இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, August 11, 2012

எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி


எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி


எகிப்தின் அதிபர் தேர்தலில் டாக்டர் முஹம்மது முர்ஸி வெற்றி பெற்றுள்ளார். பதிவான 2 கோடி 60 லட்சம் வாக்குகளில் 1 கோடியே 32 லட்சம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இது பதிவான வாக்குகளில் 51 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஹ்மது ஷபீக் பெற்ற வாக்குகள் 1 கோடியே 23 லட்சம் வாக்குகள் ஆகும். அஹமது ஷபீக், ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்தவர். அவரைத் தோற்கடித்து இஹ்வான்களின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராகியுள்ளார்.
இது அரபு வசந்தத்தின் முதல் வெற்றியாகவும், இஹ்வான்களின் எழுச்சியாகவும் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் செல்லாதவை யாகும். தஹ்ரீர் சதுக்கம் உற்சாக வெள்ளத்தில் ததும்பியது.
இறைவன் மிகப் பெரியவன், இராணுவ ஆட்சி வீழட்டும் என்ற முழக்கங்களால் தஹ்ரீர் சதுக்கம் அதிர்ந்தது. அதிபர் தேர்தல் முடிவு எகிப்திற்கு மட்டுமல்ல, அரபுலகத்திற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றால் அது மிகையன்று. ஹோஸ்னி முபாரக் என்ற சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டு 500 நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முர்ஸியின் வெற்றியை மொத்த அரபுலகமும் வரவேற்றுள்ளது.
1979ஆம் ஆண்டு எகிப்துடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட இஸ்ரேல், இஹ்வான்களின் வெற்றியை விரும்பாததை சத்தமில் லாமல் வெளிப்படுத்தியது. எகிப்து அதிபர் தேர்தலின் முடிவு குறித்து கருத்துச் சொல்லும் நேரம் இதுவல்ல என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெஜவ் தெரிவித்தார்.
பாலஸ்தீன காஸா பகுதியில் இஹ்வான்களின் வெற்றிச் செய்தி வெளியாகத் தொடங்கியதும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது. வீதிகளெங்கும் ஹமாஸ் போராளி கள் துப்பாக்கி குண்டுகள் முழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.
இஹ்வான்களின் அரசியல் எழுச் சிக்கு அடையாளமாக வெற்றிபெற்ற எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். டாக்டர் முர்ஸியின் வெற்றி இஸ்லாத்தின் எதிரிகளுக்கு மரண அடியாக இருக்கும் என ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் ஜஹர் தெரிவித்தார். முர்ஸியின் வெற்றி அரபுலகின் மிகப்பெரிய நாடான எகிப்தின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் என நம்புவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில், நில வியல் அமைப்பில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் எகிப்தில் இஹ்வான்களின் மூத்த பிரமுகர் டாக்டர் முர்ஸி அதிபரானது அரபு வசந்தத்தின் முதற்கட்ட வெற்றியாக கருதப்படுகிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்காடாக இருந்த அரபகம் தற்போது மெல்ல மெல்ல ஏகாதிபத்தியத்தின் முனைமுறிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் பல்லாயிரக்கணக்கா னோரை படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கில் தனது நாட்டு வீரர்களைப் பறிகொடுத்தும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்ததும், லிபியாவில் அந்நாட்டுத் தலைவனை உள்ளூர் எதிரிகளோடு இணைந்து படுகொலை செய்து விட்டு அந்நாட்டின் தேசிய எழுச்சியை அடக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்கா.
சிரியாவில் கிளர்ச்சியை திரை மறைவில் ஊக்குவித்து இன்றுவரை மூக்கறுபட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஈரானுடன் போர்த் தொடுக்க வேண்டுமென இஸ்ரேல், அமெரிக்காவைக் கெஞ்ச, அமெரிக்கா பதைபதைப்புடன் ஈரானின் ஆயுத வல்லமையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகிறது.
ஈரான் மீதான போர் என்ற பெயரில் மீண்டும் ஒரு பொருளா தார மற்றும் இழப்புகளை சந்திக்க வேண்டுமா என தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கொஞ்ச நஞ்ச ஆணவ ஆட்டத்தின் ஓட்டத்தைக் கூட ஒரேயடியாக நிறுத்தவேண்டிய நிர்பந்தம் நாளை ஏற்படுமோ என அஞ்சுகிறது. இதுவரை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் அரபு தேசியத்தை முழங்குபவர்களாகவும், ராணுவ வல்லமையில் மட்டுமே ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். முதன்முதலாக சித்தாந்த ரீதியிலான எதிரிகளை ஏகாதிபத்தியம் சந்திக்கிறது.
இது உலக வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாகும். அரபுலகில் காலகாலமாக ஆளும் வர்க்கமும்கூட எகிப்தில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தல் வெற்றியை ஒருவித கவலையுடன் தான் அவதானிக்கின்றனர். இஹ்வான்களின் எழுச்சி சர்வதேச அதிர்வலையை எழுப்பக் காரணம் என்ன? இஹ்வான்களின் சாதனை என்ன?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -  இரண்டு

 ( முர்ஸி முன்னுள்ள சவால்கள் )

ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி அதிபர் பதவியை ஏற்ற பின்னர் தன் நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தைப் பேணிக்காப்போம் என உறுதியளித்த புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அரபுலகில் மலர்ச்சியையும், மேற்குலகிலும் சியோனிச சக்திகளுக்கு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு நாங் களும் எங்கள் அரசும் மிகுந்த பக்கபலமாக இருப்போம் என தனது உரையில் தெரிவித்தார். 70களில் அன்வர் சதாத்தும், அதன் பின்னர் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கும் தொடர்ந்து இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகளுடன் கொஞ்சிக் குலாவினர்.
இஸ்ரேலின் மனம்கோணாமல் வெளியுறவுக் கொள்கை அமைத்து பாலஸ்தீன மக்களை, அவர்தம் உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் பெரும் பெயர்பெற்று விளங்கிய முன்னாள் எகிப்திய அரசுகளுக்கு மாற்றாக இன்றைய இஹ்வான்களின் தளபதியும், புதிய அதிபருமான டாக்டர் முஹம்மது முர்ஸி, பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை மீட்க எகிப்து அரசு பாடுபடும் என நைல்நதிக் கரையிலிருந்து முழங்கிய சிம்ம கர்ஜனை ஆதிக்க சக்திகளுக்கு நிச்சயம் உதறலைக் கொடுத்திருக்கும். ஏனைய அரபு நாடுகளைவிட பாலஸ்தீன மக்களுக்கான உரிமை மீட்புப் போரை ஆதரிக்கவும் வெற்றிபெறச் செய்ய வைக்கவும் எகிப்திய அரசுக்கே முழு உரிமையும், தார்மீகக் கடமையும் உண்டு என்றால் அது மிகையல்ல. காஸா பகுதியை இஸ்ரேல் இன்றுவரை கொடூர முற்றுகையில் ஆழ்த்தி கொடுமை செய்துவரும் வேளையில் பாலஸ்தீன மக்கள் உண்ண உணவின்றியும், பச்சிளம் மழலைகள் பாலின்றியும், நோயா ளிகள் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியும் தவித்தனர். முற்றிலும் சியோனிச எதிரிகள் சூழ்ந்துநின்ற நிலையில் எகிப்தின் எல்லை வழியாக நிலத்தில் துளையிட்டு சுரங்கப்பாதை அமைத்தும் பாலஸ் தீன மக்கள் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொண்டிருந்தனர். இஸ்ரேல் ராணுவத்தின் அரக்கப் பிடிக்குள் இருந்து தப்ப முயன்ற பல பாலஸ்தீனர்கள் தப்பிச்செல்வதைத் தடுக்க தனது எல்லையான ரஃபா பகுதியை எகிப்து மூடியது.
காஸா பகுதியில் உயிருக்குப் போராடித் துடிக்கும் ஜீவன்களைக் காப்பாற்ற உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் 2007ஆம் ஆண்டு எகிப்தின் ரஃபா எல்லையில் குவிந்தனர். உயிர்காக்கும் மருந்து களைக் கொடுத்து அவசர சிகிச்சை செய்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என மொராக்கோவிலிருந்து இந்தோனேஷியா வரை உள்ள நாடுகளில் இருந்துவந்த மருத் துவர்கள் துடிதுடிப்புடன் வேண்டு கோள் விடுத்தபோது எகிப்திய அரசு மருத்துவர்களை தனது ரஃபா எல்லை வழியாக காஸா வுக்குள் நுழைய அனு மதி மறுத்தது. காஸாவின் இஸ்ரேலின் முற்றுகையால் மக்கள் பரிதவித் ததைப் போன்றே எல்லையைத் திறக்க மறுத்த எகிப்தின் அன்றைய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் செயலாலும் பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இஸ்ரேலுக்கு இணையாகவே பாலஸ்தீன மக்களை வஞ்சித்து வந்த நாடு எகிப்து. அந்த நாட்டின் இன்றைய அதிபர் ‘பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை வென்றெடுப்போம்’ என முழங் கினார் என்பதை அரசியல் ஆய் வாளர்கள் இதனை ஒரு சரித்திர திருப்புமுனையாகவே பார்க்கின்ற னர். இதுவே சித்தாந்தவாதிகளின் எழுச்சி ஆதிக்கவாதிகளுக்கு அதிர்ச்சி என நாம் குறிப்பிட்டோம். இருப்பினும் எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம் என்பதை மறுப்பதற் கில்லை.
• நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க வேண்டும்.
• நெடுங்காலமாக புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும்.
• ராணுவத்தை வலிமை யாகவும் நவீனமயமாக்கவும் வேண்டும்.
• தேர்தலில் தனக்கு கடும் போட்டியாளராக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கின் விசுவாசி ஷஃபீக் பெரு வாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார், அவரை பெரும் சிரமத்திற்கிடையில் தான் தோற்கடிக்க முடிந் துள்ளது. அதுபோல கிறித்தவர் களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
• ராணுவத்துடனான உறவு மற்றும் ராணுவத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாம் சுற்று வாக்கெடுப் பின் போது ராணுவம், அதிபருக் கான அதிகார வரம்பினைக் குறைத்து தனது வசம் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்திக் கொண்டது. ராணுவத்திற்கான பட்ஜெட்டைத் தீர்மானிப்பது, ராணுவத் தளபதி களை நியமிப்பது போன்ற அதிகாரங்களையும் ராணுவம் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது. எகிப்தின் சட்ட ஒழுங்கு கடந்த வருடங்களில் அதல பாதாளத் திற்குச் சென்றுவிட்ட நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதியாகக் குறைந்துவிட்ட நிலை யில் புதிய பாதையை தேர்ந்தெடுத் துள்ள எகிப்திய மக்கள் சாதனை படைப்பார்களா? முன்னுள்ள சவால்களை உடைப்பார்களா?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - மூன்று 

 (நம்பிக்கை தரும் சம்பவங்கள்)


எகிப்தின் புதிய அதிபராக பொறுப் பேற்ற டாக்டர் முகமது முர்சிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
தங்கள் நாட்டில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு வருமாறு மேற்குலகின் சிம்ம சொப்பனமாகக் கருதப்படும் ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கிடையே முகமது முர்ஸி உம்ரா புனிதப் பயணத்தை நிறை வேற்ற உள்ளார். அப்போது சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தகவலை சவூதிக்கான எகிப்திய தூதர் முகமது கத்தான் தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட் டுக்கு ஈரான் செல்கிறார். இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் முர்ஸி உம்ராவை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எகிப்து குடியர சின் புதிய அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவர் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன் அல்ல. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த அழைப்பை விடுத்துள்ளார். எகிப்தின் மக்களாட்சிக்கும் பொருளாதார கட்டமைப்புக்கும் அமெரிக்கா அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்கத் தயா ராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது செய்தியில் தெரிவித் திருக்கிறார்.
அதிபர் ஒபாமாவின் இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் முர்ஸியிடம் ஒப்படைத்தார். சவூதி அரேபியா, அமெரிக்கா, ஈரான் என உலகின் முக்கிய நாடுகள் ஜனநாயக எகிப்தின் அதிபரை அங்கீகரித்தும் கூட மிகப்பெரிய அச்சுறுத்தலை அந்த நாடு இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவு துன்பத்தை சந்தித் தாலும் எகிப்தில் ராணுவத்தின் ஆட்சியை நிலை நாட்டுவோம் எனக் கூறியிருக்கிறார் ஒரு வெறியர். எகிப்தில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தால், இஹ்வான்களின் எழுச்சி ஏற்பட்டால் இந்த வெறியர் களுக்கு என்ன? யார் இவர்கள்?- பழைய நெனப்புடா பேராண்டி என பல்லுப் போன பாட்டி மஞ் சள் பூச தன்னை அழகுபடுத்திக் கொண்ட கதை போல காலம் மாறிவிட்ட நிலையில் இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறைத் தலைவர் அவிவ் கோச்சாவி தெரிவித்திருக் கிறார்.
எகிப்திய ராணுவத்தில் இஸ்லாமிஸ்டுகள் ஆதிக்கம் பெற்றால் அதனை என்ன விலை கொடுத்தாவது எகிப்தின் ராணுவ ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார். ஒரு ஜனநாய நாட்டின் எழுச் சியை, வீரியமிக்க ஒரு சக்தியின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத புல்லர் கூட்டத்தின் வெற்றுப் புலம்பல் என அதனை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என இஹ்வான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்களது அதிகாரத்தை சினாய் பகுதியில் நிலை நிறுத்தவும் எல்லையை நிர்ணயிக்கவும் எகிப்து தயாராக இருக்க வேண்டும் என எகிப்திய அரசுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக் கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்காலத்தில் சினாய் பகுதி இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் மிகப்பெரியப் பிரச்சினை யாகவும், போர் மேகம் சூழக் கூடிய அளவு நிலைமையை சிக்கலாக்கும் என்றும் கருதப் படுகிறது.
ஏற்கெனவே காஸாவின் வழியாக பாலஸ்தீனப் போராளி களான ஹமாஸ் அமைப் பினருக்கு எகிப்தில் இருந்து உதவிகள் வருகின்றன என்றும், இஸ்ரேலை வீழ்த்த எந்நேரமும் எகிப்தின் உதவிகள் காரணமாக அமையக்கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை யாகவும், இஸ்ரேலின் கள்ளக் காதலனாகவும் திகழ்ந்த எகிப்து இஸ்ரேலின் சிம்ம சொப்பனமாக மாறிவிட்டது.
கடந்த வார நிகழ்வு ஒன்று எகிப்தின் வீரம் செறிந்த புரட்சி யையும், அதன் நிகழ்கால வெற்றி யையும் மேற்கோள்காட்டி ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹாலித் மிஷால் ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. தியாகத்தில் தோய்ந்த தங்களது போர்த் தந்திரம் முயற்சிகளின் பின்னணியில் மென்மேலும் போராளிகள் அணி திரளுவார்கள். தியாகத்தின் மதிப்பையும், பெரு மையையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். இறை வழியில் தங்கள் உயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் மக்கள் பாலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட ஹாலித் மிஷால், எகிப்தின் புரட்சித் சரித்திரம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் உயர்த்தெழலை குறிக்கிறது.
நம்பிக்கை தரும் சம்பவங்களை அங்கே காண்கிறோம். இது வெற்றி மிக அருகில் உள்ளது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்றார் ஹாலித் மிஷால். எகிப்து புரட்சி பாலஸ்தீனர் களுக்கு புத்துணர்ச்சியை வழங்கு கிறது. எகிப்தின் புரட்சிகர சிந்த னைகளுக்கு கருபொருளாய், வேகத்தை அதிகரிக்கச் செய்யும் எரிபொருளாய் இஹ்வான்கள் விளங்கினார்கள். இஹ்வான்களை செதுக்கியவர், வார்த்தெடுத்தவர் ஹஸன் அல் பன்னா என்ற ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல்பன்னா அவர்கள் ஆவார்.
அரபுலகின் புரட்சிகர எழுச்சி மிகு சிந்தனைகளின் ஞானத் தந்தையாக ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு புரட்சிகர சிந்தனையாளனுக்கும் படிப்பினையாக விளங்குகிறது. அன்னாரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் தியாகப் பின்னணி கொண்டதாகும். அது..

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - 4

(20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.
உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று. அரபுலகில் பல நாடுகளில் இஹ்வான்களின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட கட்சிகளாகவும் குறிப்பாக எதிர்க்கட்சிகளாக விளங்கி வருகின்றன. 1928ஆம் ஆண்டு எகிப்தில் உருவான இந்த இயக்கம் சமய, அரசியல் மற்றும் சமூக இயக்கமான இதனை வீரத்தியாகி ஹஸனுல் பன்னா வார்த்தெடுத்தார்.
1928ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலக் கட்டத்தில் 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக வியாபித்தது.
அரபுலகில் செயல்பட்ட பல்வேறு மக்கள் நல இயக்கங்கள், அமைப்புகளுக்கு இஹ்வானுல் முஸ்லிமீனின் கொள்கைகள், கோட்பாடுகள் உத்வேகம் ஊட்டுபவையாக மாறின. இஹ்வான்களின் அரசியல் விழிப்புணர்வுக் கொள்கையை மட்டுமல்ல அவ்வமைப்பின் தர்ம சிந்தனையையும் தன்னகத்தே ஏற்று அறங் காவலர்களாக அரபு நாடுகளில் அமைப்புகள் விளங்கின.
ஒரு தனிநபராகட்டும், ஒரு குடும்பமாகட்டும், ஒரு சமூகமாகட்டும், அல்லது ஒரு நாடாகவே இருக்கட்டும் அனைத்துமே திருக்குர்ஆன் மற்றும் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வழிகாட்டுதல் முறைப்படியே இருக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் இஹ்வான்கள்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்பை ஆனால் அதன் உறுப் பினர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டனர்.
எடுத்துக்கட்டாக இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் என்ற பெயரில் ஜோர்டானிலும், ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற பெயரில் ஜோர்டானிலும், பாலஸ்தீனத்தில் ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற நீண்ட பெயரிலும் சுருக்கமாக ஹமாஸ் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனப் போராட்ட அமைப்பும், எகிப்தில் தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி போன்றவை இஹ்வான்களால் துவக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படும் அரசியல் கட்சிகளாகும்.
இதனைத் தொடங்கிய ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல் பன்னா என்ற ஹஸனுல் பன்னா 1906ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் பிறந்தார். 43 ஆண்டுகாலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த இவர் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆன்மீக இயலுக்கு உத்வேகம் ஊட்டுபவராக உருவெடுத்தார்.
20ஆம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் களில் ஒருவராக விளங்கினார். தலைநகர் கெய்ரோவில் வடமேற்கு பகுதியில் நைல்நதி டெல்டா பகுதியில் மஹ்மூதியா என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக வாழ்வைத் தொடங்கியவர். 13 வயதிலேயே எகிப்தை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து விடுதலை முழக்கம் எழுப்பினார். ஆங்கிலேய சாம்ராஜ்யம் அஞ்சி நடுங்கியது.

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -

 வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)


அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.
இஹ்வான்களின் உத்வேகம் பரவியதைவிட வேகமாக அதுபற்றிய பீதியும் அதிவேகமாகப் பரவுகிறது. தங்கள் நாட்டு அரசில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எந்த நாட்டு அரசுத் துறையில் இஹ்வான்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு புறப்பட்டது என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் திகைப்பும் திணறலும் அடைவீர்கள். அமெரிக்க அரசின் உயர் துறைகளில் இஹ்வானிய ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிச்சேல் பச்மான் என்ற பெண் செனட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஹுமா ஆபிதீன், இஹ்வான்களின் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஒபாமாவின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான கீத் எலிஸன், இஹ்வானுல் முஸ்லிமீன் கொள்கைப் பரப்புரையாளர் என மிச்சேல் கூறியுள்ளார்.
ஒபாமா அரசில் செல்வாக்கோடு செயல்படும் முஸ்லிம்களின் செல்வாக்கை வேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கீத் எலிசன் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இஹ்வான்களின் எழுச்சி மேற்குலகை மிரளச் செய்துள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
மேற்குலகம் மற்றும் சியோனிச சக்திகள் எகிப்தின் புரட்சி கண்டு மிரட்சி கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவை எல்லாமே ஆரம்ப சூரத்தனமாகவே இருக்க முடியும். மேற்குலக ஏகாதிபத்தியம் எகிப்திய புரட்சியைக்கூட கொன்று, தின்று ஜீரணித்து விடும் வலிமை கொண்டது என சிலர் கூறிக்கொண்டிருந்த கதையெல்லாம் பழங்கதையாயின. தாய் மண்ணை மீட்கப் போராடிவரும் ஏழைகளாய், அகதிகளாய், பூமிப்பந்தில் அலைந்து திரியும் பாலஸ்தீன மக்கள் இனி எவ்வித கெடுபிடியும் இல்லாமல், கேள்விக்கணக்கும் இன்றி, விசா என எந்த இழவு ஆவணங்களும் இன்றி அவர்கள் எகிப்தில் நுழையலாம்; தங்கலாம்; வாழலாம் என்ற முழு அனுமதி எகிப்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேஷ அனுமதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், எகிப்தின் விமான முனையங்களில் இருந்தும் பல்வேறு எல்லைப்புறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்தில் குவியத் தொடங்கினர்.
நிகாப் அணிந்த பெண்கள் பிரத்யேக தொலைக்காட்சி சானல் நடத்திக்கொண்டுள்ளார்கள். அது எகிப்திய பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபு வசந்தத்தின் முதல்கட்ட வெற்றி என கொண்டாடப்படும் நிலையில் இதன் போக்கு எந்த திசையை நோக்கி நகரும், அது முற்றுப்பெறும் போது எத்தகைய காட்சிகள் அமையும் என அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், அரபு வசந்தப் புரட்சிகள் இத்துடன் ஒடுங்கிவிடும் என யாரும் கருதவேண்டாம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருக்கிறார்.
பரிசுத்த மஸ்ஜிதே அக்ஸாவின் மீட்போடு அரபு வசந்தம் முற்றுப்பெறும் என தன் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். பாரம்பரிய உணர்வுகளையும் யார் யாரோ தீர்மானித்த வரையறைகளையும் மாற்றி எழுதும் திருப்புமுனை காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்படும். அரசியல் வரைபடம் மாற்றி அமைக்கப்படப் போகிறது. பூமிப்பந்தில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே தள்ள முஸ்லிம் உம்மா முடிவு செய்துவிட்ட முக்கிய தருணம் இது.
உண்மைதான். அரபுலக வசந்தத்தின் முதல் வெற்றி அதைத்தான் அறைந்து சொல்கிறது




எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி


எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி


எகிப்தின் அதிபர் தேர்தலில் டாக்டர் முஹம்மது முர்ஸி வெற்றி பெற்றுள்ளார். பதிவான 2 கோடி 60 லட்சம் வாக்குகளில் 1 கோடியே 32 லட்சம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இது பதிவான வாக்குகளில் 51 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஹ்மது ஷபீக் பெற்ற வாக்குகள் 1 கோடியே 23 லட்சம் வாக்குகள் ஆகும். அஹமது ஷபீக், ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்தவர். அவரைத் தோற்கடித்து இஹ்வான்களின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராகியுள்ளார்.
இது அரபு வசந்தத்தின் முதல் வெற்றியாகவும், இஹ்வான்களின் எழுச்சியாகவும் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் செல்லாதவை யாகும். தஹ்ரீர் சதுக்கம் உற்சாக வெள்ளத்தில் ததும்பியது.
இறைவன் மிகப் பெரியவன், இராணுவ ஆட்சி வீழட்டும் என்ற முழக்கங்களால் தஹ்ரீர் சதுக்கம் அதிர்ந்தது. அதிபர் தேர்தல் முடிவு எகிப்திற்கு மட்டுமல்ல, அரபுலகத்திற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றால் அது மிகையன்று. ஹோஸ்னி முபாரக் என்ற சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டு 500 நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முர்ஸியின் வெற்றியை மொத்த அரபுலகமும் வரவேற்றுள்ளது.
1979ஆம் ஆண்டு எகிப்துடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட இஸ்ரேல், இஹ்வான்களின் வெற்றியை விரும்பாததை சத்தமில் லாமல் வெளிப்படுத்தியது. எகிப்து அதிபர் தேர்தலின் முடிவு குறித்து கருத்துச் சொல்லும் நேரம் இதுவல்ல என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெஜவ் தெரிவித்தார்.
பாலஸ்தீன காஸா பகுதியில் இஹ்வான்களின் வெற்றிச் செய்தி வெளியாகத் தொடங்கியதும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது. வீதிகளெங்கும் ஹமாஸ் போராளி கள் துப்பாக்கி குண்டுகள் முழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.
இஹ்வான்களின் அரசியல் எழுச் சிக்கு அடையாளமாக வெற்றிபெற்ற எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். டாக்டர் முர்ஸியின் வெற்றி இஸ்லாத்தின் எதிரிகளுக்கு மரண அடியாக இருக்கும் என ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் ஜஹர் தெரிவித்தார். முர்ஸியின் வெற்றி அரபுலகின் மிகப்பெரிய நாடான எகிப்தின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் என நம்புவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில், நில வியல் அமைப்பில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் எகிப்தில் இஹ்வான்களின் மூத்த பிரமுகர் டாக்டர் முர்ஸி அதிபரானது அரபு வசந்தத்தின் முதற்கட்ட வெற்றியாக கருதப்படுகிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்காடாக இருந்த அரபகம் தற்போது மெல்ல மெல்ல ஏகாதிபத்தியத்தின் முனைமுறிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் பல்லாயிரக்கணக்கா னோரை படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கில் தனது நாட்டு வீரர்களைப் பறிகொடுத்தும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்ததும், லிபியாவில் அந்நாட்டுத் தலைவனை உள்ளூர் எதிரிகளோடு இணைந்து படுகொலை செய்து விட்டு அந்நாட்டின் தேசிய எழுச்சியை அடக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்கா.
சிரியாவில் கிளர்ச்சியை திரை மறைவில் ஊக்குவித்து இன்றுவரை மூக்கறுபட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஈரானுடன் போர்த் தொடுக்க வேண்டுமென இஸ்ரேல், அமெரிக்காவைக் கெஞ்ச, அமெரிக்கா பதைபதைப்புடன் ஈரானின் ஆயுத வல்லமையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகிறது.
ஈரான் மீதான போர் என்ற பெயரில் மீண்டும் ஒரு பொருளா தார மற்றும் இழப்புகளை சந்திக்க வேண்டுமா என தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கொஞ்ச நஞ்ச ஆணவ ஆட்டத்தின் ஓட்டத்தைக் கூட ஒரேயடியாக நிறுத்தவேண்டிய நிர்பந்தம் நாளை ஏற்படுமோ என அஞ்சுகிறது. இதுவரை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் அரபு தேசியத்தை முழங்குபவர்களாகவும், ராணுவ வல்லமையில் மட்டுமே ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். முதன்முதலாக சித்தாந்த ரீதியிலான எதிரிகளை ஏகாதிபத்தியம் சந்திக்கிறது.
இது உலக வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாகும். அரபுலகில் காலகாலமாக ஆளும் வர்க்கமும்கூட எகிப்தில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தல் வெற்றியை ஒருவித கவலையுடன் தான் அவதானிக்கின்றனர். இஹ்வான்களின் எழுச்சி சர்வதேச அதிர்வலையை எழுப்பக் காரணம் என்ன? இஹ்வான்களின் சாதனை என்ன?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -  இரண்டு

 ( முர்ஸி முன்னுள்ள சவால்கள் )

ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி அதிபர் பதவியை ஏற்ற பின்னர் தன் நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தைப் பேணிக்காப்போம் என உறுதியளித்த புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அரபுலகில் மலர்ச்சியையும், மேற்குலகிலும் சியோனிச சக்திகளுக்கு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு நாங் களும் எங்கள் அரசும் மிகுந்த பக்கபலமாக இருப்போம் என தனது உரையில் தெரிவித்தார். 70களில் அன்வர் சதாத்தும், அதன் பின்னர் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கும் தொடர்ந்து இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகளுடன் கொஞ்சிக் குலாவினர்.
இஸ்ரேலின் மனம்கோணாமல் வெளியுறவுக் கொள்கை அமைத்து பாலஸ்தீன மக்களை, அவர்தம் உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் பெரும் பெயர்பெற்று விளங்கிய முன்னாள் எகிப்திய அரசுகளுக்கு மாற்றாக இன்றைய இஹ்வான்களின் தளபதியும், புதிய அதிபருமான டாக்டர் முஹம்மது முர்ஸி, பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை மீட்க எகிப்து அரசு பாடுபடும் என நைல்நதிக் கரையிலிருந்து முழங்கிய சிம்ம கர்ஜனை ஆதிக்க சக்திகளுக்கு நிச்சயம் உதறலைக் கொடுத்திருக்கும். ஏனைய அரபு நாடுகளைவிட பாலஸ்தீன மக்களுக்கான உரிமை மீட்புப் போரை ஆதரிக்கவும் வெற்றிபெறச் செய்ய வைக்கவும் எகிப்திய அரசுக்கே முழு உரிமையும், தார்மீகக் கடமையும் உண்டு என்றால் அது மிகையல்ல. காஸா பகுதியை இஸ்ரேல் இன்றுவரை கொடூர முற்றுகையில் ஆழ்த்தி கொடுமை செய்துவரும் வேளையில் பாலஸ்தீன மக்கள் உண்ண உணவின்றியும், பச்சிளம் மழலைகள் பாலின்றியும், நோயா ளிகள் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியும் தவித்தனர். முற்றிலும் சியோனிச எதிரிகள் சூழ்ந்துநின்ற நிலையில் எகிப்தின் எல்லை வழியாக நிலத்தில் துளையிட்டு சுரங்கப்பாதை அமைத்தும் பாலஸ் தீன மக்கள் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொண்டிருந்தனர். இஸ்ரேல் ராணுவத்தின் அரக்கப் பிடிக்குள் இருந்து தப்ப முயன்ற பல பாலஸ்தீனர்கள் தப்பிச்செல்வதைத் தடுக்க தனது எல்லையான ரஃபா பகுதியை எகிப்து மூடியது.
காஸா பகுதியில் உயிருக்குப் போராடித் துடிக்கும் ஜீவன்களைக் காப்பாற்ற உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் 2007ஆம் ஆண்டு எகிப்தின் ரஃபா எல்லையில் குவிந்தனர். உயிர்காக்கும் மருந்து களைக் கொடுத்து அவசர சிகிச்சை செய்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என மொராக்கோவிலிருந்து இந்தோனேஷியா வரை உள்ள நாடுகளில் இருந்துவந்த மருத் துவர்கள் துடிதுடிப்புடன் வேண்டு கோள் விடுத்தபோது எகிப்திய அரசு மருத்துவர்களை தனது ரஃபா எல்லை வழியாக காஸா வுக்குள் நுழைய அனு மதி மறுத்தது. காஸாவின் இஸ்ரேலின் முற்றுகையால் மக்கள் பரிதவித் ததைப் போன்றே எல்லையைத் திறக்க மறுத்த எகிப்தின் அன்றைய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் செயலாலும் பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இஸ்ரேலுக்கு இணையாகவே பாலஸ்தீன மக்களை வஞ்சித்து வந்த நாடு எகிப்து. அந்த நாட்டின் இன்றைய அதிபர் ‘பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை வென்றெடுப்போம்’ என முழங் கினார் என்பதை அரசியல் ஆய் வாளர்கள் இதனை ஒரு சரித்திர திருப்புமுனையாகவே பார்க்கின்ற னர். இதுவே சித்தாந்தவாதிகளின் எழுச்சி ஆதிக்கவாதிகளுக்கு அதிர்ச்சி என நாம் குறிப்பிட்டோம். இருப்பினும் எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம் என்பதை மறுப்பதற் கில்லை.
• நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க வேண்டும்.
• நெடுங்காலமாக புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும்.
• ராணுவத்தை வலிமை யாகவும் நவீனமயமாக்கவும் வேண்டும்.
• தேர்தலில் தனக்கு கடும் போட்டியாளராக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கின் விசுவாசி ஷஃபீக் பெரு வாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார், அவரை பெரும் சிரமத்திற்கிடையில் தான் தோற்கடிக்க முடிந் துள்ளது. அதுபோல கிறித்தவர் களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
• ராணுவத்துடனான உறவு மற்றும் ராணுவத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாம் சுற்று வாக்கெடுப் பின் போது ராணுவம், அதிபருக் கான அதிகார வரம்பினைக் குறைத்து தனது வசம் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்திக் கொண்டது. ராணுவத்திற்கான பட்ஜெட்டைத் தீர்மானிப்பது, ராணுவத் தளபதி களை நியமிப்பது போன்ற அதிகாரங்களையும் ராணுவம் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது. எகிப்தின் சட்ட ஒழுங்கு கடந்த வருடங்களில் அதல பாதாளத் திற்குச் சென்றுவிட்ட நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதியாகக் குறைந்துவிட்ட நிலை யில் புதிய பாதையை தேர்ந்தெடுத் துள்ள எகிப்திய மக்கள் சாதனை படைப்பார்களா? முன்னுள்ள சவால்களை உடைப்பார்களா?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - மூன்று 

 (நம்பிக்கை தரும் சம்பவங்கள்)


எகிப்தின் புதிய அதிபராக பொறுப் பேற்ற டாக்டர் முகமது முர்சிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
தங்கள் நாட்டில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு வருமாறு மேற்குலகின் சிம்ம சொப்பனமாகக் கருதப்படும் ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கிடையே முகமது முர்ஸி உம்ரா புனிதப் பயணத்தை நிறை வேற்ற உள்ளார். அப்போது சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தகவலை சவூதிக்கான எகிப்திய தூதர் முகமது கத்தான் தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட் டுக்கு ஈரான் செல்கிறார். இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் முர்ஸி உம்ராவை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எகிப்து குடியர சின் புதிய அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவர் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன் அல்ல. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த அழைப்பை விடுத்துள்ளார். எகிப்தின் மக்களாட்சிக்கும் பொருளாதார கட்டமைப்புக்கும் அமெரிக்கா அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்கத் தயா ராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது செய்தியில் தெரிவித் திருக்கிறார்.
அதிபர் ஒபாமாவின் இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் முர்ஸியிடம் ஒப்படைத்தார். சவூதி அரேபியா, அமெரிக்கா, ஈரான் என உலகின் முக்கிய நாடுகள் ஜனநாயக எகிப்தின் அதிபரை அங்கீகரித்தும் கூட மிகப்பெரிய அச்சுறுத்தலை அந்த நாடு இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவு துன்பத்தை சந்தித் தாலும் எகிப்தில் ராணுவத்தின் ஆட்சியை நிலை நாட்டுவோம் எனக் கூறியிருக்கிறார் ஒரு வெறியர். எகிப்தில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தால், இஹ்வான்களின் எழுச்சி ஏற்பட்டால் இந்த வெறியர் களுக்கு என்ன? யார் இவர்கள்?- பழைய நெனப்புடா பேராண்டி என பல்லுப் போன பாட்டி மஞ் சள் பூச தன்னை அழகுபடுத்திக் கொண்ட கதை போல காலம் மாறிவிட்ட நிலையில் இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறைத் தலைவர் அவிவ் கோச்சாவி தெரிவித்திருக் கிறார்.
எகிப்திய ராணுவத்தில் இஸ்லாமிஸ்டுகள் ஆதிக்கம் பெற்றால் அதனை என்ன விலை கொடுத்தாவது எகிப்தின் ராணுவ ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார். ஒரு ஜனநாய நாட்டின் எழுச் சியை, வீரியமிக்க ஒரு சக்தியின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத புல்லர் கூட்டத்தின் வெற்றுப் புலம்பல் என அதனை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என இஹ்வான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்களது அதிகாரத்தை சினாய் பகுதியில் நிலை நிறுத்தவும் எல்லையை நிர்ணயிக்கவும் எகிப்து தயாராக இருக்க வேண்டும் என எகிப்திய அரசுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக் கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்காலத்தில் சினாய் பகுதி இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் மிகப்பெரியப் பிரச்சினை யாகவும், போர் மேகம் சூழக் கூடிய அளவு நிலைமையை சிக்கலாக்கும் என்றும் கருதப் படுகிறது.
ஏற்கெனவே காஸாவின் வழியாக பாலஸ்தீனப் போராளி களான ஹமாஸ் அமைப் பினருக்கு எகிப்தில் இருந்து உதவிகள் வருகின்றன என்றும், இஸ்ரேலை வீழ்த்த எந்நேரமும் எகிப்தின் உதவிகள் காரணமாக அமையக்கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை யாகவும், இஸ்ரேலின் கள்ளக் காதலனாகவும் திகழ்ந்த எகிப்து இஸ்ரேலின் சிம்ம சொப்பனமாக மாறிவிட்டது.
கடந்த வார நிகழ்வு ஒன்று எகிப்தின் வீரம் செறிந்த புரட்சி யையும், அதன் நிகழ்கால வெற்றி யையும் மேற்கோள்காட்டி ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹாலித் மிஷால் ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. தியாகத்தில் தோய்ந்த தங்களது போர்த் தந்திரம் முயற்சிகளின் பின்னணியில் மென்மேலும் போராளிகள் அணி திரளுவார்கள். தியாகத்தின் மதிப்பையும், பெரு மையையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். இறை வழியில் தங்கள் உயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் மக்கள் பாலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட ஹாலித் மிஷால், எகிப்தின் புரட்சித் சரித்திரம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் உயர்த்தெழலை குறிக்கிறது.
நம்பிக்கை தரும் சம்பவங்களை அங்கே காண்கிறோம். இது வெற்றி மிக அருகில் உள்ளது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்றார் ஹாலித் மிஷால். எகிப்து புரட்சி பாலஸ்தீனர் களுக்கு புத்துணர்ச்சியை வழங்கு கிறது. எகிப்தின் புரட்சிகர சிந்த னைகளுக்கு கருபொருளாய், வேகத்தை அதிகரிக்கச் செய்யும் எரிபொருளாய் இஹ்வான்கள் விளங்கினார்கள். இஹ்வான்களை செதுக்கியவர், வார்த்தெடுத்தவர் ஹஸன் அல் பன்னா என்ற ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல்பன்னா அவர்கள் ஆவார்.
அரபுலகின் புரட்சிகர எழுச்சி மிகு சிந்தனைகளின் ஞானத் தந்தையாக ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு புரட்சிகர சிந்தனையாளனுக்கும் படிப்பினையாக விளங்குகிறது. அன்னாரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் தியாகப் பின்னணி கொண்டதாகும். அது..

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - 4

(20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.
உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று. அரபுலகில் பல நாடுகளில் இஹ்வான்களின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட கட்சிகளாகவும் குறிப்பாக எதிர்க்கட்சிகளாக விளங்கி வருகின்றன. 1928ஆம் ஆண்டு எகிப்தில் உருவான இந்த இயக்கம் சமய, அரசியல் மற்றும் சமூக இயக்கமான இதனை வீரத்தியாகி ஹஸனுல் பன்னா வார்த்தெடுத்தார்.
1928ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலக் கட்டத்தில் 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக வியாபித்தது.
அரபுலகில் செயல்பட்ட பல்வேறு மக்கள் நல இயக்கங்கள், அமைப்புகளுக்கு இஹ்வானுல் முஸ்லிமீனின் கொள்கைகள், கோட்பாடுகள் உத்வேகம் ஊட்டுபவையாக மாறின. இஹ்வான்களின் அரசியல் விழிப்புணர்வுக் கொள்கையை மட்டுமல்ல அவ்வமைப்பின் தர்ம சிந்தனையையும் தன்னகத்தே ஏற்று அறங் காவலர்களாக அரபு நாடுகளில் அமைப்புகள் விளங்கின.
ஒரு தனிநபராகட்டும், ஒரு குடும்பமாகட்டும், ஒரு சமூகமாகட்டும், அல்லது ஒரு நாடாகவே இருக்கட்டும் அனைத்துமே திருக்குர்ஆன் மற்றும் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வழிகாட்டுதல் முறைப்படியே இருக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் இஹ்வான்கள்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்பை ஆனால் அதன் உறுப் பினர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டனர்.
எடுத்துக்கட்டாக இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் என்ற பெயரில் ஜோர்டானிலும், ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற பெயரில் ஜோர்டானிலும், பாலஸ்தீனத்தில் ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற நீண்ட பெயரிலும் சுருக்கமாக ஹமாஸ் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனப் போராட்ட அமைப்பும், எகிப்தில் தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி போன்றவை இஹ்வான்களால் துவக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படும் அரசியல் கட்சிகளாகும்.
இதனைத் தொடங்கிய ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல் பன்னா என்ற ஹஸனுல் பன்னா 1906ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் பிறந்தார். 43 ஆண்டுகாலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த இவர் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆன்மீக இயலுக்கு உத்வேகம் ஊட்டுபவராக உருவெடுத்தார்.
20ஆம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் களில் ஒருவராக விளங்கினார். தலைநகர் கெய்ரோவில் வடமேற்கு பகுதியில் நைல்நதி டெல்டா பகுதியில் மஹ்மூதியா என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக வாழ்வைத் தொடங்கியவர். 13 வயதிலேயே எகிப்தை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து விடுதலை முழக்கம் எழுப்பினார். ஆங்கிலேய சாம்ராஜ்யம் அஞ்சி நடுங்கியது.

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -

 வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)


அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.
இஹ்வான்களின் உத்வேகம் பரவியதைவிட வேகமாக அதுபற்றிய பீதியும் அதிவேகமாகப் பரவுகிறது. தங்கள் நாட்டு அரசில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எந்த நாட்டு அரசுத் துறையில் இஹ்வான்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு புறப்பட்டது என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் திகைப்பும் திணறலும் அடைவீர்கள். அமெரிக்க அரசின் உயர் துறைகளில் இஹ்வானிய ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிச்சேல் பச்மான் என்ற பெண் செனட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஹுமா ஆபிதீன், இஹ்வான்களின் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஒபாமாவின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான கீத் எலிஸன், இஹ்வானுல் முஸ்லிமீன் கொள்கைப் பரப்புரையாளர் என மிச்சேல் கூறியுள்ளார்.
ஒபாமா அரசில் செல்வாக்கோடு செயல்படும் முஸ்லிம்களின் செல்வாக்கை வேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கீத் எலிசன் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இஹ்வான்களின் எழுச்சி மேற்குலகை மிரளச் செய்துள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
மேற்குலகம் மற்றும் சியோனிச சக்திகள் எகிப்தின் புரட்சி கண்டு மிரட்சி கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவை எல்லாமே ஆரம்ப சூரத்தனமாகவே இருக்க முடியும். மேற்குலக ஏகாதிபத்தியம் எகிப்திய புரட்சியைக்கூட கொன்று, தின்று ஜீரணித்து விடும் வலிமை கொண்டது என சிலர் கூறிக்கொண்டிருந்த கதையெல்லாம் பழங்கதையாயின. தாய் மண்ணை மீட்கப் போராடிவரும் ஏழைகளாய், அகதிகளாய், பூமிப்பந்தில் அலைந்து திரியும் பாலஸ்தீன மக்கள் இனி எவ்வித கெடுபிடியும் இல்லாமல், கேள்விக்கணக்கும் இன்றி, விசா என எந்த இழவு ஆவணங்களும் இன்றி அவர்கள் எகிப்தில் நுழையலாம்; தங்கலாம்; வாழலாம் என்ற முழு அனுமதி எகிப்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேஷ அனுமதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், எகிப்தின் விமான முனையங்களில் இருந்தும் பல்வேறு எல்லைப்புறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்தில் குவியத் தொடங்கினர்.
நிகாப் அணிந்த பெண்கள் பிரத்யேக தொலைக்காட்சி சானல் நடத்திக்கொண்டுள்ளார்கள். அது எகிப்திய பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபு வசந்தத்தின் முதல்கட்ட வெற்றி என கொண்டாடப்படும் நிலையில் இதன் போக்கு எந்த திசையை நோக்கி நகரும், அது முற்றுப்பெறும் போது எத்தகைய காட்சிகள் அமையும் என அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், அரபு வசந்தப் புரட்சிகள் இத்துடன் ஒடுங்கிவிடும் என யாரும் கருதவேண்டாம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருக்கிறார்.
பரிசுத்த மஸ்ஜிதே அக்ஸாவின் மீட்போடு அரபு வசந்தம் முற்றுப்பெறும் என தன் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். பாரம்பரிய உணர்வுகளையும் யார் யாரோ தீர்மானித்த வரையறைகளையும் மாற்றி எழுதும் திருப்புமுனை காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்படும். அரசியல் வரைபடம் மாற்றி அமைக்கப்படப் போகிறது. பூமிப்பந்தில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே தள்ள முஸ்லிம் உம்மா முடிவு செய்துவிட்ட முக்கிய தருணம் இது.
உண்மைதான். அரபுலக வசந்தத்தின் முதல் வெற்றி அதைத்தான் அறைந்து சொல்கிறது




Sunday, August 5, 2012

டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு


டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

E-mailPrintPDF
டெல்லி மெட்ரோ ரயில் வழிப்பாதைக்காக பூமிக்கடியில் தோண்டும்போது பள்ளிவாசல் ஒன்று சிதிலமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற அக்பராபாதி மஸ்ஜித் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் முஸ்லிம்கள் குவிந்தனர். பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதை நோக்கி திரண்ட முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி காவல்துறை திணறியது. கூட்டத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முயன்ற காவல்துறையினர் மீது கூடியிருந்த பொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர்.
அக்பராபாதி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செளிணிய முஸ்லிம்கள் குவிந்தனர். அதேவேளையில் மத்திய தொல்லியல் துறை, பள்ளிவாசலைக் கைப்பற்ற முயற்சித்தது. இந்நிலையில் டெல்லியில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சாஹெப் இக்பால், டெல்லி மாநில அமைச்சர் ஹாரூண் யூசுப், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட சமாதானக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அக்பராபாதி மஸ்ஜிதை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க வேண்டும். வேறு எந்தக் கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என முஸ்லிம்களுக்கும், தொல்லியல் துறைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அக்பராபாதி மஸ்ஜித் மீட்கப்படுமா? இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது

Web Counter Code