இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, September 8, 2009

ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்! -அபூசாலிஹ்







ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!

-அபூசாலிஹ்

நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது. காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் தனது வெறுப்பினை வெளிக்காட்டினர்.

வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.

இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.

கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்ùஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா செய்துள்ளான. அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.
மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.

இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.

அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்ùஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.

ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.

நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.

தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத் தண்டனை அடையப் போகிறான்.

ஷெர்பினியின் அடக்கம் சொந்த நாடான எகிப்தில் நடந்தது. ஜெர்மனி கடும் கண்டனத்திற்கு இலக்கானது. உலகெங்கிலுமுள்ள ஜெர்மனி தூதரங்களின் வளாகங்கள் பல, செருப்புகளாலும், அழுகிய முட்டைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன.

ஷெர்பினியின் கணவரின் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் வெளிவர வில்லை. ஷெர்பினியின் கணவனை சந்திக்க முயன்ற ஈரானின் பிரஸ் டி.வி. செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்.

வீரப்பெண்மணி மர்வா ஷெர்பினி யின் மறுமை வெற்றிக்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் தொடர்கின்ற


ராஜசேகர ரெட்டியும்! ஆந்திர முஸ்லிம்களும்!

ஒரு மாநில முதல்வரின் திடீர் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும்.


ஒய்.எஸ்.ஆர். என அன்பாக அழைக்கப்படும் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த செய்தி அரசியல் அரங்கை உலுக்கியது.

அவரது நலத்திட்டங்கள் பல மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல.

டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி யின் 'ராஜீவ்காந்தி காப்பீடு திட்டம்' நம் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் 'கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு' முன்னோடித் திட்டமாகும்.

ஆந்திரா என்றால் கடன் தொல் லையால் கொத்து கொத்தாக தற் கொலை செய்யும் விவசாயிகள்தான் நினைவுக்கு வரும். சந்திரபாபு நாயூடுவின் ஆட்சிகால சோகத்தை மாற்றி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தவர் ஒய்.எஸ்.ஆர்.

ஒய்.எஸ்.ஆரின் அதிரடி அகில இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆரின் அரும் முயற்சியால் பாரதீய ஜனதாவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது. பிரதமர் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடிக்கலாம் என கனவில் மிதந்த அத்வானிகளின் கதி அதோகதியாகிப் போனது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தங்களது தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என பிளாக்மெயில் செய்து மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டவர்களின் கனவில் வண்டி வண்டியாக மண் அள்ளிப் போட்டவர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மதவாத கும்பலின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். காங்ரஸின் வெற்றிக்கு ஆந்திரா கைகொடுத்தது.

டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மறைவு நாட்டின் சகல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து மர்மங்களும், யூகங்களும் புற்றீசல்களாக புறப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர முஸ்லிம் சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக போர்க் கோலம் பூண்டவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என சூளுரைத்தார்.

டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதன்முறையாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களுக்கு, தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.

ஆந்திராவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப் பித்தார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடா? அனுமதிக்க மாட்டோம் என சதிகார கும்பல் சதி வலைகளைப் பின்னியது. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர்.

முஸ்லிம்களுக்கு பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளை நிறைவேற்றுவோம் என பேச்சளவில் முழங்கும் வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே கண்ட இந்த கள்ளம்கபடமற்ற சமுதாயம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக் காகப் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிய வெகுண்டெழுந்த ஒய்.எஸ். ஆரைக் கண்டு வியந்தது.

எதற்கும் கலங்காது தனது முடிவில் உறுதியாக இருந்து முஸ்லிம் இடஒதுக் கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட முட்டுக் கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து சட்ட யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடினார்.

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. செயற் கரிய செயல் செய்த ராஜ சேகர ரெட்டி நாட்டு மக்க ளால் பாராட்டப் பெற்றார்.

ராஜசேகர ரெட்டி யின் ஆற்றலும், எடுத்தக் காரியத்தை எப்பாடுபட் டேனும் நிறைவேற்றும் உறுதியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று.

அரசு நிறுவனங்களால், அரசியல் பெரும்புள்ளிகளால் அபகரிக்கப்பட்ட வக்ஃபு நிலங்களை மீட்டு உரிய முறை யில் வாரியத்திடம் ஒப்படைப்பதில் ஒய்.எஸ்.ஆர். பெரிதும் ஆர்வம் காட்டினார்.

அரசு நிறுவனம் ஒன்று 50 ஏக்கர் வக்ஃபு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அது ஹஜ்ரத் பாபா ஷர்ஃபுதீன் தர்காவுக்குச் சொந்தமான நிலம். அதன் இன்றைய மதிப்பு 350 கோடியாகும். அதனைத் தயங்காமல் அரசு ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார். இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வரை நாங்கள் எப்போது காணப் போகிறோம் என தேம்புகிறார் ஹைதராபாத்தின் முஸ்லிம் பிரமுகர் மவ்லவி ஆகில் காசிமி.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழைய ஹைதராபாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். காங்கிரஸ் பெரும் புள்ளிகளால் எப்போதும் கருவேப்பிலையாக மட்டுமே கருதப்பட்டு வந்த (ஹைதராபாத் முஸ்லிம் களிடையே செல்வாக்கு பெற்றிருந்த) அகில இந்திய மஜ்லிúஸ இத்திஹாத்துல் முஸ்லிமீன் அமைப்பினரிடையே சிறந்த முறையில் நட்பு பாராட்டினார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. முதல்வரும் ஏ.ஐ.எம். எம்.முடன் இணைந்து சிறுபான்மை வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டார்.

ஆந்திராவில் (தமிழ்நாட்டை விட) மிக சிறுபான்மையினராக உள்ள கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஒய்.எஸ்.ஆர். அனைத்துப் பிரிவு மக்க ளின் பேரன்புக்கு உரியவராக திகழ்நதார்.

சமூக நல்லிணக்கம் நாளும் வாழ வேண் டும் என விரும்பும் ஒவ்வொரு வரும் நெகிழ்ச்சியோடு போற்றும் சரித்திரமானார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்

ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகு




ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகும் ஆர்.எஸ்.எஸ்.

-மருதநாயகம்

பாரதீய ஜின்னா பார்ட்டியின் ஜின்னா ஆதரவு கானங்கள் இந்திய அரசியல் அரங்கில் அந்தக் கட்சியின் பெயரை ஜின்னாபின்னப்படுத்திய பிறகு அந்தக் கட்சியின் ஆதாரப் பீடமான ஆர்.எஸ்.எஸ். குரு பீடத்தின் முக்கியப் பெருந்தலை களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளில் ஒருவராக அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், ஜின்னா பற்றி தெரிவித்த கருத்தினால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாகிஸ்தானின் சிற்பியான முஹம்மது அலி ஜின்னா, பிளவுபடாத மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டமைப் பதில் உறுதியுடன் நின்றார். ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மூளைச்சலவை செய்ததால் முஸ்லிம் களுக்கு தனி நாடு உருவாக்கும் அளவுக் குச் சென்றார்.

'ஜின்னா ரொம்ப நல்லவரு' பிரிட்டிஷ் காரர்கள்தான் அவரைக் கொடுத்தார்கள் என்ற ரீதியில் சுதர்சன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது.

ஜின்னா குறித்து வெறுப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யும் திறனாய்வாளர்கள், ''ஜின்னா சிறந்த இந்தியர்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைக்கும் ஆர்வத்துடன் இயங்கினார்; ஜின்னா போன்ற விடுதலைப் போராட்டத் தளபதிகள் நாட்டில் தோன்று வது மிகவும் அரிது'' என்றே சிலாகித்துக் கூறுகிறார்கள்.

இந்திய வரலாற்றில் மூன்று பெருந் தலைவர்களின் அருமையான பக்கம் அறியப்படாமலே போய்விட்டது என்பது உண்மை தேசப்பற்றார்களின் ஏக்கமாக இருந்தது.

ஒருவர் பெரியார் ஈ.வே.ரா., இரண் டாமவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், மற்றொருவர் முஹம்மது அலி ஜின்னா.

இவர்கள் மூவரின் சாதனை சரித்திரங் கள் இவற்றின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆளுமை அனைத்துமே சரிவர இந்திய மக்களால் அறியப்படாத அவல மாகவே அமைந்திருக்கின்றன. இன்று வரை இதுதான் நிலவரம் என்பது ஓர் உறுத்தலுக்குரிய உண்மையாகும்.

எந்த அளவு சிறந்த மனிதராக இருந் திருந்தால் அவரை காலகலமாக விமர் சித்த முகாமைச் சேர்ந்தவர்களால் கூட உண்மைகளை மறைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி உரைத்தே தீரவேண் டிய நிலையில் ஜின்னாவைக் குறித்த உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

அத்வானிகள், ஜஸ்வந்த் சிங்குகள் மட்டுமல்லாமல், சுதர்சனங்களும் கூட உண்மைகளை உரைத்தே தீரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிற

Web Counter Code