இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, September 8, 2009

ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்! -அபூசாலிஹ்







ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!

-அபூசாலிஹ்

நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது. காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் தனது வெறுப்பினை வெளிக்காட்டினர்.

வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.

இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.

கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்ùஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா செய்துள்ளான. அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.
மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.

இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.

அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்ùஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.

ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.

நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.

தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத் தண்டனை அடையப் போகிறான்.

ஷெர்பினியின் அடக்கம் சொந்த நாடான எகிப்தில் நடந்தது. ஜெர்மனி கடும் கண்டனத்திற்கு இலக்கானது. உலகெங்கிலுமுள்ள ஜெர்மனி தூதரங்களின் வளாகங்கள் பல, செருப்புகளாலும், அழுகிய முட்டைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன.

ஷெர்பினியின் கணவரின் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் வெளிவர வில்லை. ஷெர்பினியின் கணவனை சந்திக்க முயன்ற ஈரானின் பிரஸ் டி.வி. செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்.

வீரப்பெண்மணி மர்வா ஷெர்பினி யின் மறுமை வெற்றிக்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் தொடர்கின்ற

No comments:

Web Counter Code