இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 20, 2010

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள் ஹபீபா பாலன்

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

ஹபீபா பாலன்

ஓடுங்கள். பள்ளிவாசலுக்குள் நுழையாதே. தடுக்கப்பட்ட மக்கள். மறுக்கப்பட்ட ஜூம்ஆ தொழுகை. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்.

இவையெல்லாம் கடந்த ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகா ணம் என்று அழைக்கப்பட்ட துருக்மினிஸ்தானில் நடை பெற்ற காட்சியல்ல. 9.7.2010 வெள்ளிக் கிழமையன்று ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மஸ்ஜித்தை நோக்கி தொழச் சென்ற மக்கள் விரட்டப்பட்டனர்.
ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்கா வளாகத்தில் உள்ள பெரிய மஸ்ஜித்திலும் ஜும் ஆ தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. ஓடுங்கள். இங்கே நுழைய உங்களுக்கு அனுமதி இல் லை எனக் கூறி விரட்டியதாக ஹஜ்ரத்பால் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் கூறுகிறார்.

ஜாமியா மஸ்ஜிதை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு தடை செய்யப்பட்டி ருந்ததாக நவ்ஹாட்டா பகுதி மக்கள் தெரிவித் தனர். பள்ளிவாசலுக்கு யாரும் வரக்கூடாது. தெருவில் யாரும் நடமாடக்கூடாது. பள்ளி வாசலில் யாரும் உள்ளே தங்கிவிடவும் கூடாது என்று சி.ஆர்.பி.எப். காவல்துறையினரும் ராணுவத்தினரும் தடை விதித்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் யாரும் கூடக் கூடாது. பள்ளிவாசல் இருக்கும் பகுதியை நோக்கிக் கூட யாரும் கூட்டமாக சேர்ந்து போகக் கூடாது&என்று கண்டிப்பு காட்டும் பாதுகாப்பு படையினர் அவ்வாறு பள்ளிவாசலை நோக்கி செல்ல முயலும் மக்கள் கூட்டத்தை கடுமை யாகத் தாக்குகின்றனர். மாநிலத்தில் உள் பகுதிகளில் உள்ள சிறிய பள்ளிவாசல்களில் மட்டும் தொழ அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு&காஷ்மீரில் உள்ள அமர் நாத் என்ற ஹிந்துக்களின் புனித தலத்தில் கடந்த வாரம் வரை ஒரு லட்சம் ஹிந்து பெரு மக்கள் பத்திரமாக சகல சவுகரியத்துடன் அமர்நாத் யாத்திரையை மேற் கொண்டுவருகின்றனர்.

அதே மாநிலத்தில் ஜும்ஆ தொழுகைக்கு தடைவிதிக் கப்பட் டுள்ளது. அதையும் மீறி வீதியில் இறங்கி தொழச்சென்றால் உயி ருக்கு உத்தரவாதமில்லாத நிலை.

காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? அரசியல் திறனாய் வாளர்களைக் கேட்டால் அது 60 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினை. இந்தியா&பாகிஸ்தான் பிரிவினையின்போது வெடித்த பிரச் சினை என்கிறார்கள். நேரு வின் தவறால் விளைந்தது இது என்கிறார்கள்.

இன்னும் சில அரசியல் ஞானிக ளோ 20 ஆண்டுகளாக உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டம் என்று கூறப்படும் கறுப்பு சட்டம் பயன் படுத்த தொடங்கியதிலிருந்து இந்த நிலை மிகவும் மோசமாகியது என்கிறார்கள்.

மற்றும் சில அரசியல் திறனாய் வாளர்கள், அல்ல அல்ல; கடந்த ஆண்டு சோபியன் என்ற இடத்தில் தங்கள் குடும்பத் தினருக்கு சொந்தமான ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற இளம்பெண்கள் கற்பழித்து படு கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டனர். இந்தக் கொடும் செயலை செய்தவர்கள் பாது காப்புப் படையினர் தான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.- ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக் கப்படவில்லை. இது காஷ்மீர் மக்களின் ஆத்திரத்தையும் வேத னையையும் அதிகரித்ததாக சொல் லப்படுகிறது.

சோபியன் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் நீதி கிடைக்காத நிலை நீடித்ததால் அம் மக்களின் கோபம் அதிகரித்தது.

ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அந்தப் பனிமலையை பற்றவைக்கும் முயற்சியாக அடுத்தடுத்து சம்ப வங்கள் நடைபெற்றன.

ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் சென்றார். ஆனால் காஷ்மீர் மக் கள் அவரது பயணத்தை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. மாறாக வெறிச்சோடிய வீதிகளை யும் மூடப்பட்ட கதவுகளையும் அவர்எதிர் நோக்க வேண்டி வந்தது.

சில நாட்களுக்கு முன்பு தான் காஷ்மீர் மக்கள் மிகுந்த மகிழ்ச் சியுடனும் கொண்டாட்டத் தில் திளைத்திருந்தனர். ஐ.ஏ.எஸ் என்ற ஆட்சி பணி தேர்வில் இந்தியா விலேயே முதலிடம் பெற்றார் ஷா பைசல் என்ற டாக்டர். இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில் நெகிழ் ந்திருந்த மக்களை வெகுண்டு எழச் செய்தது மச்சில் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நிகழ்ந்த போலி என் கவுண்டர் சம்பவங்கள்.

வட காஷ்மீர் பகுதியில் அந்த சம்பவத்தில் மூன்று இளைஞர் கள் என்கவுண்டர் செய்யப்பட்ட னர். இவர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு நுழையமுய ன்றவர்கள் என பாதுகாப்புப் படை யினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

இது ஷேக் அப்துல்லாஹ் மற்றும் நேருவின் காலமும் அல்ல. இந்திரா ராஜீவ் காலத்து பத்திரிகைகளின் வாய்ப்பூட்டு காலமும் அல்ல.

கிளர்ந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் உள்ளக் குமுறலை உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை படம்பிடித்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்புவரை இந்தப்பிரச்சினையை விட்டு விடு வதாக இல்லை.

காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய அளவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் நீதி விசாரணை செய் யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

போலி என்கவுண்டரில் உண்மையாக கொல்லப்பட்ட அப்பாவி களின் எண்ணிக்கை வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

அண்மைக்காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப் பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் இரக்கமற்ற முறை யில் சுட்டுக் கொல்லப்படும் அவலம். 67-க்கும் மேற்பட்டோர் பாது காப்பு படையினரால் கொல்லப் பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் 27&ம் தேதியிலிருந்து ஜூலை 10&ம் தேதி வரை 30&க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களும் அடங்குவர்.

இந்த அநீதியை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற அவலக் குரல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.

No comments:

Web Counter Code