இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, October 15, 2010

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமையும், சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும்... நீதியரசர் ராஜிந்தர் சச்சார் நம்பிக்கை

பாப்ரி பள்ளிவாசல் தொடர்பான செய்திகள் அபுஸாலிஹ்
ராஜிந்திர் சச்சார் babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளி வாசல் கட்டும் உரிமையும் சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும் என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித் திருக்கிறார். மேலும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் சங்பரிவார் உரிமை கோரல்கள் எடு படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துத்துவ சக்திகள் குறிப்பிடும் கோயில் பள்ளிவாசலுக்கு அடியில்தான் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்திய மற்ற ஒன்று என்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் இது நம்பிக்கைஅடிப்படையிலான விவகாரமாக இருக்கலாம் அல்லது ஏமாற்றும் தந்திரமாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்..

எது எப்படியிருப்பினும், சங்பரிவார் சக்திகள் பள்ளிவா சலின் சொந்த நிலத்தை சட்டப் பூர்வமான முறையில் உரிமை கொண்டாட முடியாது.. என்று குறிப்பிட்ட சச்சார், பள்ளிவாசல் கோயில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தபின் முஸ்லிம் களுக்கு அந்த நிலம் மீண்டும் வழங்கப்பட்டு அங்கு மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமை, சுதந்திரம் முஸ்லிம்களுக்கு கிட்டும் என தெரிவித்தார்.

ஒருவேளை பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில்தான் இருந்தது என்ற தீர்ப்புகூட வரலாம். ஆனாலும் கூட சங்பரிவார சக்திகளின் உரிமைக் கோரல்கள் ஏற்கப்படாது, எடுபடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1992&ஆம் ஆண்டில் சங் பரிவார பாசிசசக்திகள் தரைமட் டமாக்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 ஆண்டுகளாக அங்கு நிலைகொண்டு இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Web Counter Code