இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, March 4, 2011

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!


எகிப்தின் மக்கள் புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத் தின் பிடியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் அடக்கப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும், என இஹ்வான்களை பெயர் குறிப் பிடாமல்கூறியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான்நிகழ்ந்தது என ஜெர்மனி அதிபர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தங்களின் நெருங்கிய நண்பன் ஹோஸ்னி முபாரக் மடக்கப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் கெஞ்சுகிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியை விட்டு விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக ஆதரவினையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி இரண்டு வாரம் கழிந்தபிறகும் வாய்திறக் காமல் மௌனம் காத்த துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப்ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டு மானால் மக்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென நாடாளு மன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்து அமைதியான வழியில் மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள் ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில்ஜனநாயக உரிமைக்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் என்றும் இருப்போம்என்றும் பாரம்பரிய இஸ்லாமிய மாண்புகள் கொண்ட. மகத்தான நாடான எகிப்தின் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பகிரங்கமாகதெரிவிப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமியபாரம்பரிய மத்திய கிழக்கு உருவாக உதவும் என தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் உலகை அதிரவைத்துள்ள புரட்சிப் போராட்டத்தில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக இரான்வன்மையாக குற்றம் சாட்டியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில்எழுச்சி மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சிகள் தூக்கி எறியப்படவேண்டும் மேற்கத்திய சக்திகளின்அடி வருடி அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தற்போதைய மக்கள் புரட்சிகள் நிரூபித்துள்ளதாக இரான் கூறியிருக்கிறது.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல.நாட்டிற்கு நன்மைகளை நாடியவர்கள் ஹோஸ்னி முபாரக்கை பலமுறை இடித்துரைத்து எச்சரித்தும், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கஹோஸ்னி பாரக் மறுத்ததினால். இப்போது அவரது ஆட்டத்திற்கான இறுதி தீர்ப்பு தீட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சிந்தனாவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில், எகிப்தில் மேற்குலகின் ஆசி பெற்ற பொம்மை ஆட்சியை கொண்டு வர முயற்சி நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், முன் யோசனையில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் இஹ்வான்கள் முன் யோசனையுடன் மிக சாதுர்யத்துடன் காய்களை நகர்த்திவருகிறார்கள்

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பது குறித்த அச்சத்தின் உச்சத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.

காஸாவிலிருந்து எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்வேறு வேறு தோற்றங்களில் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரையும் மிக தீவிரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற எரிச்சலே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

எகிப்திய பாதுகாப்பு படையில் இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவை தெரிவித்த பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதா ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராளிகள் கருதுகின்றனர்.

சர்வாதிகாரிக்கு ஆதரவாக களம் இறங்கும் அமெரிக்க போர் விமானங் கள் எகிப்தின் சினாய் தீவில் சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உரிமை போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.

எகிப்தில் குவியும் இஸ்ரேல் ஆயுதங்கள் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் தடைச் செய்யப் பட்டுள்ளஅதிநவீன நாசகார ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. மக்கள் போராட்டத்தை பூண்டோடு அழிக்க முனையும் முக்கிய சதியாக இது கருதப்படுகிறது.

இருப்பினும் மக்கள் புரட்சிகள் தோற்றதாக சரித்திரம் இல்லை .மத்திய கிழக்கு நாளை உரிமை மீட்பு போராட்டத்தின் முன்னோடி பிராந்தியமாக மாறப்போகிறது. ஆம் வரலாறு காத்திருக்கிறது.


-ஹபிபா பாலன்

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

E-mail Print PDF

லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லிபியாவில் வாழும் இந்திய மக்கள் 18 ஆயிரம் பேரையும் பாகுபாடு காட்டாமல் காக்க வேண்டிய இந்திய அரசு பொறியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் பணியில் இருப்பவர்களை மட்டும் விமானங்களில் இந்தியாவிற்கு வரவழைப்பதாகவும் இதர கடைநிலை தொழிலாளர்களை கப்பல்கள் மூலம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் தங்கள் உறவினர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

லிபியாவில் இந்தியர்கள் பலர் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் அசோக் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பேராசிரியர்கள், மருத் துவர்கள், பொறியாளர்கள் உள் ளிட்டவர்கள் மட்டுமே விமானம் மூலம் இந்தியா வரவழைக்கப்படுவதாகவும், கடைநிலை மற்றும் நடுத்தர தொழி லாளர்கள் கப்பல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா திரும்பிய மக்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை லிபியாவில் வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சமின்றி தொழிலாளர்களையும் விமானம் மூலம் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் குமுற லுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக் கப்பட்ட கிராம மக்கள் மத்திய அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே லிபியா வில் போராட்டங்களில் பலியாகும் மக்களின் பிணங்கள் குப்பையில் வீசப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லிபியாவில் வெடித்துள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தினால் மிகக் கடுமை யான தாக்குதல்கள் நடந்து வருகிறது. வீதி களெங்கும் உடல்களாகக் கிடக்கின்றன. அவை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு குப்பை களில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவலை மீண்டுவந்த இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க முதல்கட்டமாக இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. இந்த விமானங்கள் லிபியா சென்று 528 இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.
முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் ஷ்வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் இருந்தனர்.

விமான நிலையத்தில் முகம்மது ஸாலிஹ் என்ற பொறியாளர் கூறுகையில், லிபியா வில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக் கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீதியில் உறைந் துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

மக்கள் கிளர்ச்சி பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு திரும்பியுள்ள பலரும் வலி யுறுத்தியுள்ளனர்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வர வேற்றனர்.

முதலில் வந்த விமானங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்டோர் இருந்தனர்.

-ஹபீபா பாலன்

Friday, October 15, 2010

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் babri masjid demolish news article abusalih

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள்


டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை திராவிடர் கழகம் 'மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம்' என்ற நூலில் வெளியிட்டுள்ளது. அதை வாசகர்களுக்காக மீண்டும் இங்கே வழங்குகிறோம்.

டிசம்பர் 5, 1992

காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப் போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

பகல் 12.30 மணி: பிரச்சினைக்குரிய (பாபர் மஸ்ஜித் வளாகம்) பகுதிக்கு அருகே ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ''ஒவ்வொரு பிரதி நிதிகள் குழுவிலிருந்தும் இரண்டு பேர் மட்டும் வாருங்கள். கடந்த 2 மாதங்களாக உங்களுக்குத் தரப்பட்ட ஒத்திகைப் பயிற்சியை இப்போது செய்து காட்ட வேண்டும்; குழுவின் தலைவர்களுக்குப் லி பயிற்சி செய்யும் தொண்டர்கள் யார் என்பதும், என்ன பயிற்சி தரப்பட்டது என்பதும் தெரியும்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.

பகல் 2 மணி: விசுவ இந்து பரிஷத் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம்சங்கர் அக்னிஹோத்ரி, 'கரசேவை'யின் முதல்கட்டமாக ராமன் கோயிலுக் காக கட்டப்பட்ட மேடையை சுத்தம் செய்து, சரயுநதி நீர் தெளிக்கப்படும் என்றார்.

பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை: அருகே இருந்த ராம்கதாகுஞ்சி என்ற மலைப்பகுதியில் 500 கரசேவைத் தொண்டர்கள் பயிற்சி ஒத்திகை எடுத்தனர். மசூதியில் எப்படி ஏறுவது, பிறகு கயிறு மூலம் மசூதிக் கோபுரத்தை இடித்து எப்படிக் கீழே தள்ளுவது என்பதற்கான ஒத்திகையும் நடந்தது.

மாலை 5 மணி: விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் அசோக் சிங்கால், கரசேவகர்களின் முகாம்களைச் சுற்றிப் பார்த்து, சில பிரமுகர்களுடன் பேசினார். தேவைப்பட்டால், ஒருவேளை, மசூதியை இடிக்காமல் சுத்தப்படுத்தும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார். கரசேவகர்கள், ஆத்திரமடைந்தனர்.

இரவு 7 மணி: லக்னோவிலிருந்த எல்.கே.அத்வானிக்கு அன்று இரவே அயோத்திக்கு வருமாறு 2வது அழைப்பு விடுக்கப்பட்டது. டிசம்பர் 6லிம் தேதி பகல் 1 மணிக்கு அயோத்திக்கு வருவதாக அத்வானி முன்கூட்டியே, திட்டமிட்டிருந்தார்.

இரவு 11 மணி: அத்வானி அயோத்திக்கு வந்து, தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 6, 1992

காலை 8 மணி: சிவசேனை நாடாளுமன்றத் தலைவர் மோர்ஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் எம்.பி., அத்வானி ஆகிய மூவரும் லி கட்டியார் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

காலை 8.15 மணி: 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றி எல்லையை நிர்ணயிக்க இரும்புக் குழாய்கள் நடப்பட்டிருந்தன. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அந்த இரும்புக் குழாய்களைப் பிடுங்கி, மசூதிக்கு அருகே கொண்டு போய் நாட்டினார்கள். இதன்மூலம் பிரச்சினைக் குரிய இடம் சுற்றி வளைக்கப்பட்டு, எல்லை நிர்ணயிக்கப்பட்டது.

காலை 9 மணி: இதன்மூலம் வெளியே 2.77 ஏக்கர் நிலத்தின் பெரும்பகுதி திறந்து விடப்பட்டதால் லி மேலும் ஏராளமான ஆர்எஸ்எஸ் காரர்கள், அங்கே வந்து குழுமினார்கள். கூடவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வந்தார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி, வட்டமிட்டு நின்றார்கள்.

காலை 10.15 மணி: கூட்டத்தினர் வளையத்தை உடைத்துக் கொண்டு மசூதிக்குள் நுழைவதற்கு, 20 நிமிடமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். பலர், வளையத்தை உடைத்து, மசூதிக்குள் நுழைய முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தத் தலைவர்கள் பார்த்தனர்.

காலை 10.30 முதல் 11.30 வரை: கரசேவகர்கள், மசூதியை சுற்றிப் போடப் பட்டிருந்த வளையத்தைத் தகர்த்து விட்டனர்.

பகல் 11.35 மணி: 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவைக்கான பூஜைகள் தொடங்கின.

பகல் 11.35 முதல் 11.50 வரை: 2.77 ஏக்கர் நிலத்துக்கு வெளியே திரண்டிருந்த கரசேவகர்கள், ரிசர்வ் போலீஸ் படை மீது கல்வீசித் தாக்கி, அப்பகுதிக்குள் நுழைந்தனர். மசூதிக்குள் நுழையவும் ஒரு கூட்டம் முயற்சித்தது.

பகல் 11.50 மணி: மசூதியின் லி வலதுபுற கோபுரத்தின் மீது ஒரு ஆள் ஏறிவிட்டான். கூடியிருந்த கூட்டம் 'ஜெய்ராம்' என்று வெறிக் கூச்சலிட்டது.

பகல் 11.51 மணி: அங்கே இருந்த 100 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது கரசேவைக் கும்பல், மோசமாக கற்களை எடுத்து வீசி, அவர்களை ஓடச் செய்தது. மேலும் ஒரு கும்பல் மசூதியின் மீது ஏறியது.

பகல் 11.55 மணி: ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து, சுற்றிப் போடப்பட்டி ருந்த பாதுகாப்பு வேலியையே மசூதி சுவற்றில் ஏணியாக வைத்து கோபுரத்துக்கு மேல் ஏறினார்கள். எல்லா பக்கங்களிலிருந்தும் மசூதியை உடைத்தார்கள்.

பகல் 1.30 மணி: பைசாபாத்திலிருந்து அதிரடிப்படையின் நான்கு பிரிவு வழியில் இருந்த தடைகளை எல்லாம் அகற்றிக் கொண்டு அயோத்திக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகேத் கல்லூரிக்கு அருகே வந்து கொண்டிருந்தது.

பகல் 2 மணி: பைசாபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திரநாத் ஸ்ரீவத்சவா, நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது என்றும், மத்திய போலீஸ் வரத் தேவை யில்லை என்றும் ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்தார். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உடனே பைசாபாத் திரும்பி விடுங்கள் என்று கூறினார்.

பகல் 2.55 மணி: இடிப்பு வேலை மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டிருந்தது. இடதுபக்க கோபுரம் அப்போது காணப்படவில்லை!

பகல் 3.05 மணி: வலதுபக்க கோபுரமும் வீழ்ந்தது.

பகல் 3.15 மணி: ஒலிபெருக்கியில் அத்வானி அயோத்தியாவுக்குள் ராணுவம் நுழையாமல், நுழைவாயில் களில் தடைகளை ஏற்படுத்துமாறும், இல்லாவிட்டால் ராணுவத்தினர் எல்லா வற்றையும் தடுத்து விடுவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாலை 4.50 மணி: மசூதியின் நடுக்கோபுரமும் வீழ்ந்தது.

மாலை 6.10 மணி: மசூதி இருந்த பகுதியில் இடிபாடுகள் மட்டுமே காணப்பட்டது.

மாலை 6.35 மணி: ஏற்கெனவே வெளியே இருந்த ராமன் சிலையை மீண்டும் கொண்டு வந்து, அந்த சிலை இருந்த இடத்திலேயே நிறுவினர்.

இரவு 7 மணி முதல் 11 மணி வரை: இடிபாடுகள் அகற்றப்பட்டன. தண்ணீர் டாங்குகள் வந்தன. அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

இரவு 1 மணி: வேதமந்திரங்களுடன் ராமன் சிலை 'பிரதிஷ்டை செய்யப் பட்டது. சுற்றிலும் காவித்துணியை கட்டினார்கள். அசோக் சிங்கால், வினய் கட்டியார், ஆச்சாரியா தர்மேந்திரா, ஆச்சாரியா ராம்தேவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்கள்.

டிசம்பர் 7, 1992

காலையிலிருந்து மாலை வரை ராமன் சிலையைச் சுற்றி, சுவரெழுப்பும் வேலைகள் நடந்தன. அதேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100 முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். 150 முஸ்லிம்கள், 'ராம ஜென்ம பூமி' காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவோ இல்லாமல், ஒருநாள் முழுதும் அங்கேயே பட்டினி யாகக் கிடந்தார்கள்.

மாலை 5 மணி: ராமன் சிலையைச் சுற்றி 5 அடி உயர சுவர் கட்டி முடிக்கப் பட்டது. அசோக் சிங்கால், ஒலிபெருக்கி மூலம் ''நாளை விடியற்காலையில் ராணுவம் வரக்கூடும். யாரும் ராணு வத்தை எதிர்க்க வேண்டாம். அமைதி யாக திரும்பிச் செல்லுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாலை: கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.

நள்ளிரவு: கரசேவகர்களை அப்புறப் படுத்துமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு வந்தது.

டிசம்பர் 8, 1992

காலை 3.30 மணி: ரிசர்வ் போலீஸ் படையின் நான்கு பிரிவு, அயோத்திக்குள் பிரச்சினைக்குரிய பகுதியில் நுழைந்தது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த கரசேவகர்கள் அவர்கள் மீது கல் வீசினார்கள். ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது; சிலருக்கு காயம்; பெரும்பான்மை கரசேவகர்கள், எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியேறினார்கள்.

காலை 4.15 மணி: ராணுவம், அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கரசேவகர்களைத் திருப்பி அனுப்ப அயோத்தியிலிருந்து விசேஷ ரயில்கள் விடப்பட்டன. ஆம்! குற்றவாளிகள் தப்ப அரசே உதவிய

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமையும், சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும்... நீதியரசர் ராஜிந்தர் சச்சார் நம்பிக்கை

பாப்ரி பள்ளிவாசல் தொடர்பான செய்திகள் அபுஸாலிஹ்
ராஜிந்திர் சச்சார் babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளி வாசல் கட்டும் உரிமையும் சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும் என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித் திருக்கிறார். மேலும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் சங்பரிவார் உரிமை கோரல்கள் எடு படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துத்துவ சக்திகள் குறிப்பிடும் கோயில் பள்ளிவாசலுக்கு அடியில்தான் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்திய மற்ற ஒன்று என்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் இது நம்பிக்கைஅடிப்படையிலான விவகாரமாக இருக்கலாம் அல்லது ஏமாற்றும் தந்திரமாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்..

எது எப்படியிருப்பினும், சங்பரிவார் சக்திகள் பள்ளிவா சலின் சொந்த நிலத்தை சட்டப் பூர்வமான முறையில் உரிமை கொண்டாட முடியாது.. என்று குறிப்பிட்ட சச்சார், பள்ளிவாசல் கோயில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தபின் முஸ்லிம் களுக்கு அந்த நிலம் மீண்டும் வழங்கப்பட்டு அங்கு மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமை, சுதந்திரம் முஸ்லிம்களுக்கு கிட்டும் என தெரிவித்தார்.

ஒருவேளை பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில்தான் இருந்தது என்ற தீர்ப்புகூட வரலாம். ஆனாலும் கூட சங்பரிவார சக்திகளின் உரிமைக் கோரல்கள் ஏற்கப்படாது, எடுபடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1992&ஆம் ஆண்டில் சங் பரிவார பாசிசசக்திகள் தரைமட் டமாக்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 ஆண்டுகளாக அங்கு நிலைகொண்டு இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார்.

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள் அகில இந்திய செய்திகள் . அபுஸாலிஹ்

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்


ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 61 ட்ரக்குகளும் மாயமாயின. அந்த டிரக்குகளில் 400 டன் வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை மத்திய பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த போது மாயமாகிவிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.


காணாமல் போன வெடி மருந்து லாரிகளில் 4 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனைத் தொடர்ந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.


வெடிப் பொருட்களின் மொத்த மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் இந்த வெடிப் பொருட் கள் காணாமல் போயி ருக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.


ராஜஸ்தான் மாநிலத்தின் டோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து (ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்) ஸிணிசிலி மற்றும் கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


பிடிபட்ட லாரியின் டிரைவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படு கிறது. இது ஜெய்கிஷன் மற்றும் தேவேந்திர தாகூர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். கடந்த ஜூன் மாதமே காணாமல் போன வெடிப்பொருட்கள் பற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள் எதுவும் பெரிய அளவில் கண்டுகொண் டதாகவே தெரியவில்லை.


எங்கள் தரப்பில் எந்தத் தவறும் நிகழவில்லை என ராஜஸ்தான் அரசு வெடிப்பொருட்கள் தொழிற்சாலையின் அதிகாரி ஓய்.சி உபாத்யாயா தெரிவித்தார். வெடிப்பொருட்கள் விற்கப்பட் டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக காவல் துறை ஐ.ஜி அவ்னாஷ் மங்கலம் தெரிவித்தார்.


முதல்கட்ட புலனாய்வில் இந்த வெடிபொருட்கள் மகராஷ் ட்ரா. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் களிடம் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.


2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சூரத் நகரில் 18 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக் கப்பட்டன. பின்னர் அவை செயலி ழக்கப்பட்டன.


அந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநில வெடி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பது குறிப்பி டத்தக்கது. தற்போது அதே நிறுவனத்திலுள்ள வெடிமருந்துகள் காணாமல் போனதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.


சூரத் நகரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய த்தின் மீது பழிபோடப்பட்டது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்ட முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடி த்து குஜராத் மாநில காவல் துறையினர் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு குஜராத்திலும் ஜெய்ப் பூரிலும் வெடிக்காத குண்டு களை புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.


ஆஜம்கார் மாவட்ட இளை ஞர்கள் மீது குற்றம் சாட்டிய வர்கள், இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனையான இயக்கத்தை கட்டமைத்தவர்கள். வெடிமருந்துக் களை விநியோகம் செய்தவர்கள் குறித்து எவ்வித கடுமையும் காட் டாதது ஏன்? உண்மையிலேயே படுபயங்கரவாதிகள் யார்? என்ற கேள்வி 120 கோடி இந்தியர்களின் உள்ளங்களிலும் எழுகிறது

Friday, August 20, 2010

மதானி கைது வெளிவராத தகவல்கள்

மதானி கைது வெளிவராத தகவல்கள்

ஹபிபா பாலன்


தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர் என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி 31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும் கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து நின்றனர்.

மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந் துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.

இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத் திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.

என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து குற்றமற்றவனாக வருவேன் கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர் மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம் வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.

என்ன கொடுமை? அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.

விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக் கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத் தயாராகிறது.

மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.

எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.

மதானியின் பெயரைக் குறிப்பிடு என உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப் பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மதானி மீதான குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர் உஸ்மான் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப் பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத் தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற் காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.

மதானியை கைது செய்வதை தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும் முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்.

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

ஹபிபா பாலன்


மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால் எப்போதுமே வேப்பங்காய்தான்.

கோவை குண்டு வெடிப்பில் செய்யாத குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.

ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக் கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக் காக போராட ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக வாய்த்தது என கூறுகிறார்கள்.

அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின் கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை கேட்ககொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன் அன்வரா சேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 1987&ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வரா சேரி புகழ்பெறத் தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனி யான கூட்டம் ஒன்று உருவா கியது. 1990ம் ஆண்டு இஸ்லா மிய சேவா சங்கம் என்ற அமைப் பினை தொடங்கினார்.

பாசிஸ ஆர்.எஸ்.எஸ்&க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின் ஐ.எஸ்.எஸ்&யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை. 1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம் பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்கு களை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில் சேகரித்து வந்ததால் முஸ்லிம்& தலித்&பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.

1998&ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படை த்தது. கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல் நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

மதானியை விடுவிக்க தொடக்க முதலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத் தது. சமூக நல அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர் வினை ஏற்படுத்தியது.

மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மா னத்தை நிறைவேற்றியது.

கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானி யை சந்தித்தனர்.

மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு நிலைக்கு திரும்பியது.

ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி குற்றமற் றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன் மதானி விடுதலை யானார்.

விடுதலையான மதானி பெரும் மக்கள் திரளுக்கிடையே வரவேற்கப் பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர். வரவேற்பு விழாக் கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.

மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேக மான பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் & தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல் பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாக களம் இறங்கினார் மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு நாடாளுமன் றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்த லில் போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&மார்க்சிஸ்ட்டுகள் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தற்போது மதானி மீது பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு செய்தார். பெங்களூரு நீதிமன் றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.

மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும் அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட் டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள் ளிகள் மீது பாயாதது ஏன் என்ற கேள்வி இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.

முக்கிய குற்றவாளியா?

மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&வது நபர் எப்படி முக்கிய குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் அறிவு சூன்யங் களை என்னவென்று சொல்வது?

நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண் டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரி யுமா? கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.

மதானி பற்றி கூறவில்லை - நசீர்

மதானிக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம் கூறியதாக சொல் லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர் மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான் கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக காவல்து றையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத் தவில்லை. இதுவும் நடுநிலை யாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?

1990&ம் ஆண்டு மதானியை கொல்ல ஆர்.எஸ்.எஸ். பயங் கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால் அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

Web Counter Code