இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

மாவீரன் கர்கரேயை காரில் கடத்தி படுகொலை செய்தது யார்?
நாடாளுமன்றத்தில் அப்துர் ரஹ்மான் அந்துலே எழுப்பிய புயல்


அபூசாலிஹ்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த தகவல்கள் மறைந்து போயின. அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.


குறிப்பாக மும்பை மீது பயங் கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளா கவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.


மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சி யில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலே கான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.


இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர் கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.


கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார். “கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப் படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கர வாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவ மனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?’’ என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளு மன்ற அவையினைத் திணறடித்தார்.


கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய் தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதக மான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ் சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ் சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக் கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.


அப்துர் ரஹ்மான் அந்துலே-யின் நாடாளுமன்ற அறைகூவல் நாட்டையே அவர் பின்னால் திரள வைத்துள்ளது. அந்துலே எழுப்பிய உரத்த சிந்தனை நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங் கியுள்ளது. அந்துலே இந்திய முஸ்லிம் களின் மனசாட்சியினை தட்டி எழுப்பி யுள்ளார். அதோடு அவரின் நாடாளு மன்ற அறைகூவல் இந்திய தேசத்தை உலுக்கியுள்ளது. அந்துலேவை அமைச்ச ரவையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என காங்கிரசுக்குள்ளே உள்ள பாசிச அடிவருடிகளும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்துலே தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பிரதமரும் சரி, அந்துலேயும் சரி அத்தகவலை உறுதிப் படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அந்துலே எழுப்பியுள்ள கேள்வி களில் உள்ள சத்தியத்தை உணராமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அப்துர் ரஹ்மான் அந்துலேக்கு எதிரான செய்திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. அந்துலே யின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேசத்துரோகிகள் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறது. அந்துலே அவர்களை அமைச்சர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சக்திகளும், காங்கிரசுக் குள் இருக்கும் பாஜகவின் ரகசிய ஆதரவாளர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். இந்நிலையில் பதவியை விட்டு நீக்கினால் அந்துலேயின் அரசியல் எழுச்சி உடையதாகவும், அந்துலேயை நீக்குவதால் காங்கிரஸ் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என காங் கிரஸ் மேலிடம் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது.




மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப் பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ் டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.


நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவ மனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.


கர்கரேயை படுகொலை செய்த பயங் கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வி.
அந்துலேவிற்கு முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு!

அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் ஜஃபரியாப் ஜீலானி, அந்துலேயின் கருத்தை ஆதரித்திருக்கிறார். கர்கரே படுகொலை குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும், கர்கரே யின் மரணம் தெளிவுப் படுத்தப்பட வேண்டும், அதில் தவறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்கரே போன்ற சிறப்பு மிக்க அதிகாரிகளின் வாழ்வும் மரணமும் குறித்த இறுதிக் கேள்வியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


இந்திய உலமாக்குழுவின் பொதுச் செயலர் மௌலான நைமூர் ரஹ்மான், அனைத்திந்திய சன்னி முஸ்லிம் வாரியத் தின் தலைவர் மௌலான முகம்மது முஸ்தாக் ஆகியோரும் கர்கரேயின் மரணம் குறித்து விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்கள். விசார ணையை மறுப்பவர்கள் உண்மை வெளிபடக் கூடாது என்று விரும்பு கிறார்கள். கர்கரே போன்ற அதிகாரி களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது என்று மௌலானா முஸ்தாக் தெரிவித்திருக் கிறார்.


ஷியா பிரிவின் அறிஞர் மௌலானா கல்பே ஜாவத் கூறுகையில், `கர்கரே யின் தியாகம் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொருத்த மற்ற நேரத்தில் அவர் கொல் லப்பட்டிருப் பதால் அது சந்தேகத்தை கிளப்பியிருக் கிறது. வேறு பல இடங்களிலும் தாக்கு தல் நடத்தப்பட்ட நிலையிலும், கர்கரே காமா மருத்துவமனை நோக்கி தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் எளிதாக வருவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்பில் உள்ள பலகீனத்தை யும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா. காலித் ரஷித், ``விசாரணை நடத்துவதால் என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்கரேயின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்க முடியுமோ என்ற சந்தேகத்தை தெளி வுப்படுத்துவதற்கு விசாரணை அவசியப் படுத்துகிறது. ஒவ்வொருவரும் சரியான தடத்தில் இருந்தால் பிறகு பி.ஜே.பி எதற்காக விசாரணையை எதிர்க்கிறது. கர்கரே உயிரோடு இருந்த போது அவரை தேச துரோகி என்று அழைத்தது. அவரு டைய விசாரணை முறைகளை கண் டித்தது. தற்போது அவர் மரணம் குறித்த விசாரணையை தடுக்கிறது. இதிலிருந்து உண்மை வெளிப்பட பிஜேபி விரும்ப வில்லை என்றே தெரிய வரு கிறது’ என்று காலித் ரஷித் கூறியிருக் கிறார்
அந்துலேக்கு ஆதரவாக முலாயம் சிங், மாயாவதி, திக்விஜய் சிங்!

ஹேமந்த் கர்கரே படுகொலை குறித்து மத்திய அமைச்சர் அந்துலே யின் கருத்துக்கு மத்தியப் பிரதேசத் தின் முன்னாள் முதல்வரும் காங்கிர ஸின் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.


பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மாலேகான் விசாரணை குறித்தும் கர்கரேயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தன. இந்தப் பின்னணியை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றே அந்துலே கருத்து தெரிவித்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. மும்பை பயங்கர வாத தாக்குதல் நடைபெறும் இடத் திற்கு உடனடியாக செல்லுமாறு உத்தர விட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.
கர்கரே ஹிந்துக்களை மட்டும் கைது செய்யவில்லை. எல்லாப் பிரிவு களில் உள்ள பயங்கரவாதிகளை, கொடிய குற்றவாளிகளைக் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே என்று கூறிய திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ப தாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்துலேவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்துள்ள
ABUSALIH NEWS ABOUT MALEGAUN HINDUTVA TERRRIST
மாலேகான் வழக்கின் கதி?
தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் கோர முகத்தை தோலுரித் துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக் குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.


அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங் கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது.


இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்
புஷ்ஷுக்கு செருப்படி!
இராக்கில் உச்சகட்ட மரியாதை!!


அபூசாலிஹ்




அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.




பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிற
குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன...''
மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட்

மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008
அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி
தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின் தமிழாக்கம்.



தமிழாக்கம் : நாகூர் ரூமி


நண்பர்களே, கடந்த 25, 30 ஆண்டுகளாக, இந்தியாவில் கழிந்த ஒவ்வொரு கணமும் ஒரு நெருக்கடியான கட்டமாக, ஒரு கண்டம் போலத்தான் சென்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நாம் தப்பிப்போமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. டிசம்பர் 6, 1992தான் இத்தகைய கண்டங்களை நிர்ணயிக்கும் கணமாக இருந்தது என்று ஏற்கனவே சொல்லப் பட்டது. நவம்பர் 26 அன்று பயங்கரவாதி களின் கடுமையான தாக்குதல் நிகழ்த்தப் பட்ட ஒரு மாநகரில் இருந்து நான் வருகிறேன்.


நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி என்று நான் கருதுகிறேன். நம்முடைய அரசியல் அமைப்பின், சமுதாய மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்கள்தான், நம்முடைய சித்தாந்தங் கள்தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துடைய தாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப் படுத்துதலையும், தன் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித் துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் களது எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். மகத்தான இந்த தேசத்தில் மேலும் மேலும் பிரிவினை எற்படுவதை நாம் அனுமதிக் கவோ தாங்கவோ முடியாது.


நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக் காட்சிகளும் சித்தாந்தம் சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின. எங்கள் பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந் தத்தைத் துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியைக் கொன்றதா? அல்லது பாமியானில் புத்தர் சிலைகளை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியா னால் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள்மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படை வாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்புவாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றா கவே தெரியும். ஜாதி யத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மதவாத அமைப் பின் கொடூரமான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக்கடுமையான தொழில்களை அவர்கள் செய்யும்படிச் சொன்னது.


எனவே ஜாதியும், ஜாதியமும், ஜாதிக்கு எதிரான வன்முறையும், ஜாதியத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றேதான். எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராகவும், சாதிய வெறுப்புக்கு எதிராகவும் போராடும் சக்திகள் ஒன்றிணைவது அவசியம்.


நமது பாராளுமன்றத்தைப் போலல் லாமல், நம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது. தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப் பட்டது?


ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மஹாராஷ்டிராவாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தாலும் சரி, இதே கதைதான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேசப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக்கூடாது என்று அது கருதுகிறது. எனில், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர் களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப் படுகிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோச மாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்து போகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும் பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜன நாயகம் எந்த வகை யானது? இந்த தரு ணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.


குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதி நிலைக்கச் செய்யும் அமைப்பின் தோல்வி பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம். நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத் தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின் றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டு கள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட தற்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதிமன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்கு களில் நீதி மறுத்துக்கொண்டே இருக்கின்றன.


இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையில், வரலாற்றில் கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதி களைப் பார்ப்போம். அத்தகைய வன்மு றைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் வடிதட்டு மக்கள் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.


1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் தலைநகரில் 3006 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்!


புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர் களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக் கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது. சட்டத்துக்குப் புறம்பாக பன் னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர்களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட ரேடியேஷன் எனப்படும் வெப்பக்கதிர்வீச்சினால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக் கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த நஷ்ட ஈடும் தரப்படவில்லை. பல அரசாங்கங்களை மாற்றிவிட்ட நமது மாநிலம், இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான கெமிக்கல் நிறுவனம் மஹாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள் ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.


ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடிக்க தண்டிக்கப் பட்டுள்ளனரா?


மஹாராஷ்டிராவில் கயர்லாஞ்சி என்ற தலித் குடும்பத்தின் கதை உங்களுக்குத் தெரியும். பனிக்கால தலைநகரான நாக்பூருக்கு அருகில்தான் அவர்கள் இருந்தனர். குடும்பத்தில் இருந்த ஐவரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். மற்றவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட னர். ஏன்? சுரேகா போட்மாகே என்ற தாய் தன் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று, தங்களுக்குடைய நிலத்துக்கு உரிமை கொண்டாடி, அதை மீட்டு, தலை நிமிர்ந்து நின்று, தன் ஆண், பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்பினாள். உயர்சாதி என்று சொல்லப் பட்டவர்களுக்கு தலை வணங்க மறுத் தாள். தமிழ்நாட்டைப் போலவே, வரலாற்றுப் பூர்வமாக, மஹாராஷ்டிரா விலும் வலுவானதொரு சாதிக்கு எதிரான அமைப்பு இருந்தது. ஜோதிபாய் பூலே, சாவித்ரிதாய் பூலே, டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார், ஏன் அதற்கு முன்னும் துகாராம், ஏக்நாத், நாம் தேவ் போன்ற ஞானிகள் சாதிய அமைப்பை எதிர்த்துள்ளனர். எனவே, மஹராஷ்டிரா வில் இதுமாதிரியான ஒரு சம்பவம் நடந்தது என்பது நம்ப முடியாதது. நாம் முன்னேறுவதற்கு பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ப தையே இது காட்டுகிறது.


நாம் இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் பள்ளியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற் கும் தனிமைப்படுத்துதல் அதிகமாவ தற்கும் வழிவகுத்தது. ஆனால் 1985க் கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத் தின் வரலாற்றை நாம் பார்ப்போமே யானால், ரத யாத்திரை நடத்தப்பட்ட இடங்களி லெல்லாம், கலவரம் நடை பெற்றது. நான் குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட விரும்பு கிறேன். மீரட், ஹாஷிம் புரா, 1987, மற்றும் பாகல் பூர் 89, இரண்டு நிகழ்ச்சி கள் ரதயாத்திரையின் போது நடந்தன. 51 முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங் கிய உத்தரபிரதேச ஊர்க் காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக் கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.


பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள் தான்.


இப்படிப்பட்ட வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப் போன்ற வரலாற்று மாணவர் கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப் பாக 1992லும் நாம் பார்த்ததோ, பேரா சிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டது போல, டிசம்பர் 92லும், ஜனவரி 93-லும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல் துறையினரின் சார்புத் தன்மை கொண்ட முகத்தையும், பெரும் பான்மை சமூகத்த வருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதா யத்தைச் சேர்ந்த அப் பாவி மக்களுக்கு எதிராக இருந்ததை யும் நாம் பார்த்தோம். 1980கள் முழுவதும் இதுதான் நிகழ்ந்தது. அதன்பிறகு 92ல் பள்ளிவாசல் இடிப்பு, பின் திட்டமிடப் பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்ற ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையையும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.


நண்பர்களே, 1984, 1992, 2002 குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் 1998 முதலே தெளிவாகத் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டனர். ஒரிஸ்ஸாவும் கர்நாடகாவும் அந்த திட்டத்தின் இறுதிக்கட்டம் என்று கூற வேண்டும். ஒரே ஆண்டில் 48 தாக்கு தல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த் தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க யூனியனோடு சேர்ந்த நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. குஜராத்தில் தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்த, செய்து கொண்டிருக்கும் சேவைகளை யெல்லாம் மீறி, தூரமாக இருக் கும் பகுதிகளில் கூட ஆதிவாசி களுக்கு கிறிஸ் தவ சமுதாயத் தினர் செய்த சேவைகளை யெல்லாம் கூட கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப் படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தின ரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் ஹாயாக திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.


2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கை யில் படுகொலைகளை ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக்குரியவர் களாக அடையாளம் காட்டாது விடுமா னால், பெரிய அளவில் தனிமைப்படுத்து தலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவி லும் நாம் இதைச் சரி செய்யத் தவறி விட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.


29, பிப்ரவரி 2002-க்கு வெகுகாலத் துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப் புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப் புத்தகங்களில் சிறுபான்மை சமூகத் தினரை கேவலப்படுத்தி எழுதுதல் இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்பட்டன. இனப்படு கொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.


கம்யூனலிசம் காம்பாட் பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை நான் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழகளால் வெளியிடப்பட்டது. அதை நான் ஜனாதி பதி அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதலமைச்சருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடா தென எனக்கு மாவட்ட அதிகாரி தடை விதித்து இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை ஜனாதிபதியிடம் கொடுத்தேன்.


நண்பர்களே, 29, பிப்ரவரி, 2009 இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் நிறைவடைந்திருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னை யைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார்பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக் கிறது.


வழக்கை உயிருடன் வைத்தி ருக்க மூன்று நான்கு ஆண்டு களாக நாங்கள் உச்சநீதிமன்றத் தோடு போராட வேண்டி யிருந்தது. காலம் கடந்துவிட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்தி லேயே அழுகிச் சாகட்டும் என்று சொல்லி தடுப்பதற்கு தன் சக்தியை யெல்லாம் பிரயோகித்துப் பார்த்தது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழ்நிலைகளில் வசிக்கும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்ச லோடும் மனசாட்சியோ டும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமை யோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத் தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டி ருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத்த லுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப் போன்ற மக்களின் ஆசி களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


ஜஹீராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமை யானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய் சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாசுக்கு ஒரு மாதம்கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பு முறையில் எங்கோ தவறு உள்ளது. வேறுபாடு காட்டி நீதிமன்றத் தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
நான் இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்றால், குஜராத் துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாட காவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்து விட்டேன்.


குஜராத்தில் இன்னும் கும்பல் கும்ப லாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் நேசத் துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்ற னர். குஜராத்தில் தற்போது எப்படி சூழ்நிலை இருக்கிறது? என்று பேரா. ஜவாஹிருல்லாஹ் என்னிடம் கேட்டார். இன்னும் கதை முடிந்துவிட வில்லை என்று சொன்னேன். தீவிரம் குறைந்து படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டன. சிறுபான்மையின உயர் பிரமுகர்கள் சமரசம் செய்து கொண்டு விட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்து கிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர் களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல் லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தம் ஓடுமாறு விடப்படா விட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?


ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கர வாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல் பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?


கயர்லாஞ்சி, திருநெல்வேலியில் நடந்தது பயங்கரவாதச் செயல் இல்லை யா? அது அந்தப் பகுதியில் அச்ச உணர்வை ஏற்படுத்தவில்லையா? பாம்பேயில் நடந்த ரயில்வே குண்டு வெடிப்புகள், 92, 93 படுகொலை களுக்குப் பிறகு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அந்த ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பேயில் 12 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு, காஷ்மீரை யெல்லாம் விட்டுவிடலாம். அவை மெயின் ஸ்ட்ரீம் இந்தியாவுக்குள் வருவ தில்லை. நமது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க வெளியிலிருந்து எதிரிகள் இருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக பல மதங்களையும் சேர்ந்த நாம் ஒற்றுமை யாக வாழ்ந்திருக்கிறோம். அது பாகிஸ் தானின் ஐஎஸ்ஐ பிரிவோ, அல்லது அமெரிக்காவால் நிதி கொடுக் கப்பட்ட அமைப்புகளோ, ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யப்படைகளை வெளியேற்ற அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள்தான் மதரீதியான தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கின. அந்த வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.


நம்மிடையே அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளால் அவிழ்த்துவிடப்பட்ட ஒரு மிருகம் நம்மிடையே உள்ளது என்று ஆசிப் ஜர்தாரி கூட இன்று சொல்கிறார். அந்த மிருகத்தின் கூர் நகங்களில் அகப்பட்டு பாகிஸ்தான் இப்போது வேதனைப்பட்டுக் கொண்டி ருக்கிறது. உள்நாட்டிலேயே வளரும் பயங்கரவாதத்தை அடக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் நான் கேட்கும் கேள்வி. உள்நாட்டிலேயே முளைத்து வளர்ந்த அந்நியப்படுத்துதல், உள்நாட்டிலேயே வளர்ந்த வன்முறை. உள்நாட்டிலேயே வளர்ந்த அநீதி.


சீர்த்திருத்தப்பட வேண்டிய



1.காவல்துறை


கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத் தங்கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக் கிறோம். ஒன்று, காவல் துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங் கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப் பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள் வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டு களுக்குப் பிறகு வந்தது. நமது காவல்துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல்துறையினர் இந்திய மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, இந்திய மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவுமுறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.



ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் “காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை’’ என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தா லும், காவல்துறை மீது உள்ள கட்டுப் பாட்டை இழக்க விரும்பவில்லை.



காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஜவாஹிருல் லாஹ் போன்றவர்களாலும், இங்கு என் பேச்சை கேட்க வந்திருப்பவர்களில் பலராலும் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அறிவு ஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான் மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக் கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.


2. நீதித்துறை


இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத் தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவா யில்லை என்று நாம் இந்த சீர்திருத் தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் என்ற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், நீதிபதியின் நோக்கத் தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை யெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.


நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் எல்லா ஜனநாயக நாடுகளிலும் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் நமது நீதித்துறைக்கு அதை விட்டுவிட மனசில்லை. ஆனால் அது நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டி யது. அது ஒரு தொன்மையான சட்டம். தவறான தீர்ப்புகளை விமர்சனம் செய்வதி லிருந்து அது நம்மைத் தடுக்கிறது. மக்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்பும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீதித்துறை மட்டும் இதற்கு ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?


நாம் அரசியல்வாதிகளை திட்டுகி றோம். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்களை சந்திக்கச் செல்கின்றனர். ஆனால், ஒரு காவல் துறை ஊழியரை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், ஒரு நீதிபதியை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், பிறகு அவர் மக்களின் விமர்சனத்துக்குள் எப்போதுமே வருவதில்லை. அவருடைய செயல்பாடுகளில் குறை காண்கின்ற வாய்ப்பு மக்களுக்கு எப்போதுமே கிடைப் பதில்லை. ஆனால் ஒரு நாகரீகமான நேர்மையான தணிக்கை அவசியம். யார் மீதும் சேற்றை வாரி இறைப்பது நமது நோக்கமல்ல. எந்த அமைப்பையும் குறைத்து மதிப்பிடுவது நமது எண்ண மல்ல.


ஆனால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தில் பன்வரி தேவி வழக்கில் நடந்தது போன்ற ஒரு தீர்ப்பு கொடுக்கப்படுமா னால், உங்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். பன்வரி தேவி ஒரு துணிச்சலான பெண். ராஜஸ்தானில் பால்ய விவாகத்துக்கு எதிராகப் போராடிய ஒரு தலித் அவர். அவர் ஒரு சதின். சதின் என்றால் சமூக ஊழியர் என்று பொருள். உயர்சாதி ஆண்களால் அவர் கொடூர மான முறையில் கற்பழிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அப்படி குரல் எழுப்பக் கூடாது என்பதற்காக அது ஒரு பாடமாம். ஆனால் அவர் உயர்நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது? ஒரு உயர் ஜாதி ஆண் ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணை கற்பழிப்பது சாத்தியமில்லை என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சொன்னது!


தலித் பெண்கள் இயக்கத்தில் இருக் கும் எனது நண்பர்கள் ஒரு ஸ்லோகன் சொல்வார்கள். பகலில் தீண்டத்தகாதவர், இரவில் தீண்டத்தக்கவர். இது சிரிப்பதற் கல்ல. நமது கலாச்சாரத்தின் துயரக் கதை இது. ஒரு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பு வழங்குவாரென்றால், அவரை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா? அதற்கு எதிராக போராட நமக்கு உரிமை இல்லையா?


3.உளவுத்துறை


நமது உளவுத் துறை பற்றியும் நான் கொஞ்சம் பேசி விட விரும்புகிறேன். ஐ.பி.மற்றும் ரா. இவை எந்த பாராளு மன்றத்தின் விமர்சனப் பார்வைக்கும் படாமல் இயங்கும் அமைப்புகள் இவை. எவ்வளவு நிதி அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, எப்படி அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எந்த இயக்கங்களை அவர்கள் ஆதரிக் கிறார்கள் எதுவுமே ஆராயப்படுவ தில்லை. எனவே காவல்துறை, நீதித் துறைக்கு அடுத்தபடியாக, உளவுத் துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும், அதற்காக போராட வேண்டும் என்று மக்கள் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


மத்திய ஐ.பி.யில் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரு பொதுக் கூட்டத்தில் இந்த கருத்தை நான் பிரதம மந்திரிக்கு முன்னால் வைத்தேன். இந்திய ஐ.பி.யில் ஹிந்து வலது சாரியை நோக்கிய சித்தாந்த சாய்வு இருக்கி றது. நான் இதை மிகுந்த பொறுப்புணர் வோடுதான் சொல்கி றேன். ஏனெனில் நான் இதுபற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளேன்.


நான்டெட் வழக்கை நான் புலனாய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், பூனாவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு மத்திய புலனாய்வு அதிகாரி ஒரு பஜ்ரங்தள் உறுப்பினருக்கு ஆயுதம் செய்வதும், பயன்படுத்துவதும் எப்படி என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். எனவே புலனாய்வுத் துறையும் மக்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதாக வர வேண்டிய அவசியமுள்ளது.


முன்னாள் புலனாய்வுத்துறை அதி காரிகள் எழுதிய மூன்று புத்தகங்களை இங்குள்ள அறிஞர் பெருமக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். நான் அவற் றைப் படித்துள்ளேன். அவர்கள் சொல் வதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள் ளாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள். இந்திய உளவுத்துறை தொழில்ரீதியான திறமைகளில் குறை யுள்ளதாக உள்ளது என்பதுதான் அது. இந்திய அரசியல் சாசனத்தின்படி உளவுத் துறை சீர்திருத்தத்துக்கும் விமர்சனத் துக்கும் உட்பட்டதுதான்.


முதல் புத்தகம் Open Secrets: India’s Intelligence Unveiled மலாய் க்ருஷ்ண தாத் எழுதியது. இரண்டாவது புத்தகம் ஐனேயை’ள நுஒவநசயேட ஐவேநடடபைநnஉந: ளுநஉசநவள டிக சுநளநயசஉh யனே ஹயேடலளளை றுiபே. வி.கே.சிங் எழுதியது. மூன்றாவது புத்தகம் தமிழ் நாட்டில் பிரபலமான பி.ராமன் எழுதிய கூhந ஊடிறbடிலள டிக சுஹறு: னுடிறn ஆநஅடிசல டுயநே தயவு செய்து இப்புத்தகங்களைப் படியுங் கள். அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை இப்புத்தகங்கள் சொல்லும், சுருக்கமாகச் சொல்வதானால், அரசியல் ரீதியான தாக்கம் கொண்டதாக உளவுத்துறை உள்ளது. உண்மையான உளவு இல்லை என்பதே.


ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க, ஒரு முன்னாள் அரசு ஆர்எஸ்எஸ் உதவியை நாடலாமா என்று கூட யோசித் தது என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இந்தப்போக்கு எவ்வளவு அபாயகர மானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.


4. கல்வித்துறை


மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான சவால்களைப் பற்றிப் பேசும்போது ஒரு சில ஆலோசனைகளை நான் வழங்க ஆசைப்படுகிறேன். அதில் முக்கியமா னது கல்வி. 13 ஆண்டுகள் பள்ளி வாழ்க்கையில் நம் குழந்தைகளுக்கு நாம் தரும் பாடப்புத்தகங்கள், சொல்லித்தரும் வரலாறு, உருவாக்கும் சமூக உணர்வு இதெல்லாம் முக்கியம். தமிழ்நாட்டில் சரியாகத்தான் இருக்கும். ஆனால் குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாடப்புத்தங்களில் ஜாதியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிகக் குறைந்த இடமே அளிக்கப்பட்டுள்ளது. பெயருக்காக. உடல் உழைப்புக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் உடல் உழைப்பை மரியாதைக் குறைவாகப் பார்க்கவே குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் ஜாதியம் சார்ந்த அணுகுமுறை. அதிலும் குஜராத் தான் மிகமிக மோசம். பொருளாதார ரீதியாக ஜெர்மனியையும் இத்தாலியையும் சக்தி மிகுந்த நாடுகளாக மாற்றியதற்காக ஹிட்லரும் முசோலினி யும் புகழப்படுகிறார்கள். மோடி இன்று குஜராத்தை மாற்றிக் கொண்டிருப்பதைப் போல.


எனவே என்னவிதமான வரலாற்றை நாம் நம் குழந்தைகளுக்குப் போதிக் கிறோம்? நாட்டில் இருந்த ஒவ்வொரு ஜாதியும் காலனிய ஆதிக்கத்தை எதிர்த் துப் போராடிய வரலாற்றைச் சொல்கி றோமா? இல்லை. விடுதலைப் போராட் டத்தில் பெண்களுக்கு உறுதியான பங்கிருந்தது என்பதைச் சொல்கி றோமா? இன்னும்கூட அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறோமா? இல்லை. காலனிய சக்திகள் நம் நாட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, கிபி 58ல், மலபார் கடல் பகுதி வழியாக, தூய தாமஸ் என்பவர் மூலமாக, கிறிஸ்தவம் இந்தி யாவுக்குள் வந்தது என்று சொல்கி றோமா? இஸ்லாம் வணிகர்கள் மூலமாக வந்தது என்று சொல்கிறோமா? சிந்துப் பகுதி படையெடுக்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, 110 ஆண்டு களுக்கு முன்பே, சேரமான் பெருமான் என்ற அரசன் முஸ்லிமாகி இஸ்லாத்தைப் பரப்பினான் என்ற வரலாற்றைச் சொல் கிறோமா?


இப்படியெல்லாம் சொல்லித் தராத தனால், ஜாதியம் சார்ந்த வரலாறுதான் அவர்கள் மனதில் வேர் விடுகிறது. விடுதலை, சமத்துவம் ஆகிய கொள்கை களுக்காகவே பெருமளவில் கீழ்ஜாதி இந்தியர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினர் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா? கேரளா வில் கொத்தடிமைச் சட்டம் ரத்தான போதுதான் அதிக அளவிலான மதமாற் றங்கள் நிகழ்ந்தன என்பதைச் சொல்கி றோமா? ஏனெனில் அடிமைகளாக இருந்த மக்கள் விடுதலை அடைந்த போது இஸ்லாத்திலோ, கிறிஸ்தவத் திலோ தங்கள் சுயமரியாதையும் கண்ணி யமும் காக்கப்படும் என்று நம்பினார்கள்.


தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம் களுடைய பிரச்சனை இன்று ஒரு அரசி யல் பிரச்சனை. இன்றைய காலகட்டம் உரிமை மறுக்கப்படும் காலகட்டமாக உள்ளது. சோழர்களின் ஆட்சிக் காலத் தில் எப்படி ஹிந்து மதம் தென் கிழக்கு ஆசியாவில் பரவியது என்றும் நாம் சொல்லித் தருவதில்லை. இதையெல் லாம் நாம் சொல்வதில்லை.


திடீரென்று நாம் நமது பாடப் புத்தகங் களில் இருந்து கான் அப்துல் கப்பார் கானைத் தூக்கிவிடுகிறோம். 1970களில் அவர் இருந்தார். பின்னர் திடீரென்று மறைந்து போனார். ஏனெனில், எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட ஒருவர், நாட்டின் அந்தப் பக்கத்தில் இருந்து கொண்டு பிரிவினையை எதிர்க்கிறார். அது அந்தக்கால முஸ்லிம்கள் எதற்காக போராடினார்களோ அதோடு ஒத்துப் போக வில்லை.


டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் உரைகள் பற்றி நம் குழந்தைகளுக்கு நாம் எதுவும் சொல்லித்தருவதில்லை. ஜோதிபா புலே ஏன் பேசினார் என்று விளக்குவதில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே பெரியார் கற்பிக்கப்படு வதில்லை. மௌலானா அபுல் கலாம் ஆசாத், ஜும்ஆ மசூதியின் படிக்கட்டு களில், இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நாளன்று நடந்தது என்ன என்பதை யெல்லாம் சொன்னால் நானும் நீங்களும் அழுது புலம்புவோம். ஆனால் இதெல்லாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படுவதில்லை.


நமது கல்வி அமைப்பில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. நாம் சொல்லிக் கொடுக்கும் வரலாற்றில், சமூக சேவை யில் எல்லாம் பெண்களையும், சமுதாயத் தையும் நாம் எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்? இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் ஒவ்வொரு சமுதாயமும் செய்த பங்களிப்பு என்ன? இதையெல்லாம் மனதில் கொண்டு நமது கல்வி உள்ளடத்தை நாம் சீரமைக்க வேண்டும்.


நமது தேசத்தின் அரசியல் சாசனத் தின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பை எதிர்க்கும் இளம் மனதுகளை நாம் உருவாக்குகிறோம். இன்னும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள மிகப் பெரிய ஆபத்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அல்ல. மதச்சார்பற்ற தனியார் அறக்கட்டளைகளும் அல்ல. உலகமயமாதலின் காரணமாக, கல்வியில் இருந்து ஒருபக்கம் நாம் பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.


இந்த சூழ்நிலையில் கல்விக்கூடங் கள் மூலமாக நமக்கு இருக்கும் பெரிய சவாலும் ஆபத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் சிஷு மந்திர், சரஸ்வதி சிஷு மந்திர் மற்றும் விஎச்பியின் ஏகல் வித்யாலயா ஆகியவையாகும். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஒரிஸ்ஸா போன்ற மத்திய பழங்குடி இந்தியாவில், அந்த பழங்குடி இனத்தவருக்கு எந்த அரசும் கல்வி கொடுக்காத சூழ்நிலையில், விஎச்பி ஒரு ஏகல் வித்யாலயாவைத் திறந்து வைக்குமானால், உங்கள் குழந்தைகளை அந்த பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று அந்த பழங்குடி யினரிடம் சொல்லும் தகுதியோ உரிமையோ நமக்கு எப்படி வரும்? இன்றைக்கு உள்ள பெரிய பிரச்சனை அதுதான்.


நமது நாட்டை ஆக்கிரமிக்கும் சவால்களை எதிர்கொள்ள விரும்பினால், `சட்டத்தின் ஆட்சி’ தொடர்பான இந்த பிரச்சனைகள், மற்றும் கல்விக்கான சமூக மாற்றம் குறித்தான பிரச்சனை, இவையெல்லாம் தேர்தலின்போது நமது அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக மாற வேண்டும். இவற்றை மக்கள் முன் வைத்து அவை செல்ல வேண்டும். உங்களுக்கும் எனக்குமான அறிவு தளத்தில் இயங்கும் பிரச்சனைகள் மட்டும் அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. தீவிரவாதம் நாட்டின் எந்த மூலையில், எந்த சமூகத்தில் இருந்து வந்தாலும், எல்லை தாண்டி வந்தாலும், நாம் அதை எதிர்க்கிறோம். அதுபோல, வெறுப்பை உமிழும், வெறுப்பைத் தூண்டும், வெறுப்பை வளர்க்கும் எல்லாப் பேச்சை யும் நாம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அசிங்கமான வசவு மொழி களைத் தடை செய்ய வேண்டும். நம் நாடு துண்டாடப்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.




மும்பை நன்றாக எதிர்வினையாற்றி யுள்ளது. 26 நவம்பர் அன்று இழக்கப்பட்ட 180க்கும் மேலான உயிர்களில், 35 சதவீதத்துக்கு மேல் இறந்தவர்கள் முஸ்லிம்கள். வி.டி. ஸ்டேஷனில் இறந்தவர்கள் மட்டும் 56 பேர். சுட்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று துப்பாக்கி குண்டு பார்க்கவில்லை. ஏழு மாநகர்களிலும் இருந்த முஸ்லிம்கள் அந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பினர். பக்ரீதை மிகுந்த துக்கத்துடனேயே அவர்கள் கழித்தனர். சிறுபான்மையினரை பரீட்சை செய்து பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது. அவர்கள் நம்மோடு தோளோடு தோளாக எப்போதுமே இருந்திருக்கிறார்கள். தீவிரவாதத்துக்கும், அவ்வகையான குண்டுகளுக்கும் எதிராக அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்துக்கான போராட் டத்தில் நாம் அவர்களை நம்மோடே அழைத்துச் செல்ல வேண்டும். மிக்க நன்றி
மும்பை சம்பவம் துளைக்கும் வினாக்கள்

*

ஒவ்வொரு பயங்கரவாத சம்ப வங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை?
*

தீவிரவாத தடுப்பு படை தலை வர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரத மரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா?
*

முதல் நாள் டெக்கான் முஜாஹி தீன் இயக்கம்தான் இதற்குக் காரணம் என ஊடகங்கள் பரபரப்பாக அறிவித் தன. இத்தகவலை இவர்களுக்கு தெரிவித்தது யார்?
*

இரண்டாவது நாள் லஷ்கரே தொய்பா தான் காரணம் என பெரும் பாலான ஊடகங்கள் அறிவித்தன. லஷ்கரே தொய்பாதான் காரணம் என இவர்களுக்கு யார் சொன்னார்கள்? இல்லையெனில், `டெக்கான் முஜாஹி தீன் காரணமில்லை, அந்தப் பெயரை இரண்டாவது நாள் குறிப்பிட வேண் டாம்’ எனக் கூறியது யார்? ஆனால் செய்திகளின் போக்கை கணிக்காமல் பெரிய அறிவாளித்தனமாக இன்ன மும் `டெக்கான் முஜாஹிதீன்தான் காரணம்’ என செய்தி கூறிக் கொண் டிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு மட்டும் முக்கியத் தகவல்களைக் கொடுத்தது யார்?
*

டெக்கான் முஜாஹிதீன் ஆயிற்று, லஷ்கர்-இ-தொய்பா போயாச்சு, மூன்றாவது நாள், `தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்பட்டது. அப்படியானால் மேற் கூறப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் காப்பாற்றி வேறொரு நபரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்றால், இடையில் என்ன மாற்றம் அல்லது குழப்பம் நிகழ்ந்தது?
*

பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்துதான் வந்திருக்கிறார்கள் என் றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம்தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதுகுறித்து மோடி அரசை விசாரிக் காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுகுறித்து எந்த புண்ணியவானும் (!) வாய் திறக்கவில்லையே ஏன்?
*

இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின் றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். தற்போதும் சட்டமன் றத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?
*

தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசிய தாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட் டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.



மோடி ஆடிய நாடகம்

மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடு வது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது
மும்பை பயங்கரம்: வெளிவராத உண்மைகள்!


மும்பை மீது பயங்கரவாதிகள் தொடுத்த யுத்தம் உலகத்தையே அதிரச் செய்துள்ளது. ஆசியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை முதன்முறையாக பயங்கரவாதி களின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக் கானது. மும்பைக்கு மட்டுமல்ல, இந்திய வல்லரசுக்கு இதுவே கசப்பான முதல் அனுபவமாக இருந்தது.


உலகின் நான்காவது தரைப்படையைக் கொண்டிருந்த இந்திய வல்லாண்மைக்கு, 100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் ஜனநாயக நாட்டின் மீது பயங்கர வாதிகள் தொடுத்த போர், அவர்களை முறியடித்து முற்றிலும் அழித்தால் மட்டும் போதாது. இனி நம் இந்தியத் திருநாட்டின் மீது எந்த தீய சக்தியும் எந்த தாக்குதலையும் நிகழ்த்த இனி கனவிலும் கூட நினைக்காத வண்ணம் என்றுமே மறக்க முடியாத பதிலடியைக் கொடுக்க தயாராக வேண்டும் என்ற உறுதியையும் ஏற்க வைத்துள்ளது.


பத்து பரதேசி நாய்கள் மட்டுமே ஒரு மாபெரும் நகரத்தின் முக்கிய பகுதிகளைப் பிடித்து ஏராளமான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து அப்பாவி மக்களை குலைநடுங்க வைத்த கொலைகாரப் பாவிகளை கிஞ்சிற்றும் மன்னிக்க முடியாது. பாவிகளின் கைகளில் மும்பை மாநகரம் சிக்கித் தவித்தபோது உள்துறை அமைச்சர் வழக்கம்போல் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். 60 மணி நேரத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்ற போர் நாட்டையே நிலைகுலைய வைக்கக்கூடியதாகவும், அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடியதாகவும் இருந்தது.


நாரிமன் ஹவுஸில் 26.11.08 இரவு 8.20க்கும், விக்டோரியா டெர்மினஸில் 9.24க்கும், லிபோ போர்டு கபேயில் இரவு 9.15க்கும், டிரைடன்ட் ஹோட்டலில் 8.25க்கும், விபோபார்லேவில் 9.55க்கும், காமா மருத்துவமனைக்கு வெளியே 10.15க்கும், மெட்ரோ சினிமா தியேட்டருக்கு வெளியே 10.30 மணிக்கும், வாடி பந்தரில் 10.45க்கும், ஜிர்காம்சல்பதியில் 10.50க்கும் குண்டுகள் வெடித்தது.


வெளிநாட்டிலிருந்து 20 முதல் 25 பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்ததாக மகாராஷ்டிர மாநில காவல் துறைத் தலைவர் ஜி.பி.ராய் தெரிவித்தார். ஒரு நகரமே முற்றுகையில் சிக்கித் தவித்த போது அதனை மீட்க நடந்த முயற்சி உடனடி யாக ஏன் நிகழ வில்லை என்பதை ஆய்ந்தால் 9.30க்கு மகாராஷ்டிரா முதல் வருக்கு தகவல் தெரிந்த போது அவர் கேரளாவில் இருந்தார்.முழு விவரத்தையும் நிலை மையின் தீவிரவாதத் தையும் அவர் புரிந்து கொண்ட போது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.


ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச் சர் சிவராஜ் பாட்டீலுக்கு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தொலை பேசியில் தகவல் தெரிவித்து கமாண்டோ படைகளை அனுப்புமாறு கேட்கும் போது நேரம் இரவு 11.30 ஆனது. எத்தனைப் பேர் வேண்டும். எத்தனைப் பேர் வேண்டும் என சிவராஜ் பாட்டீல் கேட்கிறார். 200 பேர் வேண்டும் என்கிறார். சிவராஜ் பாட்டீல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ தலைவர் ஜி.கே.தத்-ஐ அழைத்து, தீவிரவாதிகளை ஒடுக்க 200 கமாண்டோக்களை தயாராக்கி அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.


உள்துறை அமைச்சரும் மகாராஷ்டிர முதலமைச்சரும் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பெரும்பாலான கமாண்டோ படையினர் தூங்கவே போய் விட்டார்கள். அதன்பிறகு அவர்களிடம் விஷயத்தைக் கூறி சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிய பின் 200 பேரும் தயாராக இருக்க இவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய விமானம் அங்கு இல்லை. 11.76 என்ற விமானம் டெல்லியில் இல்லை. அது சண்டீகரில் இருந்தது. சண்டீகருக்கு தகவல் அனுப்பப்பட்டது. விலை மதிப்பு மிக்க நேரம் வீணாகிக் கொண்டிருந்தது. விலை மதிக்கவே முடியாத உயிர்களும் தான்.


சண்டீகரில் 11.76 என்ற அந்த விமானத்தின் பைலட்டை உறக்கத்தில் இருந்து எழுப்பி விமானம் புறப்பட, நேரம் அதிகாலை 2 மணி ஆகியிருந்தது. 200 கமாண்டோ படையினரை சுமந்து வந்த விமானம் மும்பை வந்து சேர விடியற்காலை 5 மணி ஆனது. இருப்பதிலேயே மிகவும் வேகம் குறைந்த விமானமாம் 11.76.


விமான நிலையத்தில் காத்திருந்த இவர்கள் சம்பவ இடத்திற்காக சிறப்பு பேருந்துகள் வருவதற்காக 5.30 மணி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. கமாண்டோ படையினர் அனைவரையும் கொண்டு செல்ல பேருந்துகள் அனைத்தும் மொத்தம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன.


பயங்கரவாதிகளோடு யுத்தம் செய்வதற்காக ஆயத்தமாக குழு குழுவாக அவர்கள் பிரிந்து தங்கள் கடமையைத் தொடங்கிய போது காலை 7 மணி.


இந்திய தேசிய பாதுகாப்பு படை சாமான்யமான படை அல்ல. அதிரடி சாகசங்களுக்கும் அநாயச துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. சம்பவம் நிகழ்ந்த அரை மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் சென்றிருந் தால் நிச்சயம் பயங்கரவாதிகளை துவம்சம் செய்திருப்பார்கள். எதிரிகள் பின்னங் கால் பிடறியில் பட ஓடியிருக்கக் கூடும். ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல, 9 1/2 மணி நேரம் தாமதம் என்பது ஜீரணிக்கவே முடியாதது; மன்னிக்கவே முடியாதது.


தேசிய பாதுகாப்பு படை என்பது தலைநகர் டெல்லியில் மட்டுமே இருக்க வேண்டிய படைப் பிரிவா என்ன? நாட் டின் முக்கிய நகரங்களிலும், பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த கேந்திரங்களிலும் என்.எஸ்.ஜி. என்ற தேசிய பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்பட வேண்டும்.


ஆனால்பயங்கர வாதம் நடந்தபோது முதல மைச்சர் முறையான உத்தர வுகளை பிறப்பிக்கவே இல்லை என்கிறார்கள்.


இது ஒன்றும் மன்னர் காலம் அல்ல. மன்னர் காலத்தைப் போல் தளபதிகள் படையினை வழிநடத்திச் செல்வதைப் போன்ற ஓர் அவசியம் இல்லை. வீரர்களை சிப்பாய்களை அனுப்பி அவர்களை களத்திலே நிறுத்தி பின்னால் இயக்கி வெற்றி பெறு வது இன்றைய உலகின் வழமை. ஆனால் நிலைமையை நேர் மாறாக்கி விட்டிருக்கிறார்கள்.


ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக் கிறார்கள். இது எதிரிகள் தீட்டிய சதியின் வெற்றியா? நம்மவர் களின் மதியின் தோல்வியா? வெறும் பத்து பேர்கள்தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணமா? என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அதுகுறித்த எந்த ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது என்ற நிலை. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை. முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்காளக மாறிய பின்னரேமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது.


ராணுவத்தில் பணியாற் றிய கர்னல் புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில் இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவே யில்லை. வீட்டுக்கு செல்லா மலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவை யான ஆதாரங்கள் கிடைத்து விட்டன.


தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே இவ்வளவு கனத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டு வார்கள். அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக் கக் கூடியதாகவே இருக்கிறது.


இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக் கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.


நாட்டில் எத்தனையோ விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப் பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார். இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த மன்மோகன்சிங் மீதுதான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது. அத்வானி போன்றவர்களின் அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராள மானவர்களுக்கு பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ உள்நாட்டுத் தீவிர வாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ் வொரு இந்தியனுக்கும் உண்டு. இந் நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப் படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடும்போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாகியிருக்கிறது.


ராணுவத்தில் ஆகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் முஸ்லிம்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.


எனவே நாட்டை அச்சுறுத்தும் நிஜமான பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அனைத்து மாணவர் களுக்கும் பள்ளி இறுதி படிப்பு காலத்தி லேயே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க இந்திய அரசு முன்வர வேண் டும். அதற்கான முதற்கட்ட முன்னேற் பாடுகளைத் தொடங்க வேண்டும்.


அப்போதுதான் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டு நம்நாட்டில் - நமது வரிப் பணத்திலே டேரா போட்டு காலத்தைத் தள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாடி வீட்டு பிச்சைக் காரனின் (!) பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தி அழித்தொழிக்க முடியும்.


நாங்கள் தயார்

Wednesday, October 29, 2008

abusalih news about malegaun blast involved sangparivaar

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட
"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!

ஸப்ரன் ஹபீப்



(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)
மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.


செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


ரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.




இதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.


இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.




இந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.


விசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.


உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.



(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)


நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.


நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

abusalih news about delhi

என்கவுண்டரில் தப்பினார் அமீர்!

அபூசாலிஹ்




டெல்லி ஜாமியா நகர் கடந்த சில வாரங்களாக பரபரப்புடன் பத்திரிக்கை களில் அடிபட்ட பகுதியாகும். டெல்லி குண்டு வெடிப்புகளில் குற்றவாளிளை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவிய மத்திய உள்துறை தனது தோல்வியை திசை திருப்ப டெல்லி ஜாமியா நகர் பகுதியில் போலி என் கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்திய தாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


பொதுவாகவே சர்ச்சைக்குரிய என்கவுண்டர்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அப்போது மட்டுமே பெரிதாக பேசப்பட்டு சில நாட்களில் அடங்கிவிடும் ஆனால் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் நிகழ்ந்த என்கவுண்டர் போலி என்கவுண்டர் என்றே அப்பகுதி மக்களாலும் நடு நிலை ஊடகங்களாலும். மனித உரிமை ஆர்வலர்களாலும் அழைக்கப்பட்டது.
சரித்திர சிறப்புமிக்க ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பெருமைக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி புக்கர், பரிசுபெற்ற சர்வதேச மனித உரிமை ஆர்வலர் அருந்ததிராய், முன்னணி வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி போன்றோர் டெல்லி போலி என்கவுண்டர் பிரச்சினையில் ஜாமியா நகர் பகுதி மக்களின் சார்பாக வாதாடினர்.


போலி என்கவுண்டருக்கு மற்றொரு முயற்சியா?


ஆதிஃப் மற்றும் ஷாஹித் என்ற இரண்டு இளைஞர்களின் மீது பிரயோகிக் கப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத் தால் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த அந்த மக்களுக்கு மேலும் ஒரு விபரீதத்தை எந்த தீய சக்தியாவது நிகழ்த்த திட்டமிட்டால் அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும். பொறுத்தது போதும் - பொங்கியெழு என எழுந்து சாதித்த சம்பவத்தைத்தான் நாம் இனி காணப் போகிறோம்.


நம்பர் பிளேட் இல்லாத மர்மங்கள்




இரவு எட்டு மணி கறுப்பு நிற கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில் ஷஹீன் பாக் பகுதியில் நுழைகிறது. அந்தக் காரில் நம்பர் பிளேட்டும் இல்லை. ஆனால் அந்தக் காரில் ஓர் இளை ஞனின் அபயக் குரல் மட்டும் கேட்கிறது.


சுதாரிப்படைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு பரிதாபப் படுகொலை நிகழ்ந்துவிடக் கூடாது என எண் ணியோ என்னவோ கூடுதல் எச்சரிக் கையுடன் மக்கள் அந்த மர்ம காரை சூழ்ந்தனர்.


எவனா இருந்தால் எங்களுக்கு என்ன?




உடனடியாக காரை நிறுத்து. நீங்கள் எல்லாம் யார்? யாரை கடத்திக் கொண்டு போகிறீர்கள்? என கேள்விக் கணை களை துளைத்தபடி மக்கள் சூழ்ந்தனர். மக்களின் கெடுபிடியினால் “நாங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத தடுப்புப் படைக் காவல்துறையினர்’’ என்று கூறினர். அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். அங்கு சற்று பதுங்கி இருந்தபடி பயந்துபோய் காட்சியளித்த அந்த இளைஞனின் பெயர் அமீர் என்பதும் தெரிய வந்தது.


சுற்றி வளைத்த கூட்டத்தைக் கண்ட அந்த சீருடை அணியாமல் வந்த காவல் அதிகாரிகளில் நால்வர் தடாலென சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். ஒரு போலிஸ்காரரும் கடத்தப்பட்ட அமீர் என்ற இளைஞரும் மட்டுமே இப்போது ஷஹீனாபாத் மக்களின் வசம்.


அமீரை சுட்டுக்கொன்று விட்டு அவன் பயங்கரமான பயங்கரவாதி எனவே அவனை சுட்டுக் கொன்றோம் என அறிவிப்பதாக இருந்த சதி திட்டம் மாட்டிக் கொண்ட அந்த போலிஸ் காரரின் வாக்கு மூலத்தில் இருந்து வெளிவந்தது. இந்த நிலையில் மக்க ளின் கூட்டம் அந்த கறுப்பு நிற ஹுண் டாய் காரை சூழ்ந்து கொள்ள பதட்டத்தின் கொதிநிலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.


காரை சோதனைப் போடுப்பா

காரை சோதனைப் போடு, காரை சோதனைப் போடு என மக்களின் ஆத்திரம் வானத்தை முட்டியது. அந்தக் காரை துடுக்கான இளைஞர்கள் பாய்ந்து விழுந்து சோதனையிட்டனர். அதில் பல ஆவணங்கள் சிக்கின. அதில் பான் கார்டுகள், மொபைல் சிக்கின. கம்ப்யூட் டர் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர் களின் ஐடென்டிட்டி கார்டு போல் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. அந்தக் காரின் உள்ளே நம்பர் பிளேட் கண்டெடுக்கப் பட்டது. னுடு1கூறு 1596 என அதில் காணப்பட்டது. அந்த நம்பர் பிளேட் புதிதாகவும் இதுவரை பயன் படுத்தப்படாததாகவும் இருந்ததைக் கண்டதும் கூடியிருந்த மக்களிடையே ஆத்திரம் அலை பாய்ந்த்து.


சேதப்படுத்தப்பட்ட வாகனம்


கறுப்பு நிற ஹுண்டாய் கார் உடைத்து நொறுக்கப்பட்டது. கார் கண்ணாடிகள் சிதறின. இதற்கிடையில் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜாமியா நகர் ஷஹீனாபாத் பகுதி மக்களால் சிறை பிடிக்கப்பட்ட உ.பி காவல்துறை அதிகாரியையும் அவரால் கடத்தப்பட்ட அமீரையும் ஜாமியா நகர் காவல் நிலையத்தினரிடம் ஒப்படைக்கு மாறு ஜாமியா நகர் காவல்துறையினர் கெடுபிடி காட்டத் தொடங்கினர். பிரச் சினை மிகப்பெரியது உள்ளூர் மேலதி காரிகள் வரவேண்டும். அவர்களிடம் தான் ஒப்படைப்போம் என பொது மக்களும் பதிலுக்கு கெடுபிடி காட்டினர். விடிய விடிய காவல் நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை மக்கள் திரண்டு காத்திருந்தனர். காவல்துறை உயர் அதிகாரி குருசரண்தாஸ் வந்த வுடன் அவர்கள் இருவரையும் ஜாமியா நகர் மக்கள் ஒப்படைத்தனர். அத்தோடு மக்கள் அமைதி அடையவில்லை. அத்து மீறி ஆள்கடத்தல் கிரிமினல் செயலில் ஈடுபட்ட நொய்டா காவல்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உயர் அதிகாரி னு.ஊ.ஞ அஜய் சவுத்ரி `நொய்டா விலிருந்து வந்த ஆள்கடத்தல் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உபி மாநில காவல்துறையினரிடம் தெரிவிக் கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து ஜாமியா நகர் பகுதி மக்கள் வீடு திரும்பினர்.


திரண்ட மக்கள் கூட்டத்தில் ஸஹாரா உர்தூ நாளேட்டின் ஆசிரியர் அஜீர் பர்னி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்களும் திரண்டிருந்தனர்.


நொய்டா நொந்து போனோமடா


இதனிடையில் நொய்டா ஆள் கடத் தல் காவல்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்து இருக்கிறார்.


எங்கள் இளைஞர்களை கடத்தி கண் மூடித்தனமாக கொலை செய்யும் அளவுக்கு சில காவல்துறை அதிகாரிகள் துணிந்த பிறகு நாங்கள் ஒவ்வொரு உள்நோக்கம் கொண்ட காவல்துறை அதிகாரியையும் பத்திரமாக (? ) கவனிப்பது எங்கள் அன்றாட வேலையாக மாறிவிட்டது. எங்கள் இளைஞர்களின் உயிர்கள் எங்க ளுக்கு முக்கியம் அல்லவா? என்கிறார் ஜாமியா நகர் சமூக சேவகர் அமீருல் ஹஸன்
குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு!
மன்னிப்புக் கேட்டது சோனி நிறுவனம்!!






உலகின் மிகப்பெரிய வீடியோ விளையாட்டுக்களை தயாரிக்கும் சோனி நிறுவனம், குர்ஆனின் வசனங்களை தனது வீடியோ கேமில் பயன்படுத்தியதற் காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்த கவலை அமெரிக்காவின் சிக்காகோ டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


முஸ்லிம்களிடம் மனம் வருந்தி மன் னிப்புக் கேட்பதாகவும், லட்சக்கணக்கான தங்களது கணினி மற்றும் வீடியோ கேம் பிரதிகளை திரும்பப் பெறுவதாகவும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் பேட்ரிக் செய்போல்டு அறிவித்திருக்கிறார்.


சோனியின் `லிட்டில் பிக் பிளானெட் கேம்’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டுக்கு வருவதாக இருந்தது. இந்த வீடியோ விளையாட்டில் இடம் பெறும் இசையுடன் கூடிய பாட்டில் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் தேவையே இல்லாமல் (முஸ்லிம்களை சீண்டுவதற்காகவே) இடம்பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தன.


இன்றைய தேதி வரை சோனியின் பி53 மட்டுமே பிரபலமான வீடியோ விளை யாட்டாக இருந்து வந்தது.


தற்போது அந்த சாதனையை முறியடிப்பதற்காக வெளிவந்த சோனியின் லிட் டில் பிக் பிளானட் முஸ்லிம் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபிள்ளை விளையாட்டில் குர்ஆன் வசனங்களை சேர்த்தது சிறு பிள்ளை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாக வீடியோ மார்க்கெட்டுக்கு வரு வது இது முதல்முறையல்ல. ஜப்பான் நிறு வனம் ஒன்றும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இதைப்போன்று மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது

Friday, September 26, 2008

போலிஎன்கவுண்டர்:
''எங்கிருந்தோ கொண்டுவந்த பிணங்கள்!
சர்ஜுன்



டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த விமர்சனக் கணைகளால் ஆடிப் போன மத்திய அரசும், டெல்லி பிரதேச அரசும் எத்தைத் தின்றால் பித்தம் தனியும் என்ற நிலையில் தடுமாறியது. இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என அப்பாவிகள் மீது குற்றம்சாட்டி வளைத்துப் பிடித்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு குற்றங்களில் சங்பரிவார் இயக்கங்கள் பின்னணியில் இருந்ததாக பல்வேறு மட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த கோணத்தில் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ துப்பறிந்த தில்லை. உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய உண்மை எண்ணம் இல்லையோ என்பதை நிரூபிக்கும் விதமாக அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாக வும் அதில் இருவர் கொல்லப்பட்ட தாகவும், கொல்லப்பட்டவரில் ஒருவர் ஆதிஃப் என்ற பஷீர்தான் முக்கிய சதிகாரன் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் தெரிவித் தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியும் பலி யானதுதான் பெரும் சோகம்.




டெல்லியின் ஜாமியா நகர் பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி யாகும். குறுகிய சந்துகளில் திடீரென நாடகம் போல் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

குறுக்குச் சந்துகளில் குமுறலுடன் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் முஸ்லிம் கள் குழுமினர்.
ஒலிபெருக்கிகளின் மூலம் பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாரம்பரியம் மிக்க பல்கலைக் கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டது தேவையற்ற பதட் டத்தை ஏற்படுத்தியது. ஜாமியா நகரில் ஒரு போலி என்கவுண்டர் நிகழ்த்தி ஓர் அபார்ட்மெண்டில் நான்காவது தளத்தில் இரண்டு உடல்களை வேண்டுமென்றே வைத்து நாடகமாடுவதாக ஜாமியா நகர மக்கள் கோஷம் எழுப்பினர்.
சில உள்நோக்கம் கொண்ட தொலைக்காட்சிகள் பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தவறான தகவல்களைக் கொடுத்தன.
ஜாமியா நகர் பாட்லா ஹவுஸ் அபார்ட்மென்டில் 4வது மாடியில் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
நடைபெற்ற இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கோரிக்கை விடுத்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆன வர். ஜாமியா நகர் பகுதி மக்கள் வெகு காலமாகவே காவல்துறையினரின் கெடுபிடிகளில் சிக்கி வேதனையடைந்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வுக்கும் பிறகு இப்பகுதியை சல்லடையாக சலிப்பதே நடைமுறையாகி விட்டது என்றும் தனது குமுறலை ஜீலானி தெரிவித்தார்.
இருவர் முன்கவுண்டர் செய்யப்பட்ட விதமும், என்கவுண்டர் செய்த இடமாக காவல்துறையினர் குறிப்பிடும் இடமும் முழுமையாக சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் முகத்தை பொதுமக்களிடம் காட்டவில்லை. மர்ம மான முறையில் போர்வையால் மூடப் பட்டதைக் கண்டு சந்தேகம் எழுப்புகிறார் ஃபைஸல்கான் என்ற அப்பகுதிவாசி. எங்கள் பகுதியைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறார்கள். அவர் மாணவரா? அல்லது குடும்பஸ்தரா? என்பதை எங்களிடம் காட்டாமல் அவர்கள் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? அவர்களாகவே மர்மமான முறையில் அறிவித்திருப்பது நிச்சயம் சந்தேகத்துக் குரிய ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடுகிறார்கள் அவ்வூர் வாசிகள்.
நீங்கள் இந்தப் பகுதி யைப் பாருங்கள், யாரும் தப்பித்து ஓடும் நிலையிலா இருக்கிறது? மிகவும் மக் கள் நெருக்கமான பகுதி யில், அதிலும் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்முகாமிட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ள யாருமே எவ ரும் தப்பித்து ஓடியதைப் பார்த்ததில்லை என டெல்லி ஜாமியா நகர் பகுதிவாசி ஆர்.ஆபித் குறிப்பிடுகிறார்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் தின் விரிவுரையாளர் ஃபரியாத் தீவிர வாதிகள் பதுங்கி இருந்ததாக சொல்லப் படும் எல்-18 அபார்ட்மென்ட்டின் பின்னால் வசிக்கிறார். ஒரே ஒரு சிறிய புல்லட் சத்தத்தைக் கேட்டேன் என்கிறார்.

எங்களுக்கு ஒரு உண்மை தெரி கிறது. ஒவ்வொருவரும் முஸ்லிம்களைக் குறிவைப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இந்த முஸ்லிம் பகுதி குறி வைக்கப்படுகிறது என்கி றார் ஜாமியா நகர்வாசி சலீமுத்தீன்.

டெல்லியில் நடந்த தாகக் கூறப்படும் என் கவுண்டர் குறித்து நேரம் வாரியாகப் பார்ப்போம்.

காலை 10 மணி

20 காவல்துறை அதி காரிகளைக் கொண்ட படை துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் ஜாமியா நகரில் நுழைகிறது. அந்தப் படை பிளாக் எல்-18 அபார்ட் மென்ட்டை சுற்றி வளைக்கிறது.


11 மணியிலிருந்து 11.45 மணிக்குள்

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, புல்லட் புரூஃப் என்ற குண்டு துளைக்காத சட்டை அணியாத நிலை யில் கதவை உடைக்கிறார். காவல்துறை சோதனைக்காக வந்திருக்கிறோம் என பெருங்குரலில் கத்திக் கொண்டே உள்ளே செல்ல முயலும் போது உள்ளி ருந்து 3 எம்.எம். பிஸ்டல் சீறுகிறது. மூன்று தோட்டாக்கள் சர்மாவை நோக் கிப் பாய்ந்தன. இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்தது. சர்மா தரையில் சாய, அவரை காவல்துறை யினர் தாங்குகின்றனர். மற்றொரு தோட்டா ஏட்டு பல்வான் சிங்கின் வலது கையில் துளைத்தது. காவல்துறை ஆய் வாளர் சர்மா `ஹோலி பேமிலி` மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு வயிற்றிலிருந்த குண்டு அகற்றப் பட்டது.

மூத்த காவல்துறை அதிகாரிகள் இணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) கர்னால் சிங் மற்றும் துணை ஆணையர் (சிறப்பு) அலோக் குமார் உள்ளிட்டவர்கள் ஜாமியா நகர் வந்தனர்.

சிறப்புப் படையின் பல்வேறு பிரிவின ரும் தேசிய பாதுகாப்பு கமாண் டோக்களும் அங்கு வந்தனர். மீண்டும் ஒருதடவை காவல்துறை அதிகாரிகள், அபார்ட்மென்டுக்குள் நுழைய முயல்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

22 சுற்றுகள் துப்பாக்கிகள் தோட்டாக் களை உமிழ்கின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரண்டு பேர் குதித்து தப்பியதாகவும், ஒருவர் காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் அப்புறப்படுத்து கின்றனர்.
சரியாக 11.45 மணி துப்பாக்கிச் சண்டை ஓய்ந்து விட்டதாக காவல் துறை அறிவித்து விட்டது. காவல் துறை அறிவித் ததுதான் தாமதம், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் கள் வீதிகளுக்கு வெளியே வந்து உள்ளூர் தொலைக் காட்சி சேனல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பள்ளிவாசல்களில் தீவிர வாதிகள் பதுங்கியிருந்ததாக பொய்ச் செய்தியை ஒளிபரப்பியதால் முஸ்லிம் கள் ஆத்திரம் அடைந்தனர்.

மாலை 4 மணிக்கு

டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் செய்தியாளர் கூட்டத் தில் என்கவுண்டர் குறித்து அறிவித்தார்.

மாலை 7 மணி

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா படுகாயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.

காவல்துறையினரின் என்கவுண்டர் அறிவிப்புகள் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் விவகாரக்குழு செயலாளர் முஜ்தபா ஃபரூக் அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் வஹாப் கில்ஜி மற்றும் டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி போன்றோர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

என்கவுண்டர் நடந்ததாகக் கூறப் பட்ட இடங்களில் முஸ்லிம் தலைவர் களின் குழுவோடு நானும் சென்றேன். ஆனால் எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என குமுறலுடன் கூறினார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். டாக்டர் ஜஃபருல் நாட்டின் முன்னணி சமூகநல ஆர்வலர். மில்லி கெஜட் ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியர் அவர் உள்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றபோது காவல்துறையினர் அனு மதி மறுத்ததால் என்கவுண்டர் விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. முக்கிய முஸ்லிம் அமைப்புகளான முஷாவராத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த் போன்ற முக்கிய அமைப்புகள் போலி என்கவுண்டரை எதிர்த்து மறியல் போரை செப்டம்பர் 26ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே முறையற்ற கைதுகள் தொடர்ந்து வருவதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலஹா பாத்தைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர். அவர் ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. என்ற ஆராய்ச்சி உயர்படிப்பு கற்று வந்தார். அவரை அபுல் ஃபஸல் என்கிளேவ் பகுதியில் வீடு எண் சி.81லிருந்து கைது செய்துள்ளனர். முஹம்மது ரஷீத் வீட் டிற்கு அருகில் டீக்கடை நடத்திவரும் 75 வயது பெரியவர் இதனை தெரிவித் திருக்கிறார்.


இந்தியத் தலைநகர் ஆயிரத்து நூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட போதும் அனைத்து மக்களுக்கும் கூர்மையான நீதி வழங்கி மகிழ்ந்தனர்.


ஆனால் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியின் காவல்துறையின் சித்திரவதைகளால் மனம் நொந்து நிஜாமுத்தீன் (30) மற்றும் முயீனுத்தீன் (25) ஆகியோர் தற் கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அதற்குக் காரணமான இரண்டு அதி காரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலை விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகிறதா?
மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு...
ஒரு வீரத் தாயின் ஆவேசம்

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.

அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

தவுகீர் அப்பாவி

தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.

தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா
சிமிக்கு எதிரான 194 வழக்குகளில் 192ல் ஆதாரமில்லை!
மண்டை காயும் மகாராஷ்டிரா அரசு!!
ரையான்

மத்திய அரசு சிமி இயக்கத்தின் தடைக்கு மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரும்பாடுபட்டு வருகிறது. சில மாநில அரசுகளும் சிமி தடை விஷயத்தில் முனைப்பு காட்டின.

அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதில் எப்போதுமே ஆர்வம் காட்டிவரும் மகாராஷ்டிர அரசும் சளைக்காது தனது தீவிரத்தைக் காட்டியது.
அப்பாவி இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் எப்போதும் வேகம் காட்டிவரும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் 194 வழக்குகளை சிமி என்ற இயக்கத் திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இதில் மகாராஷ்டிர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் எதுவும் பெரும்பாலான வழக்குகளில் நிரூபணமாகவில்லை. 192 வழக்குகளில் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தனக்குத் தானே கரி பூசிக் கொண்டது. இரண்டு வழக்குகளில் மட்டுமே (கொஞ்சூண்டு) ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தீவிரவாத தடுப்புப் படையும், புலனாய்வு அமைப்புகளும், காவல்துறை யினரும் நாட்டில் நிகழ்ந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சிமியே காரணம் என பிரச்சாரத்தை மேற்கொண் டும் இன்றைய தேதி வரை தங்களது குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங் களைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

மகாராஷ்டிர அரசின் அரசு வழக்கறிஞ ரும் உச்சநீதிமன்றத்தில் சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் வினோதமாகும்.

மகாராஷ்டிர அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் சிமியைத் தடை செய்ய வேண்டும், நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தங்களது அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.

மகாராஷ்டிர அரசு சிமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகள் குறித்து பார்ப் போம். மகாராஷ்டிர அரசு 1,057 பேர் மீது குற்றம்சாட்டி 194 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.

ஆனால் மகாராஷ்டிர அரசின் காவல் துறை தொற்ற வழக்குகளில் வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே பூர்வாங்க ஆதாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 56 வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 246 பேர் எவ்வித ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப் பட்டனர்.

ஆறு வழக்குகளில் சிக்க வைக்கப் பட்ட 79 சிமி அமைப்பினர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவித்தது. இவர் களைத்தான் பயங்கரவாத இயக்கங் களுக்குத் தொடர்பு உடையவர்களாக மகாராஷ்டிர அரசு குற்றம்சாட்டி துன்புறுத் தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. (தூ... வெட்கமாயில்லை?)

693 சிமி இயக்கத்தினர் தொடர்பு டைய 111 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவும் மகாராஷ்டிர அரசுக்கு படு தோல்வியை பரிசளிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனி டையே இதுதொடர்பாக மாநில காவல் துறைத் தலைவர் அனாமி நாராயண் ராஜ் என்பவரை சந்திக்க செய்தியாளர்கள் முயன்றும் அவர் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை முன்னணி செய்தி ஏடான இன்குலாப் ஏடு தெரிவித்துள்ளது

Thursday, September 18, 2008

மாதம் ஒரு குண்டுவெடிப்பு! செயலிழந்த மத்திய உள்துறை!!

சத்தியவேந்தன்

டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியா னார்கள். அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்விடங்களுக்கு அருகில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் அவர்களுக்கு தொடர்புண்டா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். குண்டுவெடிப்பில் தொடர்பில்லை எனில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பிற்கு அடுத்த நாள் பெங்களூருவில் பாஜக செயற்குழு கூட்டம் கூடியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மாநில அரசுகள் இயற்றியிருக்கும் சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி டெல்லியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் என்பது முன் கூட்டியே தெரியும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் தான் எச்சரித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். (அகமதா பாத் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு முன்பே மோடியிடம் எச்சரித்தது என உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்ததற்கு பழிக்குப் பழியாக மோடி தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்).

மக்கள் கூடும் முக்கியமான இடங் களில் குண்டுவெடித்து அப்பாவிகள் பலியாகும் கொடும் செயலை நிகழ்த்திய இரக்கமற்ற அரக்கர்களை மன்னிக்க முடியாது. சிரித்துக் கொண்டே வந்த மனித மலர்களைப் பிய்ந்த தசைத் துண்டுகளாக, ரத்தக் கூளங்களாகப் பார்க்கும் எவருக்கும் அதனை நிகழ்த் திய மிருகங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தை விளக்குவதற்கு வார்த்தை களே இல்லை.

என்ன ஆனது என் இந்திய தேசத்திற்கு? குண்டுவெடிப்புகள் ஒருபுறம், கலவரங்களை ஏற்படுத்தி அப்பாவிகளைப் பிடித்து சித்திரவதை செய்தல் மறுபுறம் என நாடு முழுவதும் வேதனைச் செய்திகளே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கொரு முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது போக தற்போது மாதத்திற்கொரு தடவை குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. மாதம் மும்மாரி பொழிந்ததா என அந்தக் காலத்தில் மன்னர்கள் கேட்டது போக இப்போது மாதம் மும்மாரி குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என ஆள்வோர் கேட்கின்ற நிலையிலேயே தற்போதைய சூழல் அமைந்துள்ளது.

குண்டுவெடிப்புகள் எப்போது நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த அவலம் தொடங்கியது? இந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்? குண்டுவெடிப்புக்குப் பிறகு தவறாக குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் யார்? இந்த குண்டுவெடிப்புகளுக்கு யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்பதை யெல்லாம் தீவிரமாக ஆய்வு செய்தால் நிஜங்கள் நிதர்சனமாகத் தெரியவரும்.

முதல் காட்சி குண்டுகள் வெடிக்கும். இரண்டாம் காட்சியாக அத்வானி, மோடி, (தமிழ்நாட்டில் ராமகோபாலன்) போன் றோர் வெண்திரையில் வெளிச்சத்துக்கு வருவார்கள். ஒரு குற்றச்செயல் நடந் தால் குற்றவாளிகளைக் கண்டுபிடி, கைது செய் என கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கூறுகெட் டத்தனமாக கூச்சலிடுவதைக் கண்டு நாட்டு மக்கள் நகைக்கிறார்கள்.

குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் அனைத்தும் ஒரு சம்பிரதாய சடங்கு களாகவே மாறிவிட்டன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு கள் வெடிக்கின்றன. அப்பாவி இந்திய மக்கள் பலியாகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் வினோதமான முறையில் பிரச்சாரம் செய்கின்றன. உளவுத்துறை ஊகங்களை மட்டுமே புலனாய்வு அறிக்கையாக வெளியிடுகின்றன.

பெங்குளூரு, மாலேகான், ஹைதரா பாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், அஜ்மீர் என பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான வர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பாவிகளை வளைத்து படம் காட்டு வதோடு அரசுகளின் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றன. விளைவு தீவிரவாதம் தொடருகிறதே யொழிய நிற்பதாகத் தெரியவில்லை.
அரசுகளின் மெத்தனமும் இருட்டில் குருட்டுத்தனமாக சதிகாரர்களைத் தேடும் போக்கும் மக்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. சதிச்செயலைக் கண்டு பிடித்து சதிகாரர்களை கையும் களவு மாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வழியைக் காணோம்.

இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து வெள்ளை அறிக்கை தர மத்திய, மாநில அரசுகள் தயாரா?

அப்பாவிகளை வளைத்துப் பிடிப்பது. சதி குறித்து ஈமெயில் வந்தது, கொசு மெயில் வந்தது என கோக்கு மாக்குத் தனமாக அறிவித்து விட்டு அசட்டுத் தனமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது. மனித உயிர்களை தீர்வை நோக்கி நடைபோடாமல் வதந்திகளிலும் வக்கிர சிந்தனைகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கிலிருந்து மீளும் வழியைக் காணோம்.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவா ளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் ஆணை யம் சுட்டிக் காட்டிய (பெரும் புள்ளிகளும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை)

குஜராத் இனப்படுகொலை சதிகாரர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொடூரன் மோடிக்கு வழங்க வேண்டிய விசாவைக் கூட ரத்து செய்தன. ஆனால் இந்திய மண்ணில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன? மீண்டும் பொடாவை கொண்டு வரவேண்டும் என அவர்தான் இங்கு சுத்த யோக்கியர்போல் கூச்சலிடுகிறார்.

2006 ஏப்ரல் 6 ஆம் தேதி மகராஷ்ட்ர மாநிலம் நான்டெட்டில் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறை பொறியாளரின் வீட்டில் குண்டு வெடித்தது.

வெடித்த குண்டுகள் பொறியாளரின் மகன் நரேஷ் (வயது 29) மற்றும் அவனது நண்பன் பன்சே (வயது 31) என்ற இருவரின் உயிரையும் குடித்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் பிணங்களை போட்டு விட்டு வீட்டை விட்டே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினரின் சோத னையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு, வெடிக்காத தோட்டாக்கள், ஒட்டுத் தாடிகள், வெள்ளை தொப்பிகள், அவ்ரங் காபாத் பள்ளிவாசல்களின் படங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அதே மகராஷ்ட்ரா மாநிலத்தின் பார்பானி முஹம்மதியா பள்ளிவாசலில் ஏப்ரல் 9 ஆம் தேதி 2006. வெடித்த குண்டு வெடிப்பு தொடர்பாக சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெசவ் என்பவன் போஸ்லா ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவன். இவர்கள் அனைவரும் சங்பரிவார் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத் தில் நவி மும்பை மற்றும் தானேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பிடிபட்ட சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இவைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாட்டில் தொடர்ச் சியாக நடைபெறும் குண்டு வெடிப்பு களின் விசாரணைகள் இருட்டு மூலை யில் கறுப்பு பூனையைத் தேடும் முயற்சி யாகவே இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

குண்டு வெடிப்புகளை குறித்த பிரச்சனைகளில் பாஜகவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு உண்மை நிலையை அறிய ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய உள்துறை செயலிழந்து விட்ட தையே இது காட்டுகிறது

Friday, September 12, 2008

இறைத்தூதரை கேலிச்சித்திரமாக்கிய தினமலர்!


தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு!!

ஹபீபாபாலன்






உலகத்தின் வழிகாட்டி, உத்தமர் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நெறி வசந்தமாய் பூமிப் பந்தெங்கும் பரவி வருகிறது. காற்றை விட வேகமாக, கடலை விட ஆழமாக, ஆகாயத்தை விட விசாலமாக அந்த தூயவரின் வழிகாட்டுதல்கள் எட்டுத் திக்கும் பற்றிப் பரவி வருகிறது. நபிகள் பெருமானை அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யாகப் பெற்றதை தங்களின் பெறற்கரிய பாக்கியமாக எண்ணி உலகின் 140 கோடி முஸ்லிம்கள் பூரித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். உயிரை விட மேலாகக் கருதும் அந்த உத்தமரின் புகழுக்கு துளி அளவு மாசு நேர்ந்தாலும் புழுவென துடித்துப் போவார்கள், புயலென கொதித்து எழுவார்கள், சூரியக் கதர்களாய் சுட்டெரிக்கப் புறப்படுவார்கள்.


அண்ணலாரின் மீது இந்த அவனி யில் வாழும் 140 கோடி முஸ்லிம்கள் காட்டும் அன்பு அத்தகையது.




பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பினைக் குலைக்கும் முயற்சியை எவர் செய்தாலும் அப்போது `யுகப் பிரளயமே’ உருவானதோ என இந்த உலகமே கலங்கும் அளவுக்கு மக்களின் தார்மீக கோபம் இந்த பூமிப் பந்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.


சரித்திரங்கள் சாட்சியம் பகர்கின்றன. இவையெல்லாம் ஒரு சராசரி பொது அறிவு கொண்ட மனிதனுக்குக் கூட தெரியும். ஆனால் தினமலர் என்ற நாளேட்டிற்கு எப்படித் தெரியாமல் போனது? சீண்டிப் பார்க்கும் சின்னப் புத்தி இந்த இதழின் பரம்பரை குணம் என்றாலும் கூட விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விஷய ஞானம் கொண்டவர்கள்(!)தான் தினமலரை நடத்தி வருகிறார்கள் என்பதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.


தமிழகம் திராவிட இயக்க பூமி, பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பது பிரச்சார வியூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. பொட்டில் அடித்தாற்போல், செவுளில் அறைந்தாற் போல் மற்றொரு உண்மையை விழுங்கிக் கொள்ள, உண்மையை விளங்கிக் கொள்ள தமிழகம் மெல்ல மெல்ல தயாராகி வருகிறது.


இந்திய பூபாகத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வருகின்ற ஹிந்துத்துவ பாசிசவாதத்திற்கான மூலப்பொருள், கருப்பொருள், அந்த பாசிசவாதத்தை வேகமாக கொண்டு செல்ல உதவும் எரிபொருள் தமிழகத்திலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?


இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவருக்கும் தலைமைப் பீடமான நாக்பூர் என்றும், அதன் தலைவர் சுதர்சன் என்றும் இந்த நாடு தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவரின் (அஞ்)ஞான குருவாக தமிழகத்தைச் சேர்ந்த குருமூர்த்திதான் விளங்கி வருகிறார் என்பதை கள்ளம் கபடமில்லா தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டார்கள்.


இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப் படுகொலையின் சூத்ரதாரி என வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் வரித்தெடுக்கப்பட்டவர் நரவேட்டை நரேந்திர மோடி. அவரது மூச்சுக்காற்று பட்டால் கூட முழு நாசம் என எண்ணிய இந்த நாடு அவரை சற்று தள்ளியே வைத்தது. பாதகம் இழைக்க அஞ்சாத பாஜக கூட கொடூர மோடியை குஜராத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என தலையில் குட்டி வைத்தது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்து மோடியை ஒரு சர்வதேச `போர்க் குற்றவாளி’ எனும் அளவுக்கு கீழிறக்கி காட்டியது.


இந்தியாவே காறி உமிழ்ந்தால் என்ன? அமெரிக்காவும் பிரிட்டனும் விசா வழங்க மறுத்தால்தான் என்ன? பாஜகவே பக்கத்தில் வராதே என வெருண்டோடினால்தான் என்ன? மூன்றாயிரம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு முழுக் கிரீடம் சூட்ட நாங்கள் தயார் என தமிழகத்திலிருந்து முதல் குரல் எழுந் தது. ஒன்று இரண்டானது, இரண்டு மூன்றானது.


திராவிடத் தாய் என தனது கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனி விமானத்தில் பறந்து சென்றார். பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ஹிந்துத்துவ பாசிசத்தின் அகில இந்திய பிரச்சார பீரங்கி, சிரிப்பு நடிகர் `சோ’ ராமசாமி தனது பத்திரிக் கையின் விழாவுக்கு அழைத்தார். மோடியின் ஆட்சியை பொற்கால ஆட்சி என விமர்சித்து சிறப்பு இதழ் வெளி யிட்டது கல்கி வார ஏடு. (மூன்றாயிரம் முஸ்லிம்களை கதறக் கதற குதறிய அந்த செயலைத்தான் (!) கல்கி ஏடு பொற்கால ஆட்சி என்றதோ?) மேற்கூறிய அத்தனை புண்ணிய(!) வான்களுக்கும் ஒருபடி மேலாக செயல்படும் ஒரு தீவிர பாசிச சக்தியாக தினமலர் நாளேடு செயல்பட்டது. முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்துவதில் முன்னிலை வகித்தது தினமலர். நாளொரு அவதூறும், பொழுதொரு புளுகுமாய் வெளியிட்டு வெறித்தனத்தை பறைசாற்றியது.


முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்நாட் டில் வாழும், உழைத்து பிழைக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அழுத்தப் பட்ட மக்களை அவமானப்படுத்துவதில் அது முன்னிலை வகித்தது.



கோபால்ஜி என்றழைக்கப்படும் தினமலர் (வி.எச்.பி.) கோபால்


சமூக நீதி தத்துவத்தின் பிதாமகனாக தமிழக மக்களால் போற்றப்படும் பெரியாரை அனைத்துத் தரப்பு மக்களும் பெரியார் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெரியாரை ஈ.வே.ரா. என தனது பத்திரிக்கையில் எழுதி ஈனத்தனமாக நடந்து கொண்டது.


ஒரு தாயின் வயிற்றில் நாம் அனை வரும் பிறந்தால் அந்தத் தாயின் மணி வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தோ மடா தம்பிகளா? என தமிழக இளைஞர் களை சகோதர வாஞ்சையுடன் அழைத்து மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அத னால்தான் அவரை அண்ணா, அண்ணா என தமிழகம் அழைத்து மகிழ்ந்தது. அரசியல் எதிர்முகாமில் உள்ளவாகள் கூட அண்ணா என அழைத்த போதும், தினமலர் மட்டும் அண்ணாதுரை என அதிமேதாவி(!)த்தனமாக அழைத்து தன்னை அடையாளம் காட்டியது.


தமிழ்நாட்டில் பாமரர்களையும் பத்தி ரிகை படிக்க வைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். பத்திரிகையுலக ஜாம்ப வான் என அவரை அழைப்பதுண்டு. அவரை தமிழர் தந்தை என அவர் மீது அன்பு கொண்டோர் அழைத்தனர். அதில் தினமலருக்கு ஏற்பட்ட வயிற்றெ ரிச்சலில் கொச்சைப்படுத்தும் வரிகளை வெளியிட்டது.


தமிழின உணர்வாளர்களை, தலித் பெருமக்களை,பிற்படுத்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி இன்பம் கண்டது.


கற்பு குறித்து விநோதமான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது என பைத்தியக்காரன் கூட கற்பனை செய்ய முடியாத ஒரு கருத்தை தினமலர் அச்சில் ஏற்றியது.


மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாடே வேதனை யில் ஆழ்ந்த அந்த சம்பவத்தில் கூட தினமலர் தனது ஈனச் செயலின் மூலம் சாதனையைப் படைத்தது.


`மாலேகான் பள்ளிவாசலில் இருந்த குண்டு வெடித்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.


இவ்வாறு ஈனத்தனத்திலும் இழிசெய லிலும் சாதனை(!) படைத்த தினமலர், பெட்ரோல் கிணற்றில் பீடி பற்ற வைத்த தைப் போன்ற ஒரு முட்டாள்தனமாக செயலைச் செய்து நாட்டையே அவமா னத்தில் ஆழ்த்தி விபரீதத்தை விதைத்தது.




நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக டென்மார்க்கிலிருந்து வெளி வந்த ஜிலாண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. ஒன்றல்ல, 12 கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டது.


டென்மார்க்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது கோபத்தை ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வெளியிட்டனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. எகிப்தின் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் ஷேக் அஹ்மத் தந்தாவி யூசுப் அல்கர் ளாவி போன்றோர் அந்தப் பத்திரிக்கை மன்னிப்புக் கேட்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். டென்மார்க் அரசும், ஜிலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிக் கையும் மார்க்க அறிஞர்களின் கோரிக் கைக்கு தலைசாய்க்க மறுத்துவிடவே `டென்மார்க் கார்ட்டூன்’ விவகாரம் சர்வதேச அளவில் கொதி நிலையை எட்டியது. உலகெங்கும் உள்ள முஸ்லிம் கள் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.


மொராக்கோவிலிருந்து இந்தியா வரை, மவுரிடானியாவிலிருந்து இந்தோ னேஷியா வரை முஸ்லிம்களின் `பெருமானார் பேரபிமானம்’ வெளிப்பட் டது. டென்மார்க் பொருட்களை புறக்கணிக்குமாறு உலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகித்த டென்மார்க், உலக முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் இழப்பினை சந்தித்தது. பால் பொருட்கள் பாழாயின. போராட்டங்கள் ஓயாத சூழ்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முஸ்ஸன் மன்னிப்புக் கேட்டார். போப் 16ஆம் பெனடிக்ட், பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ’பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் தேவையற்ற விஷயம்’ என கண்டித்தார்.




உலக அளவில் பெரும் புயலையும் பதட்டத்தையும் எழுப்பிய அதே டென் மார்க் கார்ட்டூன்களில் ஒன்றைத்தான் அசட்டு துணிச்சலுடன் உள்நோக்கத் துடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.


கடந்த திங்கள்கிழமை (1.9.08) அன்று வேலூர் பதிப்பு தினமலரில் இலவச இணைப்பான கம்ப்யூட்டர் மலரில் 12வது பக்கத்தில் “லுடிர கூரநெ இணையதளம் மூலமாக படங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு `முஹமது நபி கார்ட்டூன்’ என்று விஷமத்தனமான கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டிருக்கிறது தினமலர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைபேசி தகவல் பரிமாற்றங்களும், குறுந்தகவல்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. இறைத்தூதரை அவமதித்த அடாத செயலை அனுமதிக்கவே மாட்டோம் என நாடெங்கும் குமுறல்கள் எழுந்தன. அந்த இழிசெயலை நிகழ்த்தய வேலூர் தினமலர் அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் மக்களின் கோபம் ஆத்திர அலையாக வெடித்தது.


வேலூரில் ஏற்பட்ட எழுச்சி ஆதிக்க சக்திகளின் அடிவயிற்றை கலக்கியது. (வேலூர் போராட்டம் தனிச்செய்தியில் காண்க). தமிழகமெங்கும் கொந்தளித்த தாலும் இதன் வீச்சில் உலகமே பதற்றம் அடைந்ததாலும் உலக மக்களின் உச்சக் கட்ட வெறுப்பை சுமந்த கேவல தினமலர் முதல் பக்கத்தில் வருத்தத்தினை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த எதிர்ப்பலையில் மக்களைத் திரட்டும் விஷயத்தில் தமுமுக பெரும் பங்கு வகித்தது. 1995ஆம் ஆண்டு முதலே தமிழக முஸ்லிம்களின் போர்க் குணத்தை வகுத்தெடுப்பதில் முழு இடம்பெற்ற அந்த மக்கள் இயக்கம் இதுவரை முஸ்லிம்களின் கல்வி, சமூகம் அரசியல் தொடர்பான போராட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டியது.


இறைத்தூதரை அவமதித்த தினமலர் விவகாரத்தில் தமுமுக தமிழகமெங்கும் போர்க்கோலம் பூண்டது. இளைஞர் சக்தியின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தலைவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.


சரியாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அவமதிப்புக் கார்ட் டூனை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தினர். இதைப் பயன்படுத்தி நாடெங்கும் சங்பரிவார சக்திகள் பெரும் கலவரங்களை நடத்த திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ரத்தம் குடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. புனித ரமலான் மாதத்தில் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனி டம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம்களை வேதனைப்படுத்த வெறியோடு காத்தி ருந்த கூட்டத்தின் முக்கிய சதிகாரனாக தினமலரின் முதலாளிகளில் ஒருவரான கோபால் என்பவர் அறியப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய அஜெண்டாக்களை செயல்படுத்து வதையே லட்சியமாகக் கொண்டு அவரும் அவரது பத்திரிகையும் விளங்கி வருகிறது என்பதை இந்த நாடும் மக்களும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.


மக்களின் பெருங்கோபத்தைக் கண்ட தினமலர் மன்னிப்பு கேட்டது.


மன்னித்தல் என்பது மிகப் பெரிய வர்களின் இயல்பு. மன்னிப்பு என்பது தவறிழைத்தவர்கள் அதை மீண்டும் செய்யலாம் என்பதற்கான லைசென்ஸ் அல்ல. தவறினை ஒப்புக்கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதுதான் மன்னிப்பு.


தமுமுக தலைமையிடம் தினமலர் நிர்வாகம் நேரடியாக அணுகி தனது வருத்தத்தினை தெரிவித்தது.


மேலும் சில சாதுவான முஸ்லிம் இயக்கங்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது வருத்தத்தினை தினமலர் நிர்வாகம் தெரிவித்ததாக தனது முதல் பக்க மன்னிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.


தினமலர் பத்திரிகைக்கு இந்த சமுதாயம் வழங்கியிருக்கும் மன்னிப்பு தினமலர் தனது தீய இயல்புகளை திருத்திக் கொள்வதற்கான அவகாசம் மட்டுமே. கார்ட்டூன் விவகாரத்தால் உலக முஸ்லிம்களின் உச்சக்கட்ட வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் தினமலர் தன்னை திருத்திக் கொள்ளுமா? அல்லது மீண்டும் சிலுமிஷங்களைத் தொடர்ந்து சீரழிவில் சிக்கிக் கொள் ளுமா?


தினமலர் தான் முடிவெடுக்க வேண்டும்.


தினமலரின் அந்தர்பல்டியும் அறிவுகெட்ட வாதமும்
``You Tube’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக தினமலர் கம்ப்யூட்டர் மலரில் `இறைத்தூதர் அவமதிப்பு கார்ட்டூன்’ குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.


``You Tube’ என்ற இணையதளம் வீடியோ காட்சிகளுக்காக உலக அளவில் பிரபலமான இணையதளமாகும். தேவையான படக் காட்சிகளும், சில தேவையற்ற படக் காட்சிகளும் கொண்ட அந்த இணையதளம் குறித்து அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத தினமலரின் செயலைப் பார்க்க முடிகிறது. கார்ட்டூனைப் பார்க்க `லுடிர கூரநெ’ இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதில் தினமலரின் விஷமம் தெரிய வருகிறது.


இரண்டாவது அது உலகையே டென்மார்க் கார்ட்டூன் என்பது மடையனுக்குக் கூடத் தெரியும். வேண்டுமென்றே வம்பை விலை கொடுத்து வாங்குவதற்காகவே செய்த தினமலரின் தீய செயல் தெளிவாகிறது. அதை தங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர் தொழிலாளி ஒருவர் செய்து விட்டார் என மழுப்புவது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.


சரி, ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்த தவறு என்றே ஒப்புக்கொண்டு தொலைப்போம். ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் செயலை ஏன் செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வைத்தே தினமலரின் ஊழியர்கள் உரம் ஊட்டப்படுகிறார்களா?


அப்படி ஒரு வெறிபிடித்த மனநோயாளிகளின் கூட்டம் தமிழகத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. தினமலரின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பியூன், குப்பை கூட்டி பெருக்குபவன், முதலாளி என அனைவரும் குரோத வெறிபிடித்த கிறுக்கன்களாகவே இருப்பார்களோ என மக்கள் நினைப்பதில் அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது

Thursday, September 4, 2008

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!
உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!
-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.

பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.



ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.

கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.

ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.



அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.

முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை
5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.

6 மணிக்கு...

அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.

6.45 மணி...

பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு..

ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.

ஆகஸ்ட் 25, 2008...

வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.

காலை 7 மணி..

புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.

10.30 மணி..

பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.

முற்பகல் 11.30 மணி...

நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.
தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணி..

ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.

தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.

2 மணி...

கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.

இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.

ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.

சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

1. விஜய் பரிச்சா
2. ஆர்.கே. நாயக்
3. ஜோசப் நாயக்
4. சூசன் நாயக்
5. சந்தோஷ நாயக்
6. ஹரி ஹர்தாஸ்
7. மோசே நாயக்
8. பிரகாஷ் நாயக்
9. மோசே நாயக்
10. ராஜு மற்றும் பலர்

ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.
பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்
பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்
மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.

பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.

குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.



ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.

முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.

இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன

Web Counter Code