இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, April 3, 2008

பள்ளிவாசலில் நாங்கள்தான் குண்டு வைத்தோம்! மீண்டும் வெடிக்கும்!!
சங்பரிவார் மிரட்டல்!
இந்திய எல்லையில் இமயமலை
பரப்பில் இருக்கும் நேபாளம் மன்னர்
ஆட்சியின் அதிகார இறக்கைகள்
வெட்டப்பட்டு ஜனநாயகப் பாதைக்கு
திரும்பி வருகிறது. இந்நிலையில்,
நேபாளத்தை மதவாத நாடாக மாற்ற
வேண்டும் என ஒரு கும்பல் தீவிரமாக
திட்டமிட்டுவருகிறது. நேபாள மக்களின்
ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் முயற்சி
யில் தொடர்ந்து ஈடுபட்டது. நேபாள
பாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்
பட்டு வரும் மதவாத அமைப்பு இது.
இது நேபாளத்தை சங்பரிவார் நாடாக
மாற்ற தொடர்ந்து கலவரம் விளைவித்து
வருகிறது. இந்நிலையில், நேபாளத்
தலைநகர் காட்மாண்டுக்கு தென்கிழக்கில்
200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பிராட்நகரில் உள்ள சின்ன பள்ளி
வாசலில் குண்டுவெடித்தது. இதில் பள்ளி
வாசலில் தொழுகைக்காக வந்திருந்த
இருவர் கொல்லப்பட்டனர். 60க்கும்
மேற்பட்ட முஸ்லிம்கள் மாலை நேரத்
தொழுகை யில் ஈடுபட்டிருக்கும் போது
மூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இது
மார்ச் 29ஆம் தேதி நடந்தது.
குண்டுகள் வெடித்தவுடனே ''தாங்கள்
தான் இந்த தாக்குதலை நடத்தினோம்''
நேபாளத்தை ஹிந்துத்துவா நாடாக
மாற்றும் வரை இது போன்ற தாக்குதல்கள்
தொடரும் என்றும் தேசிய பாதுகாப்பு
படை என்ற பெயரில் செயல்படும்
கோட்சே கும்பல் தெரிவித்துள்ளது.
நேபாளம் 2006 ஆம் ஆண்டுவரை
உலகின் ஒரே ஹிந்து நாடாக அறிவிக்
கப்பட்டிருந்தது. பின்னர் அரசியல் சாசன
சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு
நேபாளம் மதசார்பற்ற நாடாக
அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.
உலக உண்மைகள் என்ற நூலில்
குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்
இரண்டு கோடியே 80 லட்சம்
மக்கள் வாழும் நேபாளத்தில் 80
சதவீதத்தினர் ஹிந்துக்களாவர்.
இந்நிலையில், பள்ளிவாசலின் மீது
நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்வரும்
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற
விருக்கும் நாடாளுமன்ற தேர்தலை
சீர்குலைக்கும் சதி என்றும் அதற்கு
தாங்கள் ஒருபோதும் அடிபணிய
மாட்டோம் என்றும் நேபாளப் பிரதமர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்
கிறார்.
நேபாளத்தில் முகாமிட்டிருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்
குழு பள்ளிவாசல் மீதான குண்டு வெடிப்பு
தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்
துள்ளது. ஐ.நா.பார்வையாளர் குழுவின்
தலைவர் தனது கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளார். இது மதவாத விஷமி
களின் திட்டமிட்ட தாக்குதல் தான்
சந்தேகமே இல்லை என்றும் ஆவேசத்
துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
பள்ளிவாசலில் வெடிகுண்டுதாக்குதல்
நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில் முஸ்ம்கள்
வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்
தில் குதித்தனர். எங்கள் போராட்டம்
கலவரமாக வெடிக்காமல் தவிர்த்துக்
கொள்ள எங்களால் முடியும் என
தெரிவித்த முஸ்லிம் இத்திஹாதுல்
அமைப்பின் தலைவரான ஜாஃபர்
அஹ்மத் ஜமாலி முஸ்லிம்களுக்கு
நாடாளுமன்றத்திலும், ராணுவத்திலும்
அதிக அளவு இடம் ஒதுக்க வேண்டும்
என்றும் கூறியிருக்கிறார்.
காந்தியைக் கொன்ற கோட்சே
மதவெறி கும்பலின் கொடிய கரங்கள்
இந்தியாவை தாண்டியும் விரியத்
தொடங்கியிருப்பது உலக அமைதிக்கு
ஏற்பட்டிருக்கும் ஆபத்தாகவே முடியும்
என அரசியல் பார்வையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

No comments:

Web Counter Code