இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, September 12, 2008

இறைத்தூதரை கேலிச்சித்திரமாக்கிய தினமலர்!


தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு!!

ஹபீபாபாலன்






உலகத்தின் வழிகாட்டி, உத்தமர் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நெறி வசந்தமாய் பூமிப் பந்தெங்கும் பரவி வருகிறது. காற்றை விட வேகமாக, கடலை விட ஆழமாக, ஆகாயத்தை விட விசாலமாக அந்த தூயவரின் வழிகாட்டுதல்கள் எட்டுத் திக்கும் பற்றிப் பரவி வருகிறது. நபிகள் பெருமானை அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யாகப் பெற்றதை தங்களின் பெறற்கரிய பாக்கியமாக எண்ணி உலகின் 140 கோடி முஸ்லிம்கள் பூரித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். உயிரை விட மேலாகக் கருதும் அந்த உத்தமரின் புகழுக்கு துளி அளவு மாசு நேர்ந்தாலும் புழுவென துடித்துப் போவார்கள், புயலென கொதித்து எழுவார்கள், சூரியக் கதர்களாய் சுட்டெரிக்கப் புறப்படுவார்கள்.


அண்ணலாரின் மீது இந்த அவனி யில் வாழும் 140 கோடி முஸ்லிம்கள் காட்டும் அன்பு அத்தகையது.




பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பினைக் குலைக்கும் முயற்சியை எவர் செய்தாலும் அப்போது `யுகப் பிரளயமே’ உருவானதோ என இந்த உலகமே கலங்கும் அளவுக்கு மக்களின் தார்மீக கோபம் இந்த பூமிப் பந்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.


சரித்திரங்கள் சாட்சியம் பகர்கின்றன. இவையெல்லாம் ஒரு சராசரி பொது அறிவு கொண்ட மனிதனுக்குக் கூட தெரியும். ஆனால் தினமலர் என்ற நாளேட்டிற்கு எப்படித் தெரியாமல் போனது? சீண்டிப் பார்க்கும் சின்னப் புத்தி இந்த இதழின் பரம்பரை குணம் என்றாலும் கூட விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விஷய ஞானம் கொண்டவர்கள்(!)தான் தினமலரை நடத்தி வருகிறார்கள் என்பதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.


தமிழகம் திராவிட இயக்க பூமி, பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பது பிரச்சார வியூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. பொட்டில் அடித்தாற்போல், செவுளில் அறைந்தாற் போல் மற்றொரு உண்மையை விழுங்கிக் கொள்ள, உண்மையை விளங்கிக் கொள்ள தமிழகம் மெல்ல மெல்ல தயாராகி வருகிறது.


இந்திய பூபாகத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வருகின்ற ஹிந்துத்துவ பாசிசவாதத்திற்கான மூலப்பொருள், கருப்பொருள், அந்த பாசிசவாதத்தை வேகமாக கொண்டு செல்ல உதவும் எரிபொருள் தமிழகத்திலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?


இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவருக்கும் தலைமைப் பீடமான நாக்பூர் என்றும், அதன் தலைவர் சுதர்சன் என்றும் இந்த நாடு தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவரின் (அஞ்)ஞான குருவாக தமிழகத்தைச் சேர்ந்த குருமூர்த்திதான் விளங்கி வருகிறார் என்பதை கள்ளம் கபடமில்லா தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டார்கள்.


இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப் படுகொலையின் சூத்ரதாரி என வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் வரித்தெடுக்கப்பட்டவர் நரவேட்டை நரேந்திர மோடி. அவரது மூச்சுக்காற்று பட்டால் கூட முழு நாசம் என எண்ணிய இந்த நாடு அவரை சற்று தள்ளியே வைத்தது. பாதகம் இழைக்க அஞ்சாத பாஜக கூட கொடூர மோடியை குஜராத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என தலையில் குட்டி வைத்தது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்து மோடியை ஒரு சர்வதேச `போர்க் குற்றவாளி’ எனும் அளவுக்கு கீழிறக்கி காட்டியது.


இந்தியாவே காறி உமிழ்ந்தால் என்ன? அமெரிக்காவும் பிரிட்டனும் விசா வழங்க மறுத்தால்தான் என்ன? பாஜகவே பக்கத்தில் வராதே என வெருண்டோடினால்தான் என்ன? மூன்றாயிரம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு முழுக் கிரீடம் சூட்ட நாங்கள் தயார் என தமிழகத்திலிருந்து முதல் குரல் எழுந் தது. ஒன்று இரண்டானது, இரண்டு மூன்றானது.


திராவிடத் தாய் என தனது கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனி விமானத்தில் பறந்து சென்றார். பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ஹிந்துத்துவ பாசிசத்தின் அகில இந்திய பிரச்சார பீரங்கி, சிரிப்பு நடிகர் `சோ’ ராமசாமி தனது பத்திரிக் கையின் விழாவுக்கு அழைத்தார். மோடியின் ஆட்சியை பொற்கால ஆட்சி என விமர்சித்து சிறப்பு இதழ் வெளி யிட்டது கல்கி வார ஏடு. (மூன்றாயிரம் முஸ்லிம்களை கதறக் கதற குதறிய அந்த செயலைத்தான் (!) கல்கி ஏடு பொற்கால ஆட்சி என்றதோ?) மேற்கூறிய அத்தனை புண்ணிய(!) வான்களுக்கும் ஒருபடி மேலாக செயல்படும் ஒரு தீவிர பாசிச சக்தியாக தினமலர் நாளேடு செயல்பட்டது. முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்துவதில் முன்னிலை வகித்தது தினமலர். நாளொரு அவதூறும், பொழுதொரு புளுகுமாய் வெளியிட்டு வெறித்தனத்தை பறைசாற்றியது.


முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்நாட் டில் வாழும், உழைத்து பிழைக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அழுத்தப் பட்ட மக்களை அவமானப்படுத்துவதில் அது முன்னிலை வகித்தது.



கோபால்ஜி என்றழைக்கப்படும் தினமலர் (வி.எச்.பி.) கோபால்


சமூக நீதி தத்துவத்தின் பிதாமகனாக தமிழக மக்களால் போற்றப்படும் பெரியாரை அனைத்துத் தரப்பு மக்களும் பெரியார் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெரியாரை ஈ.வே.ரா. என தனது பத்திரிக்கையில் எழுதி ஈனத்தனமாக நடந்து கொண்டது.


ஒரு தாயின் வயிற்றில் நாம் அனை வரும் பிறந்தால் அந்தத் தாயின் மணி வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தோ மடா தம்பிகளா? என தமிழக இளைஞர் களை சகோதர வாஞ்சையுடன் அழைத்து மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அத னால்தான் அவரை அண்ணா, அண்ணா என தமிழகம் அழைத்து மகிழ்ந்தது. அரசியல் எதிர்முகாமில் உள்ளவாகள் கூட அண்ணா என அழைத்த போதும், தினமலர் மட்டும் அண்ணாதுரை என அதிமேதாவி(!)த்தனமாக அழைத்து தன்னை அடையாளம் காட்டியது.


தமிழ்நாட்டில் பாமரர்களையும் பத்தி ரிகை படிக்க வைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். பத்திரிகையுலக ஜாம்ப வான் என அவரை அழைப்பதுண்டு. அவரை தமிழர் தந்தை என அவர் மீது அன்பு கொண்டோர் அழைத்தனர். அதில் தினமலருக்கு ஏற்பட்ட வயிற்றெ ரிச்சலில் கொச்சைப்படுத்தும் வரிகளை வெளியிட்டது.


தமிழின உணர்வாளர்களை, தலித் பெருமக்களை,பிற்படுத்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி இன்பம் கண்டது.


கற்பு குறித்து விநோதமான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது என பைத்தியக்காரன் கூட கற்பனை செய்ய முடியாத ஒரு கருத்தை தினமலர் அச்சில் ஏற்றியது.


மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாடே வேதனை யில் ஆழ்ந்த அந்த சம்பவத்தில் கூட தினமலர் தனது ஈனச் செயலின் மூலம் சாதனையைப் படைத்தது.


`மாலேகான் பள்ளிவாசலில் இருந்த குண்டு வெடித்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.


இவ்வாறு ஈனத்தனத்திலும் இழிசெய லிலும் சாதனை(!) படைத்த தினமலர், பெட்ரோல் கிணற்றில் பீடி பற்ற வைத்த தைப் போன்ற ஒரு முட்டாள்தனமாக செயலைச் செய்து நாட்டையே அவமா னத்தில் ஆழ்த்தி விபரீதத்தை விதைத்தது.




நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக டென்மார்க்கிலிருந்து வெளி வந்த ஜிலாண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. ஒன்றல்ல, 12 கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டது.


டென்மார்க்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது கோபத்தை ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வெளியிட்டனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. எகிப்தின் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் ஷேக் அஹ்மத் தந்தாவி யூசுப் அல்கர் ளாவி போன்றோர் அந்தப் பத்திரிக்கை மன்னிப்புக் கேட்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். டென்மார்க் அரசும், ஜிலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிக் கையும் மார்க்க அறிஞர்களின் கோரிக் கைக்கு தலைசாய்க்க மறுத்துவிடவே `டென்மார்க் கார்ட்டூன்’ விவகாரம் சர்வதேச அளவில் கொதி நிலையை எட்டியது. உலகெங்கும் உள்ள முஸ்லிம் கள் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.


மொராக்கோவிலிருந்து இந்தியா வரை, மவுரிடானியாவிலிருந்து இந்தோ னேஷியா வரை முஸ்லிம்களின் `பெருமானார் பேரபிமானம்’ வெளிப்பட் டது. டென்மார்க் பொருட்களை புறக்கணிக்குமாறு உலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகித்த டென்மார்க், உலக முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் இழப்பினை சந்தித்தது. பால் பொருட்கள் பாழாயின. போராட்டங்கள் ஓயாத சூழ்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முஸ்ஸன் மன்னிப்புக் கேட்டார். போப் 16ஆம் பெனடிக்ட், பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ’பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் தேவையற்ற விஷயம்’ என கண்டித்தார்.




உலக அளவில் பெரும் புயலையும் பதட்டத்தையும் எழுப்பிய அதே டென் மார்க் கார்ட்டூன்களில் ஒன்றைத்தான் அசட்டு துணிச்சலுடன் உள்நோக்கத் துடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.


கடந்த திங்கள்கிழமை (1.9.08) அன்று வேலூர் பதிப்பு தினமலரில் இலவச இணைப்பான கம்ப்யூட்டர் மலரில் 12வது பக்கத்தில் “லுடிர கூரநெ இணையதளம் மூலமாக படங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு `முஹமது நபி கார்ட்டூன்’ என்று விஷமத்தனமான கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டிருக்கிறது தினமலர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைபேசி தகவல் பரிமாற்றங்களும், குறுந்தகவல்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. இறைத்தூதரை அவமதித்த அடாத செயலை அனுமதிக்கவே மாட்டோம் என நாடெங்கும் குமுறல்கள் எழுந்தன. அந்த இழிசெயலை நிகழ்த்தய வேலூர் தினமலர் அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் மக்களின் கோபம் ஆத்திர அலையாக வெடித்தது.


வேலூரில் ஏற்பட்ட எழுச்சி ஆதிக்க சக்திகளின் அடிவயிற்றை கலக்கியது. (வேலூர் போராட்டம் தனிச்செய்தியில் காண்க). தமிழகமெங்கும் கொந்தளித்த தாலும் இதன் வீச்சில் உலகமே பதற்றம் அடைந்ததாலும் உலக மக்களின் உச்சக் கட்ட வெறுப்பை சுமந்த கேவல தினமலர் முதல் பக்கத்தில் வருத்தத்தினை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த எதிர்ப்பலையில் மக்களைத் திரட்டும் விஷயத்தில் தமுமுக பெரும் பங்கு வகித்தது. 1995ஆம் ஆண்டு முதலே தமிழக முஸ்லிம்களின் போர்க் குணத்தை வகுத்தெடுப்பதில் முழு இடம்பெற்ற அந்த மக்கள் இயக்கம் இதுவரை முஸ்லிம்களின் கல்வி, சமூகம் அரசியல் தொடர்பான போராட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டியது.


இறைத்தூதரை அவமதித்த தினமலர் விவகாரத்தில் தமுமுக தமிழகமெங்கும் போர்க்கோலம் பூண்டது. இளைஞர் சக்தியின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தலைவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.


சரியாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அவமதிப்புக் கார்ட் டூனை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தினர். இதைப் பயன்படுத்தி நாடெங்கும் சங்பரிவார சக்திகள் பெரும் கலவரங்களை நடத்த திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ரத்தம் குடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. புனித ரமலான் மாதத்தில் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனி டம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம்களை வேதனைப்படுத்த வெறியோடு காத்தி ருந்த கூட்டத்தின் முக்கிய சதிகாரனாக தினமலரின் முதலாளிகளில் ஒருவரான கோபால் என்பவர் அறியப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய அஜெண்டாக்களை செயல்படுத்து வதையே லட்சியமாகக் கொண்டு அவரும் அவரது பத்திரிகையும் விளங்கி வருகிறது என்பதை இந்த நாடும் மக்களும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.


மக்களின் பெருங்கோபத்தைக் கண்ட தினமலர் மன்னிப்பு கேட்டது.


மன்னித்தல் என்பது மிகப் பெரிய வர்களின் இயல்பு. மன்னிப்பு என்பது தவறிழைத்தவர்கள் அதை மீண்டும் செய்யலாம் என்பதற்கான லைசென்ஸ் அல்ல. தவறினை ஒப்புக்கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதுதான் மன்னிப்பு.


தமுமுக தலைமையிடம் தினமலர் நிர்வாகம் நேரடியாக அணுகி தனது வருத்தத்தினை தெரிவித்தது.


மேலும் சில சாதுவான முஸ்லிம் இயக்கங்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது வருத்தத்தினை தினமலர் நிர்வாகம் தெரிவித்ததாக தனது முதல் பக்க மன்னிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.


தினமலர் பத்திரிகைக்கு இந்த சமுதாயம் வழங்கியிருக்கும் மன்னிப்பு தினமலர் தனது தீய இயல்புகளை திருத்திக் கொள்வதற்கான அவகாசம் மட்டுமே. கார்ட்டூன் விவகாரத்தால் உலக முஸ்லிம்களின் உச்சக்கட்ட வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் தினமலர் தன்னை திருத்திக் கொள்ளுமா? அல்லது மீண்டும் சிலுமிஷங்களைத் தொடர்ந்து சீரழிவில் சிக்கிக் கொள் ளுமா?


தினமலர் தான் முடிவெடுக்க வேண்டும்.


தினமலரின் அந்தர்பல்டியும் அறிவுகெட்ட வாதமும்
``You Tube’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக தினமலர் கம்ப்யூட்டர் மலரில் `இறைத்தூதர் அவமதிப்பு கார்ட்டூன்’ குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.


``You Tube’ என்ற இணையதளம் வீடியோ காட்சிகளுக்காக உலக அளவில் பிரபலமான இணையதளமாகும். தேவையான படக் காட்சிகளும், சில தேவையற்ற படக் காட்சிகளும் கொண்ட அந்த இணையதளம் குறித்து அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத தினமலரின் செயலைப் பார்க்க முடிகிறது. கார்ட்டூனைப் பார்க்க `லுடிர கூரநெ’ இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதில் தினமலரின் விஷமம் தெரிய வருகிறது.


இரண்டாவது அது உலகையே டென்மார்க் கார்ட்டூன் என்பது மடையனுக்குக் கூடத் தெரியும். வேண்டுமென்றே வம்பை விலை கொடுத்து வாங்குவதற்காகவே செய்த தினமலரின் தீய செயல் தெளிவாகிறது. அதை தங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர் தொழிலாளி ஒருவர் செய்து விட்டார் என மழுப்புவது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.


சரி, ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்த தவறு என்றே ஒப்புக்கொண்டு தொலைப்போம். ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் செயலை ஏன் செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வைத்தே தினமலரின் ஊழியர்கள் உரம் ஊட்டப்படுகிறார்களா?


அப்படி ஒரு வெறிபிடித்த மனநோயாளிகளின் கூட்டம் தமிழகத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. தினமலரின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பியூன், குப்பை கூட்டி பெருக்குபவன், முதலாளி என அனைவரும் குரோத வெறிபிடித்த கிறுக்கன்களாகவே இருப்பார்களோ என மக்கள் நினைப்பதில் அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது

Web Counter Code