
இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை:உலகை உறைய வைத்த வீர மரணம்அபூசாலிஹ்
தியாகச் செம்மல், இறை நம்பிக்கையாளர்களின் ஞானத்தந்தை நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இவ்வுலகம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது உலகத்தைப் பதறச் செய்த, சரித்திரம் சந்தித்திராத சதிச் செயலை சண்டாளர்கள் நிகழ்த்தினர்.
ஈராக்கின் அதிபர் மாட்சிமிகு சதாம் ஹுசைன் ஆக்கிரமிப்பு சக்திகளாலும், அவர் களின் அடிவருடிகளாலும் படுகொலை செய்யப்பட்டார்.
கொடூரர்களான ஃபிர்அவ்ன், ஜெங்கிஸ்கான், ஹிட்லர் வரிசையில் வெள்ளை மாளிகை என்ற சாத்தான் குகையின் ஓநாய் மனிதனும் நவீனக் கொடூரனாக நான் காவதாக இடம்பெற்றார்.
2006 டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, இருவேறு மனிதர்களை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது. ஒன்று, இந்த நூற்றாண்டின் சரித்திரம் இதுவரை கண்டி ராத மாவீரன். மற்றொன்று, உலகமகா கோழைகள்.
மரணம் என்ன செய்யும் என்பார்கள்? ஆனால் மரணம் வந்த பின்னர்தான் அதனை எதிர்கொள்பவர்களின் பரிதாப நிலை குறித்து நாம் காண முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்குண்டு உரிமைகள் பறிக்கப் பட்ட மனிதராக இருந்தபோதும் துணிச்ச லாக ஆண்மையுடன் கம்பீரத்துடன் சதாம் மரணத்தை எதிர்கொண்டார்.
உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்று கூறுபவர்கள், 'உயிர் எமக்கு தூசுக்கு சமானம்' என்பவர்களெல்லாம் அத்துனை நெஞ்சுரத்துடன் நடந்து கொண்டதாக வழிவழிக் கதைகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் காவிய நாயகர்களையும் மிஞ்சி வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதராக சதாம், உலகின் வரலாற்று பிரமிப் பாகிறார்.
தனது உயிருக்கு உலைவைக்க முயன்ற கொலைகாரக் கூட்டத்தை காவல்படையினர் சுட்டுக் கொன்றதற்காக மாபெரும் மனிதகுலப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறி சதாம் ஹுசைனுக்கு அடிவருடி அரசின் நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கிறது. சட்ட உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இறுதியாக நீதி மறுக்கப்படுகிறது. அல்ல முதலிலிருந்தே மறுக்கப்படுகிறது. சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பொம்மை நீதிமன்றம் பொய்மை தீர்ப்பை வழங்குகிறது. உலகமெங்கும் கண்டனக் கணைகள் எழுந்தன. சதாம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீடு மறுதலிக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்ற பதட்ட நிலையை அடிவருடி நீதிமன்றம் ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் நீதி பரிபாலனம் குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியது. வாடிகன் அரசும் தனது கண்டனத்தை எழுப்பியது. பிரேசில் தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. உலகம் மெல்ல மெல்ல சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனை குறித்த செய்திகளை அறிந்து செய்வதறியாது தவித்தன. அரசுப் பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் ஆலோசனைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதிதீவிர அமெரிக்க ஆதரவு நாடுகள் அமெரிக் காவுக்கு வலிக்காமல் எப்படி கண்டனங்களை(!) தெரிவிக்கலாம் எனத் திணறிய நேரத்தில் மணித்துளிகள் மளமளவென இறக்கை கட்டிப் பறந்தன.
உலகம் சுதாரித்து விட்டால் ஆபத்து. பொதுமக்கள் பொங்கி எழுந்தால் என்னா வது? ஒருவேளை அரபுலகத் திற்கு சொரணை ஏற்பட்டு தொலைத்து விட்டால் என்ன செய்வது என்கிற விபரீத சிந்தனையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அடிவருடி அரசும் யூகித்தன.
எவ்வாறாயினும் காலம் தாழ்த்தினால் தாழ்ந்து விடுவோம். சதாம் மீண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டு விடப் போகிறது என அஞ்சி சில மணி நேரங்களில் காரியத் தை கனகச்சிதமாக முடித்துவிட திட்டம் தீட்டப்பட்டு மரணத்துக்கு மணித்துளிகள் குறிக்கப்படுகின்றன.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தற்போதைய ஈராக் அடிவருடி அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றவாளிகளைக் கூட எதிரிகளிடம் ஒப்ப டைக்கக் கூடாது. ஆனால் ஒரு நாட்டின் அதிபரை ரவுடித்தனமாகக் கைது செய்து, குதறக் காத்திருந்த குள்ளநரிக் கும்பலின் கைகளில் திணித்தனர்.
இதுவரை மோசமான தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படும் 'ஜெயித்தவன் நீதியை' வன்மமாக வலியுறுத்திய 'நூரெம்பர்க்' தீர்ப்பாயம் கூட தனது எதிரியை (அதாவது) பாதிக்கப்பட்டவரின் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த நீதிமன்றத்தில் அது கூட வழங்கப்படவில்லை. இருட்டு மனம் கொண்ட தீயவர்கள் திருட்டுத்தனம் செய்ததைப் போல உலகம் விழிக்கும் முன்பே கொடு மையை செய்யத் துணிந்தனர்.
அதிகாலை இந்தியா அலறலுடன் விழித்தது. இந்தியாவின் ஆங்கிலச் செய்திச் சேனல்கள், இன்னும் சிறிது நேரத்தில் சதாம் தூக்கிலிடப்படுவார் என்றே பதட்ட செய்தியை பரபரப்பாய் நகரும் எழுத்துக்களால் சொன்னது. சதாம் சார்பாக அமெரிக்க நீதிபதியிடம் செய்த முறையீடும் மறுதலிக்கப்பட்டது.
'அந்த நேரம் வந்துவிட்டது' என சதாமிடம் கூறப்பட்டது. சதாம் மரணத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்த உடைமைகள் திரும்பப் பெறப் பட்டன. அவர் தனது கையில் திருக்குர்ஆனை ஏந்தினார். சதாம் தனது முகத்திலிருந்து கழுத்து வரை மூடிக்கொள்ளும் துணியை போட்டுக் கொள்ள மறுத்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அடிவருடி கொலைக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு வெள்ளை யில் கம்பீரமாக சதாம் நடை போட்டார். கறுப்புக் கோட்டும் வெள்ளைச் சட்டை யும் அணிந்து வந்திருந்த அவர் முகத்தில் மரணம் குறித்த எந்த சலனமும் சஞ் சலமும் ஏற்படவில்லை. ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என நூர் அல் மாலிக்கியின் அரசியல் ஆலோசகர் சாமி அல் அஸ்கரி கேட்டபோது, 'தேவையில்லை' எனக் கம்பீரமாக பதில் அளித்தார். அவரது கைகள் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து சதாமிடம் விளக்கப்பட்டது. என்னவோ சுற்றுலா பயணத்திற்கு வந்தவர் அந்த இடங்களைப் பற்றிக் கூறுவதை கவனமாகக் கேட்பதைப் போல மிடுக்கு மிளிரும் அழகுடன் நெற்றிப் புருவத்தை நெறித்து கேட்டுக் கொண்டார்.
மார்க்க அறிஞர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என கம்பீர மொழியில் சாட்சி பகர்ந்தார். ஈராக் நேரம் சரியாக காலை 6.10க்கு சதாம் என்ற அரபுலகின் கம்பீர சகாப்தம் சதியால் சாய்க்கப்பட்டது. தூக்கில் போடப்பட்டார் சதாம்.
ஈராக் துயிலில் இருந்து முற்றிலும் விழிக்காத நிலையில் சதாம் நீடு துயிலில் ஆழ்ந்து விட்டார். சதாம் படுகொலை செய்யப்பட்ட செய்தி திக்ரித், சமாரா, ரமதி உள்ளிட்ட வீர பூமிக்குப் பரவியபோது பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத னர். ஆண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சதாம் வீரத் தியாகியாகிவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக! புனிதப் போராளியாக நம் அதிபர் உயிர் துறந்தார், நாம் யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம் என திக்ரிதின் பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசலின் இமாம் ஷேக் யஹ்யா அல் அதாவி கூறி னார்.
திக்ரிதின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. திக்ரிதின் அருகே உள்ள கிராமமான அவ்ஜாவில்தான் சதாம் ஹுசைன் பிறந்தார். அவ்வூரில் அடக்கம் செய்ய அமெரிக்க ஆதிக்க மற்றும் அடிவருடிக் கூட்டம் முடிவெடுத்தது.
கொலைக் களத்திலிருந்து சதாம் ஹுசைன் உடல் 110 மைல் தூரத்தில் உள்ள அவ்ஜாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வடக்கு திக்ரிதில் உள்ள கேம்ப் செபய்சர் என்ற அமெரிக்க ராணுவ தளத்தை அடைந்தது. (செபய் சர் என்பவர் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான ஓட்டியாவார். 1991ல் முதல் வளைகுடாப் போர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஈராக்கியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவர். அவரது பெயரில் உள்ள விமான தளத்திலிருந்து சதாம் ஹுசைனின் உடல் ஈராக்கின் எடுபிடி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்தை சதாம் எதிர்கொண்ட விதம் உலகம் உள்ளளவும் மறக்க முடியாததாக மாறிவிட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது வழக்கமாக தூக்குத் தண்டனைக்கு ஆளானவர் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.ஆனால் சதாம் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தண்டனை நிறைவேற்றக் கூடியவர்கள் முகமூடி அணிந்து தங்களது அடையாளத்தை மறைத் துக் கொண்டனர். சடாரென்று பார்க்கும்போது அந்தக் காட்சி சதாம் அருகிலுள்ளவர்களை தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்வதைப் போல் இருந்தது. சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பலையால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு சக்திகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சதாம் சரித்திரம் காணாத மாவீரராய் உலக சமூகத்தின் முன் போற்றப் படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் படைகளை இழந்து, ஆட்சியைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்காவும் அதன் சகாக்களும் பெரும் வல்லமை யுடன் படை பலத்துடன் பொருளாதாரச் செழுமையுடன் விஞ்ஞான உச்சத்தில் நின்றா லும், அன்று ஹிட்லரின் ஜெர்மனி அடைந்த இழிநிலையை அவர்கள் அடைந்து விட்டனர்.
சதாமின் படுகொலைக் குறித்து, அரபுலக மாவீரரின் வீரமரணம் குறித்து பங்காளிக் காய்ச்சலில் ஈரானும், ஜால்ரா சத்தத்துடன் ஜப்பானும் மட்டுமே வரவேற்றி ருக்கின்றன. புஷ்ஷும் பிளேரும் வரவேற்றிருந்தாலும் அமெரிக்க மக்கள் சபை யை ஆளும் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனின் துணைப் பிரதமரும் சதாம் படுகொலை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சதாம் இறந்தாலும் உலக மக்களின் இதயத்தை வென்றிருக்கிறார். ஆக்கிர மிப்பு சக்திகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற உலகம் தழுவிய எதிர்ப்புக் குரலின் மூலம் வாழ்ந்தும் இறந்து போனவர்களாய் சதாமை படுகொலை செய்தவர்கள் கருதப்படுகிறார்கள்.
அந்த நடமாடும் பிணங்களைப் பற்றி நாம் வேறென்ன சொல்வது? காத்திருங்கள் உங்கள் கொடுமைகளுக்கு பரிசு வழங்க நாளைய வரலாறு கொடுவாளோடு தயாராகிறது.
சதாம் கடற்கரையில் கண்டனக் கணைகள்
சதாம் ஹுசைன் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்தக் கடற்கரை எங்கே உள்ளது என்றுதானே வினவுகின்றீர்கள்? இந்தக் கடற்கரை அரபு நாட்டில் இல்லை. நமது நாட்டில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி அருகில் உள்ளது சதாம் கடற்கரை. 1990ல் குவைத் போரின்போது அமெரிக்கா வை எதிர்த்து சதாம் துணிவுடன் நின்றதன் விளைவாக 'ஆரியான் கடல்புரம்' என்று அழைக்கப்பட்ட கடற்கரையை 'சதாம் கடல்புரம்' (சதாம் கடற்கரை) என்று இக்கடற்கரையைப் பயன்படுத்தும் மீனவர்கள் பெயர் மாற்றம் செய்தார்கள்.
சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட செய்தி வந்த நேரத்தில் இந்த கடற்கரையை பயன்படுத்தும் மீனவர்கள் பெரும் துயரம் அடைந்தனர். பல மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் செல்பேசி வழியாகச் செய்தியறிந்து உடனடியாக தாங்கள் பிடித்த லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள மீன்களை கடலிலேயே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பினார்கள். ''நாங்கள் பிடித்த மீன்களின் பெறுமானத்தை விட சதாமின் இழப்பு எங்களுக்கு பெரியதாக உள்ளது. புஷ் மீதும், வஞ்சகம் நிறைந்த அமெரிக்காவின் மீதும் எங்களுக்குள்ள வெறுப்பிற்கு அளவே இல்லை'' என்று குன்ஹாலன் என்ற மீனவர் கூறினார்.
சதாம் கடற்கரையில் கறுப்புக் கொடிகள் எங்கும் பறந்தன. உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொடியவன் ஜார்ஜ் புஷ்ஷின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சதாம் என் மகனைப் போன்றவர். இங்குள்ள அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் விளங்கினார் என்று ஆமினா உம்மா என்ற மூதாட்டி தெரிவித்தார். சதாம் கடற்கரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு என்றும் உத் வேகம் அளிக்கும் வகையில் அவரது நினைவை என்றும் போற்றிக் கொண்டே இருக்கும்.
முக்ததா யார்?
சதாம் கொலைக் களத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது அவரை இழிவுபடுத் தும் விதமாக 'முக்ததா... முக்ததா' என சுற்றியிருந்தவர்கள் குரல் எழுப்பியதாகவும், சதாம் ஹுசைன் 'முக்ததா?' என ஆத்திரத்துடன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
முக்ததா லி சதாமின் எதிரி என்றும், முக்ததாவின் தந்தை அல் சதரை சதாம் கொலை செய்ததாகவும், அந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்பட்டு விட்டது என முக்ததா அல்சதரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றும் தகவல்கள் பரவின.
முதலில் முக்ததா யார்? அவரது தந்தை அல்சதர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் பார்த்தால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முக்ததா அல்சதர் ஒரு ஷியா சமூகப் போராளி. அமெரிக்காவை எதிர்த்து நிழலுலகில் போர் புரிபவர்கள் முக்ததாவின் ஆதரவாளர்கள். அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் ஒரே ஷியா சமூகப் போராளிக் குழுவை முக்ததா அமைத்துள்ளார். அந்த கிளர்ச் சிப் படையின் பெயர் மஹ்தி சேனை என்பதாகும்.
கடந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது மார்க்க அறிஞரும் இளம் போராளியுமான முக்ததா அல்சதர் சென்றபோது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவரது குடிலுக்கே சென்று வரவேற்று அளவளாவினார். முக்ததா ஷியா, சன்னி சமூக மக்களிடையே இணக்கம் மென்மேலும் வளர பாடுபட்டு வருபவர்.
இந்நிலையில் சதாம் முக்ததாவின் தந்தையின் மரணத்திற்கு காரணம் என்பதையும் நடுநிலையாளர்கள் மறுக்கின்றனர். 1999ல் முக்ததாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அதற்கு சதாம் ஆட்சியே கார ணம் என்று கண்மூடித்தனமாக முக்ததாவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.
ஷியா பிரிவு அரசியல் குழுவினர் அனைவரும் அதிகார வெறியுடன் பதவியை நோக்கி நகர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது முக்ததா அல்சதரின் குழுவினர் மட்டும் கிளர்ச்சிக் குழுவினராகவும் அமெரிக்க எதிர்ப்பு படையினராகவும் உருவெடுத்ததால் எரிச்சலின் உச்சத்தில் இருந்த அமெ ரிக்கா சதாம் கொலைக் களத்தில் தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது.
அமெரிக்க அடிவருடிக் கும்பலால் நியமிக்கப்பட்டவர்கள் திடீரென முக்ததா... முக்ததா என கூச்சல் போட்டதின் அறுவடையை அமெரிக்கா உடனடியாகப் பெற் றுக் கொண்டது.
முக்ததா என சதாமின் மரணச் சூழலில் குரல் எழுப்பப்பட்டதால் முக்ததாவின் மஹ்தி சேனைக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும் இடையே உடனடி மோதல் அல்சதர் நகரில் ஏற்பட்டு எட்டு பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயம் அடை ந்தனர். மேற்குலக நரி புதிய கலகத்திற்கு பாதை அமைத்து கொடுத்து விட்டது.
முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் சென்றவர் சதாம்
வளைகுடா பிராந்தியத்தில் அதிகப் பொறியாளர்களைக் கொண்ட ஒரே நாடாக வும், சிறப்பான சாலை வசதிகளையும் லி நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தாகவும் சதாமின் ஆட்சிக் காலத்தில் ஈராக் விளங்கியது. கல்வியறிவில் ஈராக் சிறந்து விளங்கியது. அதிலும் சிறப்பாக பெண் கல்வியில் ஈராக் முன்னேற்றப் பாதையில் விரைந்து சென்றது. கல்வியில் உயர்நிலையை அடைந்ததற்காக சதாம் ஆட்சிக் காலத்தில் ஐ.நா.வின் யுனெஸ்கோ விருது ஈராக்கிற்கு வழங்கப்பட்டது.
மரணத் தருவாயிலும் இழிவுபடுத்த முயன்றவர்கள்
சதாம் ஹுசைன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சூழலிலும் இழிமனம் படைத்த அமெரிக்கா மற்றும் அடிவருடிக் கும்பல் தமது விஷமத்தனத்தைக் கைவிடவில்லை. சதாமை கேலி செய்தும், பரிகசித்தும், தகாத வார்த்தைகளால் துன் புறுத்தியும் கொடுமை இழைத்தனர்.
மரணத்தைத் துணிச்சலுடன் பெருமிதத்துடன் எதிர்கொண்ட அந்த மனிதருக்கு எதிராக வெறிக் கூச்சலிட்டதோடு, அவர் சாகும் நேரத்திற்காக ஆவலுடன் காத்தி ருந்தனர். ஈராக்கிய தேசிய பாதுகாப்புப் படையின் ஆலோசகர் மொஃபாக் அல் ருபையி இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் குறிப்பிடும்போது காவலாளிகளில் ஒருவன் 'சதாம் நீ எங்களை சீரழித்து விட்டாய், எங்களில் ஏராள மானோரைக் கொன்றாய், நீ அழிவை சந்திக்கப் போகிறாய்' என வெறித்தனமாகக் கூச்சலிட்டார்.
நான் உங்களை ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து மீட்டேன். உங்கள் எதிரிகளையும் அழித்தேன், ஈராக்கியர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மன்னிப்பை வழங்கிக் கொள்ள வேண் டும். ஈராக்கின் தற்போதைய அரசை நம்ப வேண்டாம். அமெரிக்கர்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் தூக்கு மேடையில் நின்று சூளுரைத் தார்
தியாகச் செம்மல், இறை நம்பிக்கையாளர்களின் ஞானத்தந்தை நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இவ்வுலகம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது உலகத்தைப் பதறச் செய்த, சரித்திரம் சந்தித்திராத சதிச் செயலை சண்டாளர்கள் நிகழ்த்தினர்.
ஈராக்கின் அதிபர் மாட்சிமிகு சதாம் ஹுசைன் ஆக்கிரமிப்பு சக்திகளாலும், அவர் களின் அடிவருடிகளாலும் படுகொலை செய்யப்பட்டார்.
கொடூரர்களான ஃபிர்அவ்ன், ஜெங்கிஸ்கான், ஹிட்லர் வரிசையில் வெள்ளை மாளிகை என்ற சாத்தான் குகையின் ஓநாய் மனிதனும் நவீனக் கொடூரனாக நான் காவதாக இடம்பெற்றார்.
2006 டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, இருவேறு மனிதர்களை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது. ஒன்று, இந்த நூற்றாண்டின் சரித்திரம் இதுவரை கண்டி ராத மாவீரன். மற்றொன்று, உலகமகா கோழைகள்.
மரணம் என்ன செய்யும் என்பார்கள்? ஆனால் மரணம் வந்த பின்னர்தான் அதனை எதிர்கொள்பவர்களின் பரிதாப நிலை குறித்து நாம் காண முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்குண்டு உரிமைகள் பறிக்கப் பட்ட மனிதராக இருந்தபோதும் துணிச்ச லாக ஆண்மையுடன் கம்பீரத்துடன் சதாம் மரணத்தை எதிர்கொண்டார்.
உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்று கூறுபவர்கள், 'உயிர் எமக்கு தூசுக்கு சமானம்' என்பவர்களெல்லாம் அத்துனை நெஞ்சுரத்துடன் நடந்து கொண்டதாக வழிவழிக் கதைகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் காவிய நாயகர்களையும் மிஞ்சி வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதராக சதாம், உலகின் வரலாற்று பிரமிப் பாகிறார்.
தனது உயிருக்கு உலைவைக்க முயன்ற கொலைகாரக் கூட்டத்தை காவல்படையினர் சுட்டுக் கொன்றதற்காக மாபெரும் மனிதகுலப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறி சதாம் ஹுசைனுக்கு அடிவருடி அரசின் நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கிறது. சட்ட உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இறுதியாக நீதி மறுக்கப்படுகிறது. அல்ல முதலிலிருந்தே மறுக்கப்படுகிறது. சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பொம்மை நீதிமன்றம் பொய்மை தீர்ப்பை வழங்குகிறது. உலகமெங்கும் கண்டனக் கணைகள் எழுந்தன. சதாம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீடு மறுதலிக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்ற பதட்ட நிலையை அடிவருடி நீதிமன்றம் ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் நீதி பரிபாலனம் குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியது. வாடிகன் அரசும் தனது கண்டனத்தை எழுப்பியது. பிரேசில் தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. உலகம் மெல்ல மெல்ல சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனை குறித்த செய்திகளை அறிந்து செய்வதறியாது தவித்தன. அரசுப் பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் ஆலோசனைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதிதீவிர அமெரிக்க ஆதரவு நாடுகள் அமெரிக் காவுக்கு வலிக்காமல் எப்படி கண்டனங்களை(!) தெரிவிக்கலாம் எனத் திணறிய நேரத்தில் மணித்துளிகள் மளமளவென இறக்கை கட்டிப் பறந்தன.
உலகம் சுதாரித்து விட்டால் ஆபத்து. பொதுமக்கள் பொங்கி எழுந்தால் என்னா வது? ஒருவேளை அரபுலகத் திற்கு சொரணை ஏற்பட்டு தொலைத்து விட்டால் என்ன செய்வது என்கிற விபரீத சிந்தனையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அடிவருடி அரசும் யூகித்தன.
எவ்வாறாயினும் காலம் தாழ்த்தினால் தாழ்ந்து விடுவோம். சதாம் மீண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டு விடப் போகிறது என அஞ்சி சில மணி நேரங்களில் காரியத் தை கனகச்சிதமாக முடித்துவிட திட்டம் தீட்டப்பட்டு மரணத்துக்கு மணித்துளிகள் குறிக்கப்படுகின்றன.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தற்போதைய ஈராக் அடிவருடி அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றவாளிகளைக் கூட எதிரிகளிடம் ஒப்ப டைக்கக் கூடாது. ஆனால் ஒரு நாட்டின் அதிபரை ரவுடித்தனமாகக் கைது செய்து, குதறக் காத்திருந்த குள்ளநரிக் கும்பலின் கைகளில் திணித்தனர்.
இதுவரை மோசமான தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படும் 'ஜெயித்தவன் நீதியை' வன்மமாக வலியுறுத்திய 'நூரெம்பர்க்' தீர்ப்பாயம் கூட தனது எதிரியை (அதாவது) பாதிக்கப்பட்டவரின் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த நீதிமன்றத்தில் அது கூட வழங்கப்படவில்லை. இருட்டு மனம் கொண்ட தீயவர்கள் திருட்டுத்தனம் செய்ததைப் போல உலகம் விழிக்கும் முன்பே கொடு மையை செய்யத் துணிந்தனர்.
அதிகாலை இந்தியா அலறலுடன் விழித்தது. இந்தியாவின் ஆங்கிலச் செய்திச் சேனல்கள், இன்னும் சிறிது நேரத்தில் சதாம் தூக்கிலிடப்படுவார் என்றே பதட்ட செய்தியை பரபரப்பாய் நகரும் எழுத்துக்களால் சொன்னது. சதாம் சார்பாக அமெரிக்க நீதிபதியிடம் செய்த முறையீடும் மறுதலிக்கப்பட்டது.
'அந்த நேரம் வந்துவிட்டது' என சதாமிடம் கூறப்பட்டது. சதாம் மரணத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்த உடைமைகள் திரும்பப் பெறப் பட்டன. அவர் தனது கையில் திருக்குர்ஆனை ஏந்தினார். சதாம் தனது முகத்திலிருந்து கழுத்து வரை மூடிக்கொள்ளும் துணியை போட்டுக் கொள்ள மறுத்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அடிவருடி கொலைக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு வெள்ளை யில் கம்பீரமாக சதாம் நடை போட்டார். கறுப்புக் கோட்டும் வெள்ளைச் சட்டை யும் அணிந்து வந்திருந்த அவர் முகத்தில் மரணம் குறித்த எந்த சலனமும் சஞ் சலமும் ஏற்படவில்லை. ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என நூர் அல் மாலிக்கியின் அரசியல் ஆலோசகர் சாமி அல் அஸ்கரி கேட்டபோது, 'தேவையில்லை' எனக் கம்பீரமாக பதில் அளித்தார். அவரது கைகள் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து சதாமிடம் விளக்கப்பட்டது. என்னவோ சுற்றுலா பயணத்திற்கு வந்தவர் அந்த இடங்களைப் பற்றிக் கூறுவதை கவனமாகக் கேட்பதைப் போல மிடுக்கு மிளிரும் அழகுடன் நெற்றிப் புருவத்தை நெறித்து கேட்டுக் கொண்டார்.
மார்க்க அறிஞர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என கம்பீர மொழியில் சாட்சி பகர்ந்தார். ஈராக் நேரம் சரியாக காலை 6.10க்கு சதாம் என்ற அரபுலகின் கம்பீர சகாப்தம் சதியால் சாய்க்கப்பட்டது. தூக்கில் போடப்பட்டார் சதாம்.
ஈராக் துயிலில் இருந்து முற்றிலும் விழிக்காத நிலையில் சதாம் நீடு துயிலில் ஆழ்ந்து விட்டார். சதாம் படுகொலை செய்யப்பட்ட செய்தி திக்ரித், சமாரா, ரமதி உள்ளிட்ட வீர பூமிக்குப் பரவியபோது பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத னர். ஆண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சதாம் வீரத் தியாகியாகிவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக! புனிதப் போராளியாக நம் அதிபர் உயிர் துறந்தார், நாம் யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம் என திக்ரிதின் பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசலின் இமாம் ஷேக் யஹ்யா அல் அதாவி கூறி னார்.
திக்ரிதின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. திக்ரிதின் அருகே உள்ள கிராமமான அவ்ஜாவில்தான் சதாம் ஹுசைன் பிறந்தார். அவ்வூரில் அடக்கம் செய்ய அமெரிக்க ஆதிக்க மற்றும் அடிவருடிக் கூட்டம் முடிவெடுத்தது.
கொலைக் களத்திலிருந்து சதாம் ஹுசைன் உடல் 110 மைல் தூரத்தில் உள்ள அவ்ஜாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வடக்கு திக்ரிதில் உள்ள கேம்ப் செபய்சர் என்ற அமெரிக்க ராணுவ தளத்தை அடைந்தது. (செபய் சர் என்பவர் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான ஓட்டியாவார். 1991ல் முதல் வளைகுடாப் போர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஈராக்கியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவர். அவரது பெயரில் உள்ள விமான தளத்திலிருந்து சதாம் ஹுசைனின் உடல் ஈராக்கின் எடுபிடி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்தை சதாம் எதிர்கொண்ட விதம் உலகம் உள்ளளவும் மறக்க முடியாததாக மாறிவிட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது வழக்கமாக தூக்குத் தண்டனைக்கு ஆளானவர் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.ஆனால் சதாம் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தண்டனை நிறைவேற்றக் கூடியவர்கள் முகமூடி அணிந்து தங்களது அடையாளத்தை மறைத் துக் கொண்டனர். சடாரென்று பார்க்கும்போது அந்தக் காட்சி சதாம் அருகிலுள்ளவர்களை தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்வதைப் போல் இருந்தது. சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பலையால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு சக்திகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சதாம் சரித்திரம் காணாத மாவீரராய் உலக சமூகத்தின் முன் போற்றப் படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் படைகளை இழந்து, ஆட்சியைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்காவும் அதன் சகாக்களும் பெரும் வல்லமை யுடன் படை பலத்துடன் பொருளாதாரச் செழுமையுடன் விஞ்ஞான உச்சத்தில் நின்றா லும், அன்று ஹிட்லரின் ஜெர்மனி அடைந்த இழிநிலையை அவர்கள் அடைந்து விட்டனர்.
சதாமின் படுகொலைக் குறித்து, அரபுலக மாவீரரின் வீரமரணம் குறித்து பங்காளிக் காய்ச்சலில் ஈரானும், ஜால்ரா சத்தத்துடன் ஜப்பானும் மட்டுமே வரவேற்றி ருக்கின்றன. புஷ்ஷும் பிளேரும் வரவேற்றிருந்தாலும் அமெரிக்க மக்கள் சபை யை ஆளும் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனின் துணைப் பிரதமரும் சதாம் படுகொலை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சதாம் இறந்தாலும் உலக மக்களின் இதயத்தை வென்றிருக்கிறார். ஆக்கிர மிப்பு சக்திகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற உலகம் தழுவிய எதிர்ப்புக் குரலின் மூலம் வாழ்ந்தும் இறந்து போனவர்களாய் சதாமை படுகொலை செய்தவர்கள் கருதப்படுகிறார்கள்.
அந்த நடமாடும் பிணங்களைப் பற்றி நாம் வேறென்ன சொல்வது? காத்திருங்கள் உங்கள் கொடுமைகளுக்கு பரிசு வழங்க நாளைய வரலாறு கொடுவாளோடு தயாராகிறது.
சதாம் கடற்கரையில் கண்டனக் கணைகள்
சதாம் ஹுசைன் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்தக் கடற்கரை எங்கே உள்ளது என்றுதானே வினவுகின்றீர்கள்? இந்தக் கடற்கரை அரபு நாட்டில் இல்லை. நமது நாட்டில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி அருகில் உள்ளது சதாம் கடற்கரை. 1990ல் குவைத் போரின்போது அமெரிக்கா வை எதிர்த்து சதாம் துணிவுடன் நின்றதன் விளைவாக 'ஆரியான் கடல்புரம்' என்று அழைக்கப்பட்ட கடற்கரையை 'சதாம் கடல்புரம்' (சதாம் கடற்கரை) என்று இக்கடற்கரையைப் பயன்படுத்தும் மீனவர்கள் பெயர் மாற்றம் செய்தார்கள்.
சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட செய்தி வந்த நேரத்தில் இந்த கடற்கரையை பயன்படுத்தும் மீனவர்கள் பெரும் துயரம் அடைந்தனர். பல மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் செல்பேசி வழியாகச் செய்தியறிந்து உடனடியாக தாங்கள் பிடித்த லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள மீன்களை கடலிலேயே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பினார்கள். ''நாங்கள் பிடித்த மீன்களின் பெறுமானத்தை விட சதாமின் இழப்பு எங்களுக்கு பெரியதாக உள்ளது. புஷ் மீதும், வஞ்சகம் நிறைந்த அமெரிக்காவின் மீதும் எங்களுக்குள்ள வெறுப்பிற்கு அளவே இல்லை'' என்று குன்ஹாலன் என்ற மீனவர் கூறினார்.
சதாம் கடற்கரையில் கறுப்புக் கொடிகள் எங்கும் பறந்தன. உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொடியவன் ஜார்ஜ் புஷ்ஷின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சதாம் என் மகனைப் போன்றவர். இங்குள்ள அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் விளங்கினார் என்று ஆமினா உம்மா என்ற மூதாட்டி தெரிவித்தார். சதாம் கடற்கரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு என்றும் உத் வேகம் அளிக்கும் வகையில் அவரது நினைவை என்றும் போற்றிக் கொண்டே இருக்கும்.
முக்ததா யார்?
சதாம் கொலைக் களத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது அவரை இழிவுபடுத் தும் விதமாக 'முக்ததா... முக்ததா' என சுற்றியிருந்தவர்கள் குரல் எழுப்பியதாகவும், சதாம் ஹுசைன் 'முக்ததா?' என ஆத்திரத்துடன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
முக்ததா லி சதாமின் எதிரி என்றும், முக்ததாவின் தந்தை அல் சதரை சதாம் கொலை செய்ததாகவும், அந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்பட்டு விட்டது என முக்ததா அல்சதரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றும் தகவல்கள் பரவின.
முதலில் முக்ததா யார்? அவரது தந்தை அல்சதர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் பார்த்தால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முக்ததா அல்சதர் ஒரு ஷியா சமூகப் போராளி. அமெரிக்காவை எதிர்த்து நிழலுலகில் போர் புரிபவர்கள் முக்ததாவின் ஆதரவாளர்கள். அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் ஒரே ஷியா சமூகப் போராளிக் குழுவை முக்ததா அமைத்துள்ளார். அந்த கிளர்ச் சிப் படையின் பெயர் மஹ்தி சேனை என்பதாகும்.
கடந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது மார்க்க அறிஞரும் இளம் போராளியுமான முக்ததா அல்சதர் சென்றபோது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவரது குடிலுக்கே சென்று வரவேற்று அளவளாவினார். முக்ததா ஷியா, சன்னி சமூக மக்களிடையே இணக்கம் மென்மேலும் வளர பாடுபட்டு வருபவர்.
இந்நிலையில் சதாம் முக்ததாவின் தந்தையின் மரணத்திற்கு காரணம் என்பதையும் நடுநிலையாளர்கள் மறுக்கின்றனர். 1999ல் முக்ததாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அதற்கு சதாம் ஆட்சியே கார ணம் என்று கண்மூடித்தனமாக முக்ததாவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.
ஷியா பிரிவு அரசியல் குழுவினர் அனைவரும் அதிகார வெறியுடன் பதவியை நோக்கி நகர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது முக்ததா அல்சதரின் குழுவினர் மட்டும் கிளர்ச்சிக் குழுவினராகவும் அமெரிக்க எதிர்ப்பு படையினராகவும் உருவெடுத்ததால் எரிச்சலின் உச்சத்தில் இருந்த அமெ ரிக்கா சதாம் கொலைக் களத்தில் தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது.
அமெரிக்க அடிவருடிக் கும்பலால் நியமிக்கப்பட்டவர்கள் திடீரென முக்ததா... முக்ததா என கூச்சல் போட்டதின் அறுவடையை அமெரிக்கா உடனடியாகப் பெற் றுக் கொண்டது.
முக்ததா என சதாமின் மரணச் சூழலில் குரல் எழுப்பப்பட்டதால் முக்ததாவின் மஹ்தி சேனைக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும் இடையே உடனடி மோதல் அல்சதர் நகரில் ஏற்பட்டு எட்டு பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயம் அடை ந்தனர். மேற்குலக நரி புதிய கலகத்திற்கு பாதை அமைத்து கொடுத்து விட்டது.
முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் சென்றவர் சதாம்
வளைகுடா பிராந்தியத்தில் அதிகப் பொறியாளர்களைக் கொண்ட ஒரே நாடாக வும், சிறப்பான சாலை வசதிகளையும் லி நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தாகவும் சதாமின் ஆட்சிக் காலத்தில் ஈராக் விளங்கியது. கல்வியறிவில் ஈராக் சிறந்து விளங்கியது. அதிலும் சிறப்பாக பெண் கல்வியில் ஈராக் முன்னேற்றப் பாதையில் விரைந்து சென்றது. கல்வியில் உயர்நிலையை அடைந்ததற்காக சதாம் ஆட்சிக் காலத்தில் ஐ.நா.வின் யுனெஸ்கோ விருது ஈராக்கிற்கு வழங்கப்பட்டது.
மரணத் தருவாயிலும் இழிவுபடுத்த முயன்றவர்கள்
சதாம் ஹுசைன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சூழலிலும் இழிமனம் படைத்த அமெரிக்கா மற்றும் அடிவருடிக் கும்பல் தமது விஷமத்தனத்தைக் கைவிடவில்லை. சதாமை கேலி செய்தும், பரிகசித்தும், தகாத வார்த்தைகளால் துன் புறுத்தியும் கொடுமை இழைத்தனர்.
மரணத்தைத் துணிச்சலுடன் பெருமிதத்துடன் எதிர்கொண்ட அந்த மனிதருக்கு எதிராக வெறிக் கூச்சலிட்டதோடு, அவர் சாகும் நேரத்திற்காக ஆவலுடன் காத்தி ருந்தனர். ஈராக்கிய தேசிய பாதுகாப்புப் படையின் ஆலோசகர் மொஃபாக் அல் ருபையி இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் குறிப்பிடும்போது காவலாளிகளில் ஒருவன் 'சதாம் நீ எங்களை சீரழித்து விட்டாய், எங்களில் ஏராள மானோரைக் கொன்றாய், நீ அழிவை சந்திக்கப் போகிறாய்' என வெறித்தனமாகக் கூச்சலிட்டார்.
நான் உங்களை ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து மீட்டேன். உங்கள் எதிரிகளையும் அழித்தேன், ஈராக்கியர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மன்னிப்பை வழங்கிக் கொள்ள வேண் டும். ஈராக்கின் தற்போதைய அரசை நம்ப வேண்டாம். அமெரிக்கர்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் தூக்கு மேடையில் நின்று சூளுரைத் தார்
No comments:
Post a Comment