இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 10, 2009

கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா ?











கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா?
கேரளாவில் முஸ்லிம்களின் அரசியல் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சமுதாய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்து வதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் லீக் என்ற கட்சியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கேரளாவில் முடியாமல் தவிக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வடகரா தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்கள் இருந்தும் அங்கு எங்குமே முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை. கோழிக்கோட்டில் எம்.கே.ராகவன் வெறும் 838 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரிகளின் முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தார். நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கால் தான் வெற்றி பெற்றேன் என ராகவன் நன்றி தெரிவித்தார்.கோழிக்கோடு, வடகரா, கண்ணூர் போன்ற தொகுதிகளில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்து பெரிதாக கவலைப்படாத சமுதாய ஆர்வலர்கள் கூட எர்ணாக்குளம் நாடாளு மன்றத் தொகுதிகளின் முடிவு குறித்து ஆதங்கத்துடன் பேசிக் கொள்கிறார்கள். எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளரா கப் போட்டியிட்ட கே.வி.தாமஸ், இஸ்ரேலிய தொடர்புடையவராக கடுமையாக குற்றம்சாட்டப்பட்டவர். அதோடு சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமான சர்ச்சைக் குரிய தஸ்லிமா நஸ்ரீனின் நண்பர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். அவரை ஆதரிக்க வேண் டாம் என முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு களும் எதிர்த்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது முதல், இரண் டாம், மூன்றாம் சுற்றுக்களில் பின்தங்கிய கே.வி.தாமஸ், தலை தப்பித்தால் போதும் என 11,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைக் காப்பாற்றிய வாக்குகள் எவை தெரியுமா?
மட்டஞ்சேரி என்ற பகுதியின் வாக்கு கள் தாமஸின் வெற்றிக்கு உறுதி கூட்டியது. மட்டஞ்சேரி பகுதி, முஸ்லிம் லீக்கின் கோட்டை போன்ற பகுதியாகும். தனது வெற்றிக்கு முஸ்லிம் லீக் தான் காரணம் என கே.வி.தாமஸ் கூறியிருப்பது நல்ல கூத்து.பொதுவாக கேரள முஸ்லிம்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் லீக்கி மீது கடந்த 60 வருடங்களாக பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். முஸ்லிம் லீகும் காங்கிரசும் ஏராளமான தேர்தல்களில் உறவு வைத்திருந்தாலும், ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்ட போதும் முஸ்லிம் லீகர்களால் கூட்டணியை விட்டு வெளி யில் வரமுடியவில்லை. ஆனால் கேரள முஸ்லிம்கள் எப்போதும் கேபினட் அமைச்சர்களாக முடிவதில்லை. 2004லும், தற்போதும் ஈ. அஹ்மது, குட்டி அமைச் சராக தொடர்கிறார். ஆனால் கிறித்தவர் களும் நாயர்களும் முக்கியப் பதவிகளை அலங்கரித்தனர்.
கேரள மாநிலத்தில் முஸ்லிம் நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் வெறும் மூன்று பேர் மட்டுமே எம்.பி.யாகி உள்ளனர். ஆனால் கிறித்தவ நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையோ ஆறு. நாயர் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஏழு பேர். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் கேரளாவில் 27 சதவீதம் முஸ்லிம்களும், நாயர்கள் 12 சதவீதமும், கிறித்தவர்கள் 19 சதவீதமும் உள்ளனர் என்பது விநோதமான விந்தையாகும்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலபாரில் 50 ஆயிரம் மாணவர் களுக்கு +2 படிப்புக்கு பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை. தெற்கு கேரளாவில் ஏராளமான பள்ளிக்கூடங்களில் இடங் கள் காலியாக உள்ளன. இந்த அழகில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கல்வித்துறை முஸ்லிம் லீக் வசமே ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் மலபாரில் மட்டும் மாணவர் களுக்கு போதுமான சீட் கிடைக்கவில்லை என்ற அவல நிலை.
மலபார் பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தென் கேரளாவில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் வடகேரளா வில் ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான். தெற்கில் இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளன.
கணிசமாக வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் முதல்வராக வரமுடியாத நிலையே உள்ளது. இரண்டு மாதங்கள் மட்டும் முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த முகம்மது கோயா முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் சிறுபான்மை சமூகங்களான ஈழவர்கள், நாயர்கள் மற்றும் கிறித்தவர்கள் பல அமைச்சரவைகளில் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார்கள்.
ஓணம் என்றால் 10 நாள் விடுமுறை, கிறிஸ்துமஸ் என்றால் ஒரு வாரம் விடு முறை. ஆனால் பெருநாள் என்றால் ஒரு நாள் விடுமுறைதான்.
முஸ்லிம்களின் குறைவான பிரதி நிதித்துவம் குறித்தும், முஸ்லிம் லீக்கின் தூங்கி மூஞ்சித்தன்மை குறித்தும் கவலை கொண்ட கேரள முஸ்லிம்கள் விழிப் படையத் தொடங்கி விட்டனர் என்பதே மலையாளக் கரையோரத்திலிருந்து வரும் செய்தியாகும்

இளம்பெண்கள் கற்பழித்து கொலை பாதுகாப்பு படையினரை எதிர்த்து காச்மிரில் கொந்தளிப்பு







இளம்பெண்கள் கற்பழித்துக் கொலைபாதுகாப்பு படையினரை எதிர்த்து காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு!நிலோஃபர் என்ற இளம்பெண் ணும் அவரது கணவர் ஷகீல் அஹமதின் தங்கையான ஆசியாவும் (11ஆம் வகுப்பு படிக்கிறார்) மே 29ஆம் தேதி தங்கள் ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற னர். சுற்றிப் பார்க்கச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை. பீதியில் உறைந்த பெற்றோர்களும், உறவினர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் நாலாபுறமும் தேடியும் இரண்டு இளம் பெண்களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. மறுநாள் காலை இருவரின் உயிரற்ற உடல்களும் நல்லாரமிபாரா கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோஃபியான் பகுதியே பரபரப்படைந்தது.
இரண்டு இளம் பெண்களின் உயிரற்ற உடல்களும் கிடந்த பகுதிக்கு வெகு அருகில்தான் மத்திய ரிசர்வ் படையின் முகாம் இருந்தது.
உடல்கள் கிடந்த நிலையைப் பார்த்த தும் இருவரும் பா­யல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். குறிப்பாக இரண்டு இளம்பெண்களும் தங்களது பழத்தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் மத்திய ரிசர்வ் படை முகாமில் இருந்த சில கறுப்பு ஆடுகள் கடத்தி கற்பழித்துக் கொலை செய்தனரா என ஐயம் எழுப்பிய சோஃபியான் பகுதி மக்கள் பெரும் போராட்டத் தில் குதித்தனர்.
மாநில அரசுக்கு எதிராகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு எதிராகவும் முழக்கங்களை சோஃபியான் பகுதி மக்கள் எழுப்பினர். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்ட இரண்டு பெண்களின் உடல்களை யும் சோஃபியான் மாவட்ட மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை தாமதமானதால் மக்கள் மேலும் ஆத்திர மடைந்தனர். மருத்துவமனைப் பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காயின. உள்ளூர் மருத்துவர்கள் வேண்டாம், வேறு மாவட்டத்தி­ருந்து மருத்துவர்களை வரவழைத்து உடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக் கையை ஏற்று புல்வாமா மாவட்டத்தி­ ருந்து சிறப்பு மருத்துவர் படை அனுப்பப் பட்டது. இறுதியில், இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது மாவட்ட டாக்டர்கள் பிரிவு.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்பு படை முயன்றது ப­க்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
''காஷ்மீரில் வாழும் பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை, இதை இந்த நாடு எவ்வாறு இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறது'' என காஷ்மீர் மாநில முக்கியப் பிரமுகரும், ஹுரியத் கமிட்டியின் தலைவருமான மீர் வாய்ஸ் உமர் பாரூக் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ''எங்கள் அரசு வெளிப் படையான அரசு. சோஃபியான் பகுதி கற்பழிப்புக் கொலைகள் உள்ளிட்ட இதற்கு முன் நடைபெற்ற வன்கொடுமை களுக்கான முக்கியக் குற்றவாளிகளை யும் விரைவில் கொண்டு வந்து நிறுத்துவோம். சோஃபியான் கற்பழிப்புக் கொலைகாரர்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து வோம்'' என உமர் அப்துல்லா தலைமை யிலான மாநில அரசு அறிவித்துள்ளது

Web Counter Code