இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, July 18, 2007

கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.

No comments:

Web Counter Code