இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, April 3, 2008

சீனா: மனித உரிமைகள் மரணப் படுக்கையில்...
அப்பாவிகளின் உரிமைகளை
நசுக்குவது என்றால் சீனாவுக்கு அலாதி
பிரியம். பல ஆண்டுகளுக்கு முன்பு
பெய்ஜிங் தியான்மென் சதுக்கத்தில்
ஆயிரக்கணக்கான மாணவர்களைக்
கொன்றது. என்னதான் பொதுவுடமை
சித்தாந்தத்தை உயர்த்தி பிடிப்பதாக சீனா
கூறிக்கொண்டாலும் மனித உரிமைகளை
மீறுவதில் உலகத் தரத்தை எட்டிப்
பிடிக்கிறது.
திபெத்தில் சீனா ஆடிய வெறியாட்
டம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
திபெத் மக்கள் தீவிர போராட்டத்தில்
குதித்தனர். நூற்றுக்கு மேற்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்
பட்டனர். சீனாவில் இவ்வாண்டு
நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்
டிக்கு இடையூறு விளைவிப்பதற்காக
மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள்
இத்தகைய சதிகளை நிகழ்த்துவதாக
சீனாவை ஆதரிப்பவர்கள் கருத்து
பரப்பினர். இருப்பினும் அமெரிக்கா
ஆதரிப்பதாலேயே அதில் நியாயம்
இல்லை என முடிவுக்கு வந்துவிட
முடியாது.
பல்லாண்டுகளாக திபெத்தியர்களின்
உரிமைகளை நசுக்குவதைக் கண்டு
திபெத்தியர்களின் சமயத்தலைவர்
தலாய்லாமா உரிமைக்குரல் எழுப்பினார்.
திபெத் நாட்டின் இளைய தலைமுறை
யினரை சீன கொடுங்கோன்மை அரசு
குதறுவதாக குமுறினார்.
திபெத்தியர்களின் தீரமிக்க போராட்
டம் தீயாய் திக்கென பற்றிக் கொண்டது.
அது சீன தேசத்தை நிம்மதி இழக்கச்
செய்து வருகிறது.
தி ù ப த் ,
உ ரி û ம ப்
போராட்
டத்தி
னால்
சர்ச்சை
யில் சிக்கித்
தவிப்பது என்பது
உண்மை. எனினும் திபெத் பிரச்சினை
யைவிட நீறுபூத்த நெருப்பாக சீனாவின்
ஜின்ஜியாங் மாகாணம் விளங்குகிறது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும்
பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்
களின் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை
மீறல்கள் குறித்தும் உலகம் தனது
கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
என்பதே நடுநிலையாளர்களின் எதிர்
பார்ப்பாக உள்ளது.
பரப்பளவில் பிரான்ஸ் நாட்டை விட
மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்
பகுதியில் வாழும் பெரும்பான்மை
மக்களான முஸ்லிம்கள் துருக்கிய
இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
1949க்கு முன்பு வரை ஜின்ஜியாங்
சுதந்திர பூமியாக விளங்கியது பின்னர்
சீனா எழுச்சிபெறத் தொடங்கியதும் தனது
ராட்சஸ ராணுவ பலத்தை பயன்படுத்தி
ஜின்ஜியாங் பகுதியை
தனது நாட்டுடன்
இ û ண த் து க்
கொண்டது.
ஏ ர ô ள
ம ô ன
இ ய ற் û க
ù ச ல் வ ங்
க û ள
தன்னகத்தே
ù க ô ண் டி
ரு க் கு ம்
ஜி ன் ஜி ய ô ங்
மாகாணம் சீனாவின்
அணுஆற்றல் முக்கியத்
துவம் பெற்ற பகுதியாகவும்
இருக்கிறது. சுரங்கத் தொழிலில் மட்டு
மின்றி சர்வதேச அளவில் சீனா
முக்கியத்துவம் பெற காரணமாக
இருக்கும் ஜவுளித் தொழிலிலும்
இம்மாகாணம் முதலிடம் வகிக்கிறது.
பருத்தி உற்பத்தியில் 30 சதவீதம்
இம்மாநிலத்தின் பங்களிப்பாகும்.
அகண்ட சீனாவின் ஆறில் ஒரு
பகுதி நிலப்பரப்பை ஜின்ஜியாங்
மாகாணம் கொண்டிருந்தாலும் இதன்
மக்கள் தொகை வெறும் ஒரு கோடியே
80 லட்சமாகும்.
பெரிய நிலப்பரப்பு குறைந்த அளவே
ஜனத்தொகை கொண்ட மக்கள் அதுவும்
முஸ்லிம்கள். எனவே மக்கள் தொகை
பெருக்கத்தால் விழி பிதுங்கிய சீனா தனது
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள
'ஹான்' இனமக்களை ஜின்ஜியாங்கில்
குடியமர்த்தத் தொடங்கியதைத்
தொடர்ந்து சீன அரசுக்கு எதிர்ப்புகள்
புறப்பட்டன.
அதனை எதிர் கொள்ள முடியாத
சீனா, ஜின்ஜியாங் முஸ்லிம்களை
அடக்கியாளத் தொடங்கியது.
1953ல் இருந்து 75 லட்சம் ஹான்
இனமக்களை சீன அரசு ஜின்ஜியாங்
மாநிலத்தில் குடியமர்த்தியது. 1990களில்
இருந்து அப்பகுதி மக்களின் மொழியை
நசுக்குவதோடு சீனர்களின் பிரதான
மொழியான மாண்டரினுக்கு முக்கியத்து
வமும் அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கப்
படுகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில்
எப்போதும் ராணுவத்தைக் குவித்து
வைத்திருக்கும் சீனா அங்குள்ள
இளைஞர்களை தீவிரவாதத் தொடர்பு
டையவர்களாக சித்தரித்து சித்திரவதை
செய்வதாக மனித உரிமை ஆர்வலர்கள்
வேதனை தெரிவித்துள்ளனர். ஜின்ஜியாங்
மாநிலத்தின் அண்டை நாடுகளான
முன்னாள் சோவியத் யூனியனின்
குடியரசுகளாய் இருந்து பின்னர்
விடுதலை பெற்ற நாடுகளான துர்க்மினிஸ்
தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும்
உஸ்பெகிஸ்தான் போன்றே விடுதலைப்
பெற வேண்டும் என அங்கு சில
போராளிக் குழுக்கள் போராடி
வருகின்றன.
சீனா உரிமைக் குரலை நசுக்குகிறது.
எனினும் ஜின்ஜியாங் பகுதியில் சுதந்திர
ஏக்கத் தீ பற்றிப் பரவுகிறது.
பள்ளிவாசலில் நாங்கள்தான் குண்டு வைத்தோம்! மீண்டும் வெடிக்கும்!!
சங்பரிவார் மிரட்டல்!
இந்திய எல்லையில் இமயமலை
பரப்பில் இருக்கும் நேபாளம் மன்னர்
ஆட்சியின் அதிகார இறக்கைகள்
வெட்டப்பட்டு ஜனநாயகப் பாதைக்கு
திரும்பி வருகிறது. இந்நிலையில்,
நேபாளத்தை மதவாத நாடாக மாற்ற
வேண்டும் என ஒரு கும்பல் தீவிரமாக
திட்டமிட்டுவருகிறது. நேபாள மக்களின்
ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் முயற்சி
யில் தொடர்ந்து ஈடுபட்டது. நேபாள
பாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்
பட்டு வரும் மதவாத அமைப்பு இது.
இது நேபாளத்தை சங்பரிவார் நாடாக
மாற்ற தொடர்ந்து கலவரம் விளைவித்து
வருகிறது. இந்நிலையில், நேபாளத்
தலைநகர் காட்மாண்டுக்கு தென்கிழக்கில்
200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பிராட்நகரில் உள்ள சின்ன பள்ளி
வாசலில் குண்டுவெடித்தது. இதில் பள்ளி
வாசலில் தொழுகைக்காக வந்திருந்த
இருவர் கொல்லப்பட்டனர். 60க்கும்
மேற்பட்ட முஸ்லிம்கள் மாலை நேரத்
தொழுகை யில் ஈடுபட்டிருக்கும் போது
மூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இது
மார்ச் 29ஆம் தேதி நடந்தது.
குண்டுகள் வெடித்தவுடனே ''தாங்கள்
தான் இந்த தாக்குதலை நடத்தினோம்''
நேபாளத்தை ஹிந்துத்துவா நாடாக
மாற்றும் வரை இது போன்ற தாக்குதல்கள்
தொடரும் என்றும் தேசிய பாதுகாப்பு
படை என்ற பெயரில் செயல்படும்
கோட்சே கும்பல் தெரிவித்துள்ளது.
நேபாளம் 2006 ஆம் ஆண்டுவரை
உலகின் ஒரே ஹிந்து நாடாக அறிவிக்
கப்பட்டிருந்தது. பின்னர் அரசியல் சாசன
சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு
நேபாளம் மதசார்பற்ற நாடாக
அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.
உலக உண்மைகள் என்ற நூலில்
குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்
இரண்டு கோடியே 80 லட்சம்
மக்கள் வாழும் நேபாளத்தில் 80
சதவீதத்தினர் ஹிந்துக்களாவர்.
இந்நிலையில், பள்ளிவாசலின் மீது
நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்வரும்
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற
விருக்கும் நாடாளுமன்ற தேர்தலை
சீர்குலைக்கும் சதி என்றும் அதற்கு
தாங்கள் ஒருபோதும் அடிபணிய
மாட்டோம் என்றும் நேபாளப் பிரதமர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்
கிறார்.
நேபாளத்தில் முகாமிட்டிருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்
குழு பள்ளிவாசல் மீதான குண்டு வெடிப்பு
தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்
துள்ளது. ஐ.நா.பார்வையாளர் குழுவின்
தலைவர் தனது கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளார். இது மதவாத விஷமி
களின் திட்டமிட்ட தாக்குதல் தான்
சந்தேகமே இல்லை என்றும் ஆவேசத்
துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
பள்ளிவாசலில் வெடிகுண்டுதாக்குதல்
நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில் முஸ்ம்கள்
வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்
தில் குதித்தனர். எங்கள் போராட்டம்
கலவரமாக வெடிக்காமல் தவிர்த்துக்
கொள்ள எங்களால் முடியும் என
தெரிவித்த முஸ்லிம் இத்திஹாதுல்
அமைப்பின் தலைவரான ஜாஃபர்
அஹ்மத் ஜமாலி முஸ்லிம்களுக்கு
நாடாளுமன்றத்திலும், ராணுவத்திலும்
அதிக அளவு இடம் ஒதுக்க வேண்டும்
என்றும் கூறியிருக்கிறார்.
காந்தியைக் கொன்ற கோட்சே
மதவெறி கும்பலின் கொடிய கரங்கள்
இந்தியாவை தாண்டியும் விரியத்
தொடங்கியிருப்பது உலக அமைதிக்கு
ஏற்பட்டிருக்கும் ஆபத்தாகவே முடியும்
என அரசியல் பார்வையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

Web Counter Code