இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

அந்துலேவிற்கு முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு!

அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் ஜஃபரியாப் ஜீலானி, அந்துலேயின் கருத்தை ஆதரித்திருக்கிறார். கர்கரே படுகொலை குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும், கர்கரே யின் மரணம் தெளிவுப் படுத்தப்பட வேண்டும், அதில் தவறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்கரே போன்ற சிறப்பு மிக்க அதிகாரிகளின் வாழ்வும் மரணமும் குறித்த இறுதிக் கேள்வியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


இந்திய உலமாக்குழுவின் பொதுச் செயலர் மௌலான நைமூர் ரஹ்மான், அனைத்திந்திய சன்னி முஸ்லிம் வாரியத் தின் தலைவர் மௌலான முகம்மது முஸ்தாக் ஆகியோரும் கர்கரேயின் மரணம் குறித்து விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்கள். விசார ணையை மறுப்பவர்கள் உண்மை வெளிபடக் கூடாது என்று விரும்பு கிறார்கள். கர்கரே போன்ற அதிகாரி களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது என்று மௌலானா முஸ்தாக் தெரிவித்திருக் கிறார்.


ஷியா பிரிவின் அறிஞர் மௌலானா கல்பே ஜாவத் கூறுகையில், `கர்கரே யின் தியாகம் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொருத்த மற்ற நேரத்தில் அவர் கொல் லப்பட்டிருப் பதால் அது சந்தேகத்தை கிளப்பியிருக் கிறது. வேறு பல இடங்களிலும் தாக்கு தல் நடத்தப்பட்ட நிலையிலும், கர்கரே காமா மருத்துவமனை நோக்கி தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் எளிதாக வருவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்பில் உள்ள பலகீனத்தை யும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா. காலித் ரஷித், ``விசாரணை நடத்துவதால் என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்கரேயின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்க முடியுமோ என்ற சந்தேகத்தை தெளி வுப்படுத்துவதற்கு விசாரணை அவசியப் படுத்துகிறது. ஒவ்வொருவரும் சரியான தடத்தில் இருந்தால் பிறகு பி.ஜே.பி எதற்காக விசாரணையை எதிர்க்கிறது. கர்கரே உயிரோடு இருந்த போது அவரை தேச துரோகி என்று அழைத்தது. அவரு டைய விசாரணை முறைகளை கண் டித்தது. தற்போது அவர் மரணம் குறித்த விசாரணையை தடுக்கிறது. இதிலிருந்து உண்மை வெளிப்பட பிஜேபி விரும்ப வில்லை என்றே தெரிய வரு கிறது’ என்று காலித் ரஷித் கூறியிருக் கிறார்

No comments:

Web Counter Code