இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, June 27, 2008

தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!

கொந்தளிக்கும் இந்தியா!!

-சத்தியவேந்தன்


பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.

ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.

குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.

பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.

இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.

நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.

பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.

35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.

1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.

மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

-அபூசாலிஹ்



மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத் திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேத னைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.

பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.

இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.

1. மங்கேஷ் தினகர் நிகாம்
2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி
3. சந்தோஷ் ஆங்ரே
4. விக்ரம் பவே
என்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.

முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.

பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:

1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)
2. 20 டெட்டனேட்டர்கள்
3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்
4. டைமர்கள்
5. வோல்டேஜ் மீட்டர்கள்
6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்
7. ரிமோட் கண்ட்ரோல்கள்
8. ரிவால்வர்கள்
9. 92 தோட்டாக்கள்

சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா?

Wednesday, June 25, 2008

abusalih news from us

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா



அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.

ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.

ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.

இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.

அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.

ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.

ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.

அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்

Wednesday, June 18, 2008

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!


மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத் தின் துணை இயக் கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக் கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல் களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.

Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங் கிய பஜ்ரங்தளத் தினர் அந்த நாட கத்தை தடுத்து நிறுத்தினர். அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்ப தாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல

abusalih news

மன்னிப்பு கேட்ட மகாராஷ்டிரா சி.ஐ.டி.போலிஸ்

மகாராஷ்டிரா மாநில போலிஸ் ஹுவாஜா யூனுஸ் என்ற இளைஞரின் மீது வழக்கு விசாரணையை மேற்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்
கொண்டது. மேலும் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் சக்தி மிகுந்த இடங்களில் செல்வாக்குமிகுந்தவர்கள். எனவே ஹுவாஜா யூனுஸ் வழக்கில் தங்களால் விசாரணை செய்ய முடியாது. சுயேச்சையான ஒரு விசாரணைக் குழுவினரே இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

யார் அந்த ஹுவாஜா யூனுஸ்? 2002 ஆம் ஆண்டு கட்கோபாரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வளைகுடாவில் வாழ்ந்து வந்த கணினி மென்பொருள் பொறியாளரான ஹுவாஜா யூனுஸை போலிஸ் கைது செய்தது. காவல் நிலைய லாக்கப் அறையில் காவல்துறையினரின் கடும் சித்திரவதைகளால் ஹுவாஜா யூனுஸ் ஜனவரி 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் காட்கோபார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அப்துல் மதீன் உட்பட இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் மீதும் வழக்கு தொடர மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. போலிஸ் மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநில அரசு நான்கு காவல்துறையினர் மீது மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. காவல்துறை சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கை ஒப்படைக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி.காவல்துறையின் வெளிப்படையான தன்மையையும் அதே பரிதாபகரமான தோல்வியையும் மகாராஷ்டிரா அரசின் உள்நோக்கத்தையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எட்டு பேரை குற்றமற்றவர்கள் என மும்பை பொடா நீதிமன்றம் விடுதலை செய்தது. போலிஸ் காவலில் இறந்த ஹுவாஜா யூனுஸின் மர்ம மரணம் குறித்த சந்தேகம் வலுப்பெற்றது. ஹுவாஜா யூனுஸை சித்திரவதை செய்து படுகொலை செய்ததாக
பதினான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

abusalih news

இந்தோனேஷியாவில் அனாதைகளாக்கும் பெற்றோர்கள்!

இந்தோனேஷியாவில் தொடரும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் வறுமையில் சிக்கிய இந்தோனேஷிய பெற்றோர் தங்களின் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகவலை ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ளது.

சுனாமி என்ற ஆழிப்பேரலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள்
பெற்றோரை இழந்தனர். அப்போது ஏராளமான அனாதை இல்லங்கள் நிறுவப் பட்டன. சமூகநலத் துறையின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் யூனிசெஃபின் அனாதை நிலையங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.
5 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அனாதை நிலையங்களில் வெறும் 6 சதவீத குழந்தைகளே உண்மையில் அநாதைகள் என்றும் மற்றவர்கள் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட குழந்தைகள் என்றும் தெரிய வந்தது.

உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

abusalih newsagainst anti dalit atricities

உயர்சாதியினரால் கொல்லப்பட்ட தலித் மூதாட்டி

தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் ஆதிக்கசாதியைச் சேர்ந்த மூவரால் உயிரோடு எரிக்கப் பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆதிக்கசாதியினர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹீராலால், தினேஷ் மற்றும் ராஜேந்திரா என்ற மூவரும் பீரம்பாய் என்ற 55 வயது பெண்மணியை நெருப்பி லிட்டு கொளுத்தினர்.

80 சதவீதம் அந்தப் பெண்மணியின் உடல் எரிந்து விட்டதாக கன்ததா பகுதி யின் காவல்துறை அதிகாரி அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.

பீரம்பாய் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி கன்ததா பகுதி முழுவதும் பரவி யது. பெரும் போராட்டத்திற்கு பிறகே படுகொலையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தீயிலிடப்பட்ட பெண்மணியின் கணவரான ஹுகும் சந்த் தெரிவித்தார்

abusalih news about food crisis

விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்!

உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்

abusalih news about food crisis

விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்!

உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்

abusalih article about social justice

மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா?



மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக விபரங்கள் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

34 காபினெட் அமைச்சர்கள், 22 ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான துறைகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப்பிரிவில் 203 அதிகாரிகளையும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெறும் 23 பேர் மட்டுமே அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேவ் ஆசிஷ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்படி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

மண்டல் பரிந்துரைகளுக்குப்பின் தேசிய அளவில் ஏற்பட்ட சமூக நீதி எழுச்சிக்குப்பின் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அதிர வைக்கும் தகவலாகும்

abusalih article about petrol price hike

பெட்ரோல் விலையேற்றம்: திவாலாகும் உலகம்!
அபூசாலிஹ்



பெட்ரோல் விலையேற்றம் உலக அளவில் பெரும் ஆத்திர அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார திட்டமிடலில் விற்பன்னர்களாக விளங்கு பவர்களே செய்வறியாது திகைத்து நிற்கிறார்கள். பிரிட்டனில் ஆடம்ஸ்மித் விருது வாங்கிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கும், அமெரிக்காவில் மேலாண் மைக் கல்வி கற்ற வழக்கறிஞர் பழனியப்பன் சிதம்பரமும் (நம்ம நிதியமைச்சர் தாங்க) சாக்குபோக்குகளும் சால்ஜாப்பு களும் கூறி முடித்தபாடில்லை. எ(த்)தை தின்றால் பித்தம் தணி யும் என்ற நிலையில் அனைத் துத் தலைவர்களும் விழி பிதுங்க விடைத்து நின்றனர்.

70 சதவீத எரிபொருளை இறக்குமதி செய்துவரும் இந்தியா மானியங்களை ரத்து செய்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலைகள் எகிறியது. இது பொதுமக்களை வாட்டும் விலையேற்றத்தால் நாடெங்கும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நிஜமான எதிர்க்கட்சிகளான இடது சாரிகளும், பிரதான எதிர்க்கட்சி என்று அழைக்கப்பட்ட பாஜகவும் போராட்டங் களை அறிவித்தன.

மலேசியாவிலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் அங்கும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தோனேசியா வில் சில வாரங்களிலேயே பெட்ரோலின் விலை 30 சதவீதம் ஏற்றப்பட்டதால் மக்களின் ஆத்திரம் எல்லை மீறியது.

ஐரோப்பிய நாடுகளில் மீனவர்கள், விவசாயிகள், சுமையுந்து ஓட்டுநர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

பெல்ஜியம் நாட்டில் மீனவர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது.

ஆசிய நாடுகள் பெற்ற பொருளாதார வளர்ச்சியே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என மலேசிய வர்த்தக நிபுணர் ஷியோக் சூ மற்றும் அகில பெட்ரோல் தரகு நிபுணரான ஜான் கில்டஃப் தெரிவித்தனர்.

சீனா மற்றும் இந்தியாவில் பெட்ரோல் அதிகம் செலவிடப்படுகிறது. இந்நாடு களில் கார்கள் அதிக அளவு விற்பனை யாவதும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

யு.எஸ். கேரியர் ஏர்லைன்ஸ் பெட் ரோல் விலையேற்றத்தால் நூற்றுக் கணக்கான வேலையாட்களை நீக்கி பணிக்குறைப்பு செய்துள்ளது.

வெனிசுலாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு, சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், ஹாங்காங், பிரிட்டன், துருக்கி போன்றவை உலக அளவில் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நாடுகளாகும்.

சரி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் எதேச்சதிகார போக்குதான் இன்றைய நிலைக்கு காரணமா?

சவூதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் அலிலிஅல்லிநயீமி, ''எண்ணெய் விலையேற்றம் நியாயப் படுத்த முடியாத ஒன்று; இது சந்தையின் அடிப்படைக் கொள்கைக்கே விரோத மானது'' என்கிறார்.

இங்கு போதுமான அளவு எண்ணெய் இருக்கிறது. ஏற்றுமதி நாடுகளால் எவ்விதக் குழப்பமோ, தட்டுப்பாடோ, எண்ணெய் விலை விஷயத்தில் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுவதில்லை என்கி றார் லிபியதேசிய எண்ணெய் கார்ப்ப ரேஷனின் தலைவரும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் பிரதிநிதியுமான ஷோக்ரி ஹானெம்.

உலக எரிசக்தியின் பயனை 13 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தைக் கண்டு ஏதாவது தீர்வுகாண வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி என்ற ஜி8 நாடுகளும், இந்தியா, சீனா, தென்கொரியா நாடுகளும் ஜப்பானின் ஆமோரி நகரில் கூடினர்.

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளே எண்ணெய் விலை யையும் விநியோகத்தையும் நிர்ணயிக்கின்றனர்.

ஆனாலும் சர்வதேச அளவில் கொள்ளை லாபம் ஈட்டிய உலகின் முதல் ஐந்து எண்ணெய் நிறுவனங்கள் எவையவை தெரியுமா?
1. Conoaco Philips 1200 கோடி டாலர்களை லாபம் ஈட்டியுள்ளன.
2. Chevron 1900 கோடி டாலர்களை கொள்ளை லாபமாக கடந்த ஆண்டு ஈட்டியுள்ளது.
3. BP நிறுவனம் 2100 கோடி டாலர்கள்
4. Shell 3100 கோடி டாலர்கள்
5.Exxon Mobil 4100 கோடி டாலர்களை சுரண்டிக் கொழுத்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விவகாரத்தில் சுரண்டிக் கொழுத்துவரும் நிறுவனங் களைப் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்.

எண்ணெய் விநியோகம், எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எரிபொருள் துறை நிபுணர்கள் நிராகரிக்கிறார்கள்.

எண்ணெய் விநியோகத்தை அதிகப் படுத்துவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது காலின் முட்டிப் பகுதியை உடைத்துப் போடும் வேலை. இது அரசியல்வாதிகளின் சோம்பேறி மூளைகளின் வேலை என்கிறார் Globe an Institute for Tomorrow வின் சந்திரன் நாயர்.

இந்த உலகம் வெகுகாலமாகவே எதிர்கொள்ளும் பிரச்சினை இது. ஒபெக் அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்வது தீர்வின் சின்னஞ்சிறு பகுதியாக இருக் கும் அவ்வளவுதான் என்கிறார்.

மனோசஹர்தாகின் என்ற மூத்த நிபுணர் இவர் Centre for Global Emergency Studies-ன் முக்கியப் பிரமுகராவார்.

சஅதல்லாஹ் பாதி. இவர் ஒபெக்லி கின் முன்னாள் தலைவரும் ஈராக்கின் எண்ணெய் வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகருமாக விளங்கு கிறார். எண்ணெய் விநியோகிப்பாளர் களால் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும். சில நாடுகள் அதிகமாகவே உற்பத்தி செய்கிறது. ஒபெக் எந்த குளறுபடிக்கும் பொறுப்பல்ல. இடையிலிருப்பவர்களின் (பெரிய நிறுவனங்களின்) வியாபார வஞ்சகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இருப்பினும் 11 எண்ணெய் வள நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தன.

உலக அளவில் கச்சா எண்ணெயில் முதலிடம் பெற்று விளங்கும் சவூதி அரேபியா இம்மாத துவக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இரண்டாமிடம் வகிக்கும் ஈரான் நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. ஜூன் மாதத்தில் 25 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட கப்பல் கள் ஈரானிலிருந்து புறப்பட்டு பாரசீக வளைகுடாவிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறே சவூதி 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இம் மாதம் ஏற்றுமதி செய்யப்படும் என அலிலிஅல்லிநயீமி குறிப்பிடுகிறார்.
ஈராக் கடந்த ஐந்து வருடத்தில் இல்லாத அளவு தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஆனால் உலகத்தின் தேவை அதிகமாக இருக்கிறது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 1980ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் போது இவ்வாறே கச்சா எண்ணெய் தட்டுப்பாடுகள் அதன் மீதான கட்டுப் பாடுகள் அதிகரித்தன. கச்சா எணணெய் ஏற்றுமதி நாடுகள் உலக எரிசக்தி வளத்தில் மூன்றில் ஒரு பகுதி தேவையை நிறைவு செய்கிறது. வளை குடாவில் வல்லூறுக்கண் பதிந்த பின்பு தான் இராக் ஐந்து ஆண்டுகாலம் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது. சதாம் ஹுஸைன் பிறந்த இடமான திக்ரித் மற்றும் கிர்குக் பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை செயல்படுத்த முடியாமல் கிளர்ச்சியாளர்களின் கெடு பிடியால் வெறும் தொழில் நுட்ப இடைஞ்சலை காரண மாகக் கூறி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியாமலும் அதனால் பலன்பெற முடியா மலும் அமெரிக்கா தவித்த கதை புஷ்ஷும் டிக்செனியும் அனுபவித்த அவலம்.

ஈரான் அணுஆற்றல் தொடர்பான தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாவிடில் இஸ்ரேல் ஈரானைத் தாக்கும். 70களில் ஈராக்கின் அணுக்கரு உலையை விமானத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்கி அழித்ததைப் போல அழிப்போம் என இஸ்ரேலிய துணைப் பிரதமர் சவுல் மொஃபாஸ் தெரிவித்த வெறிக்கருத் தினால் எச்சரிக்கை அடைந்த ஈரான் தனது எண்ணெய் வள ஆதாரங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டது. ஈரானின் அதிஜாக்கிரதையான இந்த அதிரடி நடவடிக்கை உலக பொருளாதார வல்லுனர்களை மூர்ச்சையடையச் செய்தது.

சரி ஆப்பிரிக்காவில் நிலத்தடியில் பொங்கிப் பெருகும் கடல் போல் இருப் பதாக கூறப்படும் கச்சா எண்ணெயின் கதை என்ன? அதன் கதிதான் என்ன?
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் எட்டாவது இடம் வகிக்கும் நைஜீரியா தனது எண்ணெய் ஏற்று மதியை 2006 பிப்ரவரியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உலக பயன் பாட்டுக்காக ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 5 லட்சத்து 64 பீப்பாய் கச்சா எண்ணெய் தடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் ஆழத்தில் கிடைத்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் வளம் வறண்டு விட்டது. அமெரிக்க எரிசக்தி கழகத்தின் அறிக்கை யின்படி ஓர் ஆண்டுக்கு இரண்டு கோடியே 70 லட்சம் பீப்பாய் கச்சா எண்ûணையை அமெரிக்க வாகனங் களும் உபகரணங்களும் உண்டு செரித்து விடுகின்றன. எரிபொருள் வளத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற அமெரிக்கா தற்போது எண்ணெய்க்காக தலையை பிய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டி ருக்கிறது. அமெரிக்க எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையங்கள் வறண்டு போகும் நிலையை அடைந்துள்ளது. பல்வேறு ஏமாற்றங்களால் எரிச்சலுற்ற அமெரிக்க எரிசக்தி அமைச்சர் இர்க்ம்ஹய் ஆசிய நாடுகள் மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார். உலக கச்சா எண் ணெயில் பாதியை ஜப்பான், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் தென் கொரியா எடுத்துக் கொள்கின்றன.

மானியங்களை சாடி வந்த அமெரிக்கா ஆசிய நாடுகளில் வாழும் கோடிக்கணக் கான பாட்டாளி மக்களின் சலுகைகளை பறித்து வெறுப்பினை வாரிக் கொண்டது.

சீனா 2500 கோடி டாலர்களை மானியங்களாக வழங்கியது. இந்தியா 2000 கோடி டாலர்களை மானியமாக வழங்கியது. இரண்டு ஆண்டுக்குள் இரண்டாவது தடவையாக பெட்ரோல் விலையை ஏற்றியுள்ளது:.

அதனால் விளைந்த எதிர்ப்பலையில் இந்திய அரசு திணறுகிறது. உணவுப் பொருள் விலையேற்றத்தை குட்டி சுனாமி என சமூகவியலாளர்கள் கூறினர். பிரச்சினையால் பூமிப்பந்து பந்தாடப் படுகிறது. மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காக மூளும் எனக் கூறப்படு கிறது. ஆனால் திரவத் தங்கம் என்ற பெட்ரோலுக்காகத் தான் போர் மூளுமா? என்ற புதிய ஐயப்பாடு விளைந்துள்ளது. ஆனால் அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் எந்த நாடும் தன் நிலையை விட்டுக் கொடுக்காது மூர்க்கமாக போராடும் ஏனெனில் திரவத் தங்கத்தின் மகிமை அப்படி?

abusalih news about modi

என்னைத் தூக்கில் போடு - மோடி ஆணவம்



அபூசாலிஹ்

இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்தி சாதனை(?) படைத்த நரேந்தி மோடி தனது மனிதகுல விரோதச் செயலை நிகழ்த்தி சாதனை படைத்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில சக்தி களைத் தவிர அனைவராலும் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக விஷத்தை கக்கியிருக்கிறார்.

தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வில்லை என மத்திய அரசை நோக்கி பாய்ந்து பிராண்டினார். மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றால் மாநில முதலமைச்சர் பொதுவாக என்ன செய்வார்? பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பார், தலைநகர் டெல்லிக்குச் செல்வார். பிரதமர், நிதியமைச்சர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் முதலானோரை சந்திப்பார். தீட்டப்பட வேண்டிய திட்டங்களையும், அதற்குத் தேவையான நிதி குறித்தும் தங்களது கோரிக்கைகளை வைப்பார். இதுவே மாநில முதலமைச்சர்களின் நாகரீகமான நடைமுறை.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக நாற்சந்தியில் இருந்துகொணடு நாகரீக மற்ற முறையில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவும், தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமில்லாத வகையிலும், தான் ஏற்றுக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்திற்கு விரோதமாகவும் பேசினார், அல்ல பிதற்றினார்.

மத்திய அரசு குஜராத் மாநில அரசுக்கு போதுமான நிதி கொடுக்காமல் புறக்கணிப்பதாகவும், மேலும் நிதி கொடுக்காவிட்டால் குஜராத் மாநிலத்திலிருந்து வரிகொடுக்க மாட்டோம் என்றும், மத்திய அரசின் உதவிகள் எங்களுக்குத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் உதவிகள் பெறாத மாநிலம் என குஜராத்தை அழைக்கட்டும் என்றும் அவர் அதிமேதாவித்தனமாக பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்று கூறுவது அப்பட்டமான தேசதுரோகச் செயலாகும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக கூச்சலிடும் தீவிரவாதிகளின் கூற்றாகவே இது கருதப்படும். இந்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்றால் இவர் எந்த நாட்டிற்கு வரி செலுத்துவாராம்? இஸ்ரேலுக்கா? அமெரிக்காவுக்கா? நேபாளத்தில் விரட்டப்பட்ட மன்னருக்கா? அல்லது மடங்களுக்கா? என்ன ஒரு மடத்தனமான பேச்சு?

1960களில் காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிய அவர்களின் அரசியல் அபிலாஷையை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார் காஷ்மீரிகளின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ். அப்படி யென்ன அவர் தவறாகப் பேசி விட்டார்? என்றே நடுநிலைவாதிகள் எண்ணினர். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதற்காக ஓட்டெடுப்புவிடச் சொல்வதா? என்ற ஆத்திரத்தில் இந்திய அரசுக்கும் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாஹ்வுக்கும் விளைந்த விவகாரத்தில் ஷேக் அப்துல்லாஹ்வை கொடைக்கானலில் சிறைவைக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது.

மோடி தற்போது கூறியிருக்கும் விஷமக்கருத்து நிச்சயம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மோடி கூறிய வெறிக்கருத்து குறித்து பாஜகவினர் யாரும் வாய் திறக்கவில்லை. இவர்கள் தான் தேசப்பற்று குறித்து பெரிதாக பீற்றிக் கொள்வார்கள். கீழே தள்ளிய கழுதை குழிபறித்த கதையாக தற்போது மீண்டும் உச்சக்கட்டமாக தனது உளறலை மோடி தொடர்ந்துள்ளார். நான் கூறியது தேசத்துரோக கருத்துதான் என்றால் என் மீது தேசத்துரோக வழக்கு தொடர முடியுமா? என மத்திய அரசை நோக்கி சவால் விடுத்தார். அதோடு ஒருநாளைக் கூட வீணாக்க வேண்டாம், இன்றே என்னை தூக்கில் போடுங்கள் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர்கள் என்னை எப்படி தூக்கில் போடுவார்கள்? என்று நையாண்டி வேறு. அப்சல்குருவையே தூக்கில் போட முடியாதவர்கள் என்னையா தூக்கில் போடப் போகிறார்கள்? என்று கிண்டலடித்துள்ளார். மோடி எனும் பதறவைக்கும் பாதகனை இனப்படு கொலைகளின் காலத்திலேயே தண்டித் திருக்க வேண்டும். மலம் சுமப்பதை புண்ணியமாகக் கருதவேண்டும் என்று தனது துருப்பிடித்த நாவினால் கூறிய தைத் தொடர்ந்து நிரூபிப்பது போல் தலித் களை நுழையவிடாமல் விரட்டி யடித்த அவலக் கதைகளை சாதனை சரித்திர மாகக் கொண்டிருக்கும் மோடியை தண்டிக்க மத்திய அரசும், நீதித்துறையும் இனியும் தாமதித்தால் இந்திய ஹிட்லரின் ஆணவத்தை அடக்கமுடியாமல் போய்விடும். மத்திய அரசு தனது ஆண்மையை நிரூபிக்குமா?

Web Counter Code