இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 20, 2007

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் ச்மாதானமும் நம் அனைவர் மீதும் சூழட்டும்.

முதல் இந்திய சுதந்திரப் போர்1857; வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்

முதல் இந்திய சுதந்திரப் போர்1857;
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்
அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.

'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
மன்னர் பகதூர்ஷா
ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.
முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.
உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.
வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஷா வலியுல்லாஹ் (1703லி1762)
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.
திப்பு சுல்தானின் தியாக பூமி
வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்
1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.
ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.
முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.
1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

Saturday, June 16, 2007

இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, June 14, 2007

காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படை

காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படைஅபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்

அபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்

Web Counter Code