இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, February 3, 2009

ஜார்ஜ் புஷ்ஷுக்கு அமெரிக்காவிலும் ஷூ மரியாதை?



அமெரிக்க அதிபராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கிடைத்த கடைசி வழியனுப்பு மரியாதை உலகெங்கும் பரபரப்பை தோற்றுவித்தது.

இந்நிலையில் அவர் வெள்ளை மாளிகையி­ருந்து வெளியேறு வதற்கு முன்னதாக அவரது அலுவலக அறைவாசலில் பழைய செருப்புகள் வீசப்பட்ட தகவலை அமெரிக்க ஊடகங்கள் சுவாரஸ்ய மாக குறிப்பிட்டுள்ளன.

போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 500 பேர் வெள்ளை மாளிகையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் 50 ஜோடி செருப்புகள் மட்டுமே வீசப்பட்டதாக வாஷிங்டன் பீஸ் சென்டரின் அமைப்பாளர் ஜமில்லா எல் ஷஃபி கவலை தெரிவித்திருந்தார்.

நியூயார்க் டைம்ஸ் சிபிஎஸ் நியூஸ் எடுத்த சர்வேயின்படி 73 சதவீத மக்கள் புஷ்ஷை ஒரு நல்ல அதிபராக மட்டு மின்றி ஒரு மனிதராகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் மீது காலனி ஆதிக்கத்தை நடத்திய புஷ்ஷின் மீது காலணி மரியாதை நடத்திய ஷூ வீரன் முன்ததர் அல்ஜைதிக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் முன்ததர் அல் ஜைதியின் நிலைமை என்னவென்பது குறித்து சர்வதேச மனித உரிமை ஆர்வலரும் சட்டவல்லுநரு மான மவுரோ போகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக ஈராக்கின் பொம்மை அரசிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் சுவிட்சர்லாந்தில் அவருக்கு அரசியல் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாகவும் மவுரோ தெரிவித்திருக்கிறார்
மதரஸா மாணவிகளுக்கு இலவச சைக்கிள்! மாநில அரசு அறிவிப்பு!!



-அன்சா தஸ்னீம்

மதரஸாக்கள் மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வெளிச் சத்தை வழங்கி வருகின்றன. அத்தோடு உலகக் கல்வியிலும் மதரஸாக்களின் பங்கு மகத்தான ஒன்றாக விளங்கி வருகிறது.

மதரஸாக்கள் அனைத்து சமூக மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கி சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்­ம் மாணவர்களை விட அதிகமாக ஹிந்து சமய மாணவ. மாணவிகள் மதரஸாக்களில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பது அண்மையில் நாம் ஊடகங்களில் பார்த்த செய்தியாகும்.


இந்நிலையில் பீகார்மாநில மதரஸாக் களில் மேல்நிலைக் கல்வியை கற்று வரும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிட பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.


பீகார் மாநில அரசு 1,119 மதரஸாக் கல்விக் கூடங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி 4000 மதரஸாக் கல்விக் கூடங்களின் (அரபிக் கல்லூரிகள் உட்பட) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளையும் பீகார் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. (தமிழக அரசு கவனிக்க)

2,359 மதரஸாக்கள் அரசு உதவி யின்றி நடைபெறுகின்றன.

576 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவியின்றி நடைபெறும் கல்வி நிறுவனங்களாகும்.

32 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவி பெறும் கல்விக் கூடங்களாகும். இந்தக் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் 4000 மாணவிகள் மாநில அரசின் அறிவிப்பின் மூலம் இலவச சைக்கிள் பெறுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மதரஸா மாணவிகளின் பட்டியல்களை தயார் செய்து வருகின்றனர். இத்தகவலை மதரஸா வாரிய சேர்மன் இஜாஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்
மோடிக்கு சிபாரிசு

அம்பானி, மிட்டல், டாடாவுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்!



சர்ஜுன்

இனப்படுகொலையின் சூத்திரதாரி நரேந்திர மோடி பிரதமரானால் ரொம்ப நல்ல பிரதமராக விளங்குவார் என உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிவரும் இந்தியாவின் ஏகபோக முதலாளிகளாக வர்ணிக்கப்படும் ரிலையன்ஸ் அம்பானி மற்றும் மிட்டல் வகையறாக்கள் வெளியிட்ட கருத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பலைகள் பெருகி வருகின்றன.


இன சுத்திகரிப்புக்கு மூலகாரணமான மோடியைப் புகழ்ந்து தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என பல்வேறு சமூகநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


உலகளாவிய முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரட்டன் டாடா முதலியவர்கள் மோடிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு தெரிவித்த கருத்துகள் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


இனப்படுகொலையாளரை எதிர்காலப் பிரதமருக்கு தகுதியானவர் என பொருத்தமில்லாமல் புகழ்ந்தது சகித்துக் கொள்ள முடியாதது என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்திருக்கிறார். தொழிலதிபர்கள் கருத்து முழுக்க முழுக்க தவறானது என்றும் நுஸ்ரத் அலி தெரிவித்தார்.


பாசிஸ்டுகளுக்கும் தொழிலதிபர்களுக்குமான இடைவெளி மிகவும் குறுகியதாக இருக்கிறது. பாசிஸவாதிகளும் தொழிலதிபர்களும் இந்தியாவில் மிகவும் நெருங்கி வருகின்றனர், இது நாட்டிற்கு நிச்சயம் ஒரு கெட்ட செய்திதான் என்றும் நுஸ்ரத் அலி தெரிவித்தார். அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ஹனுஹழு நிறுவனங்கள், சுனில் மிட்டலை சேர்மனாகக் கொண்டிருக்கும் பாரத் குரூப் (குறிப்பாக ஏர்டெல் போன்ற மொபைல் சேவைகள்) ரட்டன் டாடாவை தலைவராகக் கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களை பாசிசத்தையும் மதவாதத்தையும் எதிர்க்கும் நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாட்டு மக்கள் அனைவரும் தொழிலதிபர்களின் பொறுப்பற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


நரேந்திர மோடியின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள், அவரது மறுபக்கம் இருள்மயமானது என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த டாக்டர் காசிம் ரசூல் இல்யாஸ் தெரிவித்திருக்கிறார்.


நாட்டு மக்கள் பாசிச சக்திகளிட மிருந்தும், பாசிசத்துக்கு ஆதரவாக புறப்பட்டிருக்கும் தொழிலதிபர்களையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என அகில இந்திய மில்லி கவுன்சிலின் தலைவர் அப்துல் வஹாப் கில்ஜி தெரிவித்தார்.


முஸ்லிம்கள் ரிலையன்ஸ் மொபைல் களையும், பெட்ரோல் தயாரிப்புகளையும் புறக்கணிக்கத் தயாராக வேண்டும் என ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு விளங்கும் மஜ்லிஸ் பச்சாவோ தஹ்ரீக் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ஹைதராபாத்தில் ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்தியது. ஹைதரா பாத் பகுதியின் சைதாபாத்தில் உள்ள உஜ்லெஷா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் அங்கிருந்த ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தை முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முஹம்மத் அம்ஜத்துல் லாஹ்கான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனில் அம்பானியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

மதவெறி, இனப்படுகொலை செய் யும் சக்திகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பணமுதலைகளுக்கு நாடெங் கும் எதிர்ப்பு வலுக்கிறது

Web Counter Code