இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 19, 2007

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

அனைத்து வசதிகளும் உரிமைகளும் ஹனீஃபுக்கு வழங்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஹனீஃபை தீவிரவாதி போன்றே நடத்த முடிவு செய்திருப்பதாகவும், ஒரு நாளுக்கு 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. போலீஸ் காவல் முடிந்து குயின்ஸ்லான்ட் சிறை அதிகாரிகளிடம் ஹனீஃப் ஒப்படைக்கப்பட்டார். தமது வழக்கறிஞரை சந்திக்கவும், தொழுகைக்காக இமாமை சந்திக்கவும் மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாக்டர் ஹனீஃபுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் உரிமைகளையும் வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசை பிரமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர். ஹனீஃப் நடத்தப்படும் விதம் குறித்து ஏற்கெனவே இந்தியா கவலை தெரிவித்தது.
செவ்வாய் கிழமை டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரை வெளியுறவுத் துறை அதிகாரிகள் அழைத்து ஹனீஃபை நியாயமாக நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் முதன்முறையாக ஹனீஃப் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஹனீஃபின் மனைவி பிர்தௌஸின் விசாவையும் ஆஸ்திரேலியா ரத்து செய்து விட்டது. என்ஜினியரான பிர்தவ்ஸ் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காகவே இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Web Counter Code