இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, November 2, 2007

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்...

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்... பிரகாஷ் ரத்தோட் & சுரேஷ் ரிச்சர்ட்நரோடா பாட்டியாவில் சங்பரிவார் கலவரங்களை தாங்கள் நினைத்தபடி நடத்தி தங்களது(?) திறமையை நிரூபித் தனர். பிரகாஷ் ரத்தோட் மற்றும் சுரேஷ் ரிச்சர்ட் என்ற இரண்டு காவி தீவிரவாதி களும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆகஸ்ட் 12, 2007 அன்று அளித்தனர்.
தெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்களா?
ரத்தோட்: இல்லை. பிபின் வெளியே வந்து விட்டார். சசிகாந்த் என்ற டுனியா மட்டுமே உள்ளே இருக்கிறார்.
தெஹல்கா: பிபின் எங்கே இருக்கிறார்?
ரத்தோட்: எப்போதும் கிருஷ்ணா நகரில் இருப்பார். ஆனால் யாருக்கும் தெரியாது.தெஹல்கா: அவர் அந்த நேரமும் அங்குதான் இருந்தாரா?
ரத்தோட்: அவர் மட்டுமில்லை. எல்லா பையன்களும் அங்குதான் இருந்தார்கள். அவர் எல்லோருக்கும் சாமான் (ஆயுதங்கள்) விநியோகித்தார்.
தெஹல்கா: வாள்கள் போன்ற வையா?
ரத்தோட்: இல்லை. இல்லை. சிலருக்கு வாட்கள் மற்றும் திரிசூலங்கள் வழங்கப்பட்டன. சுரேஷ் ரிச்சர்டை தெரியுமா? அவரை சந்தியுங்கள். துப்பாக்கியைத் தவிர எல்லா ஆயுதங் களையும் அவர் வைத்திருந்தார்.
தெஹல்கா: இது போதுமா விநியோகிக்க?ரத்தோட்: குட்டா என்று ஒரு மனிதன் சிறையில் இருக்கிறார். அவர் பரோலில் வெளிவந்த போது ஓடி விட்டார். அவர் ஏராளமான பேரைக் கொன்றிருக்கிறார்.
தெஹல்கா: பிபின் அப்போது எங்கிருந்தார்?
ரத்தோட்: நாங்கள் முதலில் அவர்களை சிதறடித்தோம். பிபின் பஞ்சாபிடம் வந்தோம். ஏராளமான பேர் அவர்களோடு இருந்தார்கள். நாங்கள் நுழையும் போதே அவர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்றே கோஷம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) நாம் கற்பித்து கொடுக்க வேண்டிய பாடத்தை தொடங்கி விட்டோம். நெருப்பு எரியத் தொடங்கி விட்டது. முஸ்லிம்களை இழுத்து வரச் சொன்னோம்.
தெஹல்கா: முஸ்லிம்கள்?
ரத்தோட்: பின்னர் நாங்கள் அவர்களை அடித்தோம். அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை நெருப்பில் தூக்கிப் போட்டோம்.
தெஹல்கா: சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் அந்தக் கூட்டத்தில் உண்டா?
ரத்தோட்: அவர் மிக நன்றாக சண்டை போடுவார். குட்டா, நரேஷ் சரா, இந்த மூன்று பேரையும் பார்த்து
முஸ்லிம்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். ஏன் போலீஸ்காரர்களுக்கு கூட இவர்கள் மூவரைக் கண்டால் நடுக்கம் தான்.
தெஹல்கா: மோடி வந்தாரா?
ரிச்சர்ட்: கூட்டமாக அவர்களைக் கொன்று முடித்த அன்று மாலை 7.30 மணி இருக்கும் மோடி வந்தார். ரோஜா மாலைகளை எனது சகோதரிகள் மோடிக்கு அணிவித்தனர்.
தெஹல்கா: நரேந்திர மோடியா வந்தார்.
ரிச்சர்ட்: ஆமாம். நரேந்திர மோடி தனது கறுப்பு பூனைப் படைகளுடன் வந்திருந்தார். அவரது அம்பாசிடர் காரிலிருந்து இங்கு தான் இறங்கினார். என்னுடைய எல்லா சகோதரிகளும் அவருக்கு ரோஜா மாலைகள் அணி வித்தனர். பெரிய மனுஷன். ரொம்பப் பெரிய மனுஷன்.
தெஹல்கா: அவர் சாலையைக் தாண்டி வந்தாரா?
ரிச்சர்ட்: இங்குதான் அவர் வந்து போனார். நரோடாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க அவர் வந்திருக்கிறார்.
தெஹல்கா: அன்று தான் நரோடா சம்பவங்கள் நடந்தன இல்லையா?
ரிச்சர்ட்: அந்த மாலை நேரத்தில் தான்.
தெஹல்கா: அவர் வந்தது ஐந்து மணிக்கா? ஏழு மணிக்கா?
ரிச்சர்ட்: பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஏழு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் மோடி வந்தார். நம்முடைய ஆதிவாசிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். மோடி வந்த ஏழரை மணிக்கு மின்சாரம் இல்லை. எல்லாமே கலவரங் களால் சாம்பலாகிவிட்டன.
(மேலும் தொடர்கிறார் ரிச்சர்ட்)
ரிச்சர்ட்: நாங்கள் அனைத்தையும் கொளுத்தி முடித்து விட்டு திரும்பினோம். நாங்கள் களைப்படைந்து விட்டோம். பேட்டரிகள் எரிந்து கொண்டிருந்தன. கேஸ் சிலிண்டர்களும் எரிந்து கொண்டி ருந்தன. சில பன்றிகள் எங்களுடைய ட்ரக்குகளில் தூங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பன்றிகளைக் கொன்றோம். நாங்கள் நான்கைந்து பேராகவே பல பன்றிகளைக் கொண்டு வந்தோம். பின்னர் அந்தப் பன்றிகளை பள்ளிவாசல் களில் தொங்கவிடப்பட்டன. பன்றி களுக்கு மேல் பள்ளிவாசல்களில் காவிக் கொடிகளை பறக்க விட்டோம். நாங்கள் பள்ளிவாசல்களை நொறுக்க முயற்சித் தோம். ஆனால் அவை எளிதில் உடைய வில்லை. டாங்கர் ஒன்று எங்கள் சகோதரர்களில் ஒருவர் தந்தார். பெட்ரோல் நிரப்பிய டேங்கரால் மோதச் செய்தோம். மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிவாசலை நொறுக்கினோம்.
தெஹல்கா: கற்பழிப்புகள் நடந்த தாகச் சொல்கிறார்களே?
ரிச்சர்ட்: இங்க பாருங்க. நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. எங்கள் அம்மன் சத்தியமா சொல்றேன் (பக்கத்தில் சாமி படம் இருக்கிறது) ஏராளமான முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு கொளுத்தப்பட்டு வீசப்பட்டனர். எங்களது ஹிந்து சகோதரர்கள். வி.எச்.பி தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் பெண்களை சுவைத்தோம். என் மனைவி அருகில் இருக்கிறாள். இருந்தாலும் சொல்கிறேன். பழங்களைப் போல இருந்த அவர்களை முழுக்கச் சாப்பிட்டோம். நன்றாக சுவைத்தோம். நான் ஒரு தடவை அந்தப் பழத்தினை சுவைத்தேன்.
தெஹல்கா: ஒரு தடவை தானா?
ரிச்சர்ட்: ஒரு தடவை தான். பின்னர் நான் கொல்ல புறப்பட்டு விட்டேன். (உடனே திரும்பிப் பார்த்து தனது உறவினர் பிரகாஷ் ரத்தோட் தான் பாலியல் வன்முறை செய்து கொலை செய்த பெண்ணைப் பற்றி பேசுகிறார்.) ஸ்கார்ப் டீலரின் பொண்ணு நஸீமா பழரசம் போலவே இருந்தாள். இருப்பதிலேயே டாப் ஆக இருந்த அவளை எடுத்துக் கொண்டேன்.
தெஹல்கா: நீங்கள் இருப்பதி லேயே டாப் ஆக இருப்பதை எடுத்துக் கொண்டீர்களா?
ரிச்சர்ட்: ஆமாம்.
தெஹல்கா: அவர் உயிரோடு இருக்கிறாளா?
ரிச்சர்ட்: இல்லை.மேலும் தொடருகிறான்.
ரிச்சர்ட்: 'நீங்கள் குழந்தைகளை வைத்திருந்தால் அவைகளை நான் நெருப்பில் எறிந்து விடுவேன். உங்கள் ஆன்மா கொளுத்தப்படும்' என்றேன். உயிர் பிழைத்தவர்கள் சிலர் தங்களது நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு குடிசைகளில் மறைந்து கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கோஷமிட்டது. ஆனால் அவர்கள் எந்த சமூகம் என்பதை அறிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் அவர்களை கொன்றோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள்காரர் அவர்கள் எப்படி மாறினாலும் அவர்களைக் கொல்லு வார்கள். அவர்களை குறித்து வைத்துக் கொண்டு கொல்லுங்கள் என்றார்

No comments:

Web Counter Code