இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 12, 2008

கொசோவோ விடுதலை! தொடரும் உலக ஆதரவு!!


ஐரோப்பாவில் இஸ்லாம் பண்டைய காலத்திலேயே பரவிவிட்டது. ஸ்பெயி னில் 800 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றது. 14ஆம் நூற்றாண் டில் உருவான சக்திமிக்க உதுமானிய பேரரசு 20ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வடஆப்பிரிக்க பகுதிகளிலும் ஆட்சி செலுத்தியது.

முதல் உலகப் போருக்குப் பிறகு உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. 1917ல் ரஷ்யாவில் வெடித்த கம்யூனிஸப் புரட்சியின் ஈர்ப்பால் பல பகுதிகள் கம்யூனிச குடையின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டன. அவ்வாறு இணைந்தவைகளில் யூகோஸ்லோவியா போன்ற பல நாடு களைச் சார்ந்த முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட பிராந்தியங்கள் உண்டு. போஸ்னியா ஹெர்ஸகோவினா, கொசோவோ போன்ற பகுதிகளும் அடக்கம். அவற்றிற்கு நீண்டகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்டதோடு அடக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்டன.

போஸ்னியா 90களில் விடுதலைப் பெற்றது. கொசோவோ கடந்த மாதம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகினாலும் கொசோவோவுக்கு எதிர்ப்பும் பல வழிகளில் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொசோவோ சுதந்திரத் திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவை எதிர்த்து செர்பியர்கள் பெரும் கலவரத்தில் இறங்கினர். கொசோவோவின் சுதந்திர அறிவிப்பினை எதிர்த்து ஒன்றரை லட்சம் செர்பியர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப் பட்டது வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.

வெறிபிடித்த செர்பிய இளைஞர்கள் அமெரிக்க தூதரகத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல் துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி மற்றும் கனடா நாட்டு தூதரகங் களும் தாக்கப்பட்டன. வன்முறையாளர் களின் வெறியாட்டத்தில் போஸ்னியா, க்ரோஷியா மற்றும் துருக்கி நாட்டு தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டன.

ஐரோப்பிய யூனியன் 2 ஆயிரம் உயர் அதிகாரிகளை கொசோவோவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காவல் துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை யில் பயிற்சியளிப்பார்கள் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

கொசோவோ என்ற புதிய நாட்டின் உதயம் உலக அளவில் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவும், செர்பியா வும் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. நமது அண்டை நாடான இலங்கை கூட தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள
ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமெரிக்கா!



அமெரிக்காவின் பார்வை தற்போது ஆப்பிரிக்காவை நோக்கித் திருப்பி யுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்கவும், இழந்த பெருமிதத்தை மீட்கவும் அமெ ரிக்கா இந்த நிலைபாட்டை மேற்கொண் டுள்ளதாக கருத்துக்கள் உலாவருகின்றன.

புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் ஐந்து நாடுகளில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை குறிப்பிடும் அரசியல் ஆய்வாளர்கள், 2015ஆம் ஆண்டு 25 சதவீத பெட்ரோல் பற்றாக்குறையை சந்திக்க இருப்பதால் தனது எண்ணெய் வல்லாண்மையை நிலைநிறுத்த அமெ ரிக்கா முயற்சி செய்வதாக வெளியுறவுக் கொள்கைகளை ஆய்வு செய்துவரும் எமிராவுட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்கா, எண்ணெய் வளம் பெற்றுள்ளது. பின்னர் ராணுவ வலிமையைப் பெருக்க முயற்சி செய்கிறது. அதோடு இனி ஆப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே சீர்குலையும் என்றும் எமிராவுட்ஸ் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனா அதிக நட்புறவு பேணி வருகிறது. எண்ணெய் வர்த்தகம், உலோகங்கள் மற்றும் பல்வேறு வர்த்தகத் தொடர்புகளிலும் ஆப்பிரிக்காலி சீனா இடையே ஒத்துழைப்புகள் தொடர் கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தலையீடு ஆப்பிரிக்க பூபாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,800 அமெரிக்கத் துருப்புகள் தற்போது ஜிபோதியில் நிலைகொண்டுள்ளது.

சூடானின் தார்ஃபரில் ஆப்பிரிக்க யூனியனின் கண்காணிப்புப் படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா நெடுநாளாகவே காத்திருக்கிறது. சோமாலியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற எத்தியோப்பிய துருப்புகள் தாக்குதலைத் தொடர்கின்றன. எகிப்து அமெரிக்காவின் முக்கிய நேச நாடாக திகழ்கிறது. லிபியா அடக்கி வாசிக்கிறது. இந்நிலையில் புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்கா தனது அதிகார எல்லையை விரிவாக்குவதற்காக தனது ராணுவ மேலாண்மையை நிலைநிறுத்த முயல்வதாகவும் கருத்துக்கள் புறப்படத் துவங்கியுள்ளன.

Web Counter Code