இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, September 18, 2008

மாதம் ஒரு குண்டுவெடிப்பு! செயலிழந்த மத்திய உள்துறை!!

சத்தியவேந்தன்

டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியா னார்கள். அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்விடங்களுக்கு அருகில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் அவர்களுக்கு தொடர்புண்டா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். குண்டுவெடிப்பில் தொடர்பில்லை எனில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பிற்கு அடுத்த நாள் பெங்களூருவில் பாஜக செயற்குழு கூட்டம் கூடியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மாநில அரசுகள் இயற்றியிருக்கும் சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி டெல்லியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் என்பது முன் கூட்டியே தெரியும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் தான் எச்சரித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். (அகமதா பாத் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு முன்பே மோடியிடம் எச்சரித்தது என உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்ததற்கு பழிக்குப் பழியாக மோடி தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்).

மக்கள் கூடும் முக்கியமான இடங் களில் குண்டுவெடித்து அப்பாவிகள் பலியாகும் கொடும் செயலை நிகழ்த்திய இரக்கமற்ற அரக்கர்களை மன்னிக்க முடியாது. சிரித்துக் கொண்டே வந்த மனித மலர்களைப் பிய்ந்த தசைத் துண்டுகளாக, ரத்தக் கூளங்களாகப் பார்க்கும் எவருக்கும் அதனை நிகழ்த் திய மிருகங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தை விளக்குவதற்கு வார்த்தை களே இல்லை.

என்ன ஆனது என் இந்திய தேசத்திற்கு? குண்டுவெடிப்புகள் ஒருபுறம், கலவரங்களை ஏற்படுத்தி அப்பாவிகளைப் பிடித்து சித்திரவதை செய்தல் மறுபுறம் என நாடு முழுவதும் வேதனைச் செய்திகளே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கொரு முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது போக தற்போது மாதத்திற்கொரு தடவை குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. மாதம் மும்மாரி பொழிந்ததா என அந்தக் காலத்தில் மன்னர்கள் கேட்டது போக இப்போது மாதம் மும்மாரி குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என ஆள்வோர் கேட்கின்ற நிலையிலேயே தற்போதைய சூழல் அமைந்துள்ளது.

குண்டுவெடிப்புகள் எப்போது நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த அவலம் தொடங்கியது? இந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்? குண்டுவெடிப்புக்குப் பிறகு தவறாக குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் யார்? இந்த குண்டுவெடிப்புகளுக்கு யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்பதை யெல்லாம் தீவிரமாக ஆய்வு செய்தால் நிஜங்கள் நிதர்சனமாகத் தெரியவரும்.

முதல் காட்சி குண்டுகள் வெடிக்கும். இரண்டாம் காட்சியாக அத்வானி, மோடி, (தமிழ்நாட்டில் ராமகோபாலன்) போன் றோர் வெண்திரையில் வெளிச்சத்துக்கு வருவார்கள். ஒரு குற்றச்செயல் நடந் தால் குற்றவாளிகளைக் கண்டுபிடி, கைது செய் என கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கூறுகெட் டத்தனமாக கூச்சலிடுவதைக் கண்டு நாட்டு மக்கள் நகைக்கிறார்கள்.

குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் அனைத்தும் ஒரு சம்பிரதாய சடங்கு களாகவே மாறிவிட்டன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு கள் வெடிக்கின்றன. அப்பாவி இந்திய மக்கள் பலியாகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் வினோதமான முறையில் பிரச்சாரம் செய்கின்றன. உளவுத்துறை ஊகங்களை மட்டுமே புலனாய்வு அறிக்கையாக வெளியிடுகின்றன.

பெங்குளூரு, மாலேகான், ஹைதரா பாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், அஜ்மீர் என பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான வர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பாவிகளை வளைத்து படம் காட்டு வதோடு அரசுகளின் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றன. விளைவு தீவிரவாதம் தொடருகிறதே யொழிய நிற்பதாகத் தெரியவில்லை.
அரசுகளின் மெத்தனமும் இருட்டில் குருட்டுத்தனமாக சதிகாரர்களைத் தேடும் போக்கும் மக்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. சதிச்செயலைக் கண்டு பிடித்து சதிகாரர்களை கையும் களவு மாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வழியைக் காணோம்.

இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து வெள்ளை அறிக்கை தர மத்திய, மாநில அரசுகள் தயாரா?

அப்பாவிகளை வளைத்துப் பிடிப்பது. சதி குறித்து ஈமெயில் வந்தது, கொசு மெயில் வந்தது என கோக்கு மாக்குத் தனமாக அறிவித்து விட்டு அசட்டுத் தனமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது. மனித உயிர்களை தீர்வை நோக்கி நடைபோடாமல் வதந்திகளிலும் வக்கிர சிந்தனைகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கிலிருந்து மீளும் வழியைக் காணோம்.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவா ளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் ஆணை யம் சுட்டிக் காட்டிய (பெரும் புள்ளிகளும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை)

குஜராத் இனப்படுகொலை சதிகாரர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொடூரன் மோடிக்கு வழங்க வேண்டிய விசாவைக் கூட ரத்து செய்தன. ஆனால் இந்திய மண்ணில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன? மீண்டும் பொடாவை கொண்டு வரவேண்டும் என அவர்தான் இங்கு சுத்த யோக்கியர்போல் கூச்சலிடுகிறார்.

2006 ஏப்ரல் 6 ஆம் தேதி மகராஷ்ட்ர மாநிலம் நான்டெட்டில் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறை பொறியாளரின் வீட்டில் குண்டு வெடித்தது.

வெடித்த குண்டுகள் பொறியாளரின் மகன் நரேஷ் (வயது 29) மற்றும் அவனது நண்பன் பன்சே (வயது 31) என்ற இருவரின் உயிரையும் குடித்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் பிணங்களை போட்டு விட்டு வீட்டை விட்டே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினரின் சோத னையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு, வெடிக்காத தோட்டாக்கள், ஒட்டுத் தாடிகள், வெள்ளை தொப்பிகள், அவ்ரங் காபாத் பள்ளிவாசல்களின் படங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அதே மகராஷ்ட்ரா மாநிலத்தின் பார்பானி முஹம்மதியா பள்ளிவாசலில் ஏப்ரல் 9 ஆம் தேதி 2006. வெடித்த குண்டு வெடிப்பு தொடர்பாக சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெசவ் என்பவன் போஸ்லா ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவன். இவர்கள் அனைவரும் சங்பரிவார் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத் தில் நவி மும்பை மற்றும் தானேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பிடிபட்ட சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இவைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாட்டில் தொடர்ச் சியாக நடைபெறும் குண்டு வெடிப்பு களின் விசாரணைகள் இருட்டு மூலை யில் கறுப்பு பூனையைத் தேடும் முயற்சி யாகவே இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

குண்டு வெடிப்புகளை குறித்த பிரச்சனைகளில் பாஜகவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு உண்மை நிலையை அறிய ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய உள்துறை செயலிழந்து விட்ட தையே இது காட்டுகிறது

Web Counter Code