இந்த திட்டம் மோடியிடமிருந்து தான் வந்தது! திமன் பட்தலைமை ஆடிட்டர் (எம்.எஸ். பல்கலைக்கழகம்) திமன் பட் தாக்குதலுக் கான சதித்திட்டம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். (பேட்டி பதிவான நாள் மே 19, 2007)திமன் பட்: என் மேல் இரண்டு குற்றச்சாட்டுகள். நான் பல்கலைக் கழகத்தின் (ஙஏம) தலைமை ஆடிட்டர் நான் ஒரு வெறி பிடித்த ஹிந்து. சில சங்பரிவார்காரர்கள் என்னிடம் வந்து ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்பார்கள். அவர்களிடம் நான் சொல்வேன். குச்சிகளை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிரிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரானவர் களில் முஸ்லிம்கள் வெளிப்படையான வர்கள். ஆனால் கிறிஸ்துவர்கள் நச்சுக்கிருமிகளைப் போன்றவர்கள். மூன்றாவதாக கம்யூனிஸ்டுகள். இவர் களையெல்லாம் எதிர்க்க வேண்டுமானால் லத்திகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தோட்டாக்களால் மட்டுமே பதிலடி கொடுக்க முடியும். நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடத்துக்கு செல்லுங்கள். லத்தியை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே 56 ரக துப்பாக்கிகளைக் கொண்ட பயங்கரவாதப் படையை உருவாக்குங்கள் என்றேன்.
கோத்ராவுக்குப் பிறகு அது குறித்து ஆலோசிப்பதற்காக முக்கிய சங்பரிவார் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், பாஜக, ஏ.பி.வி.பி மற்றும் துர்கா வாகினி போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குழுமி இருந்தனர். நமக்கு நரேந்திர மோடியின் முழு ஆதரவு உண்டு. அப்போது அங்கு கூடிய சங்பரிவார் பிரமுகர்கள் கீழ்கண்டவாறு ஆலோசித்தனர். நமக்கு ஹிந்துக்கள் அனைவரின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராகத் தான் சதிகாரர்கள் எரித்தார்கள் என்று ஆவேசப்படவேண்டும். ஆனால் எரிந்தது சபர்மதி எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி மட்டும் தானே! எல்லா ஹிந்துக்களுக்கும் கோபம் வர வேண்டுமென்றால் நாம் அடுத்த நாள் ஒரு முழு ரெயிலையும் எரிக்க வேண்டும் என்று மோடி கூறினார். அப்போது நான் அங்கே இருந்தேன். உடனடியாக கூட்டம் கூட்டப்பட்டது. ஒன்று அஹ்மதா பாத்திலும் மற்றொன்று பரோடாவிலும் நடந்தது. பெரிய தலைவர்களின் கட்டளைப்படி சங்பரிவாரின் அடுத்தக் கட்ட தலைவர்கள் அனைவரும் அங்கு சேர்ந்து கொண்டனர். 65லிருந்து 70 தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நான் கூட்டம் எங்கு நடந்தது என்பதை சொல்ல மாட்டேன். நாம் நம்முடைய செயலைத் தொடங்குவோம். காவல் துறையினர் (உணர்ச்சி வசப்பட்டு) கைது செய்தால் விடுவிக்க, வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. தேவையான பணம் திரட்ட ஆலோசிக்கப்பட்டது. கலாட்டாக் களில் தப்பித்த தவறி சங்பரிவார்காரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment