இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

காஷ்மீர் படுகொலைகள்


காஷ்மீர் படுகொலைகள்: காவல்துறை லி ராணுவம் கூட்டு பயங்கரவாதம்?
ஜம்மு காஷ்மீர் இந்தியத் திருநாட்டிற்கே கிரீடம் போல் அமைந்திருக்கும் அழகிய பூமி. அறுபதாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சனையாக நீண்டு வருகிறது. ஏற்கெனவே அதற்கு இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று புதிய புதிய பிரச்சனைகளும் அரசியல்வாதிகளின் கைங்கர்யமாக அங்கு முளைத்தபடியே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மக்களின் வீரத்தியாகம், நூறு கோடி இந்தியர்களும் என்றும் நினைவில் வைத்து போற்றக் கூடிய ஒன்றாகும். இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களின் தியாகம் என்பது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிதோடு போயிற்று. கார்கில் போன்ற திடீர் போர்கள் வெடிக்கும் போது கணிசமாக நிதி திரட்டி கொடுப்பதோடு திருப்திபடும் நிலைமை.
ஆனால் காஷ்மீர் மக்கள் வெஞ்சமரில் விளையாடும் வீரத்தோள்களுடன் தாய் மண்ணைக் காக்கவும் மக்களைக் காக்கவும் என்றும் களத்தில் நிற்பவர்கள் அவர் களுக்கு ஒரு எதிரி மட்டும் தான் உண்டு என்று நாம் நினைத்து விட முடியாது. எங்கு நோக்கிலும் எதிரிகள் தான். எதிரிகள் நுழைந்து விடக் கூடாது என எல்லை யோரத்தில் கண்துஞ்சாது கடமையாற்றும் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக காஷ்மீர் மக்கள் விளங்குகிறார்கள்.
எழில் நிறைந்த பூமி, பதட்ட பூமியாக மாறியதற்கு அப்பாவி காஷ்மீரிகள் எப்படிக் காரணமாவார்கள்? என்ற கேள்விக் குறியையும் புறக்கணிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீரில் அநாதைகள் அதிகம், விதவைகள் அதிகம், இன்னும் திருமணமே ஆகாத பெண்கள் அதிகம், தங்களின் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் திருமணமே செய்யாமல் இருக்கும் ஆண்களும் அதிகம். மொத்தத்தில் பரிதாபத்துக்குரிய அப்பாவிகள் நிறைந்த காஷ்மீரில் அவர்களைச் சுற்றி படுபாவிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைக் கடத்தி அவர்களைக் கொலை செய்ததாகவும் இதில் காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இந்திய ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் கள் வெளிவந்துள்ளன.
ஏழைகள் ஏதுமற்றோர், ஏனென்று கேட்க நாதியற்றோரை அதிரடியாய் மடக்கிப் பிடித்து தீவிரவாதி என குற்றம்சாட்டி காவல்துறை வாகனங்களில் அள்ளிச் செல்வது, பாகிஸ்தானில் ஏதோவொரு இயக்கத்தின் கீழ் பயிற்சி பெற்றதாக குற்றம் சாட்டி அதைப் பதிவு செய்துவிட்டு பின்னர் பிடித்து வைத்திருந்தவரை, 'தப்பிக்க முயற்சி செய்ததாக'க் கூறி சுட்டுக் கொன்று விடுவது என செய்வதற்கு மிக எளிதான(?) காரியத்தை காவல்துறையும் ராணுவமும் அரங்கேற்றி வந்துள்ளன.
இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிடும் சூழலில் இதில் மனித உரிமை மீறல் இருந்ததா? உண்மை யில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதிகளா? அல்லது அப்பாவிகளா? என்ற எந்த அக்கறையும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இல்லை. புலனாய்வு பத்திரிக் கைகள், புடலங்காய் பத்திரிகைகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பத்திரிகைகள் கூட செய்தியின் உண்மையை உணர ஆர்வம் காட்டு வதில்லை. பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன்களைப் பற்றி நாட்டில் யாருக்கும் அக்கறையில்லை.
இந்நிலையில் தங்கள் அன்புக்குரிய குடும்பத் தலைவர்கள் திடீர் திடீரென காணாமல் போவது குறித்து காஷ்மீர் மக்கள் மாநில அரசை நெருக்கத் தொடங்கினர். ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைக் கழகமும் இப்பிரச்சனையை கையி லெடுக்கவே, விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டார்.
விசாரணையில் வெளிவந்த தகவல்கள் ஜம்மு காஷ்மீரை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டது. உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களை ஒட்டுமொத்தமாக அதிருப் தியில் தள்ளியது. சர்வதேச அளவில் நாட்டின் புகழுக்கே பங்கம் ஏற்பட்டது.
விருதுகள், பணப்பரிசு, பதவி உயர்வு பெறுவதற்காக அப்பாவிகளைப் பிடித்து தீவிரவாதிகள் என லாக்கப்புகளில் அடைத்துவிட்டு பின்னர் அவர்கள் தப்பி யோட முயற்சித்தார்கள் எனக் கூறி சுட்டுக் கொன்று நாடகமாடுவது. இந்த படுகொலை வெறியாட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்திய வீரதீரச் சாதனையாகக் காட்டி விருதுகள், பணப் பரிசுகள், பதவி உயர்வு பெறுவது என தெளிவான சதித்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது அம்பலமானது.
இந்திய ராணுவமும், காவல் படையும் இந்த இரக்கமற்ற செயலை செய்வதற்கு, காஷ்மீர் மாநில காவல்துறையிலுள்ள மனித மிருகங்கள் உடந்தையாக இருந்து படுகொலை செய்வதற்கு ப­யாடுகளை (அப்பாவிகளை) பிடித்துக் கொடுப்பது என விரிவான செயல்திட்டத்தின்படி(?) ஒரு வெறிக்கும்பல் ஈடுபட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. இந்தச் சதியில் இந்திய ராணுவத்தின் மூன்று படைப் பிரிவு களுக்கு தொடர்பிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. 5வது ராஷ்ட்ரிய ரைஃ பிள்ஸ் அதிகாரிகள், மற்றும் 24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவுகளின் அதிகாரி களுக்கும் இந்த சதிச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விபரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போலி என்கவுண்டர்களை உறுதிப்படுத்திய போலி எப்.ஐ.ஆர்.கள்
முதல் தகவல் அறிக்கை (எஒத) 09லி12லி06 ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்:
ஜம்மு காஷ்மீர் சிறப்பு காவல் படையும் மத்திய ரிசர்வ் காவல்படையும் அடையாளம் தெரியாத பாகிஸ்தான் தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. (அவரது உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார்)
எப்.ஐ.ஆர்.203 அக்டோபர் 5 2006 சம்பல் காவல் நிலையம்
13வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு பதிவு செய்தது. பாகிஸ்தானின் ஜெய்ஷே முஹம்மத் இயக்கத்தைச் சேர்ந்த ஜாஹித் அ­ சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. (இவரது உண்மை பெயர் சவுகத் அஜீஸ்)
எப்.ஐ.ஆர். (மார்ச் 14 2006) சம்பல் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. (பின்னர் இவர் குலாம் நபி வானி என இப்போது அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். 25 (மார்ச் 8 2006) கன்கன் காவல் நிலையம்
24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு. அடையாளம் தெரியாத தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்துள்ளது. இவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இவர் அ­ முஹம்மது பத்ரு என பின்னர் அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். (பிப்ரவரி 17 2006) ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரிடமிருந்து கலாஷ்ரி கோவ் ரைஃபிள் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் இவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் (இவர் நாஸிர் அஹ்மத் டெகா என பின்னர் தெரியவந்தது)
இந்த ஐந்து என்கவுண்டர் படுகொலை களைக் காட்டி விருதுகள், பணப்பரிசுகள், பதவி உயர்வு என்பவற்றை வாங்கி அனுபவித்தார்கள். தங்கள் குடும்பத் தலைவர் களை இழந்து அப்பாவி காஷ்மீரி குடும்பங்கள் கண்ணீர் கட­ல் தத்தளிக்க ஏதோ செயற்கரிய சாதனை செய்ததைப் போல குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்த அயோக்கியர்கள் மாவீரன்கள் போல் உலா வந்தனர். காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் குமுறி எழாமல் இருந்திருந்தால் இந்த அயோக்கியர்களின் முகத்திரை கிழிக்கப்படாமலேயே போயிருக்கக் கூடும்.
2006 டிசம்பர் மாதம் இவர்கள் கண்டர்பல் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பாகிஸ்தான் தீவிரவாதி, முல்தானில் பயிற்சி பெற்றவர். கொடிய ஆயுதங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டவர் என இவர்கள் குறிப்பிடுவது உண்மையில் யார் தெரியுமா?
நடைபெற்ற போ­ எண்கவுண்டர் படுகொலை புகார்களினால் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டதினால் உண்மைகள் தோலுரிக்கப்பட்டன. புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப் பட்டன லி உண்மைகளும்.
பாகிஸ்தான் தீவிரவாதி என்றும், முல்தானில் பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படும் அவரது பெயர் அபூஹபீஸ் என்றும் (இவர்களே பேர்களையும் வைத்து விடுகிறார்கள்) லஷ்கர்லிஇலிதய்யிபா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி சுட்டுக் கொல்லப்பட்டவரின் உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார். ஏழை கார்பண்டர். தினக் கூ­க்காக தினமும் ஸ்ரீநகர் சென்று வருபவர்.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவர் காணாமல் போனார். இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீஸ்காரர்கள் ஒரு மையவாடிக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மான் உடலை புதைத்துள்ளனர். புதைக்கும் முன்பாக அவர் கா­ல் அணிந்திருந்த ஷுக்களை கழற்றிவிட்டுத் தான் புதைத்ததாக மையவாடியின் காவலாளி தெரிவித்தார்.
காவல்துறை துணை ஆய்வாளர்கள், இரண்டு பொதுமக்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சம்பல் பகுதி படா மொஹல்லாவில் ஆவேசமடைந்த ஜனத்திரளில் ஆத்திரம் அலை மோதியது. ஸ்ரீநகருக்கு வெளியே ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆத்திரம் அடைந்த மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
'அமைதி காக்க வேண்டும்' 'பொறுமையைக் கைவிட வேண்டாம்' என பள்ளிவாசல் ஒ­பெருக்கி மீண்டும் மீண்டும் கெஞ்சியது. காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் தீரும்வரை வீசினர். பொதுமக்கள் கீழே கிடந்ததையெல்லாம் காவல்துறையின் மீது வீசியெறிந்தனர் மேசை நாற்கா­கள் பறந்தன.
செய்தியாளர்களும், தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும் ஓட ஓட விரட்டப்பட் டனர். 'என்றாவது உண்மையை எழுதியிருக்கிறாயா?' என ஆவேசமாக கேட்டுக் கேட்டு உதைத்து விரட்டினர். மகனை இழந்த தந்தையின் வருகை, ஆவேசமாக நடந்த மக்களின் வேதனையை அதிகப்படுத்தியது.
தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மீண்டும் புதைக்கப்பட அங்கு கொண்டு வரப்பட்டது. சடலத்தின் வலது தோள் பட்டையி­ருந்து ரத்தம் கசிவு இருந்தது. முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
மத்திய தடயவியல் துறையி­ருந்து இரண்டு மருத்துவர்கள் சண்டிகரி­ருந்து புறப்பட்டு வந்தனர். பிப்ரவரி முதல் தேதி புதன்கிழமையன்று வந்த அவர்கள் கொல்லப்பட்ட அப்துர்ரஹ்மான் உடலி­ருந்தது ரத்த மாதிரிகளையும் அவரது பெற்றோரின் உட­­ருந்த ரத்தம் மற்றும் திசு மாதிரிகளையும் எடுத்தனர்.
குண்டுகள் பாய்ந்த அடையாளம் அப்துர் ரஹ்மான் உட­ல் நான்கு பகுதிகளில் இருப்பதாகவும், மார்பின் நடுப்பகுதி, தாடை, கால் மூட்டு மற்றும் இடது வயிறு போன்றவற்றில் தோட்டாக்கள் துளைத்த அடையாளம் காணப்பட்டதாகவும் தடயவியல் குழுவில் இடம்பெற்றிருந்த உள்ளூர் அறுவை சிகிச்சை மருத்துவர் முஹம்மத் ஹயாத் குறிப்பிட்டார்.
அப்துர் ரஹ்மான் மனைவி முனீரா மற்றும் பெண்கள், அப்துர் ரஹ்மானின் உடலைக் காண வந்த போது முனீரா மயங்கி சரிந்தார்.
வேதனையில் ஆழ்ந்த கூட்டத்தின் இந்திய ராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள் இமயத்தில் முட்டி எதிரொ­த்தது.
வெளியே தெரியாமல் செய்த இந்த கோரக் கொலை எவ்வாறு உலகிற்கு தெரிய வந்தது தெரியுமா?
டிசம்பர் 8ஆம் தேதி அப்துர் ரஹ்மான் காணாமல் போகிறார். ஊரெங்கும் தேடிப் பார்த்த பின் ஸ்ரீநகர் தெற்கு துணைக் கண்காணிப்பாளர் உத்தம்சந்த்திடம் முறை யிடச் சென்றபோது அப்துர்ரஹ்மானை விசாரணைக்காக கொண்டு சென்ற தகவலையும், அவர் பெயர் காணாமல் போனோர். பட்டியலில் பதிவு செய்யப் பட்டது. அவர் எங்கு போனார் என்பது குறித்து தேடப்பட்டு வரும் நிலையில் அப்துர்ரஹ் மானின் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.எஸ்.என்.எல். துறை யினரின் உதவியுடன் மொபைல் போனின் ஒஙஊஒ எண் 357054000874988 வேறொரு சிம்கார்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது 9419901156 என்ற எண்ணுடன் பொருத்தப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. அது ஹஜன் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மொபைல் பேசி எண்ணாகும். அவர் பெயர் அப்துல் ரஷீத் வாகே. அவரை விசாரித்தபோது காவல்துறை உதவி ஆய்வாளர் இவருக்கு மொபைல் போன் கொடுத்த விஷயம் தெரியவந்தது.
நூல் பிடித்தாற்போல் விசாரணை தொடர, உயர்காவல்துறை அதிகாரிகள் ஹன்ஸ் ராஜ் பரிஹார், ராம்பஹதூர் மற்றும் ராணுவத்தின் மூன்று பிரிவுகளை நோக்கி சுட்டுவிரல்கள் நீளத் தொடங்கின. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி ஒன்று சேர்ந்தார்கள். கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
நாஸிர் அஹ்மத் டேகா. அத்தர் வியாபாரியான அவர் ஸ்ரீநகர் லால் சவுக்கிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத ஜிப்ஸி ஜீப்பில் காவல் காலிகளால் கடத்தப் படுகிறார். ராணுவ துப்பாக்கிப் பிரிவான ராஷ்ட்ரீய ரைபிளும், மாநிலக் காவல் துறையும் இவரையும் பாகிஸ்தான் தீவிரவாதி என முத்திரைக் குத்தி சுட்டுக் கொன்று விட்டனர். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கம்போல் செய்தி வாசித்தனர்.
ஆனால் ஏ.கே.47 துப்பாக்கியின் தோட்டாக்கள் அவர் உடலைத்தான் துளைத்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்களின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாநிலமெங்கும் பற்றிப் பரவுகிறது. போலித்தனமான என்கவுண்டர் மூலம் அப்பாவிகளை படுகொலை செய்யும் போக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ஒரு நோய் போலவே பரவி விட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை இயக்கத்தின் ஆசிய இயக்குநர் ப்ராட் ஆடம்ஸ் தெரிவித்தி ருக்கிறார். நியூயார்க்கை தளமாகக் கொண்டு இந்த மனித உரிமை இயக்கம் ''தவறான தகவல்களைக் கூறி அப்பாவிகளைப் படுகொலை செய்து அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வெளிநாட்டு தீவிரவாதிகளை சுட்டுவிட்டோம்'' என்று இந்தியப் பாதுகாப்பு படையினர் பொய்ச் செய்தி பரப்புவதாக குற்றம்சாட்டினர். இந்த அமைப்பினர் உண்மை அறியும் ஆய்வுக் காக காஷ்மீர் சென்றிருந்த போது மக்கள் தங்கள் மனக்குறையை கொட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இவ்வாறு ஏராளமானோர் காணாமல் போனதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். கடந்த இருபதாண்டுகளுக்குள் 8 ஆயிரம் பேர் இவ்வாறு காணாமல் போய் விட்டதாகவும், இது குறைந்தபட்ச கணக்காக இருக்குமே தவிர இதன் எண்ணிக்கை மேலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்களை கொலை செய்வதற்கு பணப்பரிசு, விருது, பதவி உயர்வு என அரசாங்கத்தால் வழங்கப்படுவது கேவலமான கலாச்சாரம் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது. இதுவே நீதியை சாகடித்து அப்பாவிகளின் படுகொலைக்கு வழிவகுத்து விடுகிறது என்றும் சாடியுள்ளது.
மனித உரிமை மீறும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும், 'இவர்கள் ஒன்றும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு அழுத்தமாக அறிவித்துவிட வேண்டும்' என்றும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
இதே அமைப்புதான் செப்டம்பர் 2006ல் 'காஷ்மீரில் ஒவ்வொரு மனிதனும் அச்சத் துடனே வாழ்க்கையைக் கழிக்கிறான்' என தெரிவித்திருந்தது.
இம்மாதிரியான நிகழ்வுகளால் காஷ்மீர் பிரச்சினை மேலும் மோசமடைவதை தடுக்க முடியாது என்றும் மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் மட்டும்தான் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்கள் சங்கம் உண்டு. கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி காணாமல் போனவர்களின் தினம் நினைவு கூறப்பட்ட போது கண்ணீருடன் தாங்கள் இழந்த குழந்தைகளையும், அன்புக்குரியவர்களையும் எண்ணி வேதனையில் ஆழ்ந்தனர்.
காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் தலைநகர் டெல்லியிலும், குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் விசாரணைக் கணைகளால் காஷ்மீரிகள் துளைத்தெடுக்கப் படுகின்றனர். விசாரணைக் காலங்கள் விடியா இரவுகளாய் நீள்கின்றன. ராணுவத்தினர் பாலியல் வன்முறை உட்பட பல குற்றங்கள் புரிந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல ஆண்டுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை தனிநபர் ஒழுக்க குறைபாடு சம்பந்தமான விஷயமாகக் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. திடீர் திடீரென நிகழ்ந்த அப்பாவிகளின் படுகொலை குறித்தும் அத்தகைய முத்திரையே குத்தப்பட்டது. எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் மனித உரிமை மீறல்கள் தற்போது திட்டமிடப்பட்டவை (எண்ஷ்ங்க் ஈழ்ண்ம்ங்ள்)யாக அமைப்பு ரீதியிலான படுகொலையாக (ஞழ்ஞ்ஹய்ண்ள்ங்க் ஈழ்ண்ம்ங்ள்) மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலை இந்தியாவுக்கு அழகல்ல. காஷ்மீரைக் காப்பது என்று சொல்வது காஷ்மீரிகளை காப்பதாகவே இருக்க வேண்டும். காஷ்மீரிகளை நேசிப்பது காஷ்மீரை நேசிப்பதன் பொருளாகும். சின்னஞ்சிறிய நிலப்பரப்பின் மீது ஏன் இவ்வளவு ராணுவக் குவிப்பு. ஒரு சிவிலியனுக்கு ஏழு ராணுவ வீரர்கள் என்ற ரீதியில் படைக்குவிப்பு தேவையா? கார்கிலும், டால் ஏரியும், பாரமுல்லாவும், சீறிப்பாய்ந்து ஓடும் ஜீலம் நதியும், அழகிய ஆப்பிள் தோட்டங்களும், மயக்கும் பள்ளத்தாக் குகளும், பரவசமடையச் செய்யும் பனிமலைகளும் முதலில் காஷ்மீரிகளுக்குத் தான் சொந்தம் என்பதை நாம் மறக்கக் கூடாது. காஷ்மீரில் நம் படைபலத்தை வைத்துக் கொண்டு அச்சுறுத்தக் கூடாது.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இருட்டு நேரத்தில் அப்பாவிகளை தூக்கிச் சென்று படுகொலை செய்யும் ராணுவ வீரர்கள், பாதுகாவல் படையினர் என்ற பெயரில் உலாவரும் கடைந்தெடுத்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி முறையான விசாரணை நடத்தி அந்த மனிதகுல விரோதிகளை தண்டிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும். மக்களின் இதயங்களை வென்றுவிட்டால் அந்த நிலப்பரப்பு மன மகிழ்வுடன் நம்முடன் இணையும். அதை விடுத்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்காமல் காஷ்மீரிகளைத் தீர்க்கும் மூர்க்கத்தனம் களையப்பட வேண்டும்.

No comments:

Web Counter Code