இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, September 8, 2009

ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்! -அபூசாலிஹ்







ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!

-அபூசாலிஹ்

நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது. காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் தனது வெறுப்பினை வெளிக்காட்டினர்.

வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.

இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.

கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்ùஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா செய்துள்ளான. அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.
மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.

இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.

அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்ùஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.

ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.

நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.

தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத் தண்டனை அடையப் போகிறான்.

ஷெர்பினியின் அடக்கம் சொந்த நாடான எகிப்தில் நடந்தது. ஜெர்மனி கடும் கண்டனத்திற்கு இலக்கானது. உலகெங்கிலுமுள்ள ஜெர்மனி தூதரங்களின் வளாகங்கள் பல, செருப்புகளாலும், அழுகிய முட்டைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன.

ஷெர்பினியின் கணவரின் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் வெளிவர வில்லை. ஷெர்பினியின் கணவனை சந்திக்க முயன்ற ஈரானின் பிரஸ் டி.வி. செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்.

வீரப்பெண்மணி மர்வா ஷெர்பினி யின் மறுமை வெற்றிக்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் தொடர்கின்ற


ராஜசேகர ரெட்டியும்! ஆந்திர முஸ்லிம்களும்!

ஒரு மாநில முதல்வரின் திடீர் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும்.


ஒய்.எஸ்.ஆர். என அன்பாக அழைக்கப்படும் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த செய்தி அரசியல் அரங்கை உலுக்கியது.

அவரது நலத்திட்டங்கள் பல மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல.

டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி யின் 'ராஜீவ்காந்தி காப்பீடு திட்டம்' நம் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் 'கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு' முன்னோடித் திட்டமாகும்.

ஆந்திரா என்றால் கடன் தொல் லையால் கொத்து கொத்தாக தற் கொலை செய்யும் விவசாயிகள்தான் நினைவுக்கு வரும். சந்திரபாபு நாயூடுவின் ஆட்சிகால சோகத்தை மாற்றி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தவர் ஒய்.எஸ்.ஆர்.

ஒய்.எஸ்.ஆரின் அதிரடி அகில இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆரின் அரும் முயற்சியால் பாரதீய ஜனதாவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது. பிரதமர் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடிக்கலாம் என கனவில் மிதந்த அத்வானிகளின் கதி அதோகதியாகிப் போனது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தங்களது தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என பிளாக்மெயில் செய்து மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டவர்களின் கனவில் வண்டி வண்டியாக மண் அள்ளிப் போட்டவர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மதவாத கும்பலின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். காங்ரஸின் வெற்றிக்கு ஆந்திரா கைகொடுத்தது.

டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மறைவு நாட்டின் சகல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து மர்மங்களும், யூகங்களும் புற்றீசல்களாக புறப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர முஸ்லிம் சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக போர்க் கோலம் பூண்டவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என சூளுரைத்தார்.

டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதன்முறையாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களுக்கு, தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.

ஆந்திராவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப் பித்தார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடா? அனுமதிக்க மாட்டோம் என சதிகார கும்பல் சதி வலைகளைப் பின்னியது. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர்.

முஸ்லிம்களுக்கு பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளை நிறைவேற்றுவோம் என பேச்சளவில் முழங்கும் வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே கண்ட இந்த கள்ளம்கபடமற்ற சமுதாயம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக் காகப் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிய வெகுண்டெழுந்த ஒய்.எஸ். ஆரைக் கண்டு வியந்தது.

எதற்கும் கலங்காது தனது முடிவில் உறுதியாக இருந்து முஸ்லிம் இடஒதுக் கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட முட்டுக் கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து சட்ட யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடினார்.

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. செயற் கரிய செயல் செய்த ராஜ சேகர ரெட்டி நாட்டு மக்க ளால் பாராட்டப் பெற்றார்.

ராஜசேகர ரெட்டி யின் ஆற்றலும், எடுத்தக் காரியத்தை எப்பாடுபட் டேனும் நிறைவேற்றும் உறுதியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று.

அரசு நிறுவனங்களால், அரசியல் பெரும்புள்ளிகளால் அபகரிக்கப்பட்ட வக்ஃபு நிலங்களை மீட்டு உரிய முறை யில் வாரியத்திடம் ஒப்படைப்பதில் ஒய்.எஸ்.ஆர். பெரிதும் ஆர்வம் காட்டினார்.

அரசு நிறுவனம் ஒன்று 50 ஏக்கர் வக்ஃபு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அது ஹஜ்ரத் பாபா ஷர்ஃபுதீன் தர்காவுக்குச் சொந்தமான நிலம். அதன் இன்றைய மதிப்பு 350 கோடியாகும். அதனைத் தயங்காமல் அரசு ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார். இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வரை நாங்கள் எப்போது காணப் போகிறோம் என தேம்புகிறார் ஹைதராபாத்தின் முஸ்லிம் பிரமுகர் மவ்லவி ஆகில் காசிமி.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழைய ஹைதராபாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். காங்கிரஸ் பெரும் புள்ளிகளால் எப்போதும் கருவேப்பிலையாக மட்டுமே கருதப்பட்டு வந்த (ஹைதராபாத் முஸ்லிம் களிடையே செல்வாக்கு பெற்றிருந்த) அகில இந்திய மஜ்லிúஸ இத்திஹாத்துல் முஸ்லிமீன் அமைப்பினரிடையே சிறந்த முறையில் நட்பு பாராட்டினார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. முதல்வரும் ஏ.ஐ.எம். எம்.முடன் இணைந்து சிறுபான்மை வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டார்.

ஆந்திராவில் (தமிழ்நாட்டை விட) மிக சிறுபான்மையினராக உள்ள கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஒய்.எஸ்.ஆர். அனைத்துப் பிரிவு மக்க ளின் பேரன்புக்கு உரியவராக திகழ்நதார்.

சமூக நல்லிணக்கம் நாளும் வாழ வேண் டும் என விரும்பும் ஒவ்வொரு வரும் நெகிழ்ச்சியோடு போற்றும் சரித்திரமானார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்

ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகு




ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகும் ஆர்.எஸ்.எஸ்.

-மருதநாயகம்

பாரதீய ஜின்னா பார்ட்டியின் ஜின்னா ஆதரவு கானங்கள் இந்திய அரசியல் அரங்கில் அந்தக் கட்சியின் பெயரை ஜின்னாபின்னப்படுத்திய பிறகு அந்தக் கட்சியின் ஆதாரப் பீடமான ஆர்.எஸ்.எஸ். குரு பீடத்தின் முக்கியப் பெருந்தலை களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளில் ஒருவராக அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், ஜின்னா பற்றி தெரிவித்த கருத்தினால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாகிஸ்தானின் சிற்பியான முஹம்மது அலி ஜின்னா, பிளவுபடாத மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டமைப் பதில் உறுதியுடன் நின்றார். ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மூளைச்சலவை செய்ததால் முஸ்லிம் களுக்கு தனி நாடு உருவாக்கும் அளவுக் குச் சென்றார்.

'ஜின்னா ரொம்ப நல்லவரு' பிரிட்டிஷ் காரர்கள்தான் அவரைக் கொடுத்தார்கள் என்ற ரீதியில் சுதர்சன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது.

ஜின்னா குறித்து வெறுப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யும் திறனாய்வாளர்கள், ''ஜின்னா சிறந்த இந்தியர்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைக்கும் ஆர்வத்துடன் இயங்கினார்; ஜின்னா போன்ற விடுதலைப் போராட்டத் தளபதிகள் நாட்டில் தோன்று வது மிகவும் அரிது'' என்றே சிலாகித்துக் கூறுகிறார்கள்.

இந்திய வரலாற்றில் மூன்று பெருந் தலைவர்களின் அருமையான பக்கம் அறியப்படாமலே போய்விட்டது என்பது உண்மை தேசப்பற்றார்களின் ஏக்கமாக இருந்தது.

ஒருவர் பெரியார் ஈ.வே.ரா., இரண் டாமவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், மற்றொருவர் முஹம்மது அலி ஜின்னா.

இவர்கள் மூவரின் சாதனை சரித்திரங் கள் இவற்றின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆளுமை அனைத்துமே சரிவர இந்திய மக்களால் அறியப்படாத அவல மாகவே அமைந்திருக்கின்றன. இன்று வரை இதுதான் நிலவரம் என்பது ஓர் உறுத்தலுக்குரிய உண்மையாகும்.

எந்த அளவு சிறந்த மனிதராக இருந் திருந்தால் அவரை காலகலமாக விமர் சித்த முகாமைச் சேர்ந்தவர்களால் கூட உண்மைகளை மறைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி உரைத்தே தீரவேண் டிய நிலையில் ஜின்னாவைக் குறித்த உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

அத்வானிகள், ஜஸ்வந்த் சிங்குகள் மட்டுமல்லாமல், சுதர்சனங்களும் கூட உண்மைகளை உரைத்தே தீரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிற

Saturday, September 5, 2009

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை! -அபூசாலிஹ்

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை!

-அபூசாலிஹ்

ஈராக்கை ஆக்கிரமித்து ஆறு ஆண்டுகளாக மனித உரிமைகளை மீறிவரும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த ஜார்ஜ் புஷ் மீது தார்மீக கோபம் கொண்டு தனது காலனிகளை வீசி மரியாதை(!) செய்தவர் ஈராக்கிய பத்திரிகையாளர் முன்ததர் அல்ஜைதி.


ஈராக்கில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களும் உயிர்பலியாகக் காரணமாக இருந்த ஜார்ஜ் புஷ் தனது பதவியின் கடைசி காலத்தில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்காக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றார்.


பாக்தாதில் ஒன்றுபட்ட பத்திரிகையா ளர் கூட்டத்தில் பேசும்போது, ''ஈராக்கிற்கு மக்களாட்சியை வழங் கினோம்; மறுமலர்ச்சி வழங்கினோம்'' என தனது சாதனைகளாக சகட்டு மேனிக்கு அள்ளிவிட்டுக் கொண்டி ருந்தபோது, புஷ்ஷின் பொய்களைத் தடுத்து நிறுத்தியது ஒரு ஷூ.


அமெரிக்க பொய்யைத் தடுத்து நிறுத்தியது அரபு ஷூ. தனது பெயரி லேயே ஷூவை சூட்டி யிருக்கும் அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூ, தன்னால் ஆக்கிரமிக்கப் பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமகனின் காலணி யால் மரியாதை(!) செய்யப்பட்டார்.


பாதுகாப்பு அதிகாரி களின் கடுமையான கெடுபிடி களுக்கிடையில் முன்ததர் அல்ஜைதி, சிறையில் தள்ளப் பட்டார்.


உலகுக்கு காவல் தலை வனாக தன்னை எண்ணிக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஜார்ஜ் புஷ் மீதான காலணி தாக்குதல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தோடு, முன்ததர் அல்ஜை தியை மாவீரனா கவும், கதாநாயகனாகவும் போற்றியது. முன்த தரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடு களிலும் இதே கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் முன்ததருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தற்போது அந்தத் தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருப்பதாக ஈராக்கின் ராணுவ நீதிமன்றம் தெரிவித் திருக்கிறது.


முன்ததர் அல் ஜைதியின் நன்னடத் தையின் காரணமாக அவருக்கு இந்த தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. முன்ததர் அல் ஜைதி தற்போது அனுப வித்து வரும் ஓராண்டோடு அவர் சிறையிலிருந்து மீளவிருக்கிறார்.


கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி புஷ் மீது ஷூ வீசி சிறை சென்ற முன்ததர் மீது இதற்கு முன்பு எந்தக் கிரிமினல் வழக்கும் இல்லாத காரணத்தால் ஓராண்டு தண்டனை காலத்தைக் கூட முழுவதும் அனுபவிக்காமல் மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதாவது எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முன்ததர் அல் ஜைதி விடுதலையாகிறார்.


இத்தகவலை ஈராக் அரசின் ராணுவத் தலைமை வழக்கறிஞர் கரீம் அல் சுஜைரி தெரிவித்திருக்கிறார்


போலி ஏவுகணைகள் விற்பனை இந்தியாவை ஏமாற்றிய இஸ்ரேல்!

கிழக்காசியாவின் வளர்ந்துவரும் வல்லரசான இந்தியாவின் ராணுவ ஆயுதங்களின் திறன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய ஆயுதங்களின் புதிர், வெடிக்கத் தவறும்குண்டுகள், அதிநவீன உபகரங்களைப் பெறுவதற்காக அந்நிய நாடுகளிடம் கொட்டியழுத கோடிகள் என ராணுவ வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் கவலை அளிக் கக்கூடியதாக உள்ளது. எவராலும் முறிய டிக்க முடியாத திறன் படைத்த நம் பாதுகாப்புத் துறையிலா இந்நிலை? என்ற அதிர்ச்சி அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று இந்த அதிரவைக்கும் உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது.


இந்திய விமானப் படையில் இடம் பெற்றுள்ள பல ஏவுகணைகள், சக்திமிகுந்த குண்டுகள் அனைத்தும் சரியான இலக்கை நோக்கிச் சென்று அழிக்கும் திறன் உடையவை அல்ல. குறிப்பாக இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஹார்பி ஏவுகணை, இலக்குகளைக் குறிவைப்பதில் சொதப்பும் திறனுடையது. ஆனால் இந்த ஏவுகணைக்கான ஆன செலவு 750 கோடி ரூபாய்.


பாப்பிபா செண்ட் என்ற ஏவுகணை யின் விலை 350 கோடி ரூபாய்கள். இது தரைப் பகுதியிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்து எதிரியின் இலக்கை அழிக்க வேண்டும். ஆனால் இந்த ஏவுகணை ஆரம்பக்கட்ட சோதனைக்கு கூட உட்படுத்தப்படவில்லை என்பது வேதனை. இதன் இறக்கைகள் சரியான முறையில் வடிவமைக்கப்பட வில்லையாம்.


போர்க் கப்பலுக்கு எதிராக ஏவப்பட்டு இலக்கைத் தாக்க வேண்டிய கடல் கழுகு என்ற ஏவுகணை 120 கோடி ரூபாய் மதிப் புடையது. அது நெடுங்காலம் செயல் படக் கூடியதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆன்டி ரேடியேஷன் ஏவுகணைகள் பல சரியான உதிரி பாகங்கள் இல்லா மையால் குறட்டை விட்டுத் தூங்குகின்றன. இவை அனைத் தும் ரஷ்ய தொழில்நுட்பத்தின் கைங்கர்யம்.


சிட்டா ஃபால் என்ற கொத்து குண்டுகள் 450 கிலோ மீட்டர் துரித வேகத்தில் செல்ல வேண்டும். அவையும் முழுமையாக பயன் படும் நிலையில் இல்லை என்றும், அதன் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியக் கப்பல் படையின் கடல் கழுகின் திறன் குறைந்த நிலை என்பது சிறிய பிரச்சினைதான், அவை விரைவில் சரிசெய்யப்படும் என இந்தியக் கப்பற் படை தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்.
உலகின் அநேக நாடுகள் ஆயுத தயாரிப்பில் இறங்கியிருக்கும் நிலையில், நாம் பிற ஏஜென்சிகளை நம்பியதன் விளைவு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி இருக்கக்கூடும் என்று தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்



மோதி மிதித்துவிடு! முகத்தில் உமிழ்ந்துவிடு!!-யூசுப் இஸ்லாம்


இந்தியப் பிரமுகர்கள் அமெரிக் கர்களால் அவமானப்படுத்தப்பட்டு வருவது சீசனாகவும், ஃபேஷனாகவும் மாறிவரும் நிலையில், தன்னை அவ மானப் படுத்தியவர்களை சட்டரீதியாக சந்தித்து தண்டனை வாங்கிக் கொடுத்த ஒரு பெருமகனைக் குறித்து இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஒரு காலத்தில் கேட் ஸ்டீவன்ஸ் என அழைக்கப்பட்டு பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட யூசுப் இஸ்லாம் குறித்து பிரிட்டனின் சன் செய்தி ஏடு கடுமையான களங்கத்தை சுமத்தியது.

யூசுப் இஸ்லாத்திற்கு தீவிரவாதத் தொடர்பு உண்டு என சிறிதும் பொறுப் பற்ற முறையில் அந்தப் பத்திரிகை எழுதியதை எதிர்த்து சட்ட யுத்தத் தினை துவங்கினார் யூசுப் இஸ்லாம். ஆம், சன் பத்திரிகையின் மீது வழக்கு தொடர்ந்தார். பல மாதங்கள் கழித்து யூசுப் இஸ்லாம் மீது களங்கம் சுமத்தி யதற்காக சன் பத்திரிகைக்கு கடுமை யான கண்டனம் தெரிவிக்கப்பட்ட தோடு, மன உளைச்சலுக்கு உள்ளான யூசுப் இஸ்லாமுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

யூசுப் இஸ்லாம் வெற்றி வீரராக உலாவந்தார். இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த தொகையை சுனாமியால் சூறையாடப்பட்ட இந்தோனேஷியா வின் அஷே பகுதி மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

தனது தன்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்திய சக்திகளை மன்னிப்புக் கேட்க வைத்தார். ஆனால் நம் பிர பலங்கள் வீராவேசமாக செய்தியாளர் களிடம் பேசுவதோடு கப்சிப் ஆகிவிடு கிறார்கள்.

தரம் குறைந்த செயலைச் செய்தவர் களுக்கு தகுந்த தண்டனை அமெரிக்கா விலும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலும் இச்செயலுக்கான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களை பிடித்தாட்டும் இஸ்லாம்ஃபோபியா குறித்து திரையு லகப் புள்ளிகள்தான் வாய்திறந்தார் களே தவிர, வேறு யாரும் திறக்க வில்லை. ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்பதால்தான் அவமானப் படுத்தப்பட்டேன் என்று கூறியதை (வெளிநாட்டு ஊடகங்களைத் தவிர) இந்தியப் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. இதுபோன்ற கண்டுகொள்ளா நிலைக்கு விடை கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த அவமானங்கள் அந்த அவமானச் சின்னங்களால் நேராமல் இருக்கும்

உலகின் அவமானச் சின்னம் -அபூசாலிஹ்

உலகின் அவமானச் சின்னம்

-அபூசாலிஹ்
அமெரிக்க அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பிரபலங்கள் அவமதிக்கப் படுவது வாடிக்கையாகி வருகிறது.

தங்கள் நாட்டில் நுழைவதற்கு முன்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என அமெரிக்க அதிகார வர்க்கம் மனிதர் களின் தகுதி அறியாது தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள் வது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் பிரபலங்கள் அவமதிக் கப்பட்டுவரும் தொடர் நிகழ்வில் இப்போது இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திர மான ஷாருக்கான அவமானப்பட்டிருக் கிறார்.

நியூ ஜெர்சியில் உள்ள நியார்க் விமான நிலையத்தில் (நியூயார்க் அல்ல) அமெரிக் கக் குடியுரிமை அதிகாரிகளால் இரண்டு மணி நேரம் சிறை பிடிக்கப் பட்டிருக் கிறார்.

இந்த நிகழ்வு இந்திய அரசியல் தலைவர்களாலும், மும்பை பட உலகத் தினராலும் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானது. இந்திய அரசு, தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத் திடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட தோடு தனது சீறலையும் வெளிப்படுத் தியுள்ளது.

ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானம் குறித்து தான் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்பதாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதர் திமோதி ரிவோமர் தெரிவித்தார். ஷாருக்கான உலகப் புகழ்பெற்ற கலைஞர், அவரை வரவேற்க அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்றார். முன்னதாக, தான் சிறை வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு மனம் வெதும்பிய ஷாருக்கான், தான் இனி அமெரிக்காவில் கால்வைக்கப் போவதில்லை என தெரிவித்ததற்கு தாஜா செய்யும் விதமாக அமெரிக்கத் தூதர் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 63வது விடுதலை நாள் தொடர்பான விழாவுக்காக குறிப்பிட்ட நடிகர் அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது சுதந்திரத்திற்கு இடையூறு செய்யும் விதமாகவும், உரிமைக்கு ஊறு செய்யும் விதமாகவும் அவர் மீது அவமானச் சேறு வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. அவமானத் தில் சுருண்டுவிட்ட அந்த திரையுலகப் பிரபலத்தை அவமானத்திலிருந்து மீட்டு இரண்டு மணி நேர கேள்விக்கணை டார்ச்சரிலிருந்து மீட்டவர் ராஜீவ் சுக்லா என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர். அவர்தான் அமெரிக்க அதிகாரி களிடமும், இந்திய தூதரகத்திடமும் பேசி, கிட்டத்தட்ட விடுதலையை(!) வாங்கிக் கொடுத்தவர் என முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நடிகர் பெயரின் பின்பகுதியான 'கான்' என்பதுதான் அமெரிக்க குடியுரிமைத் துறை கம்ப்யூட்டரின் அலறலுக்கு காரண மாக அமைந்துள்ளது. 'கான்' என்ற வாசகம் சந்தேகத்துக்குரிய ஒரு சொல்லாகக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது.

ஏதோ ஒரு நடிகரைச் சுற்றி நிகழ்ந்த ஒரு செய்தியில் நாமும் ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியம் உடனடியாக வந்தது.

கடும் பதட்ட சூழ்நிலைக்குப் பின் கசப்பான உணர்வுகளுக்குப் பின் விடுவிக்கப் பட்ட ஷாருக்கான், ''எனது அமெரிக்க வருகைப் பற்றி கடுமையான கேள்வி களால் துளைத்தெடுக்கப்பட்டேன்'' என்றார்.

''என்னுடைய லக்கேஜ்கள் அணுஅணு வாக சோதனையிடப்பட்டன. நான் சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு வந்திருக் கிறேன். என்னுடைய பெயர் கான். தெற்காசிய சமூகம் என்ற அமைப்பு இந்திய விடுதலை நாள் தொடர்பாக எனக்கு அழைப்பு விடுத்திருந்ததால் இங்கு வந்திருக்கிறேன். இங்கு எனக்கு பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருக்கும் நண்பர் களைத் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று கூறி கான், அடுத் துக் கூறிய வார்த்தைகள் அணுகுண்டு ரகத்தைச் சார்ந்தவை.

''நான் குறிவைக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு முஸ்லிம் என்பதும், எனது துணைப் பெயர் 'கான்' என்பதும்தான்'' என கோபக் குமுறலுடன் செய்தியாளர்களிடம் பேசி முடித்திருக்கிறார். அதோடு விட்டாரா? ''எனது பாதுகாப்பாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவரது பெயரின் கடைசியிலும் 'கான்' உள்ளது'' என்றார்.

இவ்வாறு கூறிய ஷாருக்கான், ''எனது பாதுகாப்பாளரை என்னோடு வர அனுமதி யுங்கள். நான் எங்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செல்கிறேன்'' என கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இதுகுறித்து மும்பைப் படவுலகின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநரு மான கரன்ஜோஹர் கூறும்போது, ''எனது உயிர் நண்பர் கானுக்கு நேர்ந்தது அதிர்ச் சியையும் அயர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. ஷாருக்கானை நடத்திய விதம் கொடூரமானது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான்'' என்று தனது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளது.

இதுபோன்ற செயல்கள் நிறவெறி நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியதைப் போலாகும் என பாலிவுட் கலைஞர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா போன்ற நாடுகளை இஸ்லாம் ஃபோபியா என்ற நோய் பிடித்தாட்டு கிறது. முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்க்கும் இந்த செயலை நாம் அனுமதிக் கக் கூடாது என பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான மகேஷ்பட் கூறுகிறார்.

ஷாருக் அவமானப்படுத்தப்பட்டது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதது, சகித்துக்கொள்ள முடியாதது என இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச் சர் அம்பிகா சோனி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர், கவுரி என்ற பிற சமய சகோதரியை திருமணம் செய்துகொண்டவர், முஸ்லிம் களின் பிரச்சினைகளைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் என பல்வேறு சிறப்புகளுக்கு(!) உரிய ஷாருக் கானுக்கு அவர் முஸ்லிம் என்பதாலேயே அவமானம் நேர்ந்துள்ளது விநோத மாகவே உள்ளது. இவர்கள் என்னதான் 'எம்மதமும் சம்மதம்' என நீட்டி முழக்கி னாலும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு தாசானுதாசர்களாக காட்டிக் கொண்டாலும் இவர்கள் சார்ந்த சமயம், இவர்களது இயற் பெயர் ஆதிக்க சக்திகளுக்கு அச்சுறுத்தும் ஒன்றாகவே உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் முஹம்மது குட்டி என்ற மம்மூட்டி, அமெரிக்க மண்ணில் அவமானப்படுத்தப் பட்டார். அவர் அவமானப்பட்டதற்கு முக்கியக் காரணம் அவரது பெயரில் உள்ள இஸ்மாயில் முஹம்மது குட்டி என்பதுதான் முக்கியக் காரணம் என்பது அப்போதே சமூகநல ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

சமீபத்தில் இந்திய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்கிய வரும் இந்திய ஏவுகணை இயலின் வித்தகரும் இந்திய அணு விஞ்ஞானத் தின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய மண்ணிலேயே அமெரிக்க அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டார். அவரது காலணி)று) களையும், காலுறைகளையும் கழற்றி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் கண்டனங் கள் எழுந்தன. ஆனால் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அவரது பெயர்தான் அவரை சோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டது என்பதை யாரும் அப்போது சுட்டிக் காட்டவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக ஷாருக் விஷயத்தில் விம்மிப்புடைத்து எரிமலை யாக இஸ்லாம்ஃபோபியாவில் நடுநடுங்கும் அமெரிக்கத்தனம் பற்றிய குமுறல் வெளிப்பட்டிருக்கிறது.

ஒபாமாக்கள் என்னதான் இஸ்லாமிய உலகில் சென்று 'அஸ்ஸலாமு அலைக் கும்' என்று கூறி தன் நாட்டின் தவறு களுக்காக தன்னிலை விளக்கம் அளித் தாலும், ஒவ்வொரு மில்லி மீட்டரி லும் பரவி இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி துவேஷங்களை அடியோடு அழிக்க சூளுரைக்க வேண்டும்.

இது ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்கா அல்ல என்பதை நிலைநாட்ட ஒபாமா மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக் கிறார். இருப்பினும் அடிமட் டத்தில் உள்ள சில்லறைகள், பிற்போக்குத் தனத்தின் மொத்த உருவமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. தனது கடந்தகால தவறு களிலிருந்து பாடம் கற்காத அமெரிக்கா, உலகின் அவமானச் சின்னம் என அழைக்கப்படும் நேரம் விரைவில் வரக்கூடும்.

கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்! -ஹபீபா பாலன்








கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்!


-ஹபீபா பாலன்

சீனா சமதர்மத்தின் தாயகம் என்றும், கம்யூனிசத்தின் தொட்டில் என்றும், மதச்சார்பற்ற தத்துவத்தின் மகோன்னத பூமி என்றும் சிலாகித்துக் கொண்டு திரிந்தவர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை அவர்களுக்கு வந்திருக்கிறது.

சீனா பல பத்தாண்டுகளுக்கு முன்பு தலைநகர் பெய்ஜிங்கில் உரிமைகளுக்காக முழக்கமிட்ட ஏராளமான மாணவர்களை அரச வன்முறையின் மூலம் கொடூரமாக நசுக்கியது. ஏராளமான மாணவர்களின் கதி என்னவாயிற்று என்பதே இன்னும் தெரியாத நிலையில், மாணவர்களின் உற்றோரும் பெற்றோரும் கதறும் நிலை இன்றுவரை நீடிக்கிறது.

திபெத் மக்களின் உரிமைகளை நசுக்கி சீனா தன்னை ஒரு வெகுஜன விரோத சக்தி என்பதைத் தொடர்ந்து நிலை நாட்டி வந்தது.

இவற்றுக்கும் மேலாக, 60 ஆண்டு காலத்திற்கு முன்பு சுதந்திர நாடாகத் திகழ்ந்து முழுவதும் முஸ்லிம்களையே பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு துர்க்மினிஸ்தானைக் கைப்பற்றி அடிமைப் படுத்தி வந்தது. முஸ்லிம்களின் பாரம் பரியப் பெருமை மிகுந்த அப்பகுதிக்கு 'ஜின்ஜியாங்' என்று பெயரிட்டு முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தையும் அழித்தது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்த சீனா, கனிம வளங்களிலும், அணு சக்தியிலும், இயற்கை வளங்களி லும் சிறப்புடன் விளங்குகிறது. பெட்ரோலியம் லி இயற்கை எரிவாயு வளங்களிலும் சீனா முன்னிலையில் இருப்பதற்கும், செல்வ வளம் கொழிப்பதற்கும் ஜின்ஜியாங் மாகாணம் என அழைக்கப்படும் கிழக்கு துர்க்மினிஸ்தான் பகுதியே முக்கியக் காரணம் என்பதும் வரலாறாகிவிட்டது.

வெறும் பூச்சி பல்லிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக வாழ்ந்த சீனர்களின் நிலை உலகம் மறக்க முடியாத உண்மையாக கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, கிழக்கு துர்க்மினிஸ் தான் இணைந்த பிறகு வளம் கொழிக்க ஆரம்பித்ததன் நன்றியை மறந்த சீன அரசின் கொடுஞ்செயல் சமீபகால சரித்திரமாகும்.

ஹான் இன மக்களை அதிக அளவில் குடியமர்த்தி, ஜின்ஜியாங் என்ற கிழக்கு துர்க்மினிஸ்தான் மக்களின் உரிமைகளை நசுக்கிய சீனாவின் இழிசெயல் மேலும் தொடர்வதோடு, தேவையற்ற செயல்களி லும் சீனா தனது மூக்கினை நுழைத்து வருகிறது.

அத்துடன், நெருப்போடு விளை யாடும் விபரீத விளையாட்டினை சீனா தொடங்கியுள்ளது. இந்தியாவின் இறை யாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சவால் விடுக்கும் ஓர் அடாத செயலை சீனா செய்துள்ளது. அது, ஒட்டுமொத்த இந்தியர் களின் மீது தொடுக்கப்படும் போராகவே நாம் கருதலாம்.

சீன அரசின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் தனது விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவுடனான உறவு எவ்வாறு சீரழிந்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் அந்த சீன அரசு வலைதளம் விஷமத்தனமாகக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா லி பல்வேறு மாநிலங்களாக சிதறடிக் கப்பட வேண்டும், 20 நாடுகளாக துண் டாடப்பட வேண்டும், துண்டாடப்பட்ட பகுதிகள் தனி நாடுகளாக்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், நாகலாந்து, தமிழ்நாடு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் தனி நாடுகளாக சிதறடிக்கப்பட வேண்டும் என்று தனது வக்கிர ஆசையை வலை தளம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது சீனா. அதற்கு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மறைமுகமாக உதவ வேண்டும் என்று படுபயங்கரமான, முட்டாள்தன மான, கீழ்த்தரமான தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறது சீனா.

அண்டை நாடு, உடைந்து சிதற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத் தியதன் மூலம் சீனா உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்தியாவைக் குறித்து தனது இழிகருத் தைத் தெரிவித்த சீனா அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அரசியல் முக்கியத் துவம் மிகுந்த இலங்கையில் குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இலங்கை, இனவெறிப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் திறந்தவெளி அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு அவதியுறு கின்றனர். அப்பாவி மக்களின் அவல நிலை தீர்க்க நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எதிரொலித்து நிற்கும் நிலையில், சீனாவின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது.

சீனா, மதவெறியை ஊட்டும் பௌத்த மடாலயங்களுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகிறது. 691 பௌத்த மத பள்ளிக் கூடங்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் முக்கிய பௌத்த மடாலங்களும் ராஜ பக்ஷே போன்ற வர்களை வார்த் தெடுத்த கேந்திரங் களாக விளங்கும் மல்வெத்தை, அஸ்கிரியா, அமர புரா மற்றும் ரமயனா என்ற நான்கு கேந்தி ரங்களிலும் ஏராள மான பௌத்த மத குருமார்களை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ஏராள மாக வழங்கிவரும் சீனா, மதரீதியாகவும் உதவி வரும் விஷ யம் வெளியானதால் உலக அளவில் சீனா விற்கு வக்காலத்து வாங்கி உலாவந்த காம்ரேடுகள் கடுப்பில் ஆழ்ந்துள்ள னர். செஞ்சீனம், ஆரஞ்சு சீனம் என அடை மொழியிட்ட அவர்கள், மக்கள் சீனம், மண்ணாங்கட்டி சீனம் என நீட்டி முழக்கிய இவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது போதாதென்று, இலங்கையில் ஹம்பன்டோட்டாவில் ஒரு மெகா துறை முகம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சி யில் சீன அரசு இறங்கியுள்ளது. தலைநகர் கொழும்பிற்கு அருகே சீன முதலீட்டாளர் களுக்கு என்றே சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் திறக்கப்பட இருக் கிறதாம். சீனாவின் இனவெறி ஜின்ஜியாங் விவகாரத்தில் அம்பலமா கியது. அந்நாட்டின் மதவெறி இலங்கை விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. சீனா வின் விஷமத் தனம் வலைதளத்தில் இந்தியாவை சீண்டும் விதமாக தொடங்கியிருக்கிறது. மொத்தத்தில் சீன தேசத்தின் முகமூடி சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு கிழிந்து தொங்குகிறது.

Web Counter Code