இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

மும்பை பயங்கரம்: வெளிவராத உண்மைகள்!


மும்பை மீது பயங்கரவாதிகள் தொடுத்த யுத்தம் உலகத்தையே அதிரச் செய்துள்ளது. ஆசியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை முதன்முறையாக பயங்கரவாதி களின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக் கானது. மும்பைக்கு மட்டுமல்ல, இந்திய வல்லரசுக்கு இதுவே கசப்பான முதல் அனுபவமாக இருந்தது.


உலகின் நான்காவது தரைப்படையைக் கொண்டிருந்த இந்திய வல்லாண்மைக்கு, 100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் ஜனநாயக நாட்டின் மீது பயங்கர வாதிகள் தொடுத்த போர், அவர்களை முறியடித்து முற்றிலும் அழித்தால் மட்டும் போதாது. இனி நம் இந்தியத் திருநாட்டின் மீது எந்த தீய சக்தியும் எந்த தாக்குதலையும் நிகழ்த்த இனி கனவிலும் கூட நினைக்காத வண்ணம் என்றுமே மறக்க முடியாத பதிலடியைக் கொடுக்க தயாராக வேண்டும் என்ற உறுதியையும் ஏற்க வைத்துள்ளது.


பத்து பரதேசி நாய்கள் மட்டுமே ஒரு மாபெரும் நகரத்தின் முக்கிய பகுதிகளைப் பிடித்து ஏராளமான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து அப்பாவி மக்களை குலைநடுங்க வைத்த கொலைகாரப் பாவிகளை கிஞ்சிற்றும் மன்னிக்க முடியாது. பாவிகளின் கைகளில் மும்பை மாநகரம் சிக்கித் தவித்தபோது உள்துறை அமைச்சர் வழக்கம்போல் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். 60 மணி நேரத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்ற போர் நாட்டையே நிலைகுலைய வைக்கக்கூடியதாகவும், அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடியதாகவும் இருந்தது.


நாரிமன் ஹவுஸில் 26.11.08 இரவு 8.20க்கும், விக்டோரியா டெர்மினஸில் 9.24க்கும், லிபோ போர்டு கபேயில் இரவு 9.15க்கும், டிரைடன்ட் ஹோட்டலில் 8.25க்கும், விபோபார்லேவில் 9.55க்கும், காமா மருத்துவமனைக்கு வெளியே 10.15க்கும், மெட்ரோ சினிமா தியேட்டருக்கு வெளியே 10.30 மணிக்கும், வாடி பந்தரில் 10.45க்கும், ஜிர்காம்சல்பதியில் 10.50க்கும் குண்டுகள் வெடித்தது.


வெளிநாட்டிலிருந்து 20 முதல் 25 பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்ததாக மகாராஷ்டிர மாநில காவல் துறைத் தலைவர் ஜி.பி.ராய் தெரிவித்தார். ஒரு நகரமே முற்றுகையில் சிக்கித் தவித்த போது அதனை மீட்க நடந்த முயற்சி உடனடி யாக ஏன் நிகழ வில்லை என்பதை ஆய்ந்தால் 9.30க்கு மகாராஷ்டிரா முதல் வருக்கு தகவல் தெரிந்த போது அவர் கேரளாவில் இருந்தார்.முழு விவரத்தையும் நிலை மையின் தீவிரவாதத் தையும் அவர் புரிந்து கொண்ட போது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.


ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச் சர் சிவராஜ் பாட்டீலுக்கு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தொலை பேசியில் தகவல் தெரிவித்து கமாண்டோ படைகளை அனுப்புமாறு கேட்கும் போது நேரம் இரவு 11.30 ஆனது. எத்தனைப் பேர் வேண்டும். எத்தனைப் பேர் வேண்டும் என சிவராஜ் பாட்டீல் கேட்கிறார். 200 பேர் வேண்டும் என்கிறார். சிவராஜ் பாட்டீல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ தலைவர் ஜி.கே.தத்-ஐ அழைத்து, தீவிரவாதிகளை ஒடுக்க 200 கமாண்டோக்களை தயாராக்கி அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.


உள்துறை அமைச்சரும் மகாராஷ்டிர முதலமைச்சரும் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பெரும்பாலான கமாண்டோ படையினர் தூங்கவே போய் விட்டார்கள். அதன்பிறகு அவர்களிடம் விஷயத்தைக் கூறி சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிய பின் 200 பேரும் தயாராக இருக்க இவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய விமானம் அங்கு இல்லை. 11.76 என்ற விமானம் டெல்லியில் இல்லை. அது சண்டீகரில் இருந்தது. சண்டீகருக்கு தகவல் அனுப்பப்பட்டது. விலை மதிப்பு மிக்க நேரம் வீணாகிக் கொண்டிருந்தது. விலை மதிக்கவே முடியாத உயிர்களும் தான்.


சண்டீகரில் 11.76 என்ற அந்த விமானத்தின் பைலட்டை உறக்கத்தில் இருந்து எழுப்பி விமானம் புறப்பட, நேரம் அதிகாலை 2 மணி ஆகியிருந்தது. 200 கமாண்டோ படையினரை சுமந்து வந்த விமானம் மும்பை வந்து சேர விடியற்காலை 5 மணி ஆனது. இருப்பதிலேயே மிகவும் வேகம் குறைந்த விமானமாம் 11.76.


விமான நிலையத்தில் காத்திருந்த இவர்கள் சம்பவ இடத்திற்காக சிறப்பு பேருந்துகள் வருவதற்காக 5.30 மணி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. கமாண்டோ படையினர் அனைவரையும் கொண்டு செல்ல பேருந்துகள் அனைத்தும் மொத்தம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன.


பயங்கரவாதிகளோடு யுத்தம் செய்வதற்காக ஆயத்தமாக குழு குழுவாக அவர்கள் பிரிந்து தங்கள் கடமையைத் தொடங்கிய போது காலை 7 மணி.


இந்திய தேசிய பாதுகாப்பு படை சாமான்யமான படை அல்ல. அதிரடி சாகசங்களுக்கும் அநாயச துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. சம்பவம் நிகழ்ந்த அரை மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் சென்றிருந் தால் நிச்சயம் பயங்கரவாதிகளை துவம்சம் செய்திருப்பார்கள். எதிரிகள் பின்னங் கால் பிடறியில் பட ஓடியிருக்கக் கூடும். ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல, 9 1/2 மணி நேரம் தாமதம் என்பது ஜீரணிக்கவே முடியாதது; மன்னிக்கவே முடியாதது.


தேசிய பாதுகாப்பு படை என்பது தலைநகர் டெல்லியில் மட்டுமே இருக்க வேண்டிய படைப் பிரிவா என்ன? நாட் டின் முக்கிய நகரங்களிலும், பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த கேந்திரங்களிலும் என்.எஸ்.ஜி. என்ற தேசிய பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்பட வேண்டும்.


ஆனால்பயங்கர வாதம் நடந்தபோது முதல மைச்சர் முறையான உத்தர வுகளை பிறப்பிக்கவே இல்லை என்கிறார்கள்.


இது ஒன்றும் மன்னர் காலம் அல்ல. மன்னர் காலத்தைப் போல் தளபதிகள் படையினை வழிநடத்திச் செல்வதைப் போன்ற ஓர் அவசியம் இல்லை. வீரர்களை சிப்பாய்களை அனுப்பி அவர்களை களத்திலே நிறுத்தி பின்னால் இயக்கி வெற்றி பெறு வது இன்றைய உலகின் வழமை. ஆனால் நிலைமையை நேர் மாறாக்கி விட்டிருக்கிறார்கள்.


ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக் கிறார்கள். இது எதிரிகள் தீட்டிய சதியின் வெற்றியா? நம்மவர் களின் மதியின் தோல்வியா? வெறும் பத்து பேர்கள்தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணமா? என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அதுகுறித்த எந்த ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது என்ற நிலை. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை. முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்காளக மாறிய பின்னரேமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது.


ராணுவத்தில் பணியாற் றிய கர்னல் புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில் இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவே யில்லை. வீட்டுக்கு செல்லா மலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவை யான ஆதாரங்கள் கிடைத்து விட்டன.


தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே இவ்வளவு கனத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டு வார்கள். அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக் கக் கூடியதாகவே இருக்கிறது.


இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக் கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.


நாட்டில் எத்தனையோ விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப் பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார். இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த மன்மோகன்சிங் மீதுதான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது. அத்வானி போன்றவர்களின் அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராள மானவர்களுக்கு பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ உள்நாட்டுத் தீவிர வாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ் வொரு இந்தியனுக்கும் உண்டு. இந் நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப் படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடும்போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாகியிருக்கிறது.


ராணுவத்தில் ஆகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் முஸ்லிம்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.


எனவே நாட்டை அச்சுறுத்தும் நிஜமான பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அனைத்து மாணவர் களுக்கும் பள்ளி இறுதி படிப்பு காலத்தி லேயே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க இந்திய அரசு முன்வர வேண் டும். அதற்கான முதற்கட்ட முன்னேற் பாடுகளைத் தொடங்க வேண்டும்.


அப்போதுதான் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டு நம்நாட்டில் - நமது வரிப் பணத்திலே டேரா போட்டு காலத்தைத் தள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாடி வீட்டு பிச்சைக் காரனின் (!) பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தி அழித்தொழிக்க முடியும்.


நாங்கள் தயார்

No comments:

Web Counter Code