இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009



மோதி மிதித்துவிடு! முகத்தில் உமிழ்ந்துவிடு!!-யூசுப் இஸ்லாம்


இந்தியப் பிரமுகர்கள் அமெரிக் கர்களால் அவமானப்படுத்தப்பட்டு வருவது சீசனாகவும், ஃபேஷனாகவும் மாறிவரும் நிலையில், தன்னை அவ மானப் படுத்தியவர்களை சட்டரீதியாக சந்தித்து தண்டனை வாங்கிக் கொடுத்த ஒரு பெருமகனைக் குறித்து இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஒரு காலத்தில் கேட் ஸ்டீவன்ஸ் என அழைக்கப்பட்டு பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட யூசுப் இஸ்லாம் குறித்து பிரிட்டனின் சன் செய்தி ஏடு கடுமையான களங்கத்தை சுமத்தியது.

யூசுப் இஸ்லாத்திற்கு தீவிரவாதத் தொடர்பு உண்டு என சிறிதும் பொறுப் பற்ற முறையில் அந்தப் பத்திரிகை எழுதியதை எதிர்த்து சட்ட யுத்தத் தினை துவங்கினார் யூசுப் இஸ்லாம். ஆம், சன் பத்திரிகையின் மீது வழக்கு தொடர்ந்தார். பல மாதங்கள் கழித்து யூசுப் இஸ்லாம் மீது களங்கம் சுமத்தி யதற்காக சன் பத்திரிகைக்கு கடுமை யான கண்டனம் தெரிவிக்கப்பட்ட தோடு, மன உளைச்சலுக்கு உள்ளான யூசுப் இஸ்லாமுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

யூசுப் இஸ்லாம் வெற்றி வீரராக உலாவந்தார். இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த தொகையை சுனாமியால் சூறையாடப்பட்ட இந்தோனேஷியா வின் அஷே பகுதி மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

தனது தன்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்திய சக்திகளை மன்னிப்புக் கேட்க வைத்தார். ஆனால் நம் பிர பலங்கள் வீராவேசமாக செய்தியாளர் களிடம் பேசுவதோடு கப்சிப் ஆகிவிடு கிறார்கள்.

தரம் குறைந்த செயலைச் செய்தவர் களுக்கு தகுந்த தண்டனை அமெரிக்கா விலும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலும் இச்செயலுக்கான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களை பிடித்தாட்டும் இஸ்லாம்ஃபோபியா குறித்து திரையு லகப் புள்ளிகள்தான் வாய்திறந்தார் களே தவிர, வேறு யாரும் திறக்க வில்லை. ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்பதால்தான் அவமானப் படுத்தப்பட்டேன் என்று கூறியதை (வெளிநாட்டு ஊடகங்களைத் தவிர) இந்தியப் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. இதுபோன்ற கண்டுகொள்ளா நிலைக்கு விடை கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த அவமானங்கள் அந்த அவமானச் சின்னங்களால் நேராமல் இருக்கும்

No comments:

Web Counter Code