்களின் ஊர்வலத்தை தோஹித் அஹமத் கான் ஒருங்கிணைத்தார்.
இதில் மூன்று வயது குட்டி சதாமும் பங்கேற்று அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக வீர முழக்கமிட்டான். ஒரு சதாம் மறைந்தார், உலகெங்கும் பல சதாம்கள் உலாவரத் தொடங்கி விட்டனர்.
சதாமின் கடைசி நிமிடங்கள் உண்மை என்ன?
ஊடகங்களின் வர்த்தகப் பசியில் உண்மைகள் உண்டு செறிக்கப்படுகிறது என்பது உலகம் அறிந்த ஒன்று. சதாம் தூக்கி­டப்பட்ட அரை மணி நேரத்தில் அந்த காட்சி தொகுப்பு ஊடகங்களின் வழியே உலகத்தின் பார்வைக்கு வந்தது. குழந்தைகளும், இதயம் பலகீனமும் உள்ளவர்களும் இதனைக் காணவேண்டாம் என்ற அறிவிப்பு எதுவும் இல்லை. அந்த காட்சித் தொகுப்பு, ஒ­ப்பதிவுகள் நீக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது. ஆனால் சதாமுக்கும் அவரது எதிரிகளுக்குமிடையே கடும்விவாதங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின. 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிக்கை, ''மரணத் தருவாயிலும் எதிரியின் பெயரை உச்சரித்தார் சதாம்'' என்ற சொற்றொடரை முகப்பில் வெளியிட்டிருந்தது. பா. ராகவன் எழுதிய அது தொடர்பான கட்டுரையில் சதாம் 'முக்ததா' என்பவரது பெயரைக் கூறினார். முக்ததா என்பவர், இளம் ஷியா போராளியான முக்ததா அல் சத்தரின் தந்தை, அவரை சதாம் கொன்று விட்டார். அதற்குப் பழிவாங்கவே உன்னை தூக்கில் போடுகிறோம் என்று சதாமை பார்த்து கூறியுள்ளார்கள். சதாமும் அவர்களைப் பார்த்து, என்ன முக்ததா முக்ததா? என்று கோபத்துடன் கேட்டார் என்பது போன்றும் எழுதியிருந்தது.
சதாமின் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டுவது வரைதான் முதல் நாள் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால் செல்போனில் பிடிக்கப்பட்ட சதாமின் கடைசி நிமிடத் துளிகள் மறுநாள் தான் வெளியாயின. அதில் சதாம், தூக்கு மேடையில் நின்றவாறு, இஸ்லாமிய இறை நம்பிக்கையை ஒப்புக் கொள்ளும் வசனங்களை உச்சரிக்கும் ஒ­ப்பதிவுகள் அதில் வெளியாயின துல்லியமாகவும் கேட்டன. இந்த செல்போன் படம் மிக ரகசியமாக பிடிக்கப்பட்டு வெளியானது. அதே நேரம், சதாமை பார்த்து இழிவுபடுத்தும் வார்த்தைகளை, நீதியை (!) நிறைவேற்ற வந்த, அமெரிக்க தயாரிப்பு அரசு பிரதிநிதிகள், கீழே நின்று கோஷ மிட்டுள்ளனர். இத்தகைய கொடும் செயல்களால் ஒரு நாட்டின் அதிபர் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதை கண்டிக்க மனமில்லாத வக்கிரபுத்தி கொண்ட ஜார்ஜ் புஷ், சதாமை கொஞ்சம் கண்ணியமாக தூக்கில் போட்டிருக்கலாம் என்று திமிராகப் பேசி இருக்கிறார். ஈராக்கின் எடுபிடி அரசு அதற்காக வருத்தம் தெரிவிக்காமல், அந்த காட்சி எப்படி வெளியானது என்று விசாரணை நடத்தி வருகிறது.
இவர்கள் தங்களின் பழிவாங்கும் உணர்ச்சிமிகையால் சர்வதேச சமுகத்தின் முன், 'இஸ்லாமிய நெறிகளை' இழிவுபடுத்தி வருகின்றனர். ஏனைய இஸ்லாமிய நாடுகளும், மார்க்க அறிஞர்களும், பொது சமுகமும் இதனை கண்டிக்க வேண்டும். கையில் திருக்குர்ஆனோடும்,உதட்டில் இறைவசனங்களோடும் சதாம் உயிர் நீத்தக் காட்சி அவருக்கு உலக இஸ்லாமிய மக்கள் மத்தியில் மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தியிருப்பது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அரசுக்கும், அமெரிக்காவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. செல்போன் காட்சி வெளியாகியிராவிட்டால் சதாம் இறைநம்பிக்கையற்றவர் என்பதும், எதிரியின் பெயரைத்தான் இறுதியாக உச்சரித்தார் என்று குமுதம் ரிப்போட்டரில் பா.ராகவன் எழுதிய தகவலும் நம்பத்தகுந்த செய்திகளாகியிருக்கும்

Web Counter Code