இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

ஜெய்ப்பூர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்

-ஹபிபா பாலன்


ராஜஸ்தான் தலைநகரும் இந்தியா வின் முன்னணி சுற்றுலா நகரமுமான ஜெய்ப் பூரில் சென்றவாரம் நிகழ்ந்த குண்டு வெடிப் பில் 80 பேர் பலியாகியுள்ளனர். 2005க் குப் பிறகு பயங்கர வாத தாக்குதல் அச் சுறுத்தல் உள்ள பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளி யில் நடைபெற்ற 10வது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். வழக்கம் போல் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் வலம் வரத்துவங்கியுள்ளன.

என்னதான் உத்தரவாதங்களை வழங்கினாலும் இந்தியா படிப்படியாக பாதுகாப்பற்ற நாடாக மாறிவருவதாக ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இயக்கங்களுக்குத் தொடர்பு என குற்றம்சாட்டப்படுவதும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி உள்ளூர் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் அடுத்தடுத்து நிகழும் காட்சிகளாக இருக்கும் என உலகின் எந்த மூலையிலிருந்தும் நாம் கூறலாம். ஜெய்ப்பூரிலும் இதேநிலை தொடருகிறது. வழிபாட்டுத்தலம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் கொலை பாதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த எந்த குண்டு வெடிப்பிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவர வில்லை என்பது அதிரவைக்கும் உண்மையாகும்.

அதைவிட தவறாக இந்த வழக்கு களில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி களின் கதி என்ன? என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை என்பது சோகமான ஒன்றாகும். குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சமூக இளைஞர்களை குறிவைத்து வளைக்கப் படுவதும், பெரும்பாலான ஊடகங்கள் ஊகங்களை செய்தியாக வெளியிடுவதும், பிரதான எதிர்க்கட்சி பொடாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பட்டிமன்றம் வைப்பதும் தொடருகிறது. பாவம் அப்பாவிகளின் அவல நிலை. தீரும் வழியைத்தான் காணோம்.

2006 செப்டம்பர் மாதம் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர் களும் நறுமணம் பூசி மகிழ்ச்சியோடு சென்றனர் அதில் 56 பேர் மீண்டும் திரும்பவேயில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு துயர நிகழ்வாக அமைந்தது. 2007ல் மே மாதம் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், ராஜஸ்தானில் அஜ்மீர் தர்ஹாவுக்கு அருகில் நோன்பு துறந்து கொண்டிருந்தவர்களின் மத்தியில் வெடித்த குண்டுகளும் பல அப்பாவிகளின் உயிரைக் குடித்தது.

கடந்த மூன்றாண்டுகளில் ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள், இரண்டு கோயில்கள் பயங்கரவாதிகளின் பாதகச் செயலுக்கு இலக்காயின. அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆர்.டி.எக்ஸ் போன்ற பொருட்கள் பயன்பட்டதாக விசாரணைக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். அம்மோ னியம் நைட்ரேட் உள்ளூர் கயவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கள் ராணுவத்தோடு தொடர் புடையவர்கள் அல்லது சர்வதேச தொடர்புடை யவர் களுக்கு மட்டும் பெறமுடியும் என சொல்லப்படுகிறது.

வெடிபொருட்களை சாதாரண பையில் வைத்து முஸ்லிம்கள் அதிகம் கூடும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமையும் ஹிந்துக்கள் அதிகமாக கூடும் செவ்வாய்கிழமைகளில் கோயில் களிலும் வைத்துவிடுகிறார்கள். அப்போது தான் இறப்பும் இழப்பும் அதிகமாக இருக்கும் என்பது சதிகாரர்களின் திட்டம். ஆனால் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் குறித்து இதுவரை துல்லியமான புலனாய் வுகள் வெளிப்படவில்லை. முஸ்லிம் களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வது திட்டமிட்ட சதி என மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு 2006 ஏப்ரலில் மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெடில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. அதில் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சில மாதங்கள் கழித்து தான் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பலியானவர்களின் உடல்களுக்கு நடுவே ஒட்டுத்தாடியுடன் கூடிய அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைப்பார்த்ததாக உள்ளூர்வாசி கூறினார். முஸ்லிம் போல் வேடமிட்டு சதிகாரன் ஒருவன் இந்த சதிச் செயலை செய்ததாக நடுநிலையாளர் கள் கூறியதை விசாரணைப்படையினர் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் படுகாயமடைந்தனர். உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. உல்ஃபா அதனை வன்மையாக மறுத்தது. அத்தோடு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் மீது உல்ஃபா குற்றம்சாட்டியுள்ளது அவ்வாறே மத்தியப்பிரதேசத்தில் வெடிகுண்டுகள் தயாரித்த சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனைப்படுகிறார் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பில் சதிச்செயலில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை தமிழகக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய அளவில் பிரத்தியேக உளவுப்படை அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்

No comments:

Web Counter Code