Wednesday, October 31, 2007
சதியின் கால அட்டவணை
சதியின் கால அட்டவணை2002ல் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வந்து பார்வையிட்டபின் சாதாரண விபத்து சதியாக பரப்பப்படுகிறது.அஹ்மதாபாத், வடோதரா மற்றும் சபர்கந்தா போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகளை சங்பரிவாரங்கள் சூழ்ந்தனர். நரேந்திர மோடியின் முதல் சமிக்ஞைகளுக்குப் பிறகு திட்டங்கள் தயாராயின. கலவரங்கள் விளைவிக்கப் போகும் குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து முன்னணி வழக்கறிஞர்களும், மூத்த காவல்துறை அதிகாரிகளும் ரகசியமாகக் கூடிப் பேசினர். காவிப் பிரமுகர்கள் இவ்வாறு கூறினர். 'மோடி' உங்களுக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பார் என தைரியம் கூறினார்.இவையெல்லாம் தானாகவே ஏற்பட்டதல்ல; இது திட்டமிடப்பட்டது. இது மிகப்பெரிய இனப்படுகொலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment