இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, November 10, 2007

குஜராத் இனப்படுகொலை: மோடி போலிஸின் சாதனைகள்(!)

சர்ஜுன்

பி.சி. பாண்டே (குஜராத் டி.ஜி.பி ஆக இருந்து தற்போது தேர்தல் ஆணைத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

700லிருந்து 800 முஸ்லிம் சடலங் களை அஹ்மதாபாத் நகர் முழுவதும் சாக்கடைகளில் கொட்ட உத்தரவிட்டார்.

கொல்லப்பட்ட முஸ்லிம்களின் கணக்கை குறைத்துக் காட்டுவதற்காக அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

• பாபு பஜ்ரங்கியையும் அவனது அடியாட்களையும் காவல்துறை இணை ஆணையர் பி.பி.பாண்டேயின் தலைமையிலான போலீஸ் படை கைது செய்தது. ஆனால் இது எல்லாமே 'சும்மா' நாடகம் தான் என காவல்துறை இணை ஆணையர் தெரிவித்ததாக பாபு பஜ்ரங்கி கூறினான்.

• உள்ளூர் சங்பரிவார் தலைவரை டி.எஸ்.பி சோலங்கி கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்ததாக செய்தி ஏடுகளும், அரசு கோப்புகளும் கூறின. ஆனால் உண்மையில் குற்றவாளி வி.எச்.பி அலுவலகத்தில் சகல சவுக்கியத் துடன் இருந்தான்.

• காவல்துறை காட்வி விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த காலுபர் ஜிலா மந்த்ரி ரமேஷ் தேவிடம் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார். குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம்களைக் கொல்வேன் என்று சொன்னதைச் செய்தாரா என வி.எச்.பி பிரமுகர் முஸ்லிம் பிணங்களை எண்ணிப் பார்த்து உறுதி செய்தார்.

• காவல்துறை ஆய்வாளர் எரடா குல்பர்க் சொஸைட்டி குடியிருப்புக்கு முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு மூன்று மணி நேரம் தருகிறேன். அதற்குள் உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள். அடுத்த நிமிடமே வெறி முற்றிய அந்த வன்முறைக் கும்பல் பாய்கிறது. எரடாவின் கண்ணெதிரிலேயே ஒருவரை அந்தக் கும்பல் குத்திக் கொன்றது.

• காவல்துறையினர் எங்களுடனே இருந்தனர். அந்த நாள் மகத்தானது. காவல்துறையினர் எங்கள் முன்னிலை யில் துப்பாக்கியால் அவர்களை (முஸ்லிம்களை) நோக்கி சுட்டனர். நிச்சயம் அவர்கள் 70 அல்லது 80 பேருக்கு மேல் கொன்றிருப்பார்கள். அதைப் போன்று ஒரு பெண்ணைக் கூட சேதப்படுத்தாமல் விடவில்லை.

• எல்லாவற்றையும் எரித்து முடித்தோம் அப்போது காவல்துறையினர் எங்களை அழைத்தனர். முஸ்லிம்கள் சாக்கடைக்குள் ஒளிந்து கொண்டிருக் கிறார்கள் என்று காவல்துறையினர் கூறினர். நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அவர்களது வீடுகள் எல்லாம் கொளுத்தப்பட்டதால் தரைமட்டமாகி யிருந்தது. ஆனால் ஏழு அல்லது எட்டு முஸ்லிம்கள் கழிவறை செல்லும் குழியில் பதுங்கிக் கிடந்தனர். நாங்கள் அதை அதற்கென உள்ள சாக்கடை மூடியால் மூடினோம் பத்திரமாக தப்பிப்பதற்காக அங்கே ஒளிந்து கொண்டார்கள். ஆனால் நாங்கள் அவர்களை காவல்துறை உதவியுடன் பிணங்களாக்கினோம்' என்றான் நரோடா பாட்டியா குற்றவாளி சுரேஷ்.

• நரேந்திரமோடி காவல்துறையை எங்கள் தரப்பாகவே அனுப்பி வைத்தார். அஹ்மதாபாத் வி.எச்.பி தலைவன் ராஜேந்திர வியாஸ்.

• என்னைப் போல் ஒரு 50 பேர்களை போலிஸ் கமிஷனரிடமிருந்து சிறப்பு அனுமதி வாங்கினோம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங் களுக்கு சென்று எங்கள் வேலையை(!) காட்டினோம். ஹிந்துக்கள் எங்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் தெரியுமா? அன்று ஒருவருடைய வீட்டிலும் ஒரு சிறிய மரக்குச்சி கூட கிடைத்திருக்காது. கையில் கிடைத்ததை யெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி னோம். மூன்று அடி இரும்புக் குழாய் களை ஒவ்வொருவரும் வைத்திருந்தோம். பஜ்ரங்தளத்துக்காரர்கள் திரிசூலம் தந்தனர். எல்லா ஆயுதங்களும் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டனலி திமந்த் பட் கூறியது.

• நாங்கள் வெடிகுண்டுகளை தயாரித்து எடுத்துக் கொண்டு அஹ்மதாபாத் சென்றோம். எந்த போலீஸ்காரரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் 'நீங்கள் செல்லுங்கள். போலீஸ்காரர்களை பார்க்கும்போது ஜெய்ஸ்ரீராம் சொல்லுங் கள் நாங்கள் புரிந்து கொள்வோம்' என்றார்கள்லிதவால் ஜெயன்டி படேல் சொன்னது.

• எல்லா போலீஸ்காரர்களும் எங்களுக்கு உதவினார்கள். தோட்டாக் களைக் கூட தந்து உதவினார்கள். ரமேஷ் தவே.

காவல்துறையினர் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லைலிபிரஹலாத் ராஜு சொன்னது.

• காவல்துறையினர் எங்களுக்கு ஆயுதங்களை தந்தனர்லிஅனில் பட்டேல்.

• என்னை குற்றப்பிரிவு காவல் துறை (கண் துடைப்புக்காக) விசார ணைக்கு கொண்டு சென்றது.. லாக் அப்பில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால் போலீஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் வீட்டிலிருந்து தேநீரும், சாப்பாடும் வரவழைத்து சாப்பிட்டேன்லிகுல்பர்க் சொஸைட்டியில் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பலரை எரித்துக் கொன்ற கயவன் மாங்கிலால் ஜெயின்

Web Counter Code