ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?
அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங் களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.
இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமை யாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங் களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்ப தாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் நர்ம்ங் எர்ண்ழ்ம்ஹய்ள் நஹன்ஹக்ள் ஹய்க் ல்ஹழ்ஜ்ஹஜ்ஹள் (1578 லி 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக் களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளை யும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர் கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன் மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்கா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (ஒள்ப்ஹம் ஹய்க் ஒய்க்ண்ஹய் ஈன்ப்ற்ன்ழ்ங்) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்
Thursday, March 27, 2008
ஈராக்:ஆறாவது ஆண்டாகத் தொடரும் ஆக்கிரமிப்பு படுகொலைகள்!
ஈராக் மீது பொய்யான குற்றச்சாட்டுக் களைக் கூறி அந்நாட்டு அதிபர் மாவீரன் சதாம் ஹுஸைனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு நாகரீகத்தின் தொட்டிலான அந்த பழம் பெருமை வாய்ந்த பூமியை அமெரிக்கா ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் வரலாறு காணாத அளவு வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த இந்தப் போர் வளைகுடாப் பிராந்தியத்தின் அரசியல், சமூக பொரு ளாதார நிலையையும் சீரழித்துவிட்டது..
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை ஈராக் போர் முனையில் பறிகொடுத்தும்கூட அந்தக் கொடூர நிகழ்வு ஆறாவது வருடத்தை எட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம் சதுக்கத்தில் நிகழ்ந்த ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அவ்வாறே பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிரஃபால்கர் சதுக்கத்தில் 40 ஆயிரம் பேர் திரண்டு போர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பிரிட்டனின் தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுன் போன்றோரை போர் குற்ற வாளிகளாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன
ஈராக் மீது பொய்யான குற்றச்சாட்டுக் களைக் கூறி அந்நாட்டு அதிபர் மாவீரன் சதாம் ஹுஸைனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு நாகரீகத்தின் தொட்டிலான அந்த பழம் பெருமை வாய்ந்த பூமியை அமெரிக்கா ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் வரலாறு காணாத அளவு வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த இந்தப் போர் வளைகுடாப் பிராந்தியத்தின் அரசியல், சமூக பொரு ளாதார நிலையையும் சீரழித்துவிட்டது..
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை ஈராக் போர் முனையில் பறிகொடுத்தும்கூட அந்தக் கொடூர நிகழ்வு ஆறாவது வருடத்தை எட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம் சதுக்கத்தில் நிகழ்ந்த ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அவ்வாறே பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிரஃபால்கர் சதுக்கத்தில் 40 ஆயிரம் பேர் திரண்டு போர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பிரிட்டனின் தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுன் போன்றோரை போர் குற்ற வாளிகளாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன
ஜஸீராவா...? இஸ்ரேல் அலறல்!
இஸ்ரேலின் ராணுவப் பயிற்சியை ரகசியமாகப் படம் பிடித்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் அதிரடியான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.
இஸ்ரேலின் ராணுவத்துணை அமைச்சர் மெஜல்லி பீ இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக் காட்சி நிறுவனத்தின் செய்திகள் நம்ப தகுந்தவை அல்ல. அல்ஜஸீராவின் செய்திகள் எங்கள் உணர்வுகளை காயப் படுத்துகின்றன. எனவே அல்ஜஸீரா செய்தியாளர்கள் இஸ்ரேல் அரசு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தடை செய்தது. அந்த மக்கள் மெழுகு வர்த்தி ஒளியில் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடர்ந்ததாகவும் உலக அளவில் அது இஸ்ரேலுக்கு கடுமை யான பின்னடைவை ஏற்படுத்தியதாக வும் அதனால்தான் இந்த தடை என பெயர் குறிப்பிட விரும்பாத அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அல்ஜஸீரா பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் தெரிவித்திருக்கிறார்
இஸ்ரேலின் ராணுவப் பயிற்சியை ரகசியமாகப் படம் பிடித்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் அதிரடியான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.
இஸ்ரேலின் ராணுவத்துணை அமைச்சர் மெஜல்லி பீ இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக் காட்சி நிறுவனத்தின் செய்திகள் நம்ப தகுந்தவை அல்ல. அல்ஜஸீராவின் செய்திகள் எங்கள் உணர்வுகளை காயப் படுத்துகின்றன. எனவே அல்ஜஸீரா செய்தியாளர்கள் இஸ்ரேல் அரசு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தடை செய்தது. அந்த மக்கள் மெழுகு வர்த்தி ஒளியில் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடர்ந்ததாகவும் உலக அளவில் அது இஸ்ரேலுக்கு கடுமை யான பின்னடைவை ஏற்படுத்தியதாக வும் அதனால்தான் இந்த தடை என பெயர் குறிப்பிட விரும்பாத அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அல்ஜஸீரா பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் தெரிவித்திருக்கிறார்
Subscribe to:
Posts (Atom)