இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, November 6, 2007

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா செய்தி ஏடு கிழித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகள்லிகுடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையில் முதலமைச்சர் நரேந்திரமோடி அன்றைய உள்துறை அமைச்சர் கோர்தன் ஜடாஃபியா, அன்றைய அகமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்யவும், அவர்களது சொத்துக்களை அழிக்கவும் திட்டமிட்டு சதி செய்ததை தெஹல்கா புலனாய்வு குழு சந்தேகமின்றி நிரூபித்துள்ளது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களது மொத்த நிர்வாகமும் இந்த இனப் படுகொலைகளுக்காக திட்டமிட்டது மட்டு மின்றி அவர்களை அழித்தது மட்டுமின்றி கொலை யாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் அனைவருக்கும் பத்திரமாக மறைந்து வாழ்வதற்கும் உறுதி அளித்துள்ள னர்.
மதசார்பற்ற கொள்கையின் அடிப்படை அம்சங் கள் கூட மீறப்பட்டன. மக்களின் வாழ்வு, சுதந்திரம், கண்ணியம் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அரசியல் சாசன பொறுப் புணர்வை துறந்தது மோடி அரசு. நீதித்துறையின் முழு இயக்கமும் கோத்ரா விஷயத்தில் கேள்விக் குறியாக்கப் பட்டது.
2002 குஜராத் இனப்படுகொலையின் போது மொத்த மாநில நிர்வாகம் எவ்வாறு ஈடுபட்டது என்பது குறித்தும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் தெஹல்கா ஒளிப்பதிவு கோர்வைகளாக வெளி வந்துள்ளன.
அதில் 'குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவின் வாக்குமூலத்தில் முஸ்லிம் இனப்படு கொலை நாள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிநாளாக கொண்டாடப் படவேண்டும் என்றும் ஒவ்வொரு நீதிபதியும் தன்னை தங்களது சேம்பருக்கே அழைத்து எனக்கு முழு அபிமானத்தையம் ஆதரவையும் தெரிவித்ததோடு, முழு ஒத்துழைப்பையும் தேவையான நேரத்தில் தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக் கிறார்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர் மதவெறிக் கொப்பளிக்க தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னை சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்காக நரேந்திரமோடி எனக்காக மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என பாபு பஜ்ரங்கி என்பவர் தெரிவித்துள்ள ஒப்புதலையும், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மோடி தங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கியதாகவும் நீங்கள் எந்த வன்முறை வேண்டுமானாலும் செய்து கொள்ள லாம் என்று அனுமதி அளித்ததையும் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
நரேந்திரமோடியை உடனடியாக பதவி நீக்கம் செய்து குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.ய் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். நடப்பு காலகட்டத்தில் குஜராத்தில் தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டு பாரதீய ஜனதாவின் அரசியல் கட்சி ரத்து அங்கீகாரத்தை செய்ய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெஹல்கா பதிவுகளில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்க வேண்டும், தெஹல்கா ஒளிப்பதிவு ஆதாரங்களில், குற்றவாளிகள் தாங்கள் இத்தகைய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் என்று பெருமையுடன் அறிவித்தார்கள். கொள்ளையடித்த திலும், குண்டுகள் உற்பத்தி செய்ததையும், ராக்கெட்டுகள் உற்பத்தி செய்ததையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியதன் அடிப்படையில் உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை அமைக்கப் பட வேண்டும்.
நான்டெடில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பெரிய அளவில் சங் பரிவார் சக்திகள் வெடிகுண்டுகள் தயாரித்து பிரத்தியேக பயிற்சி எடுத்து அப்பாவிகளைக் கொன்றதை தெஹல்கா ஒளிப்படப் பதிவுகள் உறுதி படுத்தியுள்ளன. எனவே நாட்டில் நடைபெற்றுவந்துள்ள சங்பரிவார் சதிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் இப்போதே

Web Counter Code