இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, July 28, 2007

குடியரசு துணைத் தலைவராகிறார் கல்வியாளர் ஹமீத் அன்சாரி
அபூசாலிஹ்

இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலை வராகும் வாய்ப்பு கல்வியாள ரும், மனித உரிமை ஆர்வல ருமான முஹம்மத் ஹமீத் அன்சாரிக்கு வாய்த்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எம்.ஹெச். அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருபவர்.
இவரது பெயரை 20.07.2007 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவி சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் தூதராக பணியாற்றி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றிய எம்.ஹெச். அன்சாரி சிறந்த கல்விமான் ஆவார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடமை யாற்றியவர். 1984 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வளைகுடா நாடுகளின் அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்த அன்சாரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மனப்பாங்கு கொண்டவர்.
முன்னணி ஆங்கில நாளேடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பு கொள்கை களை சரமாரியாக விளாசித் தள்ளியவர்.
சிறந்த நூல்களை படைத்த அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது மனித உரிமைகளை பேணுவதில் பேரார்வம் கொண்டவராக விளங்கினார்.
குஜராத் கோர கலவரத்தில் குதறப் பட்ட மக்களின் பால் அன்பு காட்டிய அன்சாரி 1984ல் நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினார்.
கல்வியாளர், மனித உரிமை ஆர்வலர் என பல்வேறு சிறப்புகளை உடைய அன்சாரியை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவித் ததின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட் பாளர் அறிவிப்பில் காங்கி ரஸ் கூட்டணி செய்த குளறுபடிகளை சரி செய்து விட்டதாகத் தெரிகிறது.
மக்களின் குடியரசுத் தலைவராக புகழப்பட்ட அவுல் பக்கீர் ஜெயினுலாப் தீன் அப்துல் கலாம் தமது பொறுப்பிலிருந்து விடை பெறும் நேரத்தில், இஸ்லா மிய சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு மக்கள் அறிஞர் குடியரசுத் துணைத் தலைவ ராக அறிவிக்கப்பட இருப் பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது அணியின் சார்பில் ரசீத் மசூத் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டி ருக்கிறார். பாஜக அணியின் சார்பில் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்தின் பேத்தியும் முன்னாள் ராஜ்ய சபைத் துணைத் தலைவருமான டாக்டர். நஜ்மா ஹெப்துல்லாஹ் போட்டியிடுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தில் பிறந்தவர்கள். நஜ்மா ஹெப்துல்லாஹ் ஹமித் அன்சாரி இருவரும் ஆவார். காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்தவராய் திகழ்ந்த நஜ்மா இடையில் ஆட்சியில் அமர்ந்த பாஜகவின் வலையில் வீழ்ந்தார்.
ஊசலாட்ட மனநிலையில் உள்ள நஜ்மா தனது அரசியல் வாழ்வின் முதிர்நிலையை இழந்தார்.
இடைக்கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியிராவிட்டால் இன்று இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக ஏகோபித்த ஆதரவுடன் பதவி ஏற்றிருக்கக் கூடும். கொடுக்க வேண்டிய கடனை கொடுக்க மனமில்லாதவன் வழிப்பறிக் கொள்ளை யன் கொள்ளையடிக்க வரும் போது தான் கொடுக்க வேண்டிய கடனை தனக்கு முன்பு உதவியவருக்கு இதோ உனக்கு சேர வேண்டிய கடனை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விடுவதைப் போல ஜெயிக்கவே முடியாத ஒரு பதவிக்கு பாஜகவினர் முஸ்லிம் ஒருவரை நிறுத்தி இருப்பது ஒரு தேர்ந்த நகைச்சுவை காட்சியாக பார்க்கப்படுகிறது.
மொத்ததில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கோட்டை விட்ட அரசியல் சாதுர்யத்தை துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மீட்டுவிட்டனர்.
அறிஞரும் கல்வியாளரும் ஹமீத் அன்சாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணைத் தலைவராக விஜயம் செய்தார். அப்போது ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மற்றும் சச்சார் குழு பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்தது.
சமீபகால பள்ளிவாசல்களில் மீதான குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து சிறுபான்மை நேரடியாக தலையிட்டு துல்லிய விசாரணைகளை மேற்க் கொள்ள வேண்டும் என்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்தது. அதைக் கனிவோடு செவிமடுத்த அன்சாரி தற்போது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். கல்வியாளர், மனித உரிமையாளர் அன்சாரியை
பாராட்டி வரவேற்கிறோம்

Web Counter Code