இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது



பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது
குண்டுகளின் மழையில் தீக்குளித்த தியாக பூமியான பாலஸ்தீனத்தின் சமீபத்திய சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது.
1948ல் வஞ்சகமாய் வளைகுடாப் பகுதியில், மேற்கு சக்திகளால் வ­ந்து திணிக்கப்பட்ட இஸ்ரேல் என்ற செயற்கை அரசு பாலஸ்தீனப் பகுதிகளை அபகரித்து மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை நாடற்ற அகதிகளாக் கியது. வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை இரக்க மற்று நசுக்கியது இஸ்ரேல்.
யாசர் அராபாத் எனும் தியாகத் தலைவன் பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார். பாலஸ்தீன விடுதலை முன்னணி (பி.எல்.ஓ) உருவானது. விடுதலைப் போராட்டம் வலுவடைந்தது. அதே வேளையில் இஸ்ரே லும் வ­மைமிக்க சக்தியாக மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் தனது மக்களுக்காக சமாதான உடன் பாட்டுக்கும் உடன்பட்டார் அராபத். 1993ல் இஸ்ரே­ய சக்திகளுடன் உடன்பாடு செய்து கொண்டார். சமாதான பேச்சுவார்த்தையின் •மூலம் இஸ்ரே­ன் ராஜ வியூகத்தை உடைத்தார். மிதவாதிகளிடம் செல்வாக்கு ஏறுமுகமாய் சென்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடைய மக்களிடம் தனது பெருமையை இழக்க வேண்டிய தாயிற்று.
காலமெல்லாம் களத்தில் நின்றார். ராஜதந்திர ரீதியில் மேற்குலக சூழ்ச்சிகளை சுட்டெறித்தவரின் புகழ் ஒளி கொஞ்சம் மங்கத்தான் செய்தது. இருப்பினும் தனது மக்களின் உரிமை களை விட்டுக் கொடுக்காமல் விழுப்புண்களுடன் விழாமல் போராடினார். தாளத்துக்கு தலையாட்டாத ஆத்திரத்தில் இஸ்ரேல் அரசு அரபாத் தின் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியது. மிருகத்தனமாக மின் இணைப்பை கூட துண்டித்தது, தனது மக்களின் துன்பம் கண்டு மெழுகாய் உருகிய
அந்த மனிதன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மக்கள் பணி ஆற்றினார். வஞ்சகத்தையே வாழ்க்கை பாதையாக கொண்டிருந்த யூதர்கள் மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சினை ஊட்டி படுகொலை செய்தனர். அராபாத் மறைந்தார். ஆனால் ஃபதாஹ் மறையவில்லை. ஏதோ தானும் இருக்கிறேன் என்பதைப் போல அதன் செயல் பாடுகள் மந்த கதியில் இயங்கியது.
ஃபதாஹ் இயக்கத்தின் கூர்மை குறைந்த செயல்பாடுகளால் ஹமஸ் பாலஸ்தீன அரங்கில் உதித்தது. அராபத்தின் காலத்திலே இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த இயக்கமாக ஹமஸ் உருவெடுத்தது. உலகெங்கும் வாழும் விடுதலைப் போராளிகளின் ஞானத் தந்தையான ஷேக் அஹ்மது யாசின் இளைஞர்களை வார்த்தெடுத்தார். ஹமஸின் எழுச்சி, யூத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. வஞ்சகமாய் குண்டு வீசிக் கொன்றது. தொடர்ந்து வந்த ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் ரந்திஸியையும் படுகொலை புரிந்தது. ஹமஸ் தனது உரிமைப் போராட்டத்தினை சளைக்காமல் முன்னெடுத்தது.மேற்குலகும் இஸ்ரேலும், இந்த சக்திகளின் அடியொற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஹமஸை பயங்கரவாத இயக்கம் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், நெஞ்சுருத்துடன் ஹமஸ் ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது. அதன் அரசியல் ராஜதந்திரியுமான ஹா­த் மிஷால் இஸ்ரே­ன் சதிச் செயலை முறியடிக்கவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும், தற்போது சிரியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஹா­த் மிஷாலை கொலை செய்ய இஸ்ரேல் பலமுறை முயற்சிகளை மேற் கொண்டது. இறையருளால் அவர் இன்று வரை உயிர் பிழைத்து தனது மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். சரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய ஹமஸ் நாடாளுமன்றத் தேர்த­ல் குதித்தது, பெரிவாரியான வெற்றியும் பெற்றது. இஸ்மாயில் ஹனியா தலைமையில் அமைச்சரவை அமைத்தது. ஓர் நிழல் இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்ததை வரவேற்க மனமின்றி அமெரிக்கா வும், இஸ்ரேலும், மேற்குலகும் ஹமஸிற்கு வாக்களித்த மக்களுக்கு பொருளாதார உதவிகளை முடக்கி பட்டினியில் தள்ளியது. வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் ஈரான் நிதியுதவி புரிந்தது. அது எப்படியோ பாலஸ்தீன அரசுக்கு போய்ச் சேர்ந்து விட்டது எனினும், பிற நிதி உதவிகள் யூத சக்திகளால் முடக்கப்பட்டன. அரசு ஊழியர் களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் புதிதாகப் பதவியேற்ற ஹமஸ் அரசு தவித்தது.
ஃபதாஹ் இயக்கத்துக்கும், ஹமஸுக்கும் மோதல் வேறு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் முதல் அது பெரும் மோதலாக மாறியது. அரபுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடுநிலை யாளர்கள் வேதனை யில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் ஃபதாஹ், ஹமஸ் மோத­ல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ப­யாக உலக முஸ்­ம்களின் மன வேதனை அதிகமாகியது. ஏகாதிபத்திய சக்திகள் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.
அனைத்துக்கும் முடிவுரை எழுதும் முகமாக பாலஸ்தீனத்தில் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் சீரிய முயற்சியால் பேச்சுவார்த்தை தொடங் கியது. அல்ஃபதாஹ் இயக்கத்தின் சார்பாக அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமஸ் இயக்கத்தின் சார்பாக அதன் அரசியல் ராஜதந்திரி ஹா­த் மிஷால் மற்றும் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவும் பங்கேற்றனர்.
கஃபத்துல்லாஹ்விற்கு அருகிலேயே அல்சஃபா அரண்மனையில் இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கியது. அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே சகோதரத்துவ உணர்வு உடைந்து பீறிட்டது. மக்கள் நலன் நாடும் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்டாமல் இந்த புனித நகரை விட்டு நாங்கள் செல்லமாட்டோம் என ஹா­த் மிஷால், இஸ்மாயில் ஹனியா உணர்ச்சிப் பெருக்குடன் கூறினர்.
எங்கள் புதல்வர்களும், புதல்விகளும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
தொலைக்காட்சி வாயிலாக ஹா­த் மிஷால் மற்றும் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்த சமாதான செய்தி பாலஸ் தீனத்தில் பரவி சந்தோஷ அலைகளை எழுப்பியது.
அல் அக்ஸா மஸ்ஜிதில் அகழ் வாராய்ச்சி என்ற பெயரில் புனிதப் பள்ளிவாசலுக்கு இஸ்ரேல் சேதம் விளைவிக்க முயல்வதை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
நாம், எதிர் காலத்தில் இறையான்மை பெற்ற நாட்டில் வாழ்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை முன்னெடுக்க வேண் டும். அதற்கான உத்வேகம் இப்போது புறப்பட்டு விட்டது. நாம் ஒன்றுபட வேண்டிய வேளையும் வந்து விட்டது. பிரச்சினைகளுக்கு முடிவு காண வேண் டிய தருணம் இது. எங்களுக்கு பெரிய ஆசைகள் இல்லை. நாங்கள் எங்கள் உரிமைகளை மட்டுமே கேட்டிருக் கிறோம். இதை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும். நாம் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும். போனவை போகட்டும். நமக்கு ஒரேயொரு எதிரி மட்டுமே. நாம் எதிர்க்கும் காரணம் ஒன்று மட்டுமே. நாம் நம் எதிரியை ஒன்றாகவே எதிர்கொள்வோம் என்றும் ஹா­த் மிஷால் தெரிவித்தார்.
பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா நபிகள் நாயகத்தின் இறுதி உரையை மேற்கோள் காட்டி உரையாற்றினார். 'ஒவ்வொரு முஸ்­மும் மற்றொரு முஸ்­முக்கு சகோதரர் ஆவார். உங்களுக்குள் அநீதி புரிந்து கொள்ளாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாள் நீங்கள் இறைவனை சந்திக்க வேண்டும். உங்கள் செயல்கள் அனைத்துக்கும் நீங்கள் பதில் சொல்­யே தீர வேண்டும் என்றார். சமாதான முயற்சிகள் குறித்த தகவல்கள் அரபுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மூன்று நாள் பேச்சுவார்த்தைக்குபின் ஒற்றுமை உடன்பாடு எட்டப் பட்டது.
'மக்கா உடன்பாடு' என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஹமஸின் ஹா­த் மிஷாலுக்கும் ஃபதாஹ் இயக்கத்தின் சார்பில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையில் கையெழுத்தானது.
எமது மக்கள் வீழ இனி அனுமதிக்க மாட்டோம் என இருவரும் சூளுரைத்தனர். பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கு குலைவான, கறுப்பு நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த புனித நகரத்தின் கஃபதுல்லாஹ்வை சாட்சியாய் வைத்து உறுதி ஏற்போம் என உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டனர். நாம் பாலஸ்தீனர் களின் ரத்தத்தையும் பெருமிதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிலும், உடன்பாட்டிலும் முக்கிய பங்கு வகித்த சவூதி மன்னர் அப்துல்லாஹ்வை பாலஸ்தீன தலைவர்கள் மனமார வாழ்த்தினர். மன்னர் தனது புதல்வர்களிடம் உரையாடுவதுபோல் எங்களிடம் கனிவாக உரை யாற்றினார் என இஸ்மாயில் ஹனியா கூறினார். இறைவன் சவூதி அரேபியாவை யும் அதன் அரசையும் பாதுகாத்து சிறப்பிக்க வேண்டும் என்றும் இறைஞ்சுவ தாகக் குறிப்பிட்டார்.
தங்கள் மகிழ்ச்சியை மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், வாழ்த்துக்களை பாலஸ்தீன தலைவர் களுக்கும் தெரிவிக்க ஆசைப்படுவதாக பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டனர்.
நாம் நமது மக்களுக்கு சேவை புரிவதற்காகவே இச்சாதனையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனடி யாக ஒருங்கிணைந்த அமைச்சரவையை அமைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் ஹனியா வைக் கேட்டுக் கொண்டார்.
இவ்வொப்பந்தத்தின்படி இஸ்மாயில் ஹனியா பிரதமராகத் தொடர்வார். ஃபதாஹ் இயக்கத்தின் அஜ்ஜாம் அல் அஹ்மத் துணைப் பிரதமராகிறார். ஹமஸ் இயக்கத் தின் சார்பில் 9 அமைச்சர்கள் இடம்பெறுவர். ஃபதாஹ் சார்பில் ஆறுபேருக்கும் பிற அமைப்புகளின் சார்பில் நான்கு பேருக்கும் மேலும் ஐந்து அமைச்சர் பதவி கள் சுயேச்சை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் சுயேச்சை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. உள்துறையை யார் பெறுவது என்பதில் ஹமஸுக்கும் ஃபதாஹுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உள்துறையைப் பெறுவதில் ஏற்பட்ட கடும் போட்டியால் சுயேட்சை உறுப்பினருக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.
ஹமஸால் பரிந்துரை செய்யும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரை உள்துறை அமைச்சராக அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தேர்வு செய்வார்.
நிதித்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிகளுக்கான பெயர்களை ஹமஸ், ஃபதாஹ் இரு அமைப்பினரின் ஒப்புதலைப் பெற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜியாத் அழ அம்ரு வெளியுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்ட்டிருக்கிறார். இவர் ஜார்ஜ் டவுண் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஃபையாத் நிதித்துறை அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு ஃபதாஹ் அமைத்த இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். சீர்திருத்தவாதியாக மதிக்கப் படுபவர். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.
இரு தரப்பினரும் நான்கு முக்கிய அம்சங்களை வ­யுறுத்தினர்.
1. குழு மோதல்களை முடிவுக்குப் கொண்டு வருதல்2. ஹமஸ் ஃபதாஹ் இரு இயக்கத்தவரும் ஒன்று பட்டு தேசத்திற்காக சேவை புரிதல்3. அனைவரும் இணைந்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மீண்டும் கட்ட மைத்தல் (இது மேற்குலக சக்திகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் அதிரடி அறிவிப்பல்லவா?)
4. ஒன்றுபட்ட தேசிய அரசு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையை அமைப்பது.
லி என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்பாடு வெற்றிகரமாக எட்டப்பட முக்கிய காரணமாக விளங்கிய சவூதி மன்னர் பாலஸ்தீன மக்களின் போற்றுதலுக்கு உரியவரானார். அனைத்து முஸ்­ம் சமுதாயத்தினரின் பிரதிநிதியாகவும் சவூதி மன்னர் விளங்குவதாக பெருமிதத் துடன் பாலஸ்தீன மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வேற்றுமை மறைந்து ஒற்றுமை நிலவினால் வெற்றி கைகூடும் நாள் தொலைவில் இல்லை அல்லவா?
முகப்பு ஒ சமுதாய கண்மணிகளே ஒ ஊடகங்களில் ஒ தொடர்புக்கு ஈர்ல்ஹ்ழ்ண்ஞ்ட்ற் பி 2004 லி 2005 ற்ம்ம்ந்ர்ய்ப்ண்ய்ங்.ர்ழ்ஞ். ஆப்ப் தண்ஞ்ட்ற்ள் தங்ள்ங்ழ்ஸ்ங்க்.

No comments:

Web Counter Code