இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, October 15, 2010

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் babri masjid demolish news article abusalih

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள்


டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை திராவிடர் கழகம் 'மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம்' என்ற நூலில் வெளியிட்டுள்ளது. அதை வாசகர்களுக்காக மீண்டும் இங்கே வழங்குகிறோம்.

டிசம்பர் 5, 1992

காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப் போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

பகல் 12.30 மணி: பிரச்சினைக்குரிய (பாபர் மஸ்ஜித் வளாகம்) பகுதிக்கு அருகே ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ''ஒவ்வொரு பிரதி நிதிகள் குழுவிலிருந்தும் இரண்டு பேர் மட்டும் வாருங்கள். கடந்த 2 மாதங்களாக உங்களுக்குத் தரப்பட்ட ஒத்திகைப் பயிற்சியை இப்போது செய்து காட்ட வேண்டும்; குழுவின் தலைவர்களுக்குப் லி பயிற்சி செய்யும் தொண்டர்கள் யார் என்பதும், என்ன பயிற்சி தரப்பட்டது என்பதும் தெரியும்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.

பகல் 2 மணி: விசுவ இந்து பரிஷத் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம்சங்கர் அக்னிஹோத்ரி, 'கரசேவை'யின் முதல்கட்டமாக ராமன் கோயிலுக் காக கட்டப்பட்ட மேடையை சுத்தம் செய்து, சரயுநதி நீர் தெளிக்கப்படும் என்றார்.

பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை: அருகே இருந்த ராம்கதாகுஞ்சி என்ற மலைப்பகுதியில் 500 கரசேவைத் தொண்டர்கள் பயிற்சி ஒத்திகை எடுத்தனர். மசூதியில் எப்படி ஏறுவது, பிறகு கயிறு மூலம் மசூதிக் கோபுரத்தை இடித்து எப்படிக் கீழே தள்ளுவது என்பதற்கான ஒத்திகையும் நடந்தது.

மாலை 5 மணி: விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் அசோக் சிங்கால், கரசேவகர்களின் முகாம்களைச் சுற்றிப் பார்த்து, சில பிரமுகர்களுடன் பேசினார். தேவைப்பட்டால், ஒருவேளை, மசூதியை இடிக்காமல் சுத்தப்படுத்தும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார். கரசேவகர்கள், ஆத்திரமடைந்தனர்.

இரவு 7 மணி: லக்னோவிலிருந்த எல்.கே.அத்வானிக்கு அன்று இரவே அயோத்திக்கு வருமாறு 2வது அழைப்பு விடுக்கப்பட்டது. டிசம்பர் 6லிம் தேதி பகல் 1 மணிக்கு அயோத்திக்கு வருவதாக அத்வானி முன்கூட்டியே, திட்டமிட்டிருந்தார்.

இரவு 11 மணி: அத்வானி அயோத்திக்கு வந்து, தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 6, 1992

காலை 8 மணி: சிவசேனை நாடாளுமன்றத் தலைவர் மோர்ஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் எம்.பி., அத்வானி ஆகிய மூவரும் லி கட்டியார் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

காலை 8.15 மணி: 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றி எல்லையை நிர்ணயிக்க இரும்புக் குழாய்கள் நடப்பட்டிருந்தன. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அந்த இரும்புக் குழாய்களைப் பிடுங்கி, மசூதிக்கு அருகே கொண்டு போய் நாட்டினார்கள். இதன்மூலம் பிரச்சினைக் குரிய இடம் சுற்றி வளைக்கப்பட்டு, எல்லை நிர்ணயிக்கப்பட்டது.

காலை 9 மணி: இதன்மூலம் வெளியே 2.77 ஏக்கர் நிலத்தின் பெரும்பகுதி திறந்து விடப்பட்டதால் லி மேலும் ஏராளமான ஆர்எஸ்எஸ் காரர்கள், அங்கே வந்து குழுமினார்கள். கூடவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வந்தார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி, வட்டமிட்டு நின்றார்கள்.

காலை 10.15 மணி: கூட்டத்தினர் வளையத்தை உடைத்துக் கொண்டு மசூதிக்குள் நுழைவதற்கு, 20 நிமிடமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். பலர், வளையத்தை உடைத்து, மசூதிக்குள் நுழைய முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தத் தலைவர்கள் பார்த்தனர்.

காலை 10.30 முதல் 11.30 வரை: கரசேவகர்கள், மசூதியை சுற்றிப் போடப் பட்டிருந்த வளையத்தைத் தகர்த்து விட்டனர்.

பகல் 11.35 மணி: 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவைக்கான பூஜைகள் தொடங்கின.

பகல் 11.35 முதல் 11.50 வரை: 2.77 ஏக்கர் நிலத்துக்கு வெளியே திரண்டிருந்த கரசேவகர்கள், ரிசர்வ் போலீஸ் படை மீது கல்வீசித் தாக்கி, அப்பகுதிக்குள் நுழைந்தனர். மசூதிக்குள் நுழையவும் ஒரு கூட்டம் முயற்சித்தது.

பகல் 11.50 மணி: மசூதியின் லி வலதுபுற கோபுரத்தின் மீது ஒரு ஆள் ஏறிவிட்டான். கூடியிருந்த கூட்டம் 'ஜெய்ராம்' என்று வெறிக் கூச்சலிட்டது.

பகல் 11.51 மணி: அங்கே இருந்த 100 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது கரசேவைக் கும்பல், மோசமாக கற்களை எடுத்து வீசி, அவர்களை ஓடச் செய்தது. மேலும் ஒரு கும்பல் மசூதியின் மீது ஏறியது.

பகல் 11.55 மணி: ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து, சுற்றிப் போடப்பட்டி ருந்த பாதுகாப்பு வேலியையே மசூதி சுவற்றில் ஏணியாக வைத்து கோபுரத்துக்கு மேல் ஏறினார்கள். எல்லா பக்கங்களிலிருந்தும் மசூதியை உடைத்தார்கள்.

பகல் 1.30 மணி: பைசாபாத்திலிருந்து அதிரடிப்படையின் நான்கு பிரிவு வழியில் இருந்த தடைகளை எல்லாம் அகற்றிக் கொண்டு அயோத்திக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகேத் கல்லூரிக்கு அருகே வந்து கொண்டிருந்தது.

பகல் 2 மணி: பைசாபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திரநாத் ஸ்ரீவத்சவா, நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது என்றும், மத்திய போலீஸ் வரத் தேவை யில்லை என்றும் ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்தார். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உடனே பைசாபாத் திரும்பி விடுங்கள் என்று கூறினார்.

பகல் 2.55 மணி: இடிப்பு வேலை மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டிருந்தது. இடதுபக்க கோபுரம் அப்போது காணப்படவில்லை!

பகல் 3.05 மணி: வலதுபக்க கோபுரமும் வீழ்ந்தது.

பகல் 3.15 மணி: ஒலிபெருக்கியில் அத்வானி அயோத்தியாவுக்குள் ராணுவம் நுழையாமல், நுழைவாயில் களில் தடைகளை ஏற்படுத்துமாறும், இல்லாவிட்டால் ராணுவத்தினர் எல்லா வற்றையும் தடுத்து விடுவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாலை 4.50 மணி: மசூதியின் நடுக்கோபுரமும் வீழ்ந்தது.

மாலை 6.10 மணி: மசூதி இருந்த பகுதியில் இடிபாடுகள் மட்டுமே காணப்பட்டது.

மாலை 6.35 மணி: ஏற்கெனவே வெளியே இருந்த ராமன் சிலையை மீண்டும் கொண்டு வந்து, அந்த சிலை இருந்த இடத்திலேயே நிறுவினர்.

இரவு 7 மணி முதல் 11 மணி வரை: இடிபாடுகள் அகற்றப்பட்டன. தண்ணீர் டாங்குகள் வந்தன. அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

இரவு 1 மணி: வேதமந்திரங்களுடன் ராமன் சிலை 'பிரதிஷ்டை செய்யப் பட்டது. சுற்றிலும் காவித்துணியை கட்டினார்கள். அசோக் சிங்கால், வினய் கட்டியார், ஆச்சாரியா தர்மேந்திரா, ஆச்சாரியா ராம்தேவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்கள்.

டிசம்பர் 7, 1992

காலையிலிருந்து மாலை வரை ராமன் சிலையைச் சுற்றி, சுவரெழுப்பும் வேலைகள் நடந்தன. அதேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100 முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். 150 முஸ்லிம்கள், 'ராம ஜென்ம பூமி' காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவோ இல்லாமல், ஒருநாள் முழுதும் அங்கேயே பட்டினி யாகக் கிடந்தார்கள்.

மாலை 5 மணி: ராமன் சிலையைச் சுற்றி 5 அடி உயர சுவர் கட்டி முடிக்கப் பட்டது. அசோக் சிங்கால், ஒலிபெருக்கி மூலம் ''நாளை விடியற்காலையில் ராணுவம் வரக்கூடும். யாரும் ராணு வத்தை எதிர்க்க வேண்டாம். அமைதி யாக திரும்பிச் செல்லுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாலை: கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.

நள்ளிரவு: கரசேவகர்களை அப்புறப் படுத்துமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு வந்தது.

டிசம்பர் 8, 1992

காலை 3.30 மணி: ரிசர்வ் போலீஸ் படையின் நான்கு பிரிவு, அயோத்திக்குள் பிரச்சினைக்குரிய பகுதியில் நுழைந்தது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த கரசேவகர்கள் அவர்கள் மீது கல் வீசினார்கள். ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது; சிலருக்கு காயம்; பெரும்பான்மை கரசேவகர்கள், எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியேறினார்கள்.

காலை 4.15 மணி: ராணுவம், அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கரசேவகர்களைத் திருப்பி அனுப்ப அயோத்தியிலிருந்து விசேஷ ரயில்கள் விடப்பட்டன. ஆம்! குற்றவாளிகள் தப்ப அரசே உதவிய

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமையும், சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும்... நீதியரசர் ராஜிந்தர் சச்சார் நம்பிக்கை

பாப்ரி பள்ளிவாசல் தொடர்பான செய்திகள் அபுஸாலிஹ்
ராஜிந்திர் சச்சார் babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளி வாசல் கட்டும் உரிமையும் சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும் என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித் திருக்கிறார். மேலும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் சங்பரிவார் உரிமை கோரல்கள் எடு படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துத்துவ சக்திகள் குறிப்பிடும் கோயில் பள்ளிவாசலுக்கு அடியில்தான் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்திய மற்ற ஒன்று என்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் இது நம்பிக்கைஅடிப்படையிலான விவகாரமாக இருக்கலாம் அல்லது ஏமாற்றும் தந்திரமாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்..

எது எப்படியிருப்பினும், சங்பரிவார் சக்திகள் பள்ளிவா சலின் சொந்த நிலத்தை சட்டப் பூர்வமான முறையில் உரிமை கொண்டாட முடியாது.. என்று குறிப்பிட்ட சச்சார், பள்ளிவாசல் கோயில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தபின் முஸ்லிம் களுக்கு அந்த நிலம் மீண்டும் வழங்கப்பட்டு அங்கு மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமை, சுதந்திரம் முஸ்லிம்களுக்கு கிட்டும் என தெரிவித்தார்.

ஒருவேளை பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில்தான் இருந்தது என்ற தீர்ப்புகூட வரலாம். ஆனாலும் கூட சங்பரிவார சக்திகளின் உரிமைக் கோரல்கள் ஏற்கப்படாது, எடுபடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1992&ஆம் ஆண்டில் சங் பரிவார பாசிசசக்திகள் தரைமட் டமாக்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 ஆண்டுகளாக அங்கு நிலைகொண்டு இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார்.

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள் அகில இந்திய செய்திகள் . அபுஸாலிஹ்

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்


ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 61 ட்ரக்குகளும் மாயமாயின. அந்த டிரக்குகளில் 400 டன் வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை மத்திய பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த போது மாயமாகிவிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.


காணாமல் போன வெடி மருந்து லாரிகளில் 4 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனைத் தொடர்ந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.


வெடிப் பொருட்களின் மொத்த மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் இந்த வெடிப் பொருட் கள் காணாமல் போயி ருக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.


ராஜஸ்தான் மாநிலத்தின் டோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து (ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்) ஸிணிசிலி மற்றும் கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


பிடிபட்ட லாரியின் டிரைவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படு கிறது. இது ஜெய்கிஷன் மற்றும் தேவேந்திர தாகூர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். கடந்த ஜூன் மாதமே காணாமல் போன வெடிப்பொருட்கள் பற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள் எதுவும் பெரிய அளவில் கண்டுகொண் டதாகவே தெரியவில்லை.


எங்கள் தரப்பில் எந்தத் தவறும் நிகழவில்லை என ராஜஸ்தான் அரசு வெடிப்பொருட்கள் தொழிற்சாலையின் அதிகாரி ஓய்.சி உபாத்யாயா தெரிவித்தார். வெடிப்பொருட்கள் விற்கப்பட் டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக காவல் துறை ஐ.ஜி அவ்னாஷ் மங்கலம் தெரிவித்தார்.


முதல்கட்ட புலனாய்வில் இந்த வெடிபொருட்கள் மகராஷ் ட்ரா. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் களிடம் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.


2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சூரத் நகரில் 18 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக் கப்பட்டன. பின்னர் அவை செயலி ழக்கப்பட்டன.


அந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநில வெடி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பது குறிப்பி டத்தக்கது. தற்போது அதே நிறுவனத்திலுள்ள வெடிமருந்துகள் காணாமல் போனதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.


சூரத் நகரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய த்தின் மீது பழிபோடப்பட்டது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்ட முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடி த்து குஜராத் மாநில காவல் துறையினர் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு குஜராத்திலும் ஜெய்ப் பூரிலும் வெடிக்காத குண்டு களை புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.


ஆஜம்கார் மாவட்ட இளை ஞர்கள் மீது குற்றம் சாட்டிய வர்கள், இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனையான இயக்கத்தை கட்டமைத்தவர்கள். வெடிமருந்துக் களை விநியோகம் செய்தவர்கள் குறித்து எவ்வித கடுமையும் காட் டாதது ஏன்? உண்மையிலேயே படுபயங்கரவாதிகள் யார்? என்ற கேள்வி 120 கோடி இந்தியர்களின் உள்ளங்களிலும் எழுகிறது

Web Counter Code