இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, September 8, 2009

ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகு




ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகும் ஆர்.எஸ்.எஸ்.

-மருதநாயகம்

பாரதீய ஜின்னா பார்ட்டியின் ஜின்னா ஆதரவு கானங்கள் இந்திய அரசியல் அரங்கில் அந்தக் கட்சியின் பெயரை ஜின்னாபின்னப்படுத்திய பிறகு அந்தக் கட்சியின் ஆதாரப் பீடமான ஆர்.எஸ்.எஸ். குரு பீடத்தின் முக்கியப் பெருந்தலை களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளில் ஒருவராக அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், ஜின்னா பற்றி தெரிவித்த கருத்தினால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாகிஸ்தானின் சிற்பியான முஹம்மது அலி ஜின்னா, பிளவுபடாத மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டமைப் பதில் உறுதியுடன் நின்றார். ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மூளைச்சலவை செய்ததால் முஸ்லிம் களுக்கு தனி நாடு உருவாக்கும் அளவுக் குச் சென்றார்.

'ஜின்னா ரொம்ப நல்லவரு' பிரிட்டிஷ் காரர்கள்தான் அவரைக் கொடுத்தார்கள் என்ற ரீதியில் சுதர்சன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது.

ஜின்னா குறித்து வெறுப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யும் திறனாய்வாளர்கள், ''ஜின்னா சிறந்த இந்தியர்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைக்கும் ஆர்வத்துடன் இயங்கினார்; ஜின்னா போன்ற விடுதலைப் போராட்டத் தளபதிகள் நாட்டில் தோன்று வது மிகவும் அரிது'' என்றே சிலாகித்துக் கூறுகிறார்கள்.

இந்திய வரலாற்றில் மூன்று பெருந் தலைவர்களின் அருமையான பக்கம் அறியப்படாமலே போய்விட்டது என்பது உண்மை தேசப்பற்றார்களின் ஏக்கமாக இருந்தது.

ஒருவர் பெரியார் ஈ.வே.ரா., இரண் டாமவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், மற்றொருவர் முஹம்மது அலி ஜின்னா.

இவர்கள் மூவரின் சாதனை சரித்திரங் கள் இவற்றின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆளுமை அனைத்துமே சரிவர இந்திய மக்களால் அறியப்படாத அவல மாகவே அமைந்திருக்கின்றன. இன்று வரை இதுதான் நிலவரம் என்பது ஓர் உறுத்தலுக்குரிய உண்மையாகும்.

எந்த அளவு சிறந்த மனிதராக இருந் திருந்தால் அவரை காலகலமாக விமர் சித்த முகாமைச் சேர்ந்தவர்களால் கூட உண்மைகளை மறைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி உரைத்தே தீரவேண் டிய நிலையில் ஜின்னாவைக் குறித்த உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

அத்வானிகள், ஜஸ்வந்த் சிங்குகள் மட்டுமல்லாமல், சுதர்சனங்களும் கூட உண்மைகளை உரைத்தே தீரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிற

No comments:

Web Counter Code