இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 24, 2007

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?
அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் நட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.
தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.
வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?
வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.
வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்

நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம் (வீடியோ)

நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம்
ஹபீபா பாலன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சி.என்.என்லிஐ.பி.என் தொலைக்காட்சியில் பிரபல இதழியலாளர் கரண்தாப்பரிடம் பேட்டியளிக்க வந்தபோது கோத்ரா முஸ்லிம்கள் கோரக் கொலைகள் பற்றியும், அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடினார்.
நவீன நீரோ மன்னன் என்று உங்களை உச்சநீதிமன்றம் கூறியிருக் கிறதே போன்ற பல்வேறு கேள்வி கணைகளுக்கு மோடி திக்கினார் திணறினார். மூன்று நிமிடத்துக்குள் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார் மோடி பேட்டி முடித்து விட்டது. மோடி ராஜ்யம் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்து விடுமா?
மோடியின் பேட்டி...
கரண்தாப்பர்: நீங்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதற்காக வெறுக்கப்படுகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள் இதை ஒரு இமேஜ் பிரச்சினையாக படவில்லையா?நரேந்திர மோடி: இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த பாணியில் பேசிக்கொள்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்.
கரண்தாப்பர்: இது உங்களுக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று நபர்களின் சதி என்று சொல்கிறீர்களா?
நரேந்திர மோடி: நான் அதைப் பற்றி பேசவில்லை?
கரண்தாப்பர்: ஆனால் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் பற்றிய விஷயம் என்று கூறுகிறீர் களா?
நரேந்திர மோடி: இது எனக்கு வந்த தகவல். இது மக்களின் குரல்.
கரண்தாப்பர்: 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் 'குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியது. பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செப்டம்பர் 2004ல் 'நவீன நீரோ மன்னன் போல நீங்கள் நடந்து கொண்டதாக கூறினார். பிரச்சினை உங்களிடம் தான் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நரேந்திர மோடி: கரண், உங்களிடம் நான் சிறிய வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு விஷயத்திற்குப் போகவேண்டாம். அதில் என்னைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் எனக்கு சந்தோஷமே.
கரண்தாப்பர்: அதில் உங்களைப் பற்றி நல்லவை எதுவும் எழுதப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து இது.
நரேந்திர மோடி: இதுதான் தீர்ப்பு என்றால் அதற்கு பதில் கூறுவதில் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: தலைமை நீதிபதியின் விமரிசனம் ஒரு 'பெரிய விஷயமே இல்லை என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: தயவு செய்து நீதிமன்ற விஷயத்தை விட்டு விடுங்கள். அந்த வாசகங்களையும், உதாரணங்களை யும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
கரண்தாப்பர்: ஒ.கே. இது தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து இல்லையா? 4,600 வழக்குகளில் 2,100 வழக்குகளை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கூறுகிறது. குஜராத்தில் நீதி கிடைக்காது என்றே மக்கள் நம்புகிறார்கள்.
நரேந்திர மோடி: .....?
கரண்தாப்பர்: இந்தியாடுடே உங்களை சிறந்த முதல்வர் என்று கூறினாலும் ராஜிவ்காந்தி அறக்கட்டளை குஜராத் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்று கூறினாலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றே கூறுகிறார்கள். ஏன் இதை உங்களது இமேஜ் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை.நரேந்திர மோடி: நான் குஜராத்துக் காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன் (அடங்கப்பா) போதும் ப்ளீஷ் கரண்.கரண்தாப்பர்: ஆனால் மோடி நான் ஒன்றும் தவறாக பேசி விடவில்லை. உங்கள் இமைஜை சரி செய்ய முயலாதது ஏன் என்பதுதான் என் கேள்வி?நரேந்திர மோடி: அதற்கு இது நேரமல்ல என்று மழுப்பிய மோடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டு மிடறு விழுங்கினார்.
குஜராத் இனப்படுகொலைகள் குறித்த கேள்வியால் திணறிய மோடி, உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்த கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். ஆத்திரமும் அவமானமும் ஒருசேர மோடி கோழை போல ஓடினார்

Web Counter Code