கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா விருது
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு வழங்குவதாக அறிவிப்பதே பொருத்த மான தெரிவாக இருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கடின உழைப்பாலும், தேர்ந்த கல்வியறி வாலும் எளிமைப் பண்புகளாலும் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என்று கோரு கிறோம்.
இந்தியத் திருநாட்டில் வாழும் கோடான கோடி தலித் மக்கள், மற்றும் தலித் மக்களின் நலன் நாடும் சமூக உரிமை இயக்கங்களின் விருப்பமும் வேண்டுகோளும் இதுவே ஆகும்.
நாட்டு மக்களை சமய ரீதியாக பிளவு படுத்தும் பின்னணி கொண்டவர் அல்ல மறைந்த நம் கே.ஆர்.நாராயணன் 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படு கொலையைக் கண்டு மனம் பொறுக்காத கே.ஆர். நாராயணன் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக ராணுவத்தை ஏன் அனுப்ப வில்லை என நியாயம் கேட்டவர் என்பதை இந்த நாடு மறக்கவில்லை. தன் பதவிக்கு பெருமை சேர்த்த பெருமக னான கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்.
Friday, January 18, 2008
Subscribe to:
Posts (Atom)