இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, July 28, 2007

குடியரசு துணைத் தலைவராகிறார் கல்வியாளர் ஹமீத் அன்சாரி
அபூசாலிஹ்

இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலை வராகும் வாய்ப்பு கல்வியாள ரும், மனித உரிமை ஆர்வல ருமான முஹம்மத் ஹமீத் அன்சாரிக்கு வாய்த்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எம்.ஹெச். அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருபவர்.
இவரது பெயரை 20.07.2007 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவி சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் தூதராக பணியாற்றி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றிய எம்.ஹெச். அன்சாரி சிறந்த கல்விமான் ஆவார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடமை யாற்றியவர். 1984 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வளைகுடா நாடுகளின் அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்த அன்சாரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மனப்பாங்கு கொண்டவர்.
முன்னணி ஆங்கில நாளேடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பு கொள்கை களை சரமாரியாக விளாசித் தள்ளியவர்.
சிறந்த நூல்களை படைத்த அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது மனித உரிமைகளை பேணுவதில் பேரார்வம் கொண்டவராக விளங்கினார்.
குஜராத் கோர கலவரத்தில் குதறப் பட்ட மக்களின் பால் அன்பு காட்டிய அன்சாரி 1984ல் நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினார்.
கல்வியாளர், மனித உரிமை ஆர்வலர் என பல்வேறு சிறப்புகளை உடைய அன்சாரியை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவித் ததின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட் பாளர் அறிவிப்பில் காங்கி ரஸ் கூட்டணி செய்த குளறுபடிகளை சரி செய்து விட்டதாகத் தெரிகிறது.
மக்களின் குடியரசுத் தலைவராக புகழப்பட்ட அவுல் பக்கீர் ஜெயினுலாப் தீன் அப்துல் கலாம் தமது பொறுப்பிலிருந்து விடை பெறும் நேரத்தில், இஸ்லா மிய சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு மக்கள் அறிஞர் குடியரசுத் துணைத் தலைவ ராக அறிவிக்கப்பட இருப் பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது அணியின் சார்பில் ரசீத் மசூத் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டி ருக்கிறார். பாஜக அணியின் சார்பில் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்தின் பேத்தியும் முன்னாள் ராஜ்ய சபைத் துணைத் தலைவருமான டாக்டர். நஜ்மா ஹெப்துல்லாஹ் போட்டியிடுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தில் பிறந்தவர்கள். நஜ்மா ஹெப்துல்லாஹ் ஹமித் அன்சாரி இருவரும் ஆவார். காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்தவராய் திகழ்ந்த நஜ்மா இடையில் ஆட்சியில் அமர்ந்த பாஜகவின் வலையில் வீழ்ந்தார்.
ஊசலாட்ட மனநிலையில் உள்ள நஜ்மா தனது அரசியல் வாழ்வின் முதிர்நிலையை இழந்தார்.
இடைக்கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியிராவிட்டால் இன்று இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக ஏகோபித்த ஆதரவுடன் பதவி ஏற்றிருக்கக் கூடும். கொடுக்க வேண்டிய கடனை கொடுக்க மனமில்லாதவன் வழிப்பறிக் கொள்ளை யன் கொள்ளையடிக்க வரும் போது தான் கொடுக்க வேண்டிய கடனை தனக்கு முன்பு உதவியவருக்கு இதோ உனக்கு சேர வேண்டிய கடனை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விடுவதைப் போல ஜெயிக்கவே முடியாத ஒரு பதவிக்கு பாஜகவினர் முஸ்லிம் ஒருவரை நிறுத்தி இருப்பது ஒரு தேர்ந்த நகைச்சுவை காட்சியாக பார்க்கப்படுகிறது.
மொத்ததில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கோட்டை விட்ட அரசியல் சாதுர்யத்தை துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மீட்டுவிட்டனர்.
அறிஞரும் கல்வியாளரும் ஹமீத் அன்சாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணைத் தலைவராக விஜயம் செய்தார். அப்போது ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மற்றும் சச்சார் குழு பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்தது.
சமீபகால பள்ளிவாசல்களில் மீதான குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து சிறுபான்மை நேரடியாக தலையிட்டு துல்லிய விசாரணைகளை மேற்க் கொள்ள வேண்டும் என்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்தது. அதைக் கனிவோடு செவிமடுத்த அன்சாரி தற்போது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். கல்வியாளர், மனித உரிமையாளர் அன்சாரியை
பாராட்டி வரவேற்கிறோம்

Thursday, July 26, 2007

today news

நாட்டின் முதல் சேவகி நான். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.


புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் ,கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்

Wednesday, July 25, 2007

செய்தி கதம்பம்

இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று மதியம் பதவியேற்றார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.

சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஹைதராபாத்துக்க்கு 150 கிலோமீட்டர் தூரத்தில் சத்திய நாராயனன் மீட்கப்பட்டார்.கடத்தல் காரர்க்ள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.

மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.

இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.

திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.

பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.

ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.

எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது

Thursday, July 19, 2007

இன்றைய முக்கிய செய்திக்ள்

தமிழக அரசு புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகங்களே நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதன்படி நெல்லையில் புதிய அண்ணாப் பல்கலைக் கழகம் துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

அனைத்து வசதிகளும் உரிமைகளும் ஹனீஃபுக்கு வழங்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஹனீஃபை தீவிரவாதி போன்றே நடத்த முடிவு செய்திருப்பதாகவும், ஒரு நாளுக்கு 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. போலீஸ் காவல் முடிந்து குயின்ஸ்லான்ட் சிறை அதிகாரிகளிடம் ஹனீஃப் ஒப்படைக்கப்பட்டார். தமது வழக்கறிஞரை சந்திக்கவும், தொழுகைக்காக இமாமை சந்திக்கவும் மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாக்டர் ஹனீஃபுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் உரிமைகளையும் வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசை பிரமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர். ஹனீஃப் நடத்தப்படும் விதம் குறித்து ஏற்கெனவே இந்தியா கவலை தெரிவித்தது.
செவ்வாய் கிழமை டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரை வெளியுறவுத் துறை அதிகாரிகள் அழைத்து ஹனீஃபை நியாயமாக நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் முதன்முறையாக ஹனீஃப் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஹனீஃபின் மனைவி பிர்தௌஸின் விசாவையும் ஆஸ்திரேலியா ரத்து செய்து விட்டது. என்ஜினியரான பிர்தவ்ஸ் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காகவே இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய இளைஞர்களை குறி வைக்கும்

இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்

பிரிட்டனின விமான நிலையத்தின் முன்புறம் கஃபில் என்பவர் கேஸ் சிலிண்டர்களை நிரப்பிய வாகனத்துடன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. கஃபில் மனையில் தற்போது பிரிட்டன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகிறார். 92 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன்புறத் தில் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச் சென்று காரிலிருந்து குதித்த நபரை கைது செய்து விட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவரும் இந்த வெடிக்காத குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
டாக்டர்களின் சதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வில் எட்டு பேருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையினரால் நம்பப்படுகிறது.
கஃபில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உலகம் நம்ப வேண்டியதாயிற்று.
எரிவாயு நிரம்பிய வாகனத்தை கஃபில் ஒட்டி வந்ததாக பிரிட்டன் காவல்துறை கூறுகிறது. எரிவாயுவால் வாகனம் ஓட்டப்படுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் வாகனங்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஓடுகின்றன.
ஆனால் எரிவாயு சிலிண்டர் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தாரா? மோதினாரா? அல்லது நடந்தது விபத்தா? உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வந்த வாகனத்தை மோதச் செய்த போது 90 சதவீதத்திற்கும் மேலாக கஃபிலின் உடல் எரிந்து போனதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் அருகிலிருந்து அதே ஜீப்பிலிருந்து குதித்தாகக் கூறப்படும் பிலால் அப்துல்லாஹ்வுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக குதித்தது எப்படி? என்பது போன்ற விடை தெரியாத வினாக்கள் விடைத்து நிற்கின்றன.
ஆனால் இது குறித்து எந்த மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
கஃபிலை யாரும் பார்க்கவும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இன்னும் அவரை விசாரித்து வருவதாகக் கூறிக் கொள்கிறது.
கிளாஸ்கோ விமான நிலைய முகப்பில் எரிந்த நிலையில் விழுந்தவன் தனது மகன் தான் என கஃபிலின் பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாயின.
இந்திய புலனாய்வுத் துறையும் கஃபிலின் மீது சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறது.
ஒரு தலைச்சார்பான இந்த தகவல்களே சந்தேகத்திற்குரியவை தான் என்பதே நடுநிலையாளர்களின் வாதம்.
இந்நிலையில் கிளாஸ்கோ சம்பவம் நிகழ்ந்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் வந்த டாக்டர் ஹனீஃப் என்ற 27 வயது இளைஞரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.
டாக்டர் ஹனீஃப் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையுடன் புறப்பட்டவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் இச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹனீஃபின் குடும்பத்தினரும் கடும் சோகத்தில் மூழ்கினர்.
ஏதும் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபணமாகாத நிலையில், அவரை விசாரணைக்காக முடக்கி வைத்த ஆஸ்தி ரேலிய நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங் கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரென்டன் நெல்சனும், பிரதமர் ஜான் ஹோவர்டும் ஹனீஃபின் மீது இது வரை எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறினார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்படுவார், நாளை விடுவிக்கப்படுவார் என இந்திய செய்தி ஏடுகளும் ஆருடங்களை கூறிவந்தன.
ஏற்கனவே பெங்களூர் காவல்துறை யும் டாக்டர் ஹனீஃபை குற்றவாளியாக உறுதிபடுத்தும் விதத்தில் எந்தவகையான ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹனீஃப் ஆஸ்ரேலிய நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஒரு நிமிடம் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நம்பிக்கை யுடன் பேசினார். தனக்காக வீட்டிலுள் ளோர் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை டாக்டர் ஹனீஃபின் மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்திருந்தார்.14.07.07 அன்று டாக்டர் ஹனீஃப் தாயகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 14 நாட்கள் விசாரணையில் வைத்திருந்து திடீரென அவர் மீது குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசு சுமத்தியது.
இதனிடையே டாக்டர் ஹனீஃபை விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.
அனைத்தையும் அலட்சியம் செய்து ஆஸ்திரேலிய அரசு டாக்டர் ஹனீஃப் மீது குற்றச் சாட்டை பதிவு செய்தது. ஹனீஃப் தனது தூரத்து உறவினரான கஃபீலுக்கு சிம்கார்டு ஒன்றை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயல் ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் கூறியது. இது நாடகக் காட்சி போன்றே இருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் தரவேண்டும் என சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
ஒருவருக்கு சிம்கார்டு கொடுப்பது ஒன்றும் குற்றச்செயலல்ல. இது அடிப்படையற்றது என ஹனீஃபின் மனைவி அர்ஷியா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹனீஃபுக்கு ஜாமீன் தரக்கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ நீதிமன்றத்தில் மனு செய்தார். 16.07.07 அன்று ஹனீஃபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வெடிக்காத குண்டு விவகாரத்தில், உண்மை நிலவரங்கள் வெளிவராத நிலையே நீடிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல் என பீடிகைகள் பலமாக இருந்தாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் ஒரு முஸ்லிம் இளைஞர்தான். இந்நிலையில் எங்கும் எவரும் பாதிக்கப்படாத சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகெங்கும் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
உலகம் தழுவிய ஜிஹாத் இந்தியாவில் பரவி வருவதாக ஒரு சாரார் இது போன்ற சம்பவத்துக் காகவே காத்திருந்தது போல் தங்கள் கண்டுபிடிப்புகளை (!) கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சதிச்செயலுக்கு 'டாக்டர்கள் சதி' என்று பெயரிடப்பட்டது ஏன்? கைது செய்யப்பட்டுள்ள கஃபிலின் சகோதரர் சபீல் மற்றும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீஃப் இருவர் மட்டுமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காதவைகளை பெரிதுபடுத்தி அதன் விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் சிக்க வைக்கும் செயலை முன்னணிப் பத்திரிக்கையாளர் அஸ்கர் அலி என்ஜினியர் கண்டித்திருக்கிறார்.இந்த சமுதாயம் தீவிரவாதிகளை ஆதரித்ததற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைத்ததில்லை என பொருளாதார அறிஞரும் சச்சார் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அபூசாலிஹ் ஷெரிப் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது மேற்குலகால் உருவாக்கப்பட்டது அதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜமியத்தே உலமாயே ஹிந்த்தின் மஹ்மூத் மதானி தெரிவித்தார்.
இந்த ஒரு சமுதாயத்தை மட்டும் முத்திரை குத்தி குற்றம் சாட்டுவது ஏன் ஐ.ஆர்.ஏ என்ற ஐரீஷ் தேச தீவிரவாதப் படை எந்த செயலை செய்தாலும் அதற்கு கத்தோலிக்கர்களை குற்றம் சாட்டுவ தில்லையே? ஆனால் முஸ்லிம்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என குமுறுகிறார் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர் அக்தர் அலிகான்.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அதன் சோக சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிடுகின் றன. ஆனால் மும்பையில் நிகழ்ந்த முஸ்லிம் விரோத வன்முறை குறித்தோ, குஜராத் கலவரங்கள் குறித்தோ இதுவரை அவர்கள் சிறிய செய்தியையாவது வெளியிட்டது உண்டா? என ஆவேசமாகக் கேட்கிறார் அஸ்கர் அலி என்ஜினியர்.
முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை மீடியாக்கள் மறந்து விடுகின்றன. 92ல் நடந்த மும்பைகுண்டு வெடிப்பில் தொடர்புடையவரூக்கு தண்டணை வழங்கப்பட்டதைப்போல் கலவரத்தில் தொடர்புடை யவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. மீடியாக்கள் கூறாமல் கூறும் மவுனச் செய்தி இது தான் ''முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்கள் கண்டு கொள்ளவும்மாட்டோம் ஆனால் முஸ்லிம்களை பிரச்சினைக்குரியவர்களா சித்தரிப்போம்'' என்பதே அது. எந்த இந்திய முஸ்லிமும் எந்த சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்ல என ராஜ்யசபா எம்.பியும் ஜமாத்தே உலமாவின் பொதுச் செயலாளருமான மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அறிவுஜீவிகள், இந்தியா விலும் உலக அளவிலும் தற்போது நடைபெற்று வரும் சில மின்னல் வேக மாற்றங்களுக்கும் தற்போது வரும் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
'அல்காய்தா ஹிந்த்' என்ற பெயரில் அல்காயிதாவின் இந்தியப் பிரிவு ஒன்று வீடியோ மூலம் இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தியாவில் அல்காய்தா என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியை பரப்பின.
இந்த பரபரப்பான செய்தி குறித்து முஸ்லிம் அறிவு ஜீவிகள் குழு சந்தேகம் தெரிவித்தது. இஸ்ரேலியப் படைப்பிரிவு இந்தியா வந்த பிறகே இம்மாதிரியான வினோதமான செய்திகள் வெளிவருவ தாகவும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கும், இந்த புதிர் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஙஒஎ எனும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஙஒஎலின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் மிதிபோர்வாலா வெளியிட்ட அறிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்காயிதா வீடியோ இஸ்ரேலிய உளவுப் பிரிவின் ஆலோசனையின்படி வெளியிட்டதாக இருக்கலாம் என ஙஒஎ தெரிவித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் உதவிகரமாக விளங்கியுள்ளது.
அல்காய்தா என்பது சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் முன்னணி அமைப்பே தவிர வேறல்ல, அமெரிக்க யூத உளவுத்துறை யினரே உலகமெங்கும் பயங்கரவாதங் களை கட்டவிழ்த்து விடுகின்றன என்பது சமீபத்தில் லண்டன் மற்றும் லால் மஸ்ஜித் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபாத் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையில் மொசாத் அல்காய்தாவின் திட்டங்களை அட்டவணை போட்டுக் கொடுக்கிறது என்று தெரிவித்ததை பெரோஸ் நினைவு கூர்ந்தார்.
சிரியாவின் அதிபர் பஷருல் ஆஸாத் தும் அல்காய்தா அமைப்பு இஸ்ரேலின் மொசாட்டால் இயக்கப்படுகிறது என்று கூறினார். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 9/11 நியூயார்க் உலக வர்த்தக வளாகத் தாக்குதல் சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் கைவரிசையே என்றும் நம்புவதாக பெரோஸ் தெரிவித்திருக்கிறார்.
பொறியாளர் கஃபீலின் பெற்றோர்
இந்தியாவில் மதக்கலவரங்களால் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்படும் பொழுது அதை சிறிதாக்கி காட்டுவதற்காக அதை மறக்கடிப்பதற்காக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களின் மாண்பினை குலைக்கும் சதி அகில இந்திய அளவில் திட்டமிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான பேரில்(?) தற்போது ஆஸ்திரேலியாவும் இணைக் கப்படுகிறது. விசாரணையில் வைக்கப் பட்டிருந்த டாக்டர். ஹனீப் 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித குற்றச் சாட்டையும் சுமத்தாமல் இருந்தபோது பிரிட்டினிலிருந்து காவல்துறை படை ஒன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்தித்த பின்பு திடீரென டாக்டர் ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூரில் அறிவியல் கழகத்தில் விஞ்ஞான பேராசிரியர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச்சென்று அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர். விசாரிக்கப்பட்ட அனைவரும் எவ்வித குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது பெங்களூர் தீவிரவாதிகளின் குறியாக மாறிவிட்டது என்றார்கள். ஓராண்டு கடந்த பின்பும் உண்மைக் குற்றவாளி யைக் கண்டு பிடித்த பாடில்லை.
தற்போது பிரிட்டன் கிளாஸ்கோ விமான நிலைய சம்பவம் தொடர்பாக தெளிவற்ற ஒரு கதையைக் கூறி குழப்பி வருகிறார்கள்.
இந்தியா சுயசார்புடன் எழுந்து நின்று விடக்கூடாது. இனமோதல்களை உருவாக்க பிணங்களை குவித்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரவளத் தினை மேம்படுத்த முடியும். வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவை இற்றுப் போக செய்யலாம் என முடிவெடுத்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த சக்தியான முஸ்லிம்களை பலவீனப் படுத்தினால் விளையும் குழப்பங்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே மேற்குலக சக்திகள் முனைப்போடு செயல்படுகின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்திய ஊடகங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர் களுக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுக்கும் தொடர்புண்டா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் தொடங்கி விட்டன.
அனைத்துக் காட்சிகளையும் தயாரித்து இயக்குபவர்கள் யார் என்பது விவர மறிந்தோர் அனைவருக்கும் தெரியும். புல்லுருவிகளின் வஞ்சகங்களுக்கு இடம் அளிக்காது 100 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் கை கோர்ப்பதே அந்த கருங்காலிகளின் முகங்களில் கரி பூசுவதாக அமையும்

அப்பாவிகளின் ரத்தத்தால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்

பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித்.
இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின்இந்த முதிர்ச்சியற்ற செயல் அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்

Wednesday, July 18, 2007

கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் மாநிலங்களின் தலைநகரங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் மக்களை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். நியமன எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை.

எட்டு துறைகளில் 61 திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 38 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மத்திய அரசு திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்து உள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

திருவான்மியூர், வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் இன்றும் நாளையும் இறுதி கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஆகஸ்டுக்குப் பிறகு சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பறக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு 676 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 44 ஆயிரத்துக்கு 346 ஆண்களும் 7 ஆயிரத்து 104 பெண்களும் விண்ணப்பம் செய்திருந்தனர். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டபின் 566 ஆண்களும், 110 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணைக்குப் பிறகு அவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜேந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தினமலர் அந்துமணி ரமேஷ் பெண் செய்தியாளர் உமாவுக்கு செய்த பாலியல் கொடுமைகளுக்கு இந்திய தேசிய மாதர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தினமலர் நிர்வாகியின் கொடுமைகள் குறித்து அவ்வமைப்பின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இப்பிரச்சினையில் உமாவுக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் குதிக்க தயாராக இருப்பதாக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். சுசீலா மற்றும் மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இடமில்லாமல் ''பிறந்த குழந்தையுடன் தாயும் சேயும்'' தரையில் படுத்து கிடக்கும் நிலை மாற வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீஃபின் விசாவை ரத்து செய்த ஆஸ்ரேலிய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் சங்கம் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்ரேலிய அரசின் முடிவு ஹனீஃபின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று கூறியுள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபை (ஆம்நெஸ்டி இன்டர் நேசனல்) ஹனீஃபின் விசா ரத்து செய்யப்பட்டதற்கு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. ஹனீஃப் மீதான வழக்கை வாபஸ் பெற்று அவரை கௌரவத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என டாக்டர் ஹனீஃபின் மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா கோரிக்கை விடுத்திருக்கிறார்

Tuesday, July 17, 2007

முக்கியச்செய்திகள்

தமிழகத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு தெரிவித்துள்ளார்

கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சிறுபான்மையினருக்கென தனித்தொகுதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீப் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

டாக்டர் ஹனீபை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் கைது செய்யபட்ட சபீல் அஹ்மதுவின் விவகாரத்திலும் நேர்மையைக்கடைபிடிக்குமாறு இந்திய் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஹனீப் கைது செய்யப்பட்டசிறிதுநேரத்தில் இந்தியா இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நவ்தேஜ்சர்மா கூறியத்தாவது, டாக்டர் ஹனீபின் குடும்பத்திற்கு தேவையான சட்ட உதவிகளை கான்பெர்ராவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்துவருகின்றனர். இந்த வழக்கில் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய காவல்துறையினருக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.ஹனீப் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் அவர் கவலைப் படவில்லை நலமாக உள்ளார் என சர்மா தெரிவித்துள்ளார்.

Thursday, July 12, 2007

Facts versus Myths: New Book on Terrorism
The phenomenon of terrorism has many dimensions to it and it has been the major bane of current times. The propaganda by the dominant power and section of media has succeeded in associating this menace to a particular religion and religious community. Pharos Media & Publishing Pvt Ltd has just now come out with a booklet which takes up these popular notions and myths and tries to unravel the truth of this phenomenon through facts, photographs and cartoons. Pharos Media plans to come out with Hindi, Marathi and Urdu editions of this book shortly. Terrorism: Facts versus MythsBy Ram Puniyani Price: Rs 40 / Euro 4
Table of Contents1. Terrorism and Muslims. 2. Islamic Tag3. Terrorist violence and Religion4. Clash of Civilizations5. War on terror6. Islam and Violence7. Democracy and Islam8. Islam and Fundamentalism9. RSS and Terrorism10. RSS fights against Terror! Bibliography US military Intervention References Further ReadingAppendices: A. A Moment of silenceB. War Crimes Tribunal in Afghanistan C. International Tribunal on War Crimes in Iraq D. Civilizations Clash or Alliance E. Al Qaeda or Al Fayda F. ABC of Jihad in Afghanistan Roots of Global TerrorPages 96 p/b Year: 2007 Price: Rs 40 / Euro 4 ISBN: 81-7221-033-7; ISBN-13: 978-81-7221-033-5Publishers: Pharos Media Publishing Pvt LtdD-84 Abul Fazal Enclave - IJamia Nagar New Delhi 110025 Email: info@pharosmedia.com

Wednesday, July 11, 2007

தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்

200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது
.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?
அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..

மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்

இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...
ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.
இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.
கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.
பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.
பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.
படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.
குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.
மருத்துவமனை நோக்கி...
ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.
மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.
முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.
மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)
படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்
சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.
இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.
சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.
மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.
குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.
ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.
இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.
குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.
அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.
நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.
குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.
உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.
பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Friday, July 6, 2007

என்ன சேதி

.

முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது
.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.
தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்
.
ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.
இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்

வீணாப் போனவனுக்கு விருது

வீணாப் போனவனுக்கு விருது
உலகமெல்லாம் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினை விட மேலாகக் கருதும் நபிகள் பெருமானாரை தன்னுடைய சாத்தானின்கவிதைகள்என்ற நூலில் இழிவுபடுத்தி எழுதிய கெடுமதியாளன் சல்மான் ருஷ்டி இந்தியா உள்பட உலக நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டான். இந்தியா உள்பட பல நாடுகளில் அவன் எழுதிய சர்ச்சைக்குரிய நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளில் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிக்கப்படாத சிறைக் கைதியாக 18 ஆண்டுகளாக அஞ்சி நடுங்கி வாழ்ந்திருந்தார் சல்மான் ருஷ்டி. சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வந்த பிரிட்டன் மனிதாபிமான முறையிலே அடைக்கலம் கொடுத்து வந்ததாக கூறிக் கொண்டது. நாங்கள் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றைக் காப்பாற்றவே பிறந்தவர்கள். அதனால் ருஷ்டிக்கு ஆதரவு வழங்குவது உள்நோக்கம் கொண்டதல்ல என பூசி மொழுகினர்.
ஆனால் அவையெல்லாம் உண்மையல்ல மேற்கத்திய சக்திகளின் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுதான் ருஷ்டியின் மீது அவர்கள் அனுதாபம் காட்டுவதற்குக் காரணம் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நாகரீகமற்ற கீழ்த்தரமான செயல் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரண்மனை வழங்கும் உயரிய விருதான 'சர்' பட்டத்தை ருஷ்டிக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் 'சர்' பட்டத்தையும், தனது நாட்டின் கவுரவத்தையும் பிரிட்டன் கெடுத்துக் கொண்டது.
பிரிட்டனின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ருஷ்டிக்கு 'சர்' பட்டத்தை அறிவித்தவுடன் ஈரான் தனது கண்டனத்தை பிரிட்டன் தூதரை அழைத்து நேரிடையாக தெரிவித்தது.
மதங்களுக்கு இடையிலான உறவினைக் கெடுக்கும் செயலை பிரிட்டன் செய்து விட்டதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹஸன் விராஜுடா தெரிவித்துள்ளார். டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட பெருமானார் அவமதிப்பு சம்பவத்தை விட பிரிட்டன் அரசு செய்தது கீழான செயல் என எகிப்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
மலேசியாவில் முஸ்லிம்கள் திரளாகச் சென்று பிரிட்டன் தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஈராக்கிலும் பிரிட்டனின் செயலை எதிர்த்து கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ, ஹிந்து தலைவர்களும் பங்கேற்றனர். உடனடியாக பிரிட்டன் தனது அறிவிப்பையும் விருதையும் திரும்பப் பெறவேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எதிர்ப்பலைகளின் உச்சக்கட்டமாக பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் டாக்டர் அர்பாப் குலாம் ரஹீம் தனது தாத்தாவுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'சர்' என்னும் கவுரவ பட்டத்தை தூக்கி எறிவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தனது தாத்தாவுக்கு பிரிட்டன் அரசு வழங்கிய 'சர்' பட்டத்தை திருப்பியடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ருஷ்டி மற்றும் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் உருவ பொம்மைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடனடியாக பிரிட்டன் அரசு தங்கள் அறிவிப்பினையும் விருதினையும் திரும்பப் பெறவேண்டும் என்று கிறிஸ்தவப் பேராயர் ரெஹ்மட், இஸ்லாம் ஆன்லைன் வலைதளத்தின் நேர்காணலில் தெரிவித்தார்.
சல்மான் ருஷ்டிக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசை பிரிட்டனுக்கு இருந்தால் 'உங்ஸ்ண்ப் நண்ழ்' (பிசாசு சர்) என்று விருது கொடுத்து அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறிய பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் பிஷப் ஏஜாஸ் இனாயத், பிரிட்டிஷ் அரசு கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் கிறிஸ்தவர்களும் ஒன்றல்ல. முஸ்லிம்கள் ருஷ்டியை விரும்புவதில்லை. அவ்வாறே கிறிஸ்தவர்கள் டோனி பிளேரை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் லி கிறிஸ்தவ ஒற்றுமையைக் குலைக்கும் சதி இது என்றும் அவர் எச்சரித்தார்.
இது சமூக ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்றும் ஹிந்துக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கராச்சி ஹிந்து சமுதாயத்தின் தலைவர் ரோபின்தாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2000 உலமாக்களைக் கொண்ட உலமா கவுன்சில் அறிவித்த அதிரடி அறிவிப்பு மேற்குலகை எரிச்சலில் ஆழ்த்தியது.முஸ்லிம்களை எரிச்சலில் ஆழ்த்த பிரிட்டன் அரசு சல்மான் ருஷ்டிக்கு விருது அளித்ததற்கு பதிலடியான அறிவிப்பாக அது அமைந்தது.
அல்காயிதா என்ற அமைப்பின் நிறுவனர் உஸாமா பின்லேடனுக்கும், பிரபல ஆப்கன் தலைவர் முல்லா உமருக்கும் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தொனிக்கும் 'சைபுல்லாஹ்' என்ற பெயரில் விருது வழங்குவதாக அறிவித்து விட்டனர்.
உலக அமைதியின் பாதுகாவலனாக தன்னை அழைத்துக் கொண்ட பிரிட்டன், தனது முதிர்ச்சியற்ற செயலால் சேற்றில் சிக்கிய யானையாய் தவிக்கிற

Thursday, July 5, 2007

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை நீதிபதி சச்சார் பெருமிதம்
இந்தியாவின் நெடிய வரலாற்றிலும், பண்பாட்டிலும், கலாச்சாரச் செழுமையிலும் முஸ்லிம்களின் பங்கு குறித்து பெருமை கொள்வதாக நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக் கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற சமூக ஒற்றுமை குறித்த கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தியா, ஹிந்துக்களுக்கு ஏகபோக உரிமை அல்ல என்று தெரிவித்த சச்சார், எந்த இந்தியக் குடிமகனையும் அவனது தேசப்பற்று குறித்து வினா எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்றார். முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் பாகிஸ்தான் அனுதாபிகள் என்று மதவாத சக்திகள் தொடர்ந்து ஒரே பொய்யைக் கூறி வருகின்றனர் என்றார்.முஸ்லிம்கள் (மைனாரிட்டியாக) சிறுபான்மையினராக உள்ளனர் என்பதற்காக குறைவான உரிமைகளையே அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று ராஜீந்தர் சச்சார் தெரிவித்தார். அதோடு இதுகுறித்து எவராவது கேள்வி எழுப்பினாலோ, அல்லது கேலி செய்தாலோ அது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிப்பது ஆகும்.முன்னணிப் பத்திரிகையாளர் நுபுர்பாசு பேசும்போது, இந்திய ஊடகங்கள் முரட்டு விலங்குகளைப் போல மாறிவிட்டதாகவும், பிரச்சினைகளை உருவாக்குபவைகளாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் காவிமயமாக மாறிவிட்டதாக கவலை தெரிவித்த மூத்த எழுத்தாளர் பிரபுல் பித்வாய் மதக் கலவரங்களால் கடந்த 10 வருடங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கை இந்தியாவில் பயங்கரவாதிகளால் மக்கள் கொல்லப்படுவதை விட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.குஜராத் முதல்வர் மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் 'அவலமாக' குஜராத் காட்சியளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்

காஷ்மீர்:கற்பழிப்பு முயற்சியில் இறங்கிய ராணுவத்தினர்

காஷ்மீர்:கற்பழிப்பு முயற்சியில் இறங்கிய ராணுவத்தினர்
நையப் புடைத்த பொதுமக்கள்
காஷ்மீர் கன்னிப் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்ற ராணுவத்தினர் இருவர் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பிடிபட்ட அக்கயவர்கள் இருவரையும் கிராமப் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர். ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் லி 51 என்ற ராணுவ உளவுப் பிரிவின் தல்ஜித்சிங் மற்றும் ஜோகிந்தர்சிங் என்ற இரு ராணுவ அதிகாரிகளும் பட்டி குனான் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் ரஃபீக் கோஜ்ரி என்பவரின் 17 வயது மகள் ஜரீனாவை கற்பழிக்க முயன்றபோது அந்த இளம்பெண் அலறியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காமவெறியர்களைப் பாய்ந்துப் பிடித்தனர். அதோடு அந்தக் காமவெறி பிடித்த இருவரின் தலைக்கும் மொட்டையடித்து ஆடைகள் களைந்தும், பெண் மானத்தை சீர்குலைக்க முனைந்த இழிசெயலைக் கண்டித்தும் கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.



அபலைப் பெண் கூக்குரல் எழுப்பியபோது வராத காவல்துறையினர் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் பொதுமக்களிடம் சிக்கி உதைபடும்போது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். இதில் 30 பேர் காயமடைந்தனர். இத்தனையும் செய்த பிறகே காமவெறி பிடித்த இரு ராணுவத்தினரையும் காவல்துறையினர் மீட்டனர்.

தற்போது அந்த இருவரும் காவல்துறை யினரின் விசாரணை வளையத்தில் உள்ளனர். இருவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவர்கள் பொதுமக்களிடம் மாட்டி உதைபடும்போது, ராணுவத்தினர் மீதான கற்பழிப்பு முயற்சி குற்றச்சாட்டினை உடனடியாக ஸ்ரீநகரில் பொதுத் தலைமை ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஆர்.ஷேகான் மறுத்தார். இரண்டு ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டைக்குத்தான் சென்றனர் என மறுத்தது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் ஆயிற்று.

காஷ்மீரில் 1989லிருந்து இதுவரை 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர் குறிப்பிடுகிறது. இதுவரை காஷ்மீரில் 60 ஆயிரம் பேருக்கு மேல் காணாமல் போயிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவம் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் சேர்ந்துகொள்ள, நாட்டின் மானம் காஷ்மீரில் பறப்பதாக உண்மை தேசப் பற்றாளர்கள் வேதனை அடைந்துள்ளன

Web Counter Code