இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, February 10, 2010

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அபூஸாலிஹ்

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது

பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் Wednesday, 10 February 2010 00:28 அபூஸாலிஹ்

இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் சிறப்பிடம் பெறும் பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்களில் விபரம் பத்மவிபூஷன் பெற்றவர்கள்.
* இப்ராஹிம் அல்காஜி டெல்லியைச் சேர்ந்தவர் கலைத்துறை சேவைக்காக விருது பெற்றார்.

* ஜெôஹ்ரா செகல் டெல்லி.

* அமிர்கான் மகாராஷ்ட்ரா.

* ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அல்லாரக்கா ரஹ்மான் தமிழ்நாடு.

* உஸ்தாத் சுல்தான்கான் மகாராஷ்ட்ரா.

* மூஸா ரஸா லி டெல்லி.

* ஃபரீத் ஜகரிய்யா (இதழியல் துறைக்காக) யு.எஸ்.ஏ.

* பேராசிரியர் முஹம்மது அமீன் இலக்கியம் மற்றும் கல்வி டெல்லி.

* குலாம் முஹம்மது மீர் பொதுநலச் சேவை ஜம்முகாஷ்மீர்.

* உஸ்தாத் வசீஃபுத்தீன் தாகர் டெல்லி.

* ரசூல் பூக்குட்டி கேரளா.

* சைஃப் அலிகான் மகாராஷ்ட்ரா.

பத்மஸ்ரீ விருது:

* ஹமீத் காஷ்மீரி - இலக்கியப்பணி ஜம்முகாஷ்மீர்.

* சாதிக்குர் ரஹ்மான் கித்வாய்

* இர்ஷாத் மிர்ஸா வணிகம் மற்றும் தொழில் உத்தரப்பிரதேசம்.

Tuesday, February 9, 2010

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்! அபூசா­லிஹ்

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

E-mail Print PDF

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை அபூசா­லிஹ்


பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.

கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?

abusalih news in tamil

முஸ்லிமை பிரதமராக்க வேண்டும்

E-mail Print PDF
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிராய சித்தமாக ஒருமுஸ்லி­மை இந்திய நாட்டின் பிரதமராக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியிருக்கிறார். மகராஷ்ட்ரா மாநிலம் பீவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மகராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் தாக்கரே வகையறாக்களின் வயிற்றெரிச்சலை ஊட்டி வளர்த்து வருபவருமான அபூ ஆஸ்மியின் இளைய சகோதரர் ஃபர்ஹான் போட்டியிடுகிறார்.
சமாஜ்வாடி கட்சியி­ருந்து நீக்கப்பட்ட போதும் ஆஸ்மி தனது நண்பர் என்பதால் அமர்சிங் பீவாண்டியில் பரப்புரை நிகழ்த்தினார், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அந்த தவறு நிகழக்காரணமாக இருந்த காங்கிரஸ் தனது அமைச்சர்கள் யாரையும் அப் போது பதவி விலகச் சொல்லவில்லை என்றும் குறற்ம் சாட்டியதோடு மஸ்ஜித் இடிப்பு என்ற கொடும் தவறுக்கு கைமா றாக முஸ்­லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார், 1984லில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு கைமாறாக மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதைப் போல பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தவறுக்காக முஸ்­லிம் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் அமர்சிங் கூறியிருக்கிறார். அமர்சிங் வடஇந்தியாவின் மிகப்பெரிய அரசியல் வியாபார வித்தகர் என பொதுவாக கூறப்படுகிறது.
இவரது அதிரடி முடிவுகள் முலாயமசிங்கின் சமாஜ்வாடிக்கட்சியை பின்னடைவை நோக்கி இழுத்துச் சென்றதாக நடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முஸ்­லிம்கள் பெருவாரியாக வாழும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சினிமா நடிகை ஜெயப்பிரதாவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என சளைக்காமல் போராடிய சமூக(?) நீதிப் போராளியவர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான தேசத்துரோகி கல்யாணசிங்கை சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி சேரவைத்து ஜெயித்துக் கொண்டு இருந்த சமாஜ்வாடிக்கட்சியை தோல்வி பள்ளத்தாக்கில் துவைத்த புண்ணியவான். சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆஜம்கானை தொடர்ந்து அவமானப்படுத்தினார். தற்போது அரசிய­ல் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்­ம் பிரதமர் என்ற முழக்கத்தினை முன்னெடுக்கிறார்.

இதற்கு முன்னர் ராகுல்காந்தியும் முஸ்­லிம் பிரதமர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.

இங்கு முஸ்லி­ம்களின் நிறைவேற்றப் படாத கோரிக்கைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. குளிர வைக்கும்
வாக்குறுதிகளால் குவிந்திருக்கும் கோரிக்கை மலையின் சிறுபகுதியைக் கூட நகர்த்த முடியவில்லை. முஸ்லிம் பிரதமர், முஸ்­லிம் குடியரசுத்தலைவர், முஸ்­லிம் அமைச்சர், முஸ்லி­ம் கவுன்சிலர், முஸ்லி­ம் டிரைவர், முஸ்லி­ம் கிளீனர் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு முஸ்­லிம்கள் மயங்கிய காலம் மலையேறி விட்டது.
சுதந்திர இந்தியாவில் காலகாலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லி­ம்களின் அவலநிலையை மாற்றும் எண்ணம் கொண்ட எவரையும் ஏற்றிவிடத் தயங்காத சமூகம்தான் முஸ்­லிம் சமூகம்.
இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுத்த ஜான்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையினர் முஸ்­ம்களே(60 சதவீதம்). இதை போன்று எண்ணற்ற அரசியல் பிரபலங்களின் அரசியல் வாழவின் ஏணிகளாக முஸ்லி­ம் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளே அமைந்துள்ளன. எந்த சமூகத்தை சேர்ந்தவரும் எந்த அச்சமும் இன்றி போட்டியிட்டு வெல்ல முடியும். எனவே முஸ்லி­ம்களின் மனதை இடம்பிடிக்க இத்தகைய முழக்கங்கள் தேவையில்லை. அவர்கள் தங்கள் கட்சிகளில், அமைப்புகளில் எத்தனை மாவட்ட, மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கினார்கள் என இதயத்தை தொட்டுப்பார்த்து பதில் சொல்லட்டும். அதிகாரப்பங்கீட்டுக்கு ஆவனசெய்யுங்கள். ஆசை வார்த்தைகளுக்கு அணைபோடுங்கள். முஸ்லி­ம் பிரதமர் என்ற கோஷம் ஒன்றும் வெல்ல முடியாத இலக்கு அல்ல. ஆனால்
அதை ம­லிவு அரசியலுக்கான களமாக்க வேண்டாம்.

Web Counter Code