இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் அரசியல் அபாயம்! ஓர் எக்ஸ்ரே ரிப்போர்ட்
-சத்தியவேந்தன்



கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க முடியா விட்டாலும் கூட பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் சென்ற பாஜக சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. (இதற்கி டையில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளிவந்து ஜனநாயகக் கேலிக்கூத்தும் நடந்தது). வழக்கமான தேர்தல் முடிவுகளைப் போல கர்நாடக தேர்தலை எடுத்துக் கொள்ள முடியாது என அரசியல் பார்வை யாளர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

மதவாத சக்தியை முறியடிப்போம் என காங்கிரஸும் மதவாத, சக்திகளை நாங்கள் தன் முறியடிப்போம் என மதசார்பற்ற(!) ஜனதாதளமும் பெருங்குர லெடுத்துக் கூவின. ஏற்கனவே சந்தர்ப்ப வாத தேவேகவுடாக் கட்சியினால் மனம் வெறுத்துப்போன கர்நாடக மக்களுக்கு, தேவே கவுடாக் கட்சியினரின் கூச்சல் எரிச்சலைத் தந்தது. எவ்வாறெனில் தேவேகவுடாக் குடும்பத்தின் மீதான வெறுப்பு பாஜகவின் எடியூரப்பா மீது அனுதாபம் காட்டும் அளவுக்குச் சென்றது ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் மதச்சார் பற்ற(?) ஜனதா தளத்திற்கும் தான் போட்டி என்பதைப் போல மாநில மெங்கும் பிரச்சாரம் தூள்பறத்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளத்தின் மீதான கோபம் பாஜகவுக்கு வாகாய் அமைந்தது. வாகையாய் வாய்த்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளம் கடந்த தேர்தலில் பெற்ற பல தொகுதிகளை பாஜகவுக்கு கர்நாடக மக்கள் தாரை வார்த்துக் கொடுத்தனர்.

விளைவு முன்பைவிட பாரதிய ஜனதா 31 இடங்களை அதிகம் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சுயேட்சை கும்பலின் எண்ணிக்கையும் 16 குறைந்தது. கடந்த தேர்தலில் 58 இடங்களைப் பெற்ற தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனதாதளம் இந்த முறை 30 இடங்களைப் பறிகொடுத்து வெறும் 28 இடங்களை மட்டுமே பிடித்தது. முந்தையத் தேர்தலைப் போலவே பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் மூன்றாவதாக மதசார்பற்ற(?) ஜனதாதளமும் இடம் பிடித்துள்ளது. பெரிதும் பரிதாபத்துக்குரிய கட்சியாக தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனததளம் மாறியிருக்கிறது. ஆனாலும் பாஜகவுக்கு வெற்றியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டி சாதனை (!)யில் காங்கிரஸும் இடம்பெற்றுக் கொள்கிறது.

காங்கிரஸின் அசட்டுத்துணிச்சலே அக்கட்சிக்கு வினையான முடிந்திருக் கிறது. பாஜக எடியூரப்பாவை முன்நிறுத்தி யது. முதல்வர் வேட்பாளர் இவர்தான் என்று பகிரங்கமாக அறிவித்தது. காங்கிரஸில் மூலைக்கு மூன்று நான்கு பேர் நாங்கள் தான் முதல்வர், நான் தான் அடுத்த முதல்வர் என எண்ணிக் கொண்டே வலம் வந்தார்கள்.

காங்கிரஸின் அரசியல் சாணக்கிய ரான முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா நான் முதல்வர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என அறிவித்தார். காங்கிரஸ் இவரை மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்து தேர்தலுக்காக அழைத்து வந்தும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு கூறியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகளுக்கிடையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா வலம் வந்தார்.

முதன்முறையாக பா.ஜ.க. தென்னிந்தியாவில் காலூன்றிவிட்டது என பல பத்திரிக்கைகள் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது என தம்பட்டம் அடிக்கும் ஊடகங்களில் போக்கு வினோதமாக உள்ளது. பா.ஜ.க.வின் வெற்றிக்கு தொகுதி மறுசீரமைப்பும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்புற சாதி சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகள் பல தொகுதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு உள்ளன. இது பாஜகவுக்கு சாதகமான அம்சம் என்றும், நாட்டுக்கு பாதகமான அம்சம் என்றும் அரசியல் ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் ஊசி நுழையாத இடத்தில் கூட பாஜக நுழையும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது. மதசார்பற்ற சக்திகள் குறிப்பாக காங்கிரஸ் விழித்துக் கொள்ளாவிட்டால் அபாயம் அருகில் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நல்ல வேளையாக தேசிய அளவில் பாஜக நொண்டிக் குதிரையாகவே இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பாஜக என்ற நொண்டிக் குதிரையால் துள்ளிக்குதிக்க முடியாது.
ஆனால் காங்கிரஸ் போன்ற மதசார் பற்ற சக்திகள் பாஜகவை சண்டிக் குதிரையாக மாற்றமலிருந்தால் போதும் ஏனெனில் கடப்பாறை கும்பல்கள் தங்களின் எதிர்கால வெற்றிக்கு காங்கிர ஸையே மலைபோல நம்பிக் கொண்டுள்ளன.

அது காங்கிரஸுக்கு தெரிய வேண்டுமே
கர்நாடகத்தில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கüல் ஏழு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். ஒருவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரோஸ் நூருத்தீன் சேட் பெல்காம் தொகுதி யிலிருந்தும், கமருல் இஸ்லாம் குல்பெர்கா தொகுதியிலிருந்தும், சைய்யது யாசின் ரய்சூர் தொகுதியிலிருந்தும், ரோஷன் பெய்க் பெங்களூர் சிவாஜி நகர் தொகுதியிலிருந்தும், என்.ஏ.ஹாரிஸ் பெங்களூர் சாந்தி நகர் தொகுதியிலிருந்தும், யு.ஏ. காதர் மங்களூர் தொகுதியிலிருந்தும், தன்வீர் சேட் நரசிம்மராஜா தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜமீர் அஹமது கான் சாம்ராஜ் பேட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

வெற்றி பெற்ற 8 முஸ்லிம் வேட்பா ளர்கüல் தன்வீர் சேட் மற்றும் ரோசன் பேக் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட 14 முஸ்லிம் வேட்பா ளர்கüல் 7 பேர் வெற்றிப் பெற்றுள் ளார்கள். மதசார்பற்ற ஜனதாத் தளத்தில் 12 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றிப் பெற்றார். ஐக்கிய ஜனதாத் தளத்தின் சார்பாக இருவர் போட்டியிட்டு இருவரும் தோல்வி அடைந்தார்கள்.

1985 முதல் கர்நாடகச் சட்ட மன்றத்தில் சராசரியாக 5 முதல் 7 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள். 1985 தேர்தலில் 5 முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள், இவர்கüல் மூவர் காங்கிரசை சேர்ந்தவர்கள் இருவர் ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1989 தேர்தலில் 7 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர். 1994 தேர்தலிலும் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 3 பேர் ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர் பி.எஸ்,பி, காங்கிரஸ் மற்றும் இந்திய தேசீய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், 1999 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை அடித்தது. 13 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கüல் 12 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். 2004ல் நடைபெற்ற தேர்தலில் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 4 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவர் மதசார்பற்ற ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடகத்தில் மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தினர் முஸ்லிம்களா வார்கள். 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கை ஒரு போதும் அடையவில்லை.

2008 சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகüல் 28 முஸ்லிம் வேட்பா ளர்கள் போட்டியிட்டார்கள். காங்கிரஸ் சார்பாக 14 வேட்பாளர்களும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக 12 வேட்பாளர் களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 2 வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.

கர்நாடக முஸ்லிம் முத்தஹிதா தெஹ்ரிக் (கே.எம்.எம்.டி.) இந்தத் தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பிரச்சாரம் செய்தது. வேட்பாளர் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் காங்கிரஸ் இன்னும் அதிகமான தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கும் என்று கே.எம்.எம்.டி. தலைவர் முக்தார் அஹ்மது நம்மிடம் தெரிவித்தார்
நாடாளுமன்றத்தில்; தென்காசி குண்டு வெடிப்பு சதி விவகாரம்
அவமானத்தில் சுருண்டு போன பாஜகவினர்
-தமிழ் மாறன்



அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் சமாதானச் சோலையாக விளங்கிய தென்காசியில் ஹிந்து முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்ணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி தென்காசியை அமளிக்காடாக்கினர்.

உச்சகட்டமாக குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி பழியினை அப்பாவி முஸலி்ம் இளைஞர்களின் மீது போட்டு சந்தடியில்லாமல் முஸலி்ம்களை சாய்ந்து விட முயன்றனர்.

தமிழக காவல்துறையின் நடுநிலையான அணுகுமுறையினால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதன் பிண்ணயில் இருந்த பயங்கரசதி அம்பலமானது.

இந்து முண்ணனி பிரமுகர் குமார பாண்டியன் கொலை செய்யப்பட்ட பின்பும் இந்துக்களிடையே எந்த கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. எனவே இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவே தென்காசியில் இரண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம் என கொலையுண்ட குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ள குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.

இந்தக் குற்றவாளிகள் அனைவரும் சங்பரிவாரின் முக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சங்பரிவாரின் நயவஞ்சக நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் மூழ்கியது.

கொதிப்படைந்த சமூகநல ஆர்வலர்கள் சதிகளின் பிண்ணனி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.

தென்காசியில் சங்பரிவாரின் சதிவலைகள் சமூக நல்ணக்கத்திற்கு வேட்டுவைப்பதை அறிந்து வேதனையடைந்த தமுமுக, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் வெடித்த பைப் வெடிகுண்டைப் போலவே தென்காசியில் வெடித்த இரண்டு குண்டு வெடிப்புகளும் உள்ளதால் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவார். எனவே நாடெங்கிலும் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த துல்யமான விசாரணைகள் தேவை என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் கருத்து தெரிவித்திருந்தார் இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் தென்காசியில் வெடித்த சங்பரிவார்குண்டு' குறித்த விவாகாரம் வெடித்தது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தாங்களே தங்கள் அலுவலகத்தின் முன்பு குண்டு வைத்து விட்டு முஸலி்ம்கள் மீது பழியை போட்ட இழி செயலைப் போன்று நாடு முழுவதும் நடைபெற்ற சம்பவங்களை ஒருங்கிணைத்து மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்புப் பிரிவு மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் முன்வருமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிருந்தா காரத் வினா எழுப்பினார். அவர் தனது விரிவான உரையில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் மற்றும் பேருந்துநிலையத்திலும் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்திலும் மிகவும் கேடு கெட்ட முறையில் நடைபெற்ற சதி குறித்து உண்மைகளை வெளிக் கொணர்ந்த தமிழ்நாடு காவல்துறையினர் பாராட்டப்படவேண்டியவர்கள். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதை நாடு அறியும். ஆனால் காவல்துறையின் புத்திசாத்தனமாக விசாரணை மூலமாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய இந்து முண்ணனியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அப்பகுதியில் மதப்பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதிவேலையின் நடவடிக்கையே இந்த சம்பவம் என்பது காவல்துறையினரின் புலனாய்வில் புலப்பட்டிருக்கிறது.

மதவெறி தீ மூட்டி விடப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பாஜகவில் இருக்கக்கூடிய நபர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைப்படாத அந்த நபர்கள் இச்சம்பவத்தில் முழுமையாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பிருந்தா காரத் பேசியதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் தென்காசி சங்பரிவார் குண்டு வெடிப்பு' குறித்த முழு விவரங்களையும் அவையில் தெரிவித்தார். சம்பவத்தின் பிண்ணனி எந்தவிதமான நோக்கம் இருந்திருக்கக்கூடும் என அவையே தீர்மானிக்கப்பட்டும் என்று கூறிய சிவராஜ் பாட்டில் சங்பரிவார் சதிகளை விலாவாரியாக விவரித்தார். பின்னர் இது இந்து முஸ்லிம்களும் இந்த சதிக்கு இலக்காவில்லை என்பதை தெரிவித்த சிவராஜ் பாட்டில் தமிழக சம்பவம் தற்போது புலனாய்வில் இருந்து வருகிறது என்று கூறிவுடன் மீண்டும் துணைக் கேள்வி எழுப்பிய பிருந்தா காரத் எம்.பி., இதைப் போன்ற ஒரு குண்டு வெடிப்பு தான் மகராஷ்ட்ர மாநிலம் நான்டெடில் நடந்தது. இதில் மத்திய என்ன நடவடிக்கை எடுத்தது என அறிய விரும்வதாக தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ் பாட்டில் 2006 ஏப்ரல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பஜ்ரங் தள்ளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை மகராஷ்ட்ரா மாநில காவல்துறையினர் கண்டறிந்தனர். காவல்துறையினர் விசாரணையில் ஆட்சேபணைகள் எழுந்ததால் பின்னர் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும், அதற்கும் ஆட்சேபனை எழுந்ததால் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணையில் தற்போது நான்டெட் குண்டு வழக்கு நடைபெற்று வருகிறது. உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் இருந்தால் மத்திய புலனாய்வுத்துறையின் கீழ் விசாரணை செய்யப்படும் என சிவராஜ் பாட்டில் உறுதி அளித்தார்.

இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்மையாக இருக்கிறது என சிவராஜ் பாட்டில் சங்பரிவாரின் சதிகுறித்து கூறும் போது பாஜகவினரின் முகங்களில் ஈயாடவில்லை
ஜெய்ப்பூர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்

-ஹபிபா பாலன்


ராஜஸ்தான் தலைநகரும் இந்தியா வின் முன்னணி சுற்றுலா நகரமுமான ஜெய்ப் பூரில் சென்றவாரம் நிகழ்ந்த குண்டு வெடிப் பில் 80 பேர் பலியாகியுள்ளனர். 2005க் குப் பிறகு பயங்கர வாத தாக்குதல் அச் சுறுத்தல் உள்ள பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளி யில் நடைபெற்ற 10வது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். வழக்கம் போல் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் வலம் வரத்துவங்கியுள்ளன.

என்னதான் உத்தரவாதங்களை வழங்கினாலும் இந்தியா படிப்படியாக பாதுகாப்பற்ற நாடாக மாறிவருவதாக ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இயக்கங்களுக்குத் தொடர்பு என குற்றம்சாட்டப்படுவதும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி உள்ளூர் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் அடுத்தடுத்து நிகழும் காட்சிகளாக இருக்கும் என உலகின் எந்த மூலையிலிருந்தும் நாம் கூறலாம். ஜெய்ப்பூரிலும் இதேநிலை தொடருகிறது. வழிபாட்டுத்தலம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் கொலை பாதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த எந்த குண்டு வெடிப்பிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவர வில்லை என்பது அதிரவைக்கும் உண்மையாகும்.

அதைவிட தவறாக இந்த வழக்கு களில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி களின் கதி என்ன? என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை என்பது சோகமான ஒன்றாகும். குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சமூக இளைஞர்களை குறிவைத்து வளைக்கப் படுவதும், பெரும்பாலான ஊடகங்கள் ஊகங்களை செய்தியாக வெளியிடுவதும், பிரதான எதிர்க்கட்சி பொடாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பட்டிமன்றம் வைப்பதும் தொடருகிறது. பாவம் அப்பாவிகளின் அவல நிலை. தீரும் வழியைத்தான் காணோம்.

2006 செப்டம்பர் மாதம் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர் களும் நறுமணம் பூசி மகிழ்ச்சியோடு சென்றனர் அதில் 56 பேர் மீண்டும் திரும்பவேயில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு துயர நிகழ்வாக அமைந்தது. 2007ல் மே மாதம் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், ராஜஸ்தானில் அஜ்மீர் தர்ஹாவுக்கு அருகில் நோன்பு துறந்து கொண்டிருந்தவர்களின் மத்தியில் வெடித்த குண்டுகளும் பல அப்பாவிகளின் உயிரைக் குடித்தது.

கடந்த மூன்றாண்டுகளில் ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள், இரண்டு கோயில்கள் பயங்கரவாதிகளின் பாதகச் செயலுக்கு இலக்காயின. அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆர்.டி.எக்ஸ் போன்ற பொருட்கள் பயன்பட்டதாக விசாரணைக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். அம்மோ னியம் நைட்ரேட் உள்ளூர் கயவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கள் ராணுவத்தோடு தொடர் புடையவர்கள் அல்லது சர்வதேச தொடர்புடை யவர் களுக்கு மட்டும் பெறமுடியும் என சொல்லப்படுகிறது.

வெடிபொருட்களை சாதாரண பையில் வைத்து முஸ்லிம்கள் அதிகம் கூடும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமையும் ஹிந்துக்கள் அதிகமாக கூடும் செவ்வாய்கிழமைகளில் கோயில் களிலும் வைத்துவிடுகிறார்கள். அப்போது தான் இறப்பும் இழப்பும் அதிகமாக இருக்கும் என்பது சதிகாரர்களின் திட்டம். ஆனால் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் குறித்து இதுவரை துல்லியமான புலனாய் வுகள் வெளிப்படவில்லை. முஸ்லிம் களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வது திட்டமிட்ட சதி என மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு 2006 ஏப்ரலில் மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெடில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. அதில் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சில மாதங்கள் கழித்து தான் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பலியானவர்களின் உடல்களுக்கு நடுவே ஒட்டுத்தாடியுடன் கூடிய அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைப்பார்த்ததாக உள்ளூர்வாசி கூறினார். முஸ்லிம் போல் வேடமிட்டு சதிகாரன் ஒருவன் இந்த சதிச் செயலை செய்ததாக நடுநிலையாளர் கள் கூறியதை விசாரணைப்படையினர் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் படுகாயமடைந்தனர். உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. உல்ஃபா அதனை வன்மையாக மறுத்தது. அத்தோடு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் மீது உல்ஃபா குற்றம்சாட்டியுள்ளது அவ்வாறே மத்தியப்பிரதேசத்தில் வெடிகுண்டுகள் தயாரித்த சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனைப்படுகிறார் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பில் சதிச்செயலில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை தமிழகக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய அளவில் பிரத்தியேக உளவுப்படை அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்
வேலியில் போகும் ஓணானை..

.ரக்சன்




அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பலத்த சர்ச்சைகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில் சர்ச்சைகளில் அடிபடாத முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்திய ஏவுகணை தொழில் நுட்பத் தின் முன்னோடி என்றும் அணு ஆயுத தொழில் நுட்பத்தின் பிதாமகன் என்றும் போற்றப்படும் கலாம் இத்தகைய கருத்தினை உதிர்த்திருக்க வேண்டாம் என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

நாட்டில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையங்கள் யுரேனியம் எரிபொருள் களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. இந்த எரிபொருள் இந்தியாவில் அதிக அளவு கிடைப்பது இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக, தோரியம் எரிபொருள் நிறையக் கிடைக்கிறது.

இதனை அணு உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ள சுமார் பத்து வருடங்கள் ஆகலாம். எனவே யுரேனியம் எரிபொருளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார்.
இதையே ஒரே பிடியாக பிடித்துக் கொண்ட அமெரிக்காவின் நேசாபிமானி பிரதமர் மன்மோகன் சிங் அறிவார்ந்த விஞ்ஞானிகள் சொல்வதை நாட்டு மக்கள் ஏற்பார்கள் என பாய்ந்து விழுந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

எதற்காக ஒப்பந்தம் என்பதைவிட யாருக்காக ஒப்பந்தம்,,,, என்பதே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் மின்சாரத் தேவையை நிறைவேற்ற அணுமின் நிலையத்தை தாராப்பூரில் அமைத்தபோது எரிபொருள் தருவதாகக் கூறிய அமெரிக்கா அப்பட்டமாக ஏமாற்றியது. அமெரிக்காவின் அத்தகைய மனப் பான்மை இன்றும் மாறவில்லை என்பதே விவரமறிந்தவர்களின் கருத்தாக இருக் கிறது. இந்நிலையில் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சலாம் போடுவது எதற்காக?

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் 'ஹைடு' ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக பேசாமல் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பேசி பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

சொன்னது அப்துல் கலாமாகவே இருந்தாலும் கூட அது புறக்கணிக்கப்படக் கூடிய கருத்தே.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாதின் இந்திய வருகை குறித்து அமெரிக்கா என்ன சொன்னது? எவ்வாறு ஆணவமாக உத்தரவிட்டது. ஈரான் அதிபரோடு அணுசக்தி விஷயம் பற்றி பேச வேண்டாம் என உத்தரவிட வில்லையா? உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர எத்தனிக்கும் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கண்ணை மூடி ஆதரிக்கும் கலாம்களும் மன்மோகன் சிங்குகளும் அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தை மூடி மறைத்து என்ன தான் ஆதரவு கானங்கள் பாடினாலும் இந்திய மக்களிடம் அது எடுபடாது என்பது உறுதி

Web Counter Code