இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, March 27, 2008

ஈராக்:ஆறாவது ஆண்டாகத் தொடரும் ஆக்கிரமிப்பு படுகொலைகள்!

ஈராக் மீது பொய்யான குற்றச்சாட்டுக் களைக் கூறி அந்நாட்டு அதிபர் மாவீரன் சதாம் ஹுஸைனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு நாகரீகத்தின் தொட்டிலான அந்த பழம் பெருமை வாய்ந்த பூமியை அமெரிக்கா ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் வரலாறு காணாத அளவு வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த இந்தப் போர் வளைகுடாப் பிராந்தியத்தின் அரசியல், சமூக பொரு ளாதார நிலையையும் சீரழித்துவிட்டது..

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை ஈராக் போர் முனையில் பறிகொடுத்தும்கூட அந்தக் கொடூர நிகழ்வு ஆறாவது வருடத்தை எட்டுகிறது.

அதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம் சதுக்கத்தில் நிகழ்ந்த ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அவ்வாறே பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிரஃபால்கர் சதுக்கத்தில் 40 ஆயிரம் பேர் திரண்டு போர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பிரிட்டனின் தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுன் போன்றோரை போர் குற்ற வாளிகளாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன

No comments:

Web Counter Code