இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை! -அபூசாலிஹ்

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை!

-அபூசாலிஹ்

ஈராக்கை ஆக்கிரமித்து ஆறு ஆண்டுகளாக மனித உரிமைகளை மீறிவரும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த ஜார்ஜ் புஷ் மீது தார்மீக கோபம் கொண்டு தனது காலனிகளை வீசி மரியாதை(!) செய்தவர் ஈராக்கிய பத்திரிகையாளர் முன்ததர் அல்ஜைதி.


ஈராக்கில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களும் உயிர்பலியாகக் காரணமாக இருந்த ஜார்ஜ் புஷ் தனது பதவியின் கடைசி காலத்தில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்காக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றார்.


பாக்தாதில் ஒன்றுபட்ட பத்திரிகையா ளர் கூட்டத்தில் பேசும்போது, ''ஈராக்கிற்கு மக்களாட்சியை வழங் கினோம்; மறுமலர்ச்சி வழங்கினோம்'' என தனது சாதனைகளாக சகட்டு மேனிக்கு அள்ளிவிட்டுக் கொண்டி ருந்தபோது, புஷ்ஷின் பொய்களைத் தடுத்து நிறுத்தியது ஒரு ஷூ.


அமெரிக்க பொய்யைத் தடுத்து நிறுத்தியது அரபு ஷூ. தனது பெயரி லேயே ஷூவை சூட்டி யிருக்கும் அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூ, தன்னால் ஆக்கிரமிக்கப் பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமகனின் காலணி யால் மரியாதை(!) செய்யப்பட்டார்.


பாதுகாப்பு அதிகாரி களின் கடுமையான கெடுபிடி களுக்கிடையில் முன்ததர் அல்ஜைதி, சிறையில் தள்ளப் பட்டார்.


உலகுக்கு காவல் தலை வனாக தன்னை எண்ணிக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஜார்ஜ் புஷ் மீதான காலணி தாக்குதல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தோடு, முன்ததர் அல்ஜை தியை மாவீரனா கவும், கதாநாயகனாகவும் போற்றியது. முன்த தரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடு களிலும் இதே கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் முன்ததருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தற்போது அந்தத் தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருப்பதாக ஈராக்கின் ராணுவ நீதிமன்றம் தெரிவித் திருக்கிறது.


முன்ததர் அல் ஜைதியின் நன்னடத் தையின் காரணமாக அவருக்கு இந்த தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. முன்ததர் அல் ஜைதி தற்போது அனுப வித்து வரும் ஓராண்டோடு அவர் சிறையிலிருந்து மீளவிருக்கிறார்.


கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி புஷ் மீது ஷூ வீசி சிறை சென்ற முன்ததர் மீது இதற்கு முன்பு எந்தக் கிரிமினல் வழக்கும் இல்லாத காரணத்தால் ஓராண்டு தண்டனை காலத்தைக் கூட முழுவதும் அனுபவிக்காமல் மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதாவது எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முன்ததர் அல் ஜைதி விடுதலையாகிறார்.


இத்தகவலை ஈராக் அரசின் ராணுவத் தலைமை வழக்கறிஞர் கரீம் அல் சுஜைரி தெரிவித்திருக்கிறார்

No comments:

Web Counter Code