இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, August 16, 2007

மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்புகள்:
நெஞ்சில் அலைபாயும் அனல்கள்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்புகள் குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம்மாநகரங்களில் முறையே டிசம்பர் 1992 லி ஜனவரி 1993 மற்றும் நவம்பர் லி டிசம்பர் 1997ல் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறிவிட்டன.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப் படுத்தவில்லை. ஆனால், அத்தகைய நாசகாரச் செயல்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் பற்றிய படங்களை பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி கண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்டோ ருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.
இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றிலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றுப் பெறாத நிலையில் இந்த வாரம் கோவை குண்டுவெடிப்பு குறித்து சில உண்மை களை மக்கள் மன்றத்தில் வைப்பது அவசியமாகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அனைவரையும் கருணையின் அடிப்படையில் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி விடுதலைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
சாதாரணமாக நீதிமன்றங்களில் கொலை வழக்குகள் நடைபெறும்போது, அதற்கான தண்டனைகளை நீதிபதி அளிக்கும்போது கொலைக்கான உள்நோக்கம் (ம்ர்ற்ண்ஸ்ங்) என்ன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கு குறைவான தண்டனையோ அளிப்பார். அதேபோல் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் குண்டு வெடிப்புகளுக்கான உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்க துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்கு காரணமானவர்களை, அவர்களது தலைவர்களை தாக்க வேண்டுமென்பது தான். எனவே, இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது.
பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலாவரும் பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடு களின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதை கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர் டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்கு செல்வோம்.
நவம்பர் 29, 1997 சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மற்றும் மாநாட்டிற்காக பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவந்த வேளையில் தான் அந்த செய்தி 39, இப்ராஹீம்ஜி சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற முகவரியில் அப்போது இருந்த தமுமுகவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது.
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்கு தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல் உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி (22) மற்றும் ஷபி (20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இத்துடன் பிரச்சனை முடிவடைந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் இதற்கு பிறகு வந்த செய்திகள் நமது இதயங்களைப் பிளப்பதாக இருந்தது. காவலர் செல்வராஜ் படுகொலைக்கு பிறகு அன்று என்ன நடந்தது என்பது குறித்து தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி பின்வருமாறு பதிவுச் செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதை கடைகள் முதல் தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர் தான் தீ வைப்பு சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில்: 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்'' (ஆதாரம்: தீ வீக், 14 டிசம்பர் 97 இதழில் இ. விஜயலட்சுமி எழுதிய இங்ஹற் ஸ்ரீர்ய்ள்ற்ஹக்ஷப்ங்ள் கட்டுரை)
மறுநாள் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்கள் கோவை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதநேயர்களுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய நாள். கோவை தீப்பிடித்து பற்றி எரிந்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் நானும் நமது கழகத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்வும் நேரடியாக கோவைக்கு கிளம்பி னோம்.
கோவை கலவரத்தை காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் தலைமையேற்று நடத்தின. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய கோவை காவல்துறை தலைமையக துணை ஆணையாளர் இருந்த ஈ மாசானமுத்து.
ஆனால், காவல்துறையில் நல்ல நெஞ்சங்களும் உண்டு என்பதை பறைச்சாற்றும் நிகழ்வு நாங்கள் கோவைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்டது. கோவை நகர எல்லைக்கு சற்று தூரத்தில் ஒரு காவல்துறைச் சாவடியில் நமது வாகனத்தை நிறுத்தி கோவைக்கு செல்லும் வழியை கேட்டோம். வழியைச் சொன்ன காவலர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களில் கோவையில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்விற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதை உணர்த்தியது.
அந்தக் காவலர் எங்களிடம்: ''உங்களையெல்லாம் பார்த்தால் நல்லவர்கள்போல் தெரிகின்றது. கோவையில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். தயவு செய்து நீங்கள் கோவை செல்ல வேண்டாம். இந்தப் பாதையில் திரும்பி திருப்பூருக்கு செல்லுங்கள்'' என்று அந்தக் காவலர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் நாம் கோவை நோக்கியே நமது பயணத்தைத் தொடர்ந்தோம். டிசம்பர் 2 அன்று காலை கோவை சென்று சேர்ந்தோம். அங்கு நாம் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவை இன்னும் ஆறாத தழும்புகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று கோவையில் என்ன நடந்தது. நாம் சொல்வதை நடுநிலையானதாக சிலர் கருதமாட்டார்கள். எனவே, கோவை முஸ்லிம் இன பேரழிவை பதிவு செய்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் கருத்துகளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13லி26, 1997) அதன் சிறப்பு செய்தியாளர் டி.என். சுப்ரமணியன் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
''மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்து காவலர்கள் மட்டுமில்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து திருச்சி சாலை லி டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல்துறையினரின் மனைவி மார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
''உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைய்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடைவீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கோவையில் மிகப் பிரபலமான முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சோபா கிளாத் சென்டர் என்ற மூன்று மாடி கட்டிடம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகார கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தெருவில் போட்டு தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
''காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி. ரவி அங்கே வந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதலில் சி.டி. தண்டபாணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
''காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு முஸ்லிம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர், அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார் (அவர் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி தினமணி இதழில் வெளியானது). இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.''
தி வீக் இதழின் செய்தியாளர் விஜயலட்சுமி முஸ்லிம்களின் வீடுகள் எவ்வாறு தாக்கப்பட்டன என்பது குறித்து பின்வருமாறு வர்ணிக்கிறார்:
''வன்முறையாளர்கள் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. பி1 காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கனி ராவுத்தர் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பிளாஸ்டிக் மொத்த வியாபாரி ஒருவர் நம்மிடம் 'எனது மனைவி, ஆறு வயது, மூன்று வயது மற்றும் 6 மாதங்கள் கொண்ட எனது 3 குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து எனது வீட்டை தீக்கிரையாக்கியது' என்றார்.' எங்களுக்குச் சொந்தமான கிட்டங்கியும் வியாபாரப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கப்பட்ட. 'எல்லா திசைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது. நான் பி1 காவல் நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் கடைசிவரை வரவேயில்லை. இறுதியாக நான் என் குடும்பத்தினருடன் மேல் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் குதித்தோம். அப்போது எனது ஆறு மாத குழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது. மற்ற குழந்தைகளுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத் திணறியது' என்றார்.
''தனது ஆயுட்கால சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்யேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்தலைவி அழுதுக் கொண்டே நம்மிடம் ''எனது கல்யாண பட்டுச்சேலை எரிந்துவிட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை'' என்றார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு தகவல் தந்த போதினும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்''
பிரபல பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நய்யார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் 'ஆ ஸ்ரீர்ஞ் ண்ய் ற்ட்ங் ரட்ங்ங்ப்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''நாடாளுமன்றத்தின் கவனத்திலிருந்து தப்பும் அளவிற்கு கோவை கலவரங்கள் லேசானது அல்ல. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்பு 200 கோடியைத் தாண்டும்.
இதனை ஹிந்துலிமுஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. 'காவல்துறையினர், ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்' என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இதனை தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு சிறிய பிரச்சனை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்தீக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரிப் கர்ணகொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறக்க முடியாதவை.'
நமது வர்ணனையை விட தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி வீக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்லிடிசம்பர் 1997ல் நடந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறி குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த கலவரங்களை முன் நின்று நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது அல்லது ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120பி, 153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை.
செல்வராஜ் கொல்லப்பட்ட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துன் நாசர் மஃதனியை போல் வருடக்கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூட சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரின் உடல்களை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அதனை கோட்டைமேட்டிற்கு எடுத்து வந்து. இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் அடக்கவிடத்தில் அடக்கப் பட்டது.
கோவை வரலாற்றில் இறுதி ஊர்வலங்களின்போது எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்டு. ஆனால், அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றியபோது, ''நல்ல காவல்துறை அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும்'' என்று குறிப்பிட்டேன்.
அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் சந்தானமும், ஊர்வல பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. ஆர்.வி.கோபாலனும் எனது உரையை பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதி கிடைக்கவில்லை.
இந்த பின்னணியில் தான் தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்த அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரை சிறையில் சந்தித்தபோது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்கு பெரும் தண்டனையாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்கு சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திராபதி நீதி வழுவாமல் தனது இறுதித் தீர்ப்பை வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்

Web Counter Code