இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, March 23, 2010

zahid azmi murder news article from abusalih


ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை:
பலனடைந்த காவல்துறையும்&உளவுத்துறையும்!

தெஹல்கா பொறுப்பாசிரியர் அஜீத்சாகி குமுறல்!


சமீபத்தில் மும்பையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஷஹீத் ஆஸ்மி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தெகல்கா புலனாய்வு இதழின் அஜீத்சாகி.

ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது.

ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.

ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார்.

2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.

கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.

சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.

இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.

கடந்த டிசம்பர் 11&ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி.

நான் அவரை ஜுலை 2008&ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.

இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.

மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.

(MCOCA) சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).

மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&ல் மாறியது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.

ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார்.

ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.




1994&ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.

2001&ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.

மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர்.

அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.

நான் தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது.

அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.

நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான்.

இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.) அவர், அஜீத் சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.

நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

Web Counter Code