இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 30, 2007

hyderabad bomb blast -fact finding commitee statemment news from aabusalih in tamil


hyderabad bomb blast -fact finding commitee statemment news from aabusalih in tamil

ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!
லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.
உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.
பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.
மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.
காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.
ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.
எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.
குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.
வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன

Sunday, May 27, 2007

hyderabad bomb blast abusalih news in tamil


hyderabad bomb blast abusalih news in tamil

ஹைதராபாத் பயங்கரம்!தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள்...
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே

Saturday, May 26, 2007


காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்

காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்
காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.
காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.
தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.
'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.
பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்

Sunday, May 20, 2007

Saturday, May 19, 2007

மாயாவதியை முதல்வராக்கிய முஸ்லிம்கள்
உ.பி. தேர்தலில் பரபரப்பு திருப்பம்
விரிவான தகவல்கள்
அபூசாலிஹ்
விளிம்பு நிலை மக்களின் சமூகத்தில் பிறந்த செல்வி. மாயாவதி உ.பி.யின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுள்ளார். 1991க்கு பிறகு தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது முக்கியத்துவத்துவம் மிகுந்ததாக கருதப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 403 சட்டமன்றத் தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் 206 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதுவரை ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள் ளது. முலாயம்சிங் யாதவ் ஆட்சியில் இருந்த பல மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 143 இடங்களைக் கைப்பற்றியிருந்த அந்தக் கட்சி தற்போது வெறும் 97 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. முஸ்லிம்களின் நேசக் கட்சியாக தங்களைத் தாங் களே வர்ணித்துக் கொண்ட இந்தக் கட்சி, முஸ்லிம் களின் முழுமையான வாக்கு களைப் பெற முடியாமல் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று. முஸ்லிம் விவகாரங்களில் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதும் தேனொழுகப் பேசி ஏமாற்றுவதும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களைப் படுகொலை செய்வதும் போன்ற செயல்களால் முஸ்லிம் சமுதாயத்தை விட்டுத் தள்ளிநிற்க வேண்டிய பரிதாப நிலை சமாஜ்வாடி கட்சிக்கு ஏற்பட்டது.
பாஜக நீங்கலாக பிரதான கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து களமிறங்கின. பிரிந்து கிடக்கும் சமூகச் சூழலில் (அரசு புள்ளி விவரப் படி) 18 சதவீதமாக செறிந்து வாழும் முஸ்லிம்களை அனைத்து கட்சிகளும் ஒரு மிரட்டும் அம்சமாகவே பார்த்து வந்தன.
முலாயமின் சமாஜ்வாடிக் கட்சி முஸ்லிம்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் வாக்குகளை அள்ளி வீசியது. காங்கிரஸின் சார்பாக வாக்குகளை அள்ளிவீச 'புதிய இளவரசர்' (ராகுல்காந்தி) களமிறக்கப்பட்டார். அவர் தனது குடும்பம் ஆட்சியில் இல்லாததால்தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற படுவிவர மான(?) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி.பி.சிங்கின் ஜனமோர்ச்சா கட்சியும் முஸ்லிம் களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு அரசியலில் இறங்கியது.
பல்வேறுபட்ட முஸ்லிம் இயக்கங் களை ஒன்றிணைத்து ம.உ.எ. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற முஸ்லிம் இயக்கமும் தேர்தலில் இறங்கியது. ஷியா மார்க்க அறிஞர் கல்பிஜவாத் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக விளங்கினார். முஸ்லிம் வாக்குகளை பிரதானப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தேர்தலில் குதிக்கும் செய்திகளை அறிந்தவுடன் பாஜக வட்டாரம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் கன்னாபின்னாவென பிரியும்; முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதால் மதச்சார்பற்ற சக்திகள் தோல்வியை சந்திக்கும்; சந்தடி சாக்கில் நாம் எளிதாகத் தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற்று விடலாம் என உறுதியாக நம்பியது. முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக குறுந்தகடு பிரச்சார சி.டி.க்களைப் பரப்பி சமூக பதட்டத்தை ஏற்படுத்தியது பாஜக.
அதனால் தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கும் இலக்காயினர். இருப்பினும் தேர்தல் களத்தில் வெற்றி நமக்கே என உறுதியாக நம்பினர். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இனி நேரடியாக டெல்லி செங்கோட்டை தான் என்றும் பகல் கனவு கண்டிருந்தனர்.
ஆனால், முஸ்லிம்கள் எத்தகைய மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகாமல் மதவாத சக்திகளை தோற்கடிக்கும் வலுவுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வழங்கியுள்ளனர். முஸ்லிம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவை தோற்கடிக்க உதவியது. இதன்மூலம் உத்தரப் பிரதேச அரசியல் அரங்கில் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 88 இடங்களைப் பெற்றிருந்த பாஜக, வெறும் 50 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக உறுப்பினர்கள் டெபாஸிட் இழந்தனர். ஒரு இடம் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு கிடைத்தது. பாஜகவின் மாநிலத் தலைவர் கேசவநாத் திரிபாதி போன்ற முக்கியத் தலைகள் கூட மண்ணைக் கவ்வினர்.
புதுடெல்லிக்கு அருகிலிருக்கும் நொய்டாவிலும் நேபாளத்தின் எல்லைப்புறத்தில் இருக்கும் பல்லியா தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சியின் பரவலான செல்வாக்குக்கு சான்றாக விளங்குகிறது. இந்த வெற்றியை பெரியார், அம்பேத்கார், சாகுஜி மகராஜ், ஜோதிபா பூலே மற்றும் நாராயணன் குரு போன்ற தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு அர்ப்பணிப்ப தாகக் குறிப்பிட்டார்.
இதில் உயர்ஜாதி என்று குறிப்பிடப் படும் மக்களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு வியூகங்களை மாயாவதி வகுத்தார். (ஏன் அவர்கள்தான் வாக்குறுதி களை அள்ளிவீசி ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? எம் தலித் சகோதரியால் முடியாதா?) ராஜபுத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொகுதிகளை அள்ளி வழங்கினார்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 86 தொகுதிகளை மாயாவதி ஒதுக்கினார். சட்டமன்றத் தேர்தலில் வெறும் 24 பிராமண வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 61 முஸ்லிம்களை மட்டுமே மாயாவதி தனது கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தினார். இதில் 30 முஸ்லிம்கள் வெற்றி பெற்று மதவாதத்திற்கு எதிரான போரில் முன்னிலை வகித்தனர். நாங்கள் பிராமண வேட்பாளர்களை நிறுத்திய தொகுதிகளில் பிராமணர்களை விட அதிக அளவு முஸ்லிம்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன. (உதாரணம் சிபிராமு தொகுதி)
பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் பிராமணர்கள் 34 சதவீதத்தினரும், முஸ்லிம்கள் 49 சதவீத்தினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண வேட்பாளர்கள் மெஹ்ரோனி, ஹத்ராஸ், ஆக்ரா மேற்கு, திபய், பா, மதோகர், மச்சிலிஸ்கர், பர்சாத்தி, அவுரை, சவ்பேபுர், ஸைத்புர், ஜஹனாபாத், அவ்ரையா, ஹன்டியா, அத்தவ்லியா, பிங்கா, நாத்பூர், ருத்ராபூர், கர்வாரா, பிரதாப்கர், பில்கிராம், மஹோனா, கர்சனா மற்றும் சில்லுபர் போன்றவை வெற்றி பெற்ற தொகுதிகளாகும். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பிராமண வேட்பாளர்கள் வெற்றி பெற்றதில் பெரும்பாலோர் முஸ்லிம் கள் உள்ளிட்ட பிற சமூக ஓட்டுக்களை பெற்றே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வியப்பூட்டும் செய்தியுமாகும்.
சமாஜ்வாடி கட்சியை எதிர்கொள்ளும் விஷயத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் பங்கு மிகமுக்கிய இடத்தை வகித்ததாகவும், சமாஜ் வாடி கட்சிக்கு மாற்றாக முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியை தெரிவு செய்து விட்டதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆக்ரா கான்த், ஆக்ரா மேற்கு, திபய், நான்பரா, பஹோஜி, பிலாஸ்பூர், சந்த்பூர், பிஜ்னர், அப்ஸல்கர், மற்றும் போஜ்புரா வெற்றியின் முகட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது.
முஸ்லிம்களுக்கு கெடுதலை மட்டுமே புரிந்துவரும் பாஜக தோற்றுவிட்டது தேசிய அரசியலின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் 50 மட்டுமே.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி யும் போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009ன் முக்கிய பிரதமர் வேட்பாளர் மாயாவதி என இப் போது ஊடகங்களில் சில அந்த இரும்புப் பெண்மணியை இப்போது உசுப்பிவிட துவங்கியுள்ளன.
பிராமணர்களில் ஏழு பேருக்கு அமைச்சர் பதவியும், முஸ்லிம்களில் ஐந்து பேருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார் மாயாவதி.
உத்தரப்பிரதேச முஸ்லிம் அறிவுஜீவிகளின் மனங்களில் பெரும் சிந்தனை யோட்டம் அலையடிக்கத் தொடங்கி விட்டது.
பல்வேறு பிரிவாக முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடும் என்று நினைத்தவர்களின் எண்ணங்களை முஸ்லிம்களின் பெரும்பிரிவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கும் அடுத்து சமாஜ்வாடிக்கும் காங்கிரசுக்கும் சென்றன. இதன்மூலம் உ.பி. முஸ்லிம்கள் அழுத்த மான செய்தியை வழங்கியுள்ளார்கள்.
படுதோல்வியை சந்தித்த பாஜக முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்தி, அவர்களைக் கொச்சைப்படுத்திய அவதூறு குறுந்தகட்டை மாநில பாஜக வெளியிட்டதுதான் தங்கள் அணியின் படுதோல்விக்குக் காரணம் என பாஜகவின் தேசியத் தலைமை இப்போது ஒப்பாரி வைக்கிறது.
மாயாவதி தவறே செய்யாதவர் அல்ல. அவ்வாறே முலாயம் தவறுகள் மட்டுமே செய்தவரும் அல்ல. அதிக சதவீதம் உள்ள முஸ்லிம்கள் எப்போதும் தங்களுக்கு இழைக்கப்படும் தவறுகளை சகித்துக் கொண்டு ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல.
தலித் சகோதரி மாயாவதியின் வெற்றிக்காக அவரை வரவேற்கிறோம். அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம். இதில் முஸ்லிம் அரசியல் சிந்தனையாளர் களுக்கு கற்றுக் கொள்ள பாடங்கள் ஏராளம் உண்டு.
மாயா ஜாலம்!
முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதிகளில் பரவலாக வாக்குகள் பதிவாயின. இதில் 60 சதவீத வாக்குகள் மாயாவதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருந்த முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு முலாயமின் பக்கம் சாய்ந்தனர். இப்போது அவர்கள் மாயாவதியை ஆதரித்தது ஆச்சரியமாக இருக்கிறது.
முலாயம்சிங் கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் முஸ்லிம்களை கோபம் கொள்ள வைத்தது. பாஜகவுடன் முலாயம்சிங் யாதவ் 'ரகசிய உறவு' வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முலாயம் பதிலளிக்கவில்லை. அவரது ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த கேசரிநாத் திரிபாதி சபாநாயகராக பணியாற்றியது இந்த ரகசிய உறவு அம்பலப்படுத்தியது. வேலையற்ற இளைஞர்களும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டபோது அதிகமான வேலையற்ற சமூகமாக கருதப்படும் முஸ்லிம் களுக்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தவறினார். உருது பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவித்திருந்த முலாயம், அதை கடைசி வரை நிறைவேற்றவில்லை.
இதுபோன்ற ஏராளமான காரணங்களால் வெறுத்துப் போன முஸ்லிம்கள், மாயாவதியின் பக்கம் சாய்ந்தனர். வேறு எந்தக் கட்சியும் கொடுக்காத அளவுக்கு முஸ்லிம்களுக்கு அவர் தொகுதிகளை வாரி வழங்கியதும் முஸ்லிம்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டியது.
ராகுல் அலை? காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட ராகுல் காந்தி உ.பி. தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்தார். 106 இடங்களில் சாலையோர ஊர்வலங்களை நடத்தினார். முலாயமை கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் இதை ரசித்தாலும் வாக்குகளை அளிக்கவில்லை. ஏற்கனவே இருந்த 26 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் மூன்று இடங்களை இழந்து 22 இடங்களைப் பெற்றிருக்கிறது. வாக்கு வங்கியும் உயரவில்லை. மொத்தத்தில் ராகுலின் அரசியல் வாழ்க்கையில் ஒரு படிப்பினை என்றால் மிகையல்ல

சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்


சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்
துரோகிகள் சூழ்ந்து நிற்க, அந்த ஒற்றை மனிதன் கம்பீரமாக நடந்து சென்று மரணத்தை எதிர்கொண்ட காட்சி உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டு மின்றி, அதற்குக் காரணமான காட்டுமிராண்டிகளின் மீதான ஆத்திரமும் காட்டுத் தீயாக உருவெடுத்தது.
தியாகத் திருநாளன்று அந்த வீரபூமியின் மகிழ்ச்சிக்கு தீ வைத்த தீயவர்களின் செயல் கண்டு உலகம், குமுறும் எரிமலையாய் மாறியது. கண்டன ஆர்ப்பாட்டங் களும், கண்டனக் கருத்தரங்குகளும், ஆர்ப்பரிப்பு பேரணியும் போர்ப்பரணி பாடின.
இவை மட்டுமே மாவீரன் சதாம் படுகொலையின் முதல் எதிர்வினைகள் என நாம் எண்ணியிருந்தோம். ஆனால் சதாம் படுகொலை பிஞ்சு உள்ளங்களில் விபரீத எண்ணங்களை விதைத்து சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதயத்தை நொறுக்கச் செய்யும் அந்த விபரீத நிகழ்வு செய்திகள் செவியுறு வோரை வேதனையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சதாம் தூக்குக் கயிறை மாட்டும் முன்பு, வீர உரை நிகழ்த்தி, கம்பீரமாக மரணத்தை எதிர்கொண்ட அந்தக் காட்சிகள் உலகம் முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டன. அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்கள், சிறுமிகள் லி அதைப் போலவே தாங்களும் தூக்குக் கயிற்றினைக் கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் சவூதி அரேபியா விலிருந்து வெளிவரும் முன்னணி செய்தி ஏடான 'அல் ஹயாத்' வெயிட்டிருக் கிறது.
இதுவரை உலகம் முழுவதும் எட்டு பிஞ்சுகள் இந்த விபரீத முடிவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதி கிராமமான சட் லூயிஸைச் சேர்ந்த இஸத் அக்தியின் 12 வயது மகன் அலிஷாத் அக்தி சதாம் ஹுஸைன் உயிர் துறக்கும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு கண்ணீருடன் தொடர்ந்து கேள்வி களால் துளைத் திருக்கிறான். எப்படி சதாமை தூக்கிலிட்டார்கள்? சதாமுக்கு வலித்திருக்கும் இல்லையா வாப்பா? லி எனக் கண்ணீருடன் அலிஷான் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். அலிஷானின் பெற்றோர் வீட்டின் மற்றொரு பகுதி யில் இருக்க, வீட்டின் தட்டுமுடடு சாமான்கள் வைத்திருக்கும் அறையில் சதாம் ஹுஸைனைப் போல் தூக்கு கயிற்றை மாட்ட முயற்சித்து உயிரை விட்டிருக் கிறான். இத்தகவலை பொங்கும் கண்ணீ ருடன் அலிஷான் அக்தியின் இறுதி ஊர்வலத்தில் அவரின் தந்தை இஸத் அக்தி ஆஎட செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.
இவ்வாறே, ஏமன் நாட்டில் 13 வயது ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன், சதாம் ஹுஸைனைப் போல் கயிற்றை மாட்டி உயிரை மாய்த்துக் கொண்டான். இந்தச் சிறுவனும் சதாமின் தூக்கு மேடைக் காட்சியைக் கண்டு கதறிய நிலையிலேயே இருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் தலைநகர் சானாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அந்தக் கொடூரக் காட்சியைக் கண்டனர். வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தங்கள் செல்வ மகன் பாரம்பரிய அரபு உடை யணிந்து தூக்கில் தொங்குவதைக் கண்டதாக அந்தச் சிறுவனின் ஒன்றுவிட்ட சகோதரன் யஹ்யா அல் ஹம்மாதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காவல்துறையினர் இதுகுறித்த உண்மைத் தகவல்கள் வெளிவர விடாமல் கட்டுப்பாடு விதித்ததாக தகவல்கள் வெளியாயின.
சவூதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதி நகரில் 12 வயது சிறுவன் ஒருவன் இதேபோன்ற முடிவினை எடுத்ததாக அல் ஹயாத் தெரிவிக்கிறது. நியூயார்க்கில் தனது போர்வையில் உள்ள நாடாவை கழுத்தில் சுருக்கிட்டு படுக்கையிலேயே ஒரு பாலகன் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் முபஸர் அலி என்ற 9 வயது சிறுவன், சதாம் கொலைக் காட்சி யைத் தொலைக்காட்சியில் கண்டு, அதைப் போல் செய்து, உயிரை இழந்துள்ளான். இந்த சிறுவனுக்கு கச்சிதமாக சுருக்கு மாட்ட இவனது 10 வயது அக்கா உதவி இருக்கிறாள்.
அல்ஜீரியாவில் பள்ளிக்கூட சிறுவர்கள் சேர்ந்து நிற்க 12 வயது சிறுவன் சதாம் படுகொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விபரீத முயற்சியில் இறங்கி உயிரைப் பறிகொடுத்துள்ளான்.
ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 15 வயது மாணவி மின் விசிறியில் தூக்கிலிட்டு மாண்டு போனாள். சதாம் மறைந்த 30ஆம் தேதி சனிக்கிழமை முதல் சாப்பிடாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மட்டுமே பார்த்த அந்த அப்பாவிச் சிறு பெண் இந்த விபரீத முடிவுக்கு வந்ததாக அவரது தந்தை தாளாத துயரத்துடன் தெரிவித் துள்ளார்.
அமெரிக்க அழிவுநடவடிக்கைகளின் விளைவுகள் சர்வதேச சமூகத்தை இந்த அளவுக்கு பாதித்திருப்பதாகவும், இது மிகவும் கவலைக்குரிய செயல் என்றும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிஞ்சுகளின் நெஞ்சுகளில் கூட விரக்தியையும் விபரீதத்தையும் விதைத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் கொடுஞ்செயலுக்கு உலகம் தனது தண்டனையை விரைவில் வழங்கியே தீரும் என்பதில் ஐயமில்லை. நடேன்கேஸ்லவ் என்ற அட்லாண்டா எமோரி பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் கூறியதைப் போல் அமெரிக்கா தனது வக்கிரத்தையும் வன்மத்தையும் ஏற்றுமதி செய்து வருகிறதா? தனது அழிவுச் செயலுக்கு இழி தண்டனையை அமெரிக்கா பெறுவது எப்போது?
குண்டுவீச்சில் அப்பாவி மழலைகளை சாகடித்த ஏகாதிபத்திய பயங்கரவாதிகள் மண்ணுரிமை வீரர்களைப் படுகொலை புரிந்து அந்நாட்டின் மழலைகளையும் மனோதத்துவ ரீதியாகப் பழிவாங்கத் துடிக்கின்றனர்.
இந்நேரத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் சற்றே புன்முறுவலை வரவழைக்கிறது.
போர்த் தளபதிகளின் உடையுடன் 42 சிறுவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஜோத்பூர் நகர் முழுவதும் வந்து சதாம் ஹுஸைனைப் புகழ்ந்தும், அமெரிக்க ஏகாதிபத்திய திமிரை வீழ்த்துவோம் என்ற வீர முழக்கமிட்டும் சென்றுள்ளனர். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இனி வருவது தான் ஆச்சரியம். போர்ப்படைத் தளபதிகள் போல் உடையணிந்து ஊர்வலம் வந்தவர்கள் அனைவரும் சதாம் ஹுஸைன்கள்தான். ஆம் அவர்கள் அனைவரின் பெயரும் சதாம்தான். முதல் வளைகுடா போர்க் காலத்திலிருந்து அந்த ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு சதாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சதாம்களின் ஊர்வலத்தை தோஹித் அஹமத் கான் ஒருங்கிணைத்தார்.
இதில் மூன்று வயது குட்டி சதாமும் பங்கேற்று அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக வீர முழக்கமிட்டான். ஒரு சதாம் மறைந்தார், உலகெங்கும் பல சதாம்கள் உலாவரத் தொடங்கி விட்டனர்.
சதாமின் கடைசி நிமிடங்கள் உண்மை என்ன?
ஊடகங்களின் வர்த்தகப் பசியில் உண்மைகள் உண்டு செறிக்கப்படுகிறது என்பது உலகம் அறிந்த ஒன்று. சதாம் தூக்கி­டப்பட்ட அரை மணி நேரத்தில் அந்த காட்சி தொகுப்பு ஊடகங்களின் வழியே உலகத்தின் பார்வைக்கு வந்தது. குழந்தைகளும், இதயம் பலகீனமும் உள்ளவர்களும் இதனைக் காணவேண்டாம் என்ற அறிவிப்பு எதுவும் இல்லை. அந்த காட்சித் தொகுப்பு, ஒ­ப்பதிவுகள் நீக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது. ஆனால் சதாமுக்கும் அவரது எதிரிகளுக்குமிடையே கடும்விவாதங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின. 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிக்கை, ''மரணத் தருவாயிலும் எதிரியின் பெயரை உச்சரித்தார் சதாம்'' என்ற சொற்றொடரை முகப்பில் வெளியிட்டிருந்தது. பா. ராகவன் எழுதிய அது தொடர்பான கட்டுரையில் சதாம் 'முக்ததா' என்பவரது பெயரைக் கூறினார். முக்ததா என்பவர், இளம் ஷியா போராளியான முக்ததா அல் சத்தரின் தந்தை, அவரை சதாம் கொன்று விட்டார். அதற்குப் பழிவாங்கவே உன்னை தூக்கில் போடுகிறோம் என்று சதாமை பார்த்து கூறியுள்ளார்கள். சதாமும் அவர்களைப் பார்த்து, என்ன முக்ததா முக்ததா? என்று கோபத்துடன் கேட்டார் என்பது போன்றும் எழுதியிருந்தது.
சதாமின் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டுவது வரைதான் முதல் நாள் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால் செல்போனில் பிடிக்கப்பட்ட சதாமின் கடைசி நிமிடத் துளிகள் மறுநாள் தான் வெளியாயின. அதில் சதாம், தூக்கு மேடையில் நின்றவாறு, இஸ்லாமிய இறை நம்பிக்கையை ஒப்புக் கொள்ளும் வசனங்களை உச்சரிக்கும் ஒ­ப்பதிவுகள் அதில் வெளியாயின துல்லியமாகவும் கேட்டன. இந்த செல்போன் படம் மிக ரகசியமாக பிடிக்கப்பட்டு வெளியானது. அதே நேரம், சதாமை பார்த்து இழிவுபடுத்தும் வார்த்தைகளை, நீதியை (!) நிறைவேற்ற வந்த, அமெரிக்க தயாரிப்பு அரசு பிரதிநிதிகள், கீழே நின்று கோஷ மிட்டுள்ளனர். இத்தகைய கொடும் செயல்களால் ஒரு நாட்டின் அதிபர் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதை கண்டிக்க மனமில்லாத வக்கிரபுத்தி கொண்ட ஜார்ஜ் புஷ், சதாமை கொஞ்சம் கண்ணியமாக தூக்கில் போட்டிருக்கலாம் என்று திமிராகப் பேசி இருக்கிறார். ஈராக்கின் எடுபிடி அரசு அதற்காக வருத்தம் தெரிவிக்காமல், அந்த காட்சி எப்படி வெளியானது என்று விசாரணை நடத்தி வருகிறது.
இவர்கள் தங்களின் பழிவாங்கும் உணர்ச்சிமிகையால் சர்வதேச சமுகத்தின் முன், 'இஸ்லாமிய நெறிகளை' இழிவுபடுத்தி வருகின்றனர். ஏனைய இஸ்லாமிய நாடுகளும், மார்க்க அறிஞர்களும், பொது சமுகமும் இதனை கண்டிக்க வேண்டும். கையில் திருக்குர்ஆனோடும்,உதட்டில் இறைவசனங்களோடும் சதாம் உயிர் நீத்தக் காட்சி அவருக்கு உலக இஸ்லாமிய மக்கள் மத்தியில் மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தியிருப்பது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அரசுக்கும், அமெரிக்காவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. செல்போன் காட்சி வெளியாகியிராவிட்டால் சதாம் இறைநம்பிக்கையற்றவர் என்பதும், எதிரியின் பெயரைத்தான் இறுதியாக உச்சரித்தார் என்று குமுதம் ரிப்போட்டரில் பா.ராகவன் எழுதிய தகவலும் நம்பத்தகுந்த செய்திகளாகியிருக்கும்

Wednesday, May 16, 2007


இப்போது வீசுடா குண்டை! வீரச்சாவுக்குத் துணிந்த மாவீரர்கள்அபூசாலிஹ்
ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்காத சமூகம், உயிரே போனாலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆர்த்தெழுந்த வீரமிக்க நிகழ்வு நவம்பர் 18 அன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 18 அன்று பாலஸ்தீன மக்கள் காட்டிய நெஞ்சுரம் யூதப் படைகளை திணறடித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போராளிகளின் பூமி. அதேநேரம் இஸ்ரேல் தனது மேய்ச் சல் நிலமாகக் கருதி வேட்டைக் காடாக மாற்றியது. திடீர் திடீரென வான் தாக்குதல் நடத்தி படுகொலைகளைத் தொடர்ந்து நடத் திவந்தது.
சமீபத்தில் யூத இனவெறி அரசு நிகழ்த்திய படுகொலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ என்ற மறுப்பாணையைக் கொண்டு செயலற்ற தாக்கியது. இரக்கமே இல்லாத யூத சக்திகளின் பாதுகாவலனான அமெரிக் காவைப் பழிக்காத நெஞ்சமே உலகில் இல்லை என்றானது.
சரி, நவம்பர் 18ல் என்னதான் நிகழ்ந்தது?
இரவானால் பாலஸ்தீன மக்கள் வெண்ணிலவையோ வெள்ளி நட்சத்திரங் களையோ பார்த்திருக்க மாட்டார்கள். பறந்துவரும் இஸ்ரேலியப் போர் விமானங்களையும், அதிலிருந்து சீறிவிழும் ஏவுகணைகளையும், எகிறி விழும் குண்டுகளையும் மட்டுமே பார்த்து வருகிறார்கள். அத்தகைய அச்சமுறு சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்து சூழ்ந்தது.
தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி அப்பாவிகளைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய இனவெறிப் படை, பாலஸ்தீனத்தின வடக்கு நகரமான பைத் லஹியாவில் வெய்ல் பரோத் என்ற போராளித் தளபதியின் வீட்டை விமானம் மூலம் குண்டுவீசி தகர்க்கப் போவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் அதுவும் அரை மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்தது.
மக்கள் வெளியேறி விடுவார்கள். அஞ்சி நடுங்கி அவர்கள் ஓடிவிடுவார் கள். அவர்கள் உயிர் அவர்களுக்குப் பெரிதுதானே? அந்தப் பகுதியே காலியாகப் போ கிறது. அதன்பின்னர் நாம் போராளி வெல் பரோத்தின் வீட்டை குண்டு வீசி தரைமட்டமாக்குவோம். அதற்கிடையில் உயிருக்குப் பயந்து வெய்ல் பரோத் சரணடைந்தால் கைது செய்து இழுத்துச் செல்வோம். இல்லையென்றால் குண்டுவீசி வீட்டோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் வெறியோடு காத்திருந்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
வெய்ல் பரோத் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு மாறாக அந்த அபாயப் பகுதியை நோக்கி மொய்க்கத் தொடங்கினர். 10 இருபதானது. 20 ஐம்பதானது. ஐம்பது பல நூறுகளானது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொது மக்கள் யூத ராணுவம் குறிவைத்த பகுதியை நோக்கி குழுமத் தொடங்கினர். இது ஜனநாயக நாட்டில் நடக்கும் அறப்போராட் டம் அல்ல. அப்பாவி மக்களின் குருதி குடிக்கக் காத்திருக்கும் கொலைகார ராணுவத்தின் முன் உயிர் பயம் இன்றி கூடிய மாவீரர் கூட்டம்.
நிஸார் ரையான் என்ற ஹமாஸ் போராளியும் அந்த தீரர்களின் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.
யூத எதிர்ப்பு கோஷங்கள் வான மண்டலத்தை முட்டின. நாங்கள் வீரச்சாவுக்குத் தயார், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கினர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் நூல் ஒத்ஹு சம்பவ இடத்திற்கு வந்து இந்த வீர நிகழ்வுகளை உடனுக்குடன் பரப்பத் தொடங்கினார். சாவுக்கு அஞ்சாத கூட்டம் மேலும் மேலும் திரளத் தொடங்கவே, வெறுத்துப் போன யூத ராணுவம் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத நிகழ்வு இது என அல்ஜஸீரா செய்தி யாளர் புகழ்ந்துரைத்தார்.
எதற்கும் அஞ்சாது துணிந்துவிட்ட மக்களின் முன் போர் விமானங்களும், கவச வாகனங்களும் ஏவுகணைகளும் உலக சரித்திரத்தில் முதன்முறையாக புறமுது கிட்டு ஓடின.

சச்சார் அறிக்கை சொல்வது என்ன?அபூசாலிஹ்
தீவிர கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டிய அபாய நிலையில் இந்திய முஸ்லிம்களின் நிலை உள்ளது. இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் கமிட்டியின் முழு அறிக்கையையும் பார்த்தபின் மனிதநேய ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் வேதனையுடன் வெளிப்படுத்திய வாசகங்கள் தான் நாம் மேலே கண்டது.
முஸ்லிம்கள் குறித்து இந்த நாடும், ஏடும் ஏற்படுத்தியிருந்த கற்பிதங்களெல்லாம் கற்பனை என்பதை கடந்த வாரம் சச்சார் கமிட்டி அறிக்கையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தன் பின்னர் இந்த உலகம் உணர்ந்து கொண்டது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் முகப்பு அட்டை
இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள், அற்புதமாக நிர்வகித்தார்கள். உள்ளாட்சி முறைகளும், வரிவிதிப்பு முறைகளும் இந்திய மண்ணிற்கு அறிமுகப் படுத்தினார்கள். நாட்டிற்கு ஒரு நிரந்தர ராணுவம் என்பது அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் தான் முதன்முறையாக செயற்படுத்தப்பட்டது. அதுவரை எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருவது தெரிந்தபின் தான் அரண்மனை உப்பரிகையிலிருந்து யுத்த அழைப்பு விடுக்கப்படும். காடுகளில் விறகு பொறுக்கிக் கொண்டி ருந்தவர்களும், பிறவேலைகளில் ஈடுபட்டவர்களும், போட்டது போட்டபடி கிடக்க கையில் கிடைத்த வாள்,வேல்,வில் அம்புகளுடன் போருக்கு ஆயத்தமாவார்களாம். போர் அறிவிப்பு கேட்டவுடன் பயந்து ஓடுபவர்களும் ஏராளம். இத்தகைய நிலையை மாற்றி நிலையான ராணுவம் ஏற்படுத்தினார். கில்ஜி வமிசமன்னன் அலாவுதீன் கில்ஜி. ராணுவத்துக்கு என திடகாத்திர மானவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். படைக்கலன்கள் தயாரிக்கப் பட்டன, பராமரிக்கப்பட்டன.
அவ்வாறே முஸ்லிம்களின் ஆட்சியில்தான் நிலங்கள் சர்வே செய்யப் பட்டன. சாலை வசதிகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டன. மன்னன் ஷேர்ஷாஹ் வின் ஆட்சி இந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஷேர்ஷாவின் ஆட்சியில் தான் 80 வயது மூதாட்டியும் தலைமுதல் கால்வரை தங்க நகைகள் அணிந்து, நடுநிசியிலும் செல்லும் அளவுக்கு ஆட்சியின், பாதுகாப்பின் கூர்மை இருந்ததாக வரலாறு கூறுகிறது. முஸ்லிம் ஆட்சியின் பெருமையும் அருமையும் கூறிக் கொண்டிருக்க காலம் போதாது.
முஸ்லிம்களின் ஆட்சிக்கு முற்றுபெற்ற பின் அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சி வந்தது.
தாய்நாட்டை காக்க முஸ்லிம்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். வெஞ்சமரில் விளை யாடும் வீரத்தோள்களுடன் போரிட்டு ஆங்கிலேயரை அதிர வைத்தார்கள். சமுதாயத்தின் விகிதாச் சாரத்தை விட அதிகமாக இந்த நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல் பொருள் ஆவியை தியாகம் செய்தார்கள்.
நரித்தனமூளை கொண்ட வெள்ளைக்காரர்கள் நயவஞ்சகமாய் சிந்தித்தனர். ஹிந் துக்களையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் போராடும் முஸ்லிம்களுக்கு பாடம்(!) கற்றுக் கொடுக்காமல் இருந்து விட்டால் விஷயம் விபரீதமாகி விடும் என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது இந்தியாவில் இருந்த ஒரு கூட்டமும் சிந்தித்தது. நாசகார கும்பல் கூடிப் பேசியது. இந்திய நாட்டை துண்டாடும் முயற் சிக்கு முன்னுரை எழுதப்பட்டது. காங்கிரஸின் முன்னனி தளகர்த்தராக விளங்கிய வழக்கறிஞர் முஹம்மதலி ஜின்னா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.
முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் இந்திய வடமேற்கு மாகாணங்களில் தனி நாடு கோரிக்கை ஒருமித்து எழுப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிராந்திய வாதமாக கணக்கெடுக்கப் படாமல் அது மதம் சார்ந்த கோரிக்கையாக பரப்பப் பட்டது. இந்தியா பிளக்கப்பட்டது. காந்தியிடம் மலர்ச்சியில்லை. இந்திய முஸ்லிம் கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந் தனர். ஆங்கிலேயர்களிடமும் இந்தியா வில் சில அதிகார வர்க்கத்தினரிடமும் அளவில்லாத குதூகலம் அவர்களின் மனதை ஆக் கிரமித்தது. ஏற்கெனவே இருந்த இடஒதுக்கீடு சலுகைள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன. அது ஆச்சு அறுபதாண்டுகாலம் இந்திய தேசத்தின் எல்லா சமூக ங்களும் எட்ட முடியாத உயரத்தில் சென்றுவிட அறுபதாண்டுகளாக அதனை அண்ணாந்து பார்த்தபடி காலம் கழிக்கும் அப்பாவி முஸ்லிம் இந்தியன். இவர்களின் வாக்குகளின் வலிமை அறிந்திருந்த அரசியல்வாதிகள் தேனொழுக பேசி ஆட்சிக் கட்டிலைப் பிடித்து பதவிகளில் அமர்ந்தார்கள். பாழாய்போன வாக்குறுதி கள் இவர்களுக்கு பகட்டு பல்லக்குகள் அவர்களுக்கு.
இவர்களின் நிலையை ஆய்வு செய்ய இதுவரை அமைக்கப்பட்ட கமிட்டிகள் தங்கள் ஆய்வுகள் சமர்ப்பிக்காமலும் முழுமையான முறையில் வெளியிடாமலும் இருந்த நிலைக்கு மாறாக நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான பிரதமரின் உயர்மட்டக்குழு முழுமை யான ஆய்வுகளில் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி யூட்டக் கூடியவை. கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கக் கூடியது.
இந்திய திருநாடு என்ற எழிலுறு கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் தங்களது கண்ணீராலும், நெந்நீராலும் வார்த்தெடுத்து கட்டமைத்த அந்த திருச்சமூகத் தின் அவலநிலையை சச்சார் ஆய்வுக்குழு விவரிக்கிறது.
2005 மார்ச் 9 உயர்மட்டக் குழுவுக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் உத்திரவிட்டது.
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைவராகவும், ஸயீத்ஹமீத், டி.கே.உமன், எம்.ஏ.பாஸித், டாக்டர்.ராகேஷ் பசந்த், டாக்டர் அக்தர் மஜீத் போன்றவர்களை உறுப்பினர்களா கவும், டாக்டர் அபூசாலஹ் ஷரீஃப்லிஐ உறுப்பினர் செயலராகவும் நியமித்து அறிவிக்கப்பட்ட இந்தக்குழு தனது ஆய்வினை மேற்கொண்டது. ஏப்ரல் 21, 2005 அன்று முதல் கூட்டத்திற்குப் பின் கூட்டப்பட்டடு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதமரின் உயர்மட் டக் குழுவான ராஜிந்தர் சச்சார் ஆய்வுக்குழுவுக்கு தங்களுக்கு தெரிந்த, விவரங் கள் தகவல்களை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் சச்சார் ஆய்வுக்குழுவின் கோரிக்கை நாடெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாளேடுகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் முக்கிய துறைகளின் அதிகாரிகள், அனைத்து மாநிலங்களிலுமுள்ள தலைமைச் செயலாளர்கள் பிற அமைப்புகள் ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் ஆஃப் சென்சஸ், நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் (சநநஞ) இந்திய தேர்தல் ஆணையம் சிறுபான்மை ஆணையம், பிற்படுத்தப் பட்டோர் ஆணையம், பல்கலைக்கழகங்கள், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு காவல் துறை இயக்குநர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சென்ற போது அந்தந்த மாநில முதல்வர்களையும், அமைச்சரவை சகாக்களையும் இக்குழு சந்தித்தது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, மத்தியப்பிரதேசம், குஜராத், பிகார் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்களுக்கு சச்சார் கமிட்டி விஜயம் செய்து தனது ஆய்வுகளை மேற் கொண்டது.
தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் லட்சத்தீவுகளுக்கும் சச்சார் குழு தனது ஆய்வு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது எனினும் கடந்த ஆண்டு தமிழகத் தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், லட்சத்தீவுகளில் அப்போது நிலவிய கடுமையான சீதோஷ்னநிலை, ஜார்கண்ட் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆயத்தப் பணிகள் நடைபெற்றது இந்தக் காரணங்களால் மூன்று மாநிலங்களுக்கும் நேரடி ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனினும் தேவையான தகவல்கள் திரட்டப்பட்டன. (இது சச்சார்குழு பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் நாம் அறிந்தது)
15 மாத கால ஆய்வுகளின் முடிவுகளை 12 பகுதிகளாக வகைப்படுத்தி சச்சார் ஆய்வுக்குழு பிரதமரிடம் சமர்பித்தது சிறுபான்மையினரை மேம்படுத்த, நெறிப் படுத்த வேண்டிய அரசின் பொறுப்புகள் பற்றி குறிப்பிடும் இக்குழு ஒரு நாடு பாரபட்சமற்ற முறையில் செயல்படும் அமிலப்பரிட்சை குறித்து கூறுகிறது.
முஸ்லிம்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து அறியும் உணர்ச்சி இன்றி இருந்திருக்கிறார்கள். நாடு விடுதலைப் பெற்றதிலிருந்தே இந்நிலைதான் தொடருகிறது.
சம வாய்ப்பு இல்லாமை குறித்து அறியாத நிலையில் இருந்த தன்விளைவு அவர் கள் மீதான பாகுபாட்டுக்கு வழிகோலியது. தங்களின் தனித்தன்மையை காப்பாற்ற அவர்கள் போராட வேண்டியதாயிற்று.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கடன் வசதி, வாழ்க்கை கட்டமைப்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து 12 அத்தியாயங்கள் விவரிக்கின்றன.
முஸ்லிம்கள் இரண்டு சுமைகளை சுமக்க வேண்டிய நிலையை அடைந்தி ருக்கிறார்கள். முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் கூறும் அவதூறு அதே வேளையில் அவர்கள் திருப்தி செய்யப்படுகிறார்கள் என்பதுமாகும்.
முத்திரைக் கருத்துக்கள்
எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச் செல்லுகிறார்கள், காவல்துறையினர். ஒவ்வொரு தாடி வைத்த மனிதனையும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் என்பதைப் போல பார்க்கப்படுவதால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வாழவேண்டியுள்ளது. இந்த தேசத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்படுகிறார்கள். குடியிருக்கும் இடங்களிலிருந்து விரட்டப்படு கிறார்கள். குறைவான கல்வி பெற்றுள்ளதால், முறையான உயர்வான வேலை வாய்ப்புகளுக்கு உயர்கல்வி அவசியம் என்பதை அவர்களால் அறியவில்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் குறைந்த அளவே உள்ளன. பாடநூல்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி கருத்துகள் பரப்பப்பட்டது. ஏழை முஸ்லிம்களுக்கு மதரஸாக் கல்வி மட்டுமே எளிதாகக் கிடைக்கிறது. மதரஸாக்கள் குறித்து வேறுபாடான கருத்துகள் பரப்பப்படுவதால் இது விஷயத்தில் அரசு உடன் கவனம் செலுத்தி மதரஸாக்களை நவீனமயமாக்க வேண்டும். உருது முஸ்லிம்களின் மொழி என்று முத்திரை குத்தப்பட்டதால் அதன் வளர்ச்சி தேக்க நிலை அடைந்தது. முஸ்லிம் மாணவிகளை அதிக அளவு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவருவதால் சமூகத்தின் பாதுகாப்பின்மையை உணரும் முஸ்லிம் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். தேர்வுக்கு குழுக்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். கடன்வசதிகள் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் இவர்களுக்கு மிகவும் குறைவு. முஸ்லிம் பெண்கள் தகுதியான வேலைக்கு போட்டியிட முடியவில்லை. பல வங்கிகளை முஸ்லிம்களை எதிர்மறையாகவும், முஸ்லிம் பகுதிகளை தங்க் ழர்ய்ங் ஆகவும் கருதி கடன் தர மறுக்கிறார்கள். இந்திய ஆட்சிப்பணி ஐ.ஏ.எஸ்.யில் 3 சதவீதமும், ஒஎந ல் 1.8 சதவீதமும் இந்திய காவல் பணியில் 4 சதவீதமும் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்த முஸ்லிம்களில் 4.9 சதவீத ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். இந்திய ரயில்வேத் துறையில் 4.5 சதவீதமே முஸ்லீம்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 98.7 சதவிகிதத்தினர் கடைநிலை ஊழியர்கள்

இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை:உலகை உறைய வைத்த வீர மரணம்அபூசாலிஹ்
தியாகச் செம்மல், இறை நம்பிக்கையாளர்களின் ஞானத்தந்தை நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இவ்வுலகம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது உலகத்தைப் பதறச் செய்த, சரித்திரம் சந்தித்திராத சதிச் செயலை சண்டாளர்கள் நிகழ்த்தினர்.
ஈராக்கின் அதிபர் மாட்சிமிகு சதாம் ஹுசைன் ஆக்கிரமிப்பு சக்திகளாலும், அவர் களின் அடிவருடிகளாலும் படுகொலை செய்யப்பட்டார்.
கொடூரர்களான ஃபிர்அவ்ன், ஜெங்கிஸ்கான், ஹிட்லர் வரிசையில் வெள்ளை மாளிகை என்ற சாத்தான் குகையின் ஓநாய் மனிதனும் நவீனக் கொடூரனாக நான் காவதாக இடம்பெற்றார்.
2006 டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, இருவேறு மனிதர்களை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது. ஒன்று, இந்த நூற்றாண்டின் சரித்திரம் இதுவரை கண்டி ராத மாவீரன். மற்றொன்று, உலகமகா கோழைகள்.
மரணம் என்ன செய்யும் என்பார்கள்? ஆனால் மரணம் வந்த பின்னர்தான் அதனை எதிர்கொள்பவர்களின் பரிதாப நிலை குறித்து நாம் காண முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்குண்டு உரிமைகள் பறிக்கப் பட்ட மனிதராக இருந்தபோதும் துணிச்ச லாக ஆண்மையுடன் கம்பீரத்துடன் சதாம் மரணத்தை எதிர்கொண்டார்.
உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்று கூறுபவர்கள், 'உயிர் எமக்கு தூசுக்கு சமானம்' என்பவர்களெல்லாம் அத்துனை நெஞ்சுரத்துடன் நடந்து கொண்டதாக வழிவழிக் கதைகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் காவிய நாயகர்களையும் மிஞ்சி வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதராக சதாம், உலகின் வரலாற்று பிரமிப் பாகிறார்.
தனது உயிருக்கு உலைவைக்க முயன்ற கொலைகாரக் கூட்டத்தை காவல்படையினர் சுட்டுக் கொன்றதற்காக மாபெரும் மனிதகுலப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறி சதாம் ஹுசைனுக்கு அடிவருடி அரசின் நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கிறது. சட்ட உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இறுதியாக நீதி மறுக்கப்படுகிறது. அல்ல முதலிலிருந்தே மறுக்கப்படுகிறது. சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பொம்மை நீதிமன்றம் பொய்மை தீர்ப்பை வழங்குகிறது. உலகமெங்கும் கண்டனக் கணைகள் எழுந்தன. சதாம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீடு மறுதலிக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்ற பதட்ட நிலையை அடிவருடி நீதிமன்றம் ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் நீதி பரிபாலனம் குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியது. வாடிகன் அரசும் தனது கண்டனத்தை எழுப்பியது. பிரேசில் தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. உலகம் மெல்ல மெல்ல சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனை குறித்த செய்திகளை அறிந்து செய்வதறியாது தவித்தன. அரசுப் பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் ஆலோசனைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதிதீவிர அமெரிக்க ஆதரவு நாடுகள் அமெரிக் காவுக்கு வலிக்காமல் எப்படி கண்டனங்களை(!) தெரிவிக்கலாம் எனத் திணறிய நேரத்தில் மணித்துளிகள் மளமளவென இறக்கை கட்டிப் பறந்தன.
உலகம் சுதாரித்து விட்டால் ஆபத்து. பொதுமக்கள் பொங்கி எழுந்தால் என்னா வது? ஒருவேளை அரபுலகத் திற்கு சொரணை ஏற்பட்டு தொலைத்து விட்டால் என்ன செய்வது என்கிற விபரீத சிந்தனையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அடிவருடி அரசும் யூகித்தன.
எவ்வாறாயினும் காலம் தாழ்த்தினால் தாழ்ந்து விடுவோம். சதாம் மீண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டு விடப் போகிறது என அஞ்சி சில மணி நேரங்களில் காரியத் தை கனகச்சிதமாக முடித்துவிட திட்டம் தீட்டப்பட்டு மரணத்துக்கு மணித்துளிகள் குறிக்கப்படுகின்றன.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தற்போதைய ஈராக் அடிவருடி அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றவாளிகளைக் கூட எதிரிகளிடம் ஒப்ப டைக்கக் கூடாது. ஆனால் ஒரு நாட்டின் அதிபரை ரவுடித்தனமாகக் கைது செய்து, குதறக் காத்திருந்த குள்ளநரிக் கும்பலின் கைகளில் திணித்தனர்.
இதுவரை மோசமான தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படும் 'ஜெயித்தவன் நீதியை' வன்மமாக வலியுறுத்திய 'நூரெம்பர்க்' தீர்ப்பாயம் கூட தனது எதிரியை (அதாவது) பாதிக்கப்பட்டவரின் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த நீதிமன்றத்தில் அது கூட வழங்கப்படவில்லை. இருட்டு மனம் கொண்ட தீயவர்கள் திருட்டுத்தனம் செய்ததைப் போல உலகம் விழிக்கும் முன்பே கொடு மையை செய்யத் துணிந்தனர்.
அதிகாலை இந்தியா அலறலுடன் விழித்தது. இந்தியாவின் ஆங்கிலச் செய்திச் சேனல்கள், இன்னும் சிறிது நேரத்தில் சதாம் தூக்கிலிடப்படுவார் என்றே பதட்ட செய்தியை பரபரப்பாய் நகரும் எழுத்துக்களால் சொன்னது. சதாம் சார்பாக அமெரிக்க நீதிபதியிடம் செய்த முறையீடும் மறுதலிக்கப்பட்டது.
'அந்த நேரம் வந்துவிட்டது' என சதாமிடம் கூறப்பட்டது. சதாம் மரணத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்த உடைமைகள் திரும்பப் பெறப் பட்டன. அவர் தனது கையில் திருக்குர்ஆனை ஏந்தினார். சதாம் தனது முகத்திலிருந்து கழுத்து வரை மூடிக்கொள்ளும் துணியை போட்டுக் கொள்ள மறுத்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அடிவருடி கொலைக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு வெள்ளை யில் கம்பீரமாக சதாம் நடை போட்டார். கறுப்புக் கோட்டும் வெள்ளைச் சட்டை யும் அணிந்து வந்திருந்த அவர் முகத்தில் மரணம் குறித்த எந்த சலனமும் சஞ் சலமும் ஏற்படவில்லை. ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என நூர் அல் மாலிக்கியின் அரசியல் ஆலோசகர் சாமி அல் அஸ்கரி கேட்டபோது, 'தேவையில்லை' எனக் கம்பீரமாக பதில் அளித்தார். அவரது கைகள் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து சதாமிடம் விளக்கப்பட்டது. என்னவோ சுற்றுலா பயணத்திற்கு வந்தவர் அந்த இடங்களைப் பற்றிக் கூறுவதை கவனமாகக் கேட்பதைப் போல மிடுக்கு மிளிரும் அழகுடன் நெற்றிப் புருவத்தை நெறித்து கேட்டுக் கொண்டார்.
மார்க்க அறிஞர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என கம்பீர மொழியில் சாட்சி பகர்ந்தார். ஈராக் நேரம் சரியாக காலை 6.10க்கு சதாம் என்ற அரபுலகின் கம்பீர சகாப்தம் சதியால் சாய்க்கப்பட்டது. தூக்கில் போடப்பட்டார் சதாம்.
ஈராக் துயிலில் இருந்து முற்றிலும் விழிக்காத நிலையில் சதாம் நீடு துயிலில் ஆழ்ந்து விட்டார். சதாம் படுகொலை செய்யப்பட்ட செய்தி திக்ரித், சமாரா, ரமதி உள்ளிட்ட வீர பூமிக்குப் பரவியபோது பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத னர். ஆண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சதாம் வீரத் தியாகியாகிவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக! புனிதப் போராளியாக நம் அதிபர் உயிர் துறந்தார், நாம் யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம் என திக்ரிதின் பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசலின் இமாம் ஷேக் யஹ்யா அல் அதாவி கூறி னார்.
திக்ரிதின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. திக்ரிதின் அருகே உள்ள கிராமமான அவ்ஜாவில்தான் சதாம் ஹுசைன் பிறந்தார். அவ்வூரில் அடக்கம் செய்ய அமெரிக்க ஆதிக்க மற்றும் அடிவருடிக் கூட்டம் முடிவெடுத்தது.
கொலைக் களத்திலிருந்து சதாம் ஹுசைன் உடல் 110 மைல் தூரத்தில் உள்ள அவ்ஜாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வடக்கு திக்ரிதில் உள்ள கேம்ப் செபய்சர் என்ற அமெரிக்க ராணுவ தளத்தை அடைந்தது. (செபய் சர் என்பவர் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான ஓட்டியாவார். 1991ல் முதல் வளைகுடாப் போர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஈராக்கியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவர். அவரது பெயரில் உள்ள விமான தளத்திலிருந்து சதாம் ஹுசைனின் உடல் ஈராக்கின் எடுபிடி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்தை சதாம் எதிர்கொண்ட விதம் உலகம் உள்ளளவும் மறக்க முடியாததாக மாறிவிட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது வழக்கமாக தூக்குத் தண்டனைக்கு ஆளானவர் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.ஆனால் சதாம் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தண்டனை நிறைவேற்றக் கூடியவர்கள் முகமூடி அணிந்து தங்களது அடையாளத்தை மறைத் துக் கொண்டனர். சடாரென்று பார்க்கும்போது அந்தக் காட்சி சதாம் அருகிலுள்ளவர்களை தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்வதைப் போல் இருந்தது. சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பலையால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு சக்திகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சதாம் சரித்திரம் காணாத மாவீரராய் உலக சமூகத்தின் முன் போற்றப் படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் படைகளை இழந்து, ஆட்சியைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்காவும் அதன் சகாக்களும் பெரும் வல்லமை யுடன் படை பலத்துடன் பொருளாதாரச் செழுமையுடன் விஞ்ஞான உச்சத்தில் நின்றா லும், அன்று ஹிட்லரின் ஜெர்மனி அடைந்த இழிநிலையை அவர்கள் அடைந்து விட்டனர்.
சதாமின் படுகொலைக் குறித்து, அரபுலக மாவீரரின் வீரமரணம் குறித்து பங்காளிக் காய்ச்சலில் ஈரானும், ஜால்ரா சத்தத்துடன் ஜப்பானும் மட்டுமே வரவேற்றி ருக்கின்றன. புஷ்ஷும் பிளேரும் வரவேற்றிருந்தாலும் அமெரிக்க மக்கள் சபை யை ஆளும் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனின் துணைப் பிரதமரும் சதாம் படுகொலை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சதாம் இறந்தாலும் உலக மக்களின் இதயத்தை வென்றிருக்கிறார். ஆக்கிர மிப்பு சக்திகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற உலகம் தழுவிய எதிர்ப்புக் குரலின் மூலம் வாழ்ந்தும் இறந்து போனவர்களாய் சதாமை படுகொலை செய்தவர்கள் கருதப்படுகிறார்கள்.
அந்த நடமாடும் பிணங்களைப் பற்றி நாம் வேறென்ன சொல்வது? காத்திருங்கள் உங்கள் கொடுமைகளுக்கு பரிசு வழங்க நாளைய வரலாறு கொடுவாளோடு தயாராகிறது.
சதாம் கடற்கரையில் கண்டனக் கணைகள்
சதாம் ஹுசைன் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்தக் கடற்கரை எங்கே உள்ளது என்றுதானே வினவுகின்றீர்கள்? இந்தக் கடற்கரை அரபு நாட்டில் இல்லை. நமது நாட்டில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி அருகில் உள்ளது சதாம் கடற்கரை. 1990ல் குவைத் போரின்போது அமெரிக்கா வை எதிர்த்து சதாம் துணிவுடன் நின்றதன் விளைவாக 'ஆரியான் கடல்புரம்' என்று அழைக்கப்பட்ட கடற்கரையை 'சதாம் கடல்புரம்' (சதாம் கடற்கரை) என்று இக்கடற்கரையைப் பயன்படுத்தும் மீனவர்கள் பெயர் மாற்றம் செய்தார்கள்.
சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட செய்தி வந்த நேரத்தில் இந்த கடற்கரையை பயன்படுத்தும் மீனவர்கள் பெரும் துயரம் அடைந்தனர். பல மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் செல்பேசி வழியாகச் செய்தியறிந்து உடனடியாக தாங்கள் பிடித்த லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள மீன்களை கடலிலேயே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பினார்கள். ''நாங்கள் பிடித்த மீன்களின் பெறுமானத்தை விட சதாமின் இழப்பு எங்களுக்கு பெரியதாக உள்ளது. புஷ் மீதும், வஞ்சகம் நிறைந்த அமெரிக்காவின் மீதும் எங்களுக்குள்ள வெறுப்பிற்கு அளவே இல்லை'' என்று குன்ஹாலன் என்ற மீனவர் கூறினார்.
சதாம் கடற்கரையில் கறுப்புக் கொடிகள் எங்கும் பறந்தன. உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொடியவன் ஜார்ஜ் புஷ்ஷின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சதாம் என் மகனைப் போன்றவர். இங்குள்ள அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் விளங்கினார் என்று ஆமினா உம்மா என்ற மூதாட்டி தெரிவித்தார். சதாம் கடற்கரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு என்றும் உத் வேகம் அளிக்கும் வகையில் அவரது நினைவை என்றும் போற்றிக் கொண்டே இருக்கும்.
முக்ததா யார்?
சதாம் கொலைக் களத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது அவரை இழிவுபடுத் தும் விதமாக 'முக்ததா... முக்ததா' என சுற்றியிருந்தவர்கள் குரல் எழுப்பியதாகவும், சதாம் ஹுசைன் 'முக்ததா?' என ஆத்திரத்துடன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
முக்ததா லி சதாமின் எதிரி என்றும், முக்ததாவின் தந்தை அல் சதரை சதாம் கொலை செய்ததாகவும், அந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்பட்டு விட்டது என முக்ததா அல்சதரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றும் தகவல்கள் பரவின.
முதலில் முக்ததா யார்? அவரது தந்தை அல்சதர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் பார்த்தால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முக்ததா அல்சதர் ஒரு ஷியா சமூகப் போராளி. அமெரிக்காவை எதிர்த்து நிழலுலகில் போர் புரிபவர்கள் முக்ததாவின் ஆதரவாளர்கள். அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் ஒரே ஷியா சமூகப் போராளிக் குழுவை முக்ததா அமைத்துள்ளார். அந்த கிளர்ச் சிப் படையின் பெயர் மஹ்தி சேனை என்பதாகும்.
கடந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது மார்க்க அறிஞரும் இளம் போராளியுமான முக்ததா அல்சதர் சென்றபோது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவரது குடிலுக்கே சென்று வரவேற்று அளவளாவினார். முக்ததா ஷியா, சன்னி சமூக மக்களிடையே இணக்கம் மென்மேலும் வளர பாடுபட்டு வருபவர்.
இந்நிலையில் சதாம் முக்ததாவின் தந்தையின் மரணத்திற்கு காரணம் என்பதையும் நடுநிலையாளர்கள் மறுக்கின்றனர். 1999ல் முக்ததாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அதற்கு சதாம் ஆட்சியே கார ணம் என்று கண்மூடித்தனமாக முக்ததாவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.
ஷியா பிரிவு அரசியல் குழுவினர் அனைவரும் அதிகார வெறியுடன் பதவியை நோக்கி நகர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது முக்ததா அல்சதரின் குழுவினர் மட்டும் கிளர்ச்சிக் குழுவினராகவும் அமெரிக்க எதிர்ப்பு படையினராகவும் உருவெடுத்ததால் எரிச்சலின் உச்சத்தில் இருந்த அமெ ரிக்கா சதாம் கொலைக் களத்தில் தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது.
அமெரிக்க அடிவருடிக் கும்பலால் நியமிக்கப்பட்டவர்கள் திடீரென முக்ததா... முக்ததா என கூச்சல் போட்டதின் அறுவடையை அமெரிக்கா உடனடியாகப் பெற் றுக் கொண்டது.
முக்ததா என சதாமின் மரணச் சூழலில் குரல் எழுப்பப்பட்டதால் முக்ததாவின் மஹ்தி சேனைக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும் இடையே உடனடி மோதல் அல்சதர் நகரில் ஏற்பட்டு எட்டு பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயம் அடை ந்தனர். மேற்குலக நரி புதிய கலகத்திற்கு பாதை அமைத்து கொடுத்து விட்டது.
முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் சென்றவர் சதாம்
வளைகுடா பிராந்தியத்தில் அதிகப் பொறியாளர்களைக் கொண்ட ஒரே நாடாக வும், சிறப்பான சாலை வசதிகளையும் லி நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தாகவும் சதாமின் ஆட்சிக் காலத்தில் ஈராக் விளங்கியது. கல்வியறிவில் ஈராக் சிறந்து விளங்கியது. அதிலும் சிறப்பாக பெண் கல்வியில் ஈராக் முன்னேற்றப் பாதையில் விரைந்து சென்றது. கல்வியில் உயர்நிலையை அடைந்ததற்காக சதாம் ஆட்சிக் காலத்தில் ஐ.நா.வின் யுனெஸ்கோ விருது ஈராக்கிற்கு வழங்கப்பட்டது.
மரணத் தருவாயிலும் இழிவுபடுத்த முயன்றவர்கள்
சதாம் ஹுசைன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சூழலிலும் இழிமனம் படைத்த அமெரிக்கா மற்றும் அடிவருடிக் கும்பல் தமது விஷமத்தனத்தைக் கைவிடவில்லை. சதாமை கேலி செய்தும், பரிகசித்தும், தகாத வார்த்தைகளால் துன் புறுத்தியும் கொடுமை இழைத்தனர்.
மரணத்தைத் துணிச்சலுடன் பெருமிதத்துடன் எதிர்கொண்ட அந்த மனிதருக்கு எதிராக வெறிக் கூச்சலிட்டதோடு, அவர் சாகும் நேரத்திற்காக ஆவலுடன் காத்தி ருந்தனர். ஈராக்கிய தேசிய பாதுகாப்புப் படையின் ஆலோசகர் மொஃபாக் அல் ருபையி இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் குறிப்பிடும்போது காவலாளிகளில் ஒருவன் 'சதாம் நீ எங்களை சீரழித்து விட்டாய், எங்களில் ஏராள மானோரைக் கொன்றாய், நீ அழிவை சந்திக்கப் போகிறாய்' என வெறித்தனமாகக் கூச்சலிட்டார்.
நான் உங்களை ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து மீட்டேன். உங்கள் எதிரிகளையும் அழித்தேன், ஈராக்கியர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மன்னிப்பை வழங்கிக் கொள்ள வேண் டும். ஈராக்கின் தற்போதைய அரசை நம்ப வேண்டாம். அமெரிக்கர்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் தூக்கு மேடையில் நின்று சூளுரைத் தார்
குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்­ம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.
இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.
இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெரிக்கா வுக்கும் லி பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட் டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.
2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்­ம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
அன்றி­ருந்து முஸ்­ம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?
கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்­ம் களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.
அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுத­ல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்­ம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிற

சோமாலியா: ஏழை தேசத்தில் முண்டா தட்டும் அமெரிக்கா

சோமாலியா: ஏழை தேசத்தில் முண்டா தட்டும் அமெரிக்கா!அபூசாலிஹ்
உலகத்தின் அமைதியை சீர்குலைத்து நாடுகளின் இறையான்மையை மாசுபடுத்தி அதிகாரப்பரவலையும் ஆதிக்க வெறியினையும் பரப்பி வரும் அமெரிக்க ஏகாதி பத்திய சக்தியின் அடுத்த குறி யார்? எந்த நாட்டில் அமெரிக்கா குண்டு போடும்? அமெரிக்க ஏவுகணைகள் எந்த நாட்டின் தரைப்பகுதியை, கடல் பகுதியை வான்வெளியை தாக்கப் போகிறது? தீவிரவாதிகளின் புகலிடம், உலகிற்கே அச்சுறுத்தல், அமெரிக்காவுக்கு ஆபத்து என வகை வகையாய் கள்ள காரணம் சொல்லி எந்த நாட்டை அமெரிக்கா அபகரிக்கும் என உலக அளவில் அரசியல் ஆய்வாளர்கள் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியாகி விட்டது. உலகின் மிகப்பெரிய நாசகார போர்விமானத்தை இஸ்ரேல் கட்டத் தொடங்கி விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை குறித்த தீர்மான வடிவங்களுக்கு 'ஒரு வேஸ்ட் பேப்பருக்கு' கொடுக்கும் மரியாதையைக் கூட நாங்கள் வழங்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத்அதிரடியாய் அறிவித்து விட்டார். அடுத்ததாக்குதல் ஈரானின் மீதா? அல்லது சிரியாவின் மீதா? அல்லது உலகிலேயே அதிபர் புஷ்ஷுக்கு அதிகமாக எதிரிகள் இருக்கும் அமெரிக்காவின் மீதே தாக்குதல் நடத்தி விடுவாரோ? என பட்டிமன்றங்கள் பட்டியல் கட்டி நிற்க சோமாலியாவின் மீது அமெரிக்கா தனது வான்தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறது.
அமெரிக்க ஆயுதங்கள் நவீன மானவை. அமெரிக்க போர் வியூகங்கள் நிபுணத்துவம் மிக்கவை. தொழில் நுட்பத்தில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அந்நாட்டின் தாக்குதல் திட்டங்கள் கண்டனத்திற்குரியவையாகவே இருக்கிறது. எவ்வளவுதான் அதிநவீன ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் அவை எதிர் படைகளுக்கு குறிவைப்பதற்கு பதில் மக்கள் வாழும் பகுதிகள் குறிப்பாக மருத்துவமனைகள் போன்றவற்றில் தான் ஏராளமான அப்பாவி பொது மக்கள் அமெரிக்க வன் தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள்.
கவச வாகனங்களை தாக்குவதற்கு பதில் உயிர்காக்க உதவும் ஊர்திகளை, ஆம்புலன்ஸ்களை அமெரிக்கப் படைகள் துல்லியமாக(!) தாக்கும். தவறாக நிகழ்ந்து விட்டது என ஒவ்வொரு முறையும் தவறாமல் சமாதானம் சொல்லவும் அவர்கள் தவறுவதில்லை.
இதைப் போன்ற ஒரு காட்சியை கடந்த 2006 டிசம்பரில் கிறிஸ்மஸ் தினத்தன்று சோமாலியாவில் அமெரிக்கப் படைகள் அரங்கேற்றின.
ஒரு திருமண நிகழ்ச்சியை 'சாவு நிகழ்ச்சியாக அமெரிக்கப் படைகள் மாற்றின'. மணமகன், மணமகள் உள்பட 30 பேரின் மூச்சை அமெரிக்க விமானங்களிலிருந்து புறப்பட்ட குண்டுகள் அழித்தன.
இதுவரை அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்பு போர்கள் நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காகவே என்ற நிலையில் சோமாலியாவின் மீதான அமெரிக்க தாக்குதல் எதற்காக? என்ற கேள்வி இங்கு எழலாம்?
சோமாலியா என்பது சோக பூமியல்லவா? அந்த பட்டினிப் பிரதேசத்தில் 'நடமாடும் எக்ஸ்ரே மனிதர்களைத் தவிர வேறு என்ன உண்டு. அமெரிக்காவின் அடங்காத பசிக்கு தீனி போட அங்கு எதுவும் இல்லையே?
குழப்பங்கள் குழுமி நிற்கலாம். வரலாற்றுப் பக்கங்களை அதிகமில்லை ஓர் ஆறு மாத காலம் பின்னோக்கி புரட்டினால் அமெரிக்காவின் அந்தரங்க ஆசையும் சோமாலியாவின் மீதான தாக்குதலுக்கான உண்மைக் காரணமும் தெரியவரும்.
2006 ஜுன் ஐந்தாம் தேதி இஸ்லாமிக் கோர்ட் யூனியன் என்ற போராளி இயக்கம் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி சோமாலியத் தலைநகர் 'மொகதிஸ்'ஐ கைப்பற்றியது.
இந்த முஸ்லிம் புரட்சிப் படைக்கு சோமாலிய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவு உண்டு. திறமையற்ற ஆட்சியாளர் அப்துல்லாஹ் யூசுப் மீது சோமாலியா மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த வேளை அது.
மக்களின் முழுமையான ஆதரவுடன் இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. ஜூன் 14 ஆம் தேதி ஜவாஹா என்ற நகரம் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படை வசமானது. செப்டம்பர் 24ல் ஹிஸமயோ என்ற பகுதியை யும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏறக்குறைய நாற்பது சதவீத பகுதிகள் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை சாதாரண புரட்சியாக மேற்குலகம் ஒத்துக் கொள்ள தயராக இல்லை. இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் வெற்றி பவனி தொடர்ந்தது. எத்தியோப்பிய எல்லைவரை அவர்களது ஆதிக்கத்தின் வீச்சு விரிவடையவே அதிபர் அப்துல்லாஹ் யூசுப் அலறத் தொடங்கினார். அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது. அண்டை நாடான எத்தியோபியா தனது துருப்புகளை உஷார்படுத்தியது.
ராணுவ நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் முன்னெடுத்தது.
அரை நூற்றாண்டுகாலம் அமைதியற்ற சூழலே சோமாலியாவில் நிலவுகிறது. அதிலும் கடந்த 15 ஆண்டு காலம் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையில் அந்நாடு பின்னடைவை சந்திருக்கிறது.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் ஆட்சிக்கு முன்பு நாடெங்கும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. எதிர் எதிர் பகுதிகளுக்குச் செல்பவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. இஸ்லாத்தின் பேரைச் சொல்லிக் கூட சில குழுக்கள் புறப்பட்டன.(பின்னர் அவைகளில் சில இஸ்லாமிக் கோர்ட் யூனியனுக்கு ஆதரவு தெரிவித்தன) ஆங்காங்கே ரத்தக்களறிகள் தொடர்கதையாய் இருந்தன.
லட்சக்கணக்கான சோமாலிய இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வீழ்ந்து கிடந்தனர். இலவச இணைப்பாக எய்ட்ஸ் நோயும் இளைய தலைமுறை யினரின் வாழ்வை சிதைத்தது. போதை மருந்து கடத்தல்களும் ரெக்கை கட்டிப் பறந்தன. அனைத்தையும் அடக்கி நாட்டில் அமைதி நிலவச் செய்தனர் இஸ்லாமிக் யூனியன் கோர்ட் ஆட்சியாளர்கள். இஸ்லாமிய ஷரியத் முறையிலான ஆட்சியை அங்கு அறிமுகப்படுத்தினர். கொடுந்தீமைகளை இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
தயவு தாட்சன்யமற்ற நடுநிலையான நீதி பரிபாலனத்தால் அமைதி நிலைநாட்டப் பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர். இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் சீரான ஆட்சிவர வேண்டும் என சோமாலியாவின் பிற பகுதிகளும் ஏங்கின.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் தலைவர் ஷேக் அஹ்மத் ஷரீஃபின் ஆட்சி சோமாலியாவின் பிற பகுதிகளும் பரவி விட்டால் 'தாம் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் 'உலக அமைப்பு' க்கு ஆபத்து வந்து விடுமோ என அமெரிக்கா அஞ்சியது.
இஸ்லாமிய முறையிலான ஆட்சி என்றால் வன்முறைகள் வரையறை இன்றி இருக்கும். நாட்டு மக்கள் எல்லாம் 'அநியாயமாக' மாட்டிக் கொண்டோமே' எனக் கதறி கதறி கண்ணீர் சிந்துவார்கள்' என தங்கள் ஆதரவு ஊடகங்கள் மூலமாக பரப்பிவைத்த பொய்கள் தோலுரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க கலக்கமடைந்தது. சோமாலியாவை பிளவுபடுத்தி, காயப்படுத்தி இன்பம் காணும் அண்டை நாடான எத்தியோப்பியாவும் அச்சத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்ந்தது. பக்கத்து நாடு பலமிக்கதாக மாற பகைநாடு விரும்புமா என்ன?
தக்க தருணத்தை எதிர்நோக்கி அமெரிக்காவும், எத்தியோப்பாவும் காத்திருந்தன. தனது பிடியை படிப்படியாக இழந்து வந்த சோமாலிய அதிபர் அப்துல்லாஹ் அமெரிக்காவை நோக்கி அபயக்குரல் எழுப்பினார். இவர் அபயக்குரல் எழுப்பினார் என்பதற்காக அமெரிக்கா உதவிக்கு ஓடிவரமுடியுமா? அதற்கென்று ஒரு கவுரவம் உண்டே? அமெரிக்கா சும்மா அப்துல்லாஹ் யூசுப் உதவிக்காக போனால் நன்றாகவா இருக்கும்? அமெரிக்காவுக்கு பிரத்யேக காரணம் ஒன்று உண்டே.
அமெரிக்கா என்றால் சுதந்திரதேவி சிலை, அழுது வடிவதை மறைத்துக் கொண்டு மழுப்பல் சிரிப்புடன் காமிரா முன்பு காட்சியளிக்கும் சார்ஜ் போன ஜார்ஜ் புஷ் அதைப் போன்று உடனடியாக நினைவுக்கு வருவது அல்காய்தா என்ற வார்த்தை. ஆறுமாதத்திற்கு ஒரு தடவை இந்த சொல்லைக் கூறாவிட்டால், அல்காய்தா அச்சுறுத்தல் உண்டு என உரத்து முழங்காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. அல்லது உயிரே போய்விடும். இல்லையா!
அதையே இங்கும் சொன்னார்கள் 1990களில் கென்யா, தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்திய அல்காய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சோமாலியாவில் பதுங்கியிருக் கிறார்கள் அவர்களை பிடிக்கும் வரை போராடப் போவதாக அமெரிக்கா அறிவித்து சோமாலியாக் கடலோரங்களில் போர் விமானங்கள் தாங்கிய கப்பல்களை அனுப்பி வைத்தது.
அமெரிக்க வான்படைகள், போர்க் கப்பல்கள் சோமாலியாவை முற்றுகையிட, திறமையற்ற அதிபரும் மக்கள் செல்வாக்கிழந்த வருமான அப்துல்லாஹ் யூசுப் க்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எத்தியோப்பிய துருப்புகள் சோமாலிய அரசுத் துருப்புகளுடன் இணைந்து இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளி களை கருவறுக்கும் முயற்சியை தொடங் கியது. வறுமையிலும் வெறுமையிலும் வாழ்ந்து ஆனால் கடும் போர் பயிற்சி பெற்ற முஸ்லிம் போராளிகள் தற்காலிகமாக பின்வாங்கி இருப்பதாகவும் இஸ்லாத்துக்கு விரோதமான அமெரிக்க, எத்தியோப்பிய சக்திகள் தங்கள் சதியினை வலிந்து திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது எனவும் தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார்.
அதிபர் அப்துல்லாஹ் யூசுப்பின் ஆட்சி இஸ்லாத்துக்கு முரண்பட்டது. மேற்குலக சக்திகளுக்கு பணிவதையே தனது முழு முதல் கடமையாக அது கருதுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சோமாலியாவின் முழு அதிகாரத்தையும் இஸ்லாமிய நெறியின் கீழ் கொண்டு வருவதே எமது இறுதி லட்சியம் எனவும் ஷேக் ஷெரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய துருப்புகளும், அமெரிக்கா வின் தாக்குதலும், சோமாலியாவின் மீதான தற்காலிக வெற்றியினை கடந்த வாரம் அவர்கள் பெற்றுவிட்டனர். போரின் உக்கிரத்தால் ஏதுமற்ற ஏழைமக்கள் நாட்டை விட்டே வெளியேற முயல அதற்கும் கூட ஆபத்து ஏற்பட்டது. அண்டை நாடுகளான கென்யா மற்றும் எரிட்டிரியா நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டன.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படைகளுக்கு ஆதரவாக எரிட்டிரியா தனது 2000 துருப்புகளை அனுப்பி வைத்தது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் எவ்வளவு பேர் வேட்டை யாடப் பட்டனர் என்பது போன்ற தகவல்களை தெளிவாக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு சக்திகள் தவித்தன.
சோமாலியர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்க எத்தியோப்பிய சக்திகளின் அறிவிப்புக்கு சோமாலிய மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். தனி நபர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை மீண்டும் சோமாலியாவை தொற்றிக் கொண்டது. இஸ்லாமிய பாரம்பரிய பெருமைகளை தன்னகத்தே கொண்ட நாடு சோமாலியாவாகும்.
இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் இந்நாடு ஹபஷா என அழைக்கப்பட்டது. கலீபா உஸ்மான் (ரலி) காலத்தில் இஸ்லாமிய நெறி இம்மண்ணை ஆட்கொண்டது. பல நபித் தோழர்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்த பிரதேசமே சோமாலியாவாகும். ஐஞதச ஞஎ ஆஎதஒஈஆ (ஆப்பிரிக்காவின் கொம்பு) என அழைக்கப் படும் சோமாலியா பரப்பளவில் உலகில் 42லிவது பெரிய நாடாகும். எண்ணெய் வளம், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியம் போன்றவை இங்கு இருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் 100 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட அரபு மொழி பேசும் பெருன்பான்மை மக்களைக் கொண்டது சோமாலியாவாகும்.
சோமாலியா 1960 ஆம் ஆண்டு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை அரசியல் ஸ்திரதன்மையற்ற சூழலே நிலவி வந்தது. நான்கு உள்நாட்டுப் போர்களையும் (1986, 1991, 1992, 2006) அந்த பரிதாப தேசம் சந்தித்து வறுமை, வன்முறையோடு போதைப் பொருள் உற்பத்தி நுகர்தல், இவைகளோடு எய்ட்ஸும் சேர்ந்து கொள்ள சோமாலியா துன்பத்தில் உழன்றது. 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கொடிய வறுமையில் உழல்கின்றனர். 1992லில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இதுவரை 30 லட்சம் மக்கள் மாண்டுபோயுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டுப் போர்களின் விளைவாக சோமாலியாவின் வளமிக்க வடக்குப் பிரதேசம் சோமாலிலேண்ட் எனும் பெயரில் 1991ல் தன்னாட்சி கோரி பிரிந்தது. 1998ல் வடகிழக்கு சோமாலியப் பகுதியான 'பன்லான்ட்' பிரிந்து சென்றது. இவை இன்றும் நஊகஎ உஊஈகஆதஊஉ ஒசஉஊடஊசஉஊசப தஊஏஒஞச என அழைக்கப்படுகிறது.
தாங்கொணாதுயரம், தாளாத வறுமை இவைகளுக்கு கிடையில் இஸ்லாமிய நெறி முறையிலான அரசியல் அமைப்புகள் சோமாலியாவில் தலையெடுத்தன. கோரிக்கை வெல்வதற்கு ஆயுதம் ஏந்தி னாலும் தவறில்லை என்ற மனோபாவத் திற்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
1984ல் அல் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் என்ற இயக்கம் தோன்றி சோமாலியா, எத்தியோப்பியா, திபூத்தி, எரிட்டிரியா ஆகிய நாடுகளில் பரவி இயங்கத் தொடங் கியது. தனது தாய் இயக்கமான இத்திஹாதுல் முஸ்லிமீன் இயக்கத்தின் செயல்பாடு வீரிய மற்றதாக மந்தநிலையுடன் செயல்படுவதாக கருதிய துடிப்பு மிக்க இளைஞர் கள் தங்களின் ஒஈம என்ற இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பை தனியாக இயக்கத் தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் பெரும்பான்மை சோமலிய மக்களின் இதயங்களை இஸ்லாமிக் கோர்ட் யூனியன் இயக்கத்தினர் வெற்றி கொண்டு விட்டனர்.
எந்த எதிர்மறை இமேஜையும் பெற்றுவிடாத இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் எழுச்சி அமெரிக்க ஆதரவு அதிபரான அப்துல்லாஹ்வுக்கு மட்டுமின்றி அண்டை நாடான எத்தியோப்பியாவுக்கும் கலக்கத்தைத் தரவே சோமாலிய முஸ்லிம் இயக்கம் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டது.
செப்டம்பர் 11 உலக வர்த்தக வளாக தாக்குதலுக்குப் பிறகு சூடான், சோமாலியா என்ற இருநாடுகளையும் பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.
தற்போது சூடானில் 12 ஆயிரம் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நிலையை சோமாலியாவில் தொடர ஏகாதிபத்திய சக்திகள் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
சோமாலியாவின் அண்டை நாடான எத்தியோப்பியாவை மேற்குலக சக்திகள் தங்களின் கைப்பாவையாக்கி அப்பிராந்தியத்தை அமைதிக்குலைந்த பிரதேசமாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். சோமாலியாவை துண்டாடிய மேற்கு சக்திகள் எத்தியோப்பியாவை பத்திரமாக பாதுகாத்து வருகின்றன. எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா நவீனரக ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகிறது.
இன்று அப்பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடாக எத்தியோப்பியா விளங்குகிறது. எத்தியோப்பியா வுக்கும் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் உண்டு. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் அபிசீனியா என அழகுற அழைக்கப்பட்டது. முதல் உலகப் போருக்கு முன்பு வரை அபிசீனியா என்றே அழைக்கப்பட்ட நாடு மேற்குலக ஆதிக்கத்தில் அகப்பட்ட பின்னர் அபிசீனியா வுக்கு எத்தியோப்பியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரபு மொழியில் அபிசீனியா என்று அழைக்கப்பட்ட நாட்டை கிரேக்க மொழியில் இப்போது எத்தியோப்பியா என அழைக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) அபிசீனியா என்ற எத்தியோப்பியாவை நோக்கியே இருந்தது. இஸ்லாமிய பாரம்பரியப் பெருமை கொண்ட எத்தியோப்பியாவை முஸ்லிம்களுக்கு எதிராகவே ஏகாதிபத்திய சக்திகள் கொம்புசீவி விட்டுள்ளன. இன்றும் எத்தியோப்பியாவிலுள்ள சில மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
உலகின் மிக ஏழ்மையான நாடுகள் என சோமாலியாவும், எத்தியோப்பியாவும் அழைக்கப் படுகின்றன. ஆனால் இருநாடுகளையும் மோதவிட்டு குருதிக்குடிக்க காத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள். தற்காலிகமாக எத்தியோப்பிய படைகள் சோமாலியாவை விட்டு வெளியேறியிருக்கிறது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் தோற்கடிக்கப்படவில்லை. தற்காலிகமாக பின் வாங்கியிருப் பதாக அதன் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருக்கிறார். ஆயிரக்கணக் கான இஸ்லாமியப் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்து விட்டதாக அமெரிக்க எத்தியோப்பிய சக்திகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்நிலையில் நல்லாட்சி நடத்திய, இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கீகரிக்கும் முயற்சியை ஆப்பிரிக்க யூனியனும், எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளும் எடுக்க வேண்டும். உள்நோக்கத்தோடு இஸ்லாமிக் கோர்ட் யூனியனைச் சேர்ந்தவர்களை அல்காய்தா லொள்காய்தா என்று கூறும் அமெரிக்காவின் வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தை புறம் தள்ளி சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் அதுவே அந்த வறுமை தேசங்களை வளமிக்க பிரதேசமாக மாற்றும்

காஷ்மீர் படுகொலைகள்


காஷ்மீர் படுகொலைகள்: காவல்துறை லி ராணுவம் கூட்டு பயங்கரவாதம்?
ஜம்மு காஷ்மீர் இந்தியத் திருநாட்டிற்கே கிரீடம் போல் அமைந்திருக்கும் அழகிய பூமி. அறுபதாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சனையாக நீண்டு வருகிறது. ஏற்கெனவே அதற்கு இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று புதிய புதிய பிரச்சனைகளும் அரசியல்வாதிகளின் கைங்கர்யமாக அங்கு முளைத்தபடியே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மக்களின் வீரத்தியாகம், நூறு கோடி இந்தியர்களும் என்றும் நினைவில் வைத்து போற்றக் கூடிய ஒன்றாகும். இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களின் தியாகம் என்பது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிதோடு போயிற்று. கார்கில் போன்ற திடீர் போர்கள் வெடிக்கும் போது கணிசமாக நிதி திரட்டி கொடுப்பதோடு திருப்திபடும் நிலைமை.
ஆனால் காஷ்மீர் மக்கள் வெஞ்சமரில் விளையாடும் வீரத்தோள்களுடன் தாய் மண்ணைக் காக்கவும் மக்களைக் காக்கவும் என்றும் களத்தில் நிற்பவர்கள் அவர் களுக்கு ஒரு எதிரி மட்டும் தான் உண்டு என்று நாம் நினைத்து விட முடியாது. எங்கு நோக்கிலும் எதிரிகள் தான். எதிரிகள் நுழைந்து விடக் கூடாது என எல்லை யோரத்தில் கண்துஞ்சாது கடமையாற்றும் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக காஷ்மீர் மக்கள் விளங்குகிறார்கள்.
எழில் நிறைந்த பூமி, பதட்ட பூமியாக மாறியதற்கு அப்பாவி காஷ்மீரிகள் எப்படிக் காரணமாவார்கள்? என்ற கேள்விக் குறியையும் புறக்கணிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீரில் அநாதைகள் அதிகம், விதவைகள் அதிகம், இன்னும் திருமணமே ஆகாத பெண்கள் அதிகம், தங்களின் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் திருமணமே செய்யாமல் இருக்கும் ஆண்களும் அதிகம். மொத்தத்தில் பரிதாபத்துக்குரிய அப்பாவிகள் நிறைந்த காஷ்மீரில் அவர்களைச் சுற்றி படுபாவிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைக் கடத்தி அவர்களைக் கொலை செய்ததாகவும் இதில் காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இந்திய ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் கள் வெளிவந்துள்ளன.
ஏழைகள் ஏதுமற்றோர், ஏனென்று கேட்க நாதியற்றோரை அதிரடியாய் மடக்கிப் பிடித்து தீவிரவாதி என குற்றம்சாட்டி காவல்துறை வாகனங்களில் அள்ளிச் செல்வது, பாகிஸ்தானில் ஏதோவொரு இயக்கத்தின் கீழ் பயிற்சி பெற்றதாக குற்றம் சாட்டி அதைப் பதிவு செய்துவிட்டு பின்னர் பிடித்து வைத்திருந்தவரை, 'தப்பிக்க முயற்சி செய்ததாக'க் கூறி சுட்டுக் கொன்று விடுவது என செய்வதற்கு மிக எளிதான(?) காரியத்தை காவல்துறையும் ராணுவமும் அரங்கேற்றி வந்துள்ளன.
இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிடும் சூழலில் இதில் மனித உரிமை மீறல் இருந்ததா? உண்மை யில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதிகளா? அல்லது அப்பாவிகளா? என்ற எந்த அக்கறையும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இல்லை. புலனாய்வு பத்திரிக் கைகள், புடலங்காய் பத்திரிகைகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பத்திரிகைகள் கூட செய்தியின் உண்மையை உணர ஆர்வம் காட்டு வதில்லை. பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன்களைப் பற்றி நாட்டில் யாருக்கும் அக்கறையில்லை.
இந்நிலையில் தங்கள் அன்புக்குரிய குடும்பத் தலைவர்கள் திடீர் திடீரென காணாமல் போவது குறித்து காஷ்மீர் மக்கள் மாநில அரசை நெருக்கத் தொடங்கினர். ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைக் கழகமும் இப்பிரச்சனையை கையி லெடுக்கவே, விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டார்.
விசாரணையில் வெளிவந்த தகவல்கள் ஜம்மு காஷ்மீரை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டது. உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களை ஒட்டுமொத்தமாக அதிருப் தியில் தள்ளியது. சர்வதேச அளவில் நாட்டின் புகழுக்கே பங்கம் ஏற்பட்டது.
விருதுகள், பணப்பரிசு, பதவி உயர்வு பெறுவதற்காக அப்பாவிகளைப் பிடித்து தீவிரவாதிகள் என லாக்கப்புகளில் அடைத்துவிட்டு பின்னர் அவர்கள் தப்பி யோட முயற்சித்தார்கள் எனக் கூறி சுட்டுக் கொன்று நாடகமாடுவது. இந்த படுகொலை வெறியாட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்திய வீரதீரச் சாதனையாகக் காட்டி விருதுகள், பணப் பரிசுகள், பதவி உயர்வு பெறுவது என தெளிவான சதித்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது அம்பலமானது.
இந்திய ராணுவமும், காவல் படையும் இந்த இரக்கமற்ற செயலை செய்வதற்கு, காஷ்மீர் மாநில காவல்துறையிலுள்ள மனித மிருகங்கள் உடந்தையாக இருந்து படுகொலை செய்வதற்கு ப­யாடுகளை (அப்பாவிகளை) பிடித்துக் கொடுப்பது என விரிவான செயல்திட்டத்தின்படி(?) ஒரு வெறிக்கும்பல் ஈடுபட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. இந்தச் சதியில் இந்திய ராணுவத்தின் மூன்று படைப் பிரிவு களுக்கு தொடர்பிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. 5வது ராஷ்ட்ரிய ரைஃ பிள்ஸ் அதிகாரிகள், மற்றும் 24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவுகளின் அதிகாரி களுக்கும் இந்த சதிச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விபரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போலி என்கவுண்டர்களை உறுதிப்படுத்திய போலி எப்.ஐ.ஆர்.கள்
முதல் தகவல் அறிக்கை (எஒத) 09லி12லி06 ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்:
ஜம்மு காஷ்மீர் சிறப்பு காவல் படையும் மத்திய ரிசர்வ் காவல்படையும் அடையாளம் தெரியாத பாகிஸ்தான் தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. (அவரது உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார்)
எப்.ஐ.ஆர்.203 அக்டோபர் 5 2006 சம்பல் காவல் நிலையம்
13வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு பதிவு செய்தது. பாகிஸ்தானின் ஜெய்ஷே முஹம்மத் இயக்கத்தைச் சேர்ந்த ஜாஹித் அ­ சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. (இவரது உண்மை பெயர் சவுகத் அஜீஸ்)
எப்.ஐ.ஆர். (மார்ச் 14 2006) சம்பல் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. (பின்னர் இவர் குலாம் நபி வானி என இப்போது அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். 25 (மார்ச் 8 2006) கன்கன் காவல் நிலையம்
24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு. அடையாளம் தெரியாத தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்துள்ளது. இவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இவர் அ­ முஹம்மது பத்ரு என பின்னர் அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். (பிப்ரவரி 17 2006) ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரிடமிருந்து கலாஷ்ரி கோவ் ரைஃபிள் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் இவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் (இவர் நாஸிர் அஹ்மத் டெகா என பின்னர் தெரியவந்தது)
இந்த ஐந்து என்கவுண்டர் படுகொலை களைக் காட்டி விருதுகள், பணப்பரிசுகள், பதவி உயர்வு என்பவற்றை வாங்கி அனுபவித்தார்கள். தங்கள் குடும்பத் தலைவர் களை இழந்து அப்பாவி காஷ்மீரி குடும்பங்கள் கண்ணீர் கட­ல் தத்தளிக்க ஏதோ செயற்கரிய சாதனை செய்ததைப் போல குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்த அயோக்கியர்கள் மாவீரன்கள் போல் உலா வந்தனர். காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் குமுறி எழாமல் இருந்திருந்தால் இந்த அயோக்கியர்களின் முகத்திரை கிழிக்கப்படாமலேயே போயிருக்கக் கூடும்.
2006 டிசம்பர் மாதம் இவர்கள் கண்டர்பல் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பாகிஸ்தான் தீவிரவாதி, முல்தானில் பயிற்சி பெற்றவர். கொடிய ஆயுதங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டவர் என இவர்கள் குறிப்பிடுவது உண்மையில் யார் தெரியுமா?
நடைபெற்ற போ­ எண்கவுண்டர் படுகொலை புகார்களினால் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டதினால் உண்மைகள் தோலுரிக்கப்பட்டன. புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப் பட்டன லி உண்மைகளும்.
பாகிஸ்தான் தீவிரவாதி என்றும், முல்தானில் பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படும் அவரது பெயர் அபூஹபீஸ் என்றும் (இவர்களே பேர்களையும் வைத்து விடுகிறார்கள்) லஷ்கர்லிஇலிதய்யிபா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி சுட்டுக் கொல்லப்பட்டவரின் உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார். ஏழை கார்பண்டர். தினக் கூ­க்காக தினமும் ஸ்ரீநகர் சென்று வருபவர்.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவர் காணாமல் போனார். இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீஸ்காரர்கள் ஒரு மையவாடிக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மான் உடலை புதைத்துள்ளனர். புதைக்கும் முன்பாக அவர் கா­ல் அணிந்திருந்த ஷுக்களை கழற்றிவிட்டுத் தான் புதைத்ததாக மையவாடியின் காவலாளி தெரிவித்தார்.
காவல்துறை துணை ஆய்வாளர்கள், இரண்டு பொதுமக்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சம்பல் பகுதி படா மொஹல்லாவில் ஆவேசமடைந்த ஜனத்திரளில் ஆத்திரம் அலை மோதியது. ஸ்ரீநகருக்கு வெளியே ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆத்திரம் அடைந்த மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
'அமைதி காக்க வேண்டும்' 'பொறுமையைக் கைவிட வேண்டாம்' என பள்ளிவாசல் ஒ­பெருக்கி மீண்டும் மீண்டும் கெஞ்சியது. காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் தீரும்வரை வீசினர். பொதுமக்கள் கீழே கிடந்ததையெல்லாம் காவல்துறையின் மீது வீசியெறிந்தனர் மேசை நாற்கா­கள் பறந்தன.
செய்தியாளர்களும், தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும் ஓட ஓட விரட்டப்பட் டனர். 'என்றாவது உண்மையை எழுதியிருக்கிறாயா?' என ஆவேசமாக கேட்டுக் கேட்டு உதைத்து விரட்டினர். மகனை இழந்த தந்தையின் வருகை, ஆவேசமாக நடந்த மக்களின் வேதனையை அதிகப்படுத்தியது.
தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மீண்டும் புதைக்கப்பட அங்கு கொண்டு வரப்பட்டது. சடலத்தின் வலது தோள் பட்டையி­ருந்து ரத்தம் கசிவு இருந்தது. முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
மத்திய தடயவியல் துறையி­ருந்து இரண்டு மருத்துவர்கள் சண்டிகரி­ருந்து புறப்பட்டு வந்தனர். பிப்ரவரி முதல் தேதி புதன்கிழமையன்று வந்த அவர்கள் கொல்லப்பட்ட அப்துர்ரஹ்மான் உடலி­ருந்தது ரத்த மாதிரிகளையும் அவரது பெற்றோரின் உட­­ருந்த ரத்தம் மற்றும் திசு மாதிரிகளையும் எடுத்தனர்.
குண்டுகள் பாய்ந்த அடையாளம் அப்துர் ரஹ்மான் உட­ல் நான்கு பகுதிகளில் இருப்பதாகவும், மார்பின் நடுப்பகுதி, தாடை, கால் மூட்டு மற்றும் இடது வயிறு போன்றவற்றில் தோட்டாக்கள் துளைத்த அடையாளம் காணப்பட்டதாகவும் தடயவியல் குழுவில் இடம்பெற்றிருந்த உள்ளூர் அறுவை சிகிச்சை மருத்துவர் முஹம்மத் ஹயாத் குறிப்பிட்டார்.
அப்துர் ரஹ்மான் மனைவி முனீரா மற்றும் பெண்கள், அப்துர் ரஹ்மானின் உடலைக் காண வந்த போது முனீரா மயங்கி சரிந்தார்.
வேதனையில் ஆழ்ந்த கூட்டத்தின் இந்திய ராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள் இமயத்தில் முட்டி எதிரொ­த்தது.
வெளியே தெரியாமல் செய்த இந்த கோரக் கொலை எவ்வாறு உலகிற்கு தெரிய வந்தது தெரியுமா?
டிசம்பர் 8ஆம் தேதி அப்துர் ரஹ்மான் காணாமல் போகிறார். ஊரெங்கும் தேடிப் பார்த்த பின் ஸ்ரீநகர் தெற்கு துணைக் கண்காணிப்பாளர் உத்தம்சந்த்திடம் முறை யிடச் சென்றபோது அப்துர்ரஹ்மானை விசாரணைக்காக கொண்டு சென்ற தகவலையும், அவர் பெயர் காணாமல் போனோர். பட்டியலில் பதிவு செய்யப் பட்டது. அவர் எங்கு போனார் என்பது குறித்து தேடப்பட்டு வரும் நிலையில் அப்துர்ரஹ் மானின் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.எஸ்.என்.எல். துறை யினரின் உதவியுடன் மொபைல் போனின் ஒஙஊஒ எண் 357054000874988 வேறொரு சிம்கார்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது 9419901156 என்ற எண்ணுடன் பொருத்தப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. அது ஹஜன் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மொபைல் பேசி எண்ணாகும். அவர் பெயர் அப்துல் ரஷீத் வாகே. அவரை விசாரித்தபோது காவல்துறை உதவி ஆய்வாளர் இவருக்கு மொபைல் போன் கொடுத்த விஷயம் தெரியவந்தது.
நூல் பிடித்தாற்போல் விசாரணை தொடர, உயர்காவல்துறை அதிகாரிகள் ஹன்ஸ் ராஜ் பரிஹார், ராம்பஹதூர் மற்றும் ராணுவத்தின் மூன்று பிரிவுகளை நோக்கி சுட்டுவிரல்கள் நீளத் தொடங்கின. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி ஒன்று சேர்ந்தார்கள். கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
நாஸிர் அஹ்மத் டேகா. அத்தர் வியாபாரியான அவர் ஸ்ரீநகர் லால் சவுக்கிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத ஜிப்ஸி ஜீப்பில் காவல் காலிகளால் கடத்தப் படுகிறார். ராணுவ துப்பாக்கிப் பிரிவான ராஷ்ட்ரீய ரைபிளும், மாநிலக் காவல் துறையும் இவரையும் பாகிஸ்தான் தீவிரவாதி என முத்திரைக் குத்தி சுட்டுக் கொன்று விட்டனர். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கம்போல் செய்தி வாசித்தனர்.
ஆனால் ஏ.கே.47 துப்பாக்கியின் தோட்டாக்கள் அவர் உடலைத்தான் துளைத்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்களின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாநிலமெங்கும் பற்றிப் பரவுகிறது. போலித்தனமான என்கவுண்டர் மூலம் அப்பாவிகளை படுகொலை செய்யும் போக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ஒரு நோய் போலவே பரவி விட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை இயக்கத்தின் ஆசிய இயக்குநர் ப்ராட் ஆடம்ஸ் தெரிவித்தி ருக்கிறார். நியூயார்க்கை தளமாகக் கொண்டு இந்த மனித உரிமை இயக்கம் ''தவறான தகவல்களைக் கூறி அப்பாவிகளைப் படுகொலை செய்து அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வெளிநாட்டு தீவிரவாதிகளை சுட்டுவிட்டோம்'' என்று இந்தியப் பாதுகாப்பு படையினர் பொய்ச் செய்தி பரப்புவதாக குற்றம்சாட்டினர். இந்த அமைப்பினர் உண்மை அறியும் ஆய்வுக் காக காஷ்மீர் சென்றிருந்த போது மக்கள் தங்கள் மனக்குறையை கொட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இவ்வாறு ஏராளமானோர் காணாமல் போனதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். கடந்த இருபதாண்டுகளுக்குள் 8 ஆயிரம் பேர் இவ்வாறு காணாமல் போய் விட்டதாகவும், இது குறைந்தபட்ச கணக்காக இருக்குமே தவிர இதன் எண்ணிக்கை மேலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்களை கொலை செய்வதற்கு பணப்பரிசு, விருது, பதவி உயர்வு என அரசாங்கத்தால் வழங்கப்படுவது கேவலமான கலாச்சாரம் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது. இதுவே நீதியை சாகடித்து அப்பாவிகளின் படுகொலைக்கு வழிவகுத்து விடுகிறது என்றும் சாடியுள்ளது.
மனித உரிமை மீறும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும், 'இவர்கள் ஒன்றும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு அழுத்தமாக அறிவித்துவிட வேண்டும்' என்றும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
இதே அமைப்புதான் செப்டம்பர் 2006ல் 'காஷ்மீரில் ஒவ்வொரு மனிதனும் அச்சத் துடனே வாழ்க்கையைக் கழிக்கிறான்' என தெரிவித்திருந்தது.
இம்மாதிரியான நிகழ்வுகளால் காஷ்மீர் பிரச்சினை மேலும் மோசமடைவதை தடுக்க முடியாது என்றும் மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் மட்டும்தான் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்கள் சங்கம் உண்டு. கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி காணாமல் போனவர்களின் தினம் நினைவு கூறப்பட்ட போது கண்ணீருடன் தாங்கள் இழந்த குழந்தைகளையும், அன்புக்குரியவர்களையும் எண்ணி வேதனையில் ஆழ்ந்தனர்.
காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் தலைநகர் டெல்லியிலும், குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் விசாரணைக் கணைகளால் காஷ்மீரிகள் துளைத்தெடுக்கப் படுகின்றனர். விசாரணைக் காலங்கள் விடியா இரவுகளாய் நீள்கின்றன. ராணுவத்தினர் பாலியல் வன்முறை உட்பட பல குற்றங்கள் புரிந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல ஆண்டுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை தனிநபர் ஒழுக்க குறைபாடு சம்பந்தமான விஷயமாகக் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. திடீர் திடீரென நிகழ்ந்த அப்பாவிகளின் படுகொலை குறித்தும் அத்தகைய முத்திரையே குத்தப்பட்டது. எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் மனித உரிமை மீறல்கள் தற்போது திட்டமிடப்பட்டவை (எண்ஷ்ங்க் ஈழ்ண்ம்ங்ள்)யாக அமைப்பு ரீதியிலான படுகொலையாக (ஞழ்ஞ்ஹய்ண்ள்ங்க் ஈழ்ண்ம்ங்ள்) மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலை இந்தியாவுக்கு அழகல்ல. காஷ்மீரைக் காப்பது என்று சொல்வது காஷ்மீரிகளை காப்பதாகவே இருக்க வேண்டும். காஷ்மீரிகளை நேசிப்பது காஷ்மீரை நேசிப்பதன் பொருளாகும். சின்னஞ்சிறிய நிலப்பரப்பின் மீது ஏன் இவ்வளவு ராணுவக் குவிப்பு. ஒரு சிவிலியனுக்கு ஏழு ராணுவ வீரர்கள் என்ற ரீதியில் படைக்குவிப்பு தேவையா? கார்கிலும், டால் ஏரியும், பாரமுல்லாவும், சீறிப்பாய்ந்து ஓடும் ஜீலம் நதியும், அழகிய ஆப்பிள் தோட்டங்களும், மயக்கும் பள்ளத்தாக் குகளும், பரவசமடையச் செய்யும் பனிமலைகளும் முதலில் காஷ்மீரிகளுக்குத் தான் சொந்தம் என்பதை நாம் மறக்கக் கூடாது. காஷ்மீரில் நம் படைபலத்தை வைத்துக் கொண்டு அச்சுறுத்தக் கூடாது.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இருட்டு நேரத்தில் அப்பாவிகளை தூக்கிச் சென்று படுகொலை செய்யும் ராணுவ வீரர்கள், பாதுகாவல் படையினர் என்ற பெயரில் உலாவரும் கடைந்தெடுத்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி முறையான விசாரணை நடத்தி அந்த மனிதகுல விரோதிகளை தண்டிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும். மக்களின் இதயங்களை வென்றுவிட்டால் அந்த நிலப்பரப்பு மன மகிழ்வுடன் நம்முடன் இணையும். அதை விடுத்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்காமல் காஷ்மீரிகளைத் தீர்க்கும் மூர்க்கத்தனம் களையப்பட வேண்டும்.

Web Counter Code