இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 5, 2008

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் எழிலுறுமா?


டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ மஸ்ஜித் முகலாய மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். ஒன்றரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றும் வண்ணம். மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுறவும் அமைக்கப்பட்டுள்ள டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை மன்னர் ஷாஜகான் தனது அரச மண்டபமான டெல்லி செங் கோட்டையில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்தார்.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல அதிகமாக கடைகள் முளைத்தன. இந்நிலையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த வேண்டும்.

2008 மே 18ஆம் தேதிக்குள் ஆக்கிர மிப்புகளை அகற்றி டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதையும், சுற்றியுள்ள பகுதிகளை யும் அழகுபடுத்த வேண்டும் என்று 2006 அக்டோபர் மாதம் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், இது தொடர்பான எவ்வித நடவடிக்கை யும் இன்னும் தொடங்கப்படவில்லை.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகு படுத்தும் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள விஜய்சிங் இந்த திட்டத் தினை மீண்டும் திருத்தி வரைவு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

1979லில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவின்படி ஜும்ஆ மஸ்ஜிதைச் சுற்றியும் பள்ளிவாசல் வளாகங்கள் விரிந்திருந்தன என்ற உண்மை வெளி யானது. இந்நிலையில் டெல்லி மஸ்ஜிதின் பாரம்பரிய அழகைக் கெடுக்கும் வண்ணம் பல்முனை வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பெருமை மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் எழில் மீண்டும் மீட்கப்படுமா என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
வருடந்தோறும் 10 இலட்சம் மக்களைக் கொல்லும் அரக்கன்!

சப்ரன் ஹபீப்



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமையாகி பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்து வோரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத் திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான ஆ சஹற்ண்ர்ய்ஹப்ப்ஹ் தங்ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ஸ்ங் ஈஹழ்ங் லி ஈர்ய்ற்ழ்ர்ப் லி நற்ன்க்ஹ் ர்ச் நம்ர்ந்ண்ய்ஞ் ஹய்க் உங்ஹற்ட் ண்ய் ஒய்க்ண்ஹ லிவும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் பட்ங் சங்ஜ் ஊய்ஞ்ப்ஹய்க் ஓர்ன்ழ்ய்ஹப் ர்ச் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங் என்ற பத்திரிக்கையும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.
பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது, அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். ஆனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

Web Counter Code