இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, November 2, 2007

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்கோத்ரா எம்.எல்.ஏ. ஹரிஷ்பட்
2002ல் குஜராத் கலவரங்களில் 2500 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப் பட்டது சாதாரண ஆயுதங் களால் அல்ல. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர் காவி பயங்கர வாதிகள்.
இது கோத்ராவின் எம்.எல்.ஏ ஹரிஷ்பட்டின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வருகிறது.
தனது பட்டாசு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முழுவதும் அனுப்பி, முஸ்லிம் களை மேல் உலகத்துக்கு அனுப்பிய தாகக் கூறியிருக்கிறார்.
2007 ஜூன் ஒன்றாம் தேதி எடுக்கப்பட்ட பேட்டி.
ஹரிஷ்பட்: லத்தியெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு துப்பாக்கி மூலமே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆயுதப் பயிற்சி தொடங்கினேன். பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ஆயுதப் பயிற்சியில் சேர்ந்தனர். இந்தியாவில் முதன்முதலில் ஹிந்துத்துவ ஆயுதப் பயிற்சி முகாமைத் தொடங்கியவன் நான் தான். ஏழு பேர்களுடன் 1987ல் தொடங்கி னேன்.
தெஹல்கா: 1987லேயே?
ஹரிஷ்பட்: ஆமாம். 87ல் தான். அந்த (பாப்ரி மஸ்ஜித்) இடிப்புக்கு கூட நான் பயிற்சி கொடுத்து அனுப்பினேன். நாற்பது பேருக்கு பறிற்சி கொடுத்தது நான் தான். அருகிலுள்ள சர்கெஜ் பகுதியில் பஜ்ரங்தள்காரர்களுக்கு நாங்கள் ஆயுதப் பறிற்சி கொடுத்தோம். ராஜேஷ் பைலட் கூட நாடாளுமன்றத்தில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்காக சர்கஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
தெஹல்கா : பாப்ரி மஸ்ஜித் குறித்தா சொல்கிறீர்கள்?
ஹரிஷ்பட்: ஆமாம். பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அஹ்மதாபாத் அருகிலுள்ள சர்கேஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டது.
தெஹல்கா: பைலட் இந்த வினா வினை எழுப்பினாரா?.
ஹரிஷ்பட்: சி.பி.ஜ விசாரணை கூட வந்தது, போனது.
தெஹல்கா: உங்களுக்கு எதிராகவா?
ஹரிஷ்பட்: தூண்டிவிட்டவர் களுக்கு எதிராக.
தெஹல்கா: அப்புறம்?
ஹரிஷ்பட்: அன்றிலிருந்து ஆயுதப் பயிற்சிக் கூடம் இருக்கத்தான் செய்கிறது. அதே பயிற்சியை நமது ராணுவத்துக்கு கொடுத்தோம். ஜுடோ, கராத்தே துப்பாக்கி சுடுதல் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சிகளையும் கொடுத்தோம். முப்பது அடி நீள கயிறு வைத்துக் கொண்டு எவ்வாறு ஏறுவது. சுவரேறி குதிப்பது போன்ற பயிற்சிகளை 15 நாளில் கற்றுக் கொடுத்து விடுகிறோம்.தெஹல்கா: 2002 கோத்ராவுக்குப் பிறகு இங்குள்ள ஹிந்துக்கள் ஆயுதங் களுடன் அலைகின்றனர். எப்படி அவர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது.
ஹரிஷ்பட்: எனக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையை துப்பாக்கி தொழிற்சாலையாக மாற்றினேன். எல்லா விதமான குண்டுகளும் தயாரிக்கிறோம். டீசல் குண்டுகள். வெடி குண்டுகள். நாங்கள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கிறோம். நாங்கள் இரண்டு ட்ரக்குகளில் வாள்களை பஞ்சாப்பிலிருந்து வரவழைத்தோம். தாரியா கிராமத்திலிருந்து குஜராத் முழுவதும் ஆயுதங்களை விநியோகித்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் தேவையாக இருந்தது.
தெஹல்கா: துப்பாக்கிகளை எங்கிருந்து பெற்றீர்கள்?
ஹரிஷ்பட்: நாங்கள் பல நாடுகளிலிருந்து துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசம், மத்திப் பிரதேசம் வழியாக கடத்தினோம். கடத்திய துப்பாக்கிகளை மாநிலமெங்கும் விநியோகித்தோம். இங்கிருந்துதான் விநியோகித்தோம். முதன் முதலில் உங்களிடம் தான் இப்போது கூறுகிறேன். யாருக்கும் தெரியாத ரகசியம்.
தெஹல்கா: ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்துபவர்களல்ல. சமையல் கூடத்தில் மட்டுமே கத்தியை பயன்படுத்துபவர்கள் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
ஹரிஷ்பட்: நாங்கள் விதவிதமான ஆயுதங்களை விநியோகித்தோம். இவ்வளவு ரகங்கள் ஆயுதங்களில் உள்ளதா என மக்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர். எங்கள் தொழிற்சாலையில் ராக்கெட் லாஞ்சர்கள் கூட தயாரித்தோம். தெரியுமா?
தெஹல்கா: ஹரிஷ்பட் நீங்கள் கான்பூரில் இருந்து ஆயுதம் வாங்கிய தாகச் சொன்ன நேரத்தில் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததே?
ஹரிஷ்பட்: ஏன் ஊரடங்கு உத்தரவு இருந்தால் என்ன? எதுவாக இருந்தாலும் நாங்கள் கொண்டு வருவோம்.
தெஹல்கா: எதுவாக இருந்தாலும்... ஊரடங்கு உத்தரவு அமலில் இருந் தாலுமா?
ஹரிஷ்பட்: இருந்தால் என்ன? நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் பீகாரில் இருந்தும் வாங்குவோம்.
தெஹல்கா: ஆனால் எப்படி? ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எப்படி?
ஹரிஷ்பட்: எல்லா ஆயுதமும் வரும்.
தெஹல்கா: பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எல்லைக்கு அப்பாலிருந்துமா?
ஹரிஷ்பட்: ஆமாம். எல்லாவற் றையும் என்னிடம் கேட்காதீர்கள்.
தெஹல்கா: ஆனால் அவர்கள் நீங்கள் சொன்னது போல் செய்தார்கள்.
ஹரிஷ்பட்: ஆமாம் நிச்சயமாக. இது குறித்து நீங்கள் வி.எச்.பி. பொருளாளர்
ரோஹித்தை கேட்டுப்பாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்தான் செய்தார்.
தெஹல்கா: அவர்களுக்கு வாள்கள் மட்டும் தான். அவர் கொடுத்தனுப்பினாரா?
ஹரிஷ்பட்: இல்லை. எல்லாம் தான். ஏற்கெனவே நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். ராக்கெட் லாஞ்சர்களை நாங்கள் தயாரித்தோம் என்று. அதனை நாங்கள் இந்த சூழ்நிலையை வைத்து பரிசோதித்துப் பார்த்தோம்.
தெஹல்கா: நீங்கள் உண்மையி லேயே ராக்கெட் லாஞ்சரைப் பற்றித்தான் கூறுகிறீர்களா?
ஹரிஷ்பட்: ஆமாம். நாங்கள் அதில் வெடி மருந்துகளை நிரப்பினோம். பின்னர் மூடி விட்டு கொளுத்தினோம். இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் பொருளாளர் ரோஹித் உங்களிடம் பேசுவார். என்று கோத்ரா எம்.எல்.ஏ வெறியன் ஹரிஷ்பட் தனது பேட்டியை முடிக்கிறார்

No comments:

Web Counter Code